புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
74 Posts - 44%
heezulia
Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 4%
prajai
Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 4%
Jenila
Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
jairam
Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
kargan86
Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
10 Posts - 5%
prajai
Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
8 Posts - 4%
Jenila
Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 5 matches for மஞ்சள்

மஞ்சள் கிழங்கின் மூன்று வகைகள்



முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள் என மஞ்சள் கிழங்கில் மூன்று வகைகள் உண்டு.


முட்டா மஞ்சள்

முகத்துக்குப் பூச பயன்படுகிறது. முடி வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றல் உள்ள மஞ்சளைப் பூசுவதால் முகம் கை கால்களில் முடி வராமல் தடுக்கவும், மினுமினுப்பைத் தந்து முகப்பொலிவைக் கூட்டவும் பெண்களுக்கு வசீகரம் தர உதவும் ஒப்பனைப் பொருள்களில் இந்த மஞ்சளுக்கே பெரும்பங்கு உண்டு.

கஸ்தூரி மஞ்சள்

மிகுந்த வாசனையுடன் இருக்கும். இதை நலங்கு மாவு எனப்படும் வாசனைப் பொடிகள் மற்றும் வாசனைத் திரவியங்களில் பயன்படுத்துவார்கள். மேலும் குழந்தைகளுக்கு இந்த மஞ்சளைப் பூசுவதும் உண்டு.

விரலி மஞ்சள்

சமையலறையில் பயன்படுத்தப் படுகிறது. மஞ்சள் கிழங்கின் நீண்டிருக்கும் பகுதிகளை சாணநீரில் வேக வைத்துப் பதமாக பொடிசெய்து ஏதுவாக தயாரிப்பார்கள். இந்த #மஞ்சள் பொடி நோய்களை ஏற்படுத்தும் நுண்கிருமிகளை அழிக்கும் சக்தி  கொண்டது என்பதால் சமையல் மற்றும் வாயிற் படிகளில் பூசுவது, வீட்டில் தெளிப்பது மற்றும் விழாக்களில் ஒருவர் மீது ஒருவர் தெளிப்பது எனப் பல விதங்களில் பயன்பாட்டில் உள்ளது.

பலவிதமான நோய்களுக்கும் மஞ்சள் மருந்தாக மாறுவது எப்படி?



#மஞ்சள் விதைகளில் உள்ள ஒரு விதமான ரசாயனப் பொருளான குர்குமின் என்பதுதான் மஞ்சளின் நிறத்துக்கும் மருத்துவக் குணத்துக்கும் காரணமாகிறது. இந்த குர்குமின்தான் புற்றுநோய்க்கட்டிகள் வராமல் தடுக்கவும், ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளைத் தடுக்கவும், உடலுக்குள் வரும் கெடுதல் தரும் பாக்டீரியாக்களை முறியடிக்கவும் உதவுகிறது. இந்த குர்குமின் தற்போது அதிகளவில் இருக்கும் வயது முதிர்ந்தோரை பாதிக்கும் அல்சைமர் எனப்படும் நினைவுக் குறைபாட்டுக்கு காரணமாகும் மூளையில் படியும் படிவைக் (Plaque) குறைக்கிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மஞ்சளின் மருத்துவக்குணங்கள் ஏராளம். அவற்றுள் சில இங்கு...

*மூக்கடைப்பு மற்றும் மயக்கம் போட்டு விழுந்தவர்களின் நாசியருகில் மஞ்சளை சுட்டு, அப் புகையைக் காட்டினால் தெளிவு கிடைக்கும்.

*மஞ்சள் தூளைப் பாலில் கலந்து காய்ச்சி சாப்பிட வாய்ப்புண், தொண்டை எரிச்சல், வயிற்றுஎரிச்சல் போன்றவை சரியாகும். .

*மஞ்சள் போட்டுக் கொதிக்க வைத்த வெந்நீரால் வாய் கொப்பளிக்கும்போது சளி முறிந்து எளிதில் வெளியாகும் .

*இரவு படுக்கச் செல்லும் முன் இளம் சூடான பாலில் சிட்டிகை மஞ்சள்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து அருந்தினால் இருமல் சரியாகும் .

*மஞ்சளை அரைத்து பூசினால் சரும நோய்கள் விரைவில் குணமாகும். மேலும் கரப்பான், சொரி, சிரங்கு போன்ற சரும நோய்களுக்கு மேல் பூச்சாக மஞ்சளைப் பூசி வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

*விழுதாக அரைத்த மஞ்சளை சுட வைத்துப் பற்றுப் போட்டால் கட்டிகளினால் ஏற்படும் வீக்கம் குறையும்.

*புற்றுநோயையும் சரி செய்யும் ஆற்றல் கொண்டது மஞ்சள்.
Topics tagged under மஞ்சள் on ஈகரை தமிழ் களஞ்சியம் QCqWweu

நம் மண்ணின் அடையாளமான மஞ்சளுக்கான தினம் இன்று. நம் பாரம்பர்ய மருத்துவத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற மஞ்சள். இதன் பெருமைகளை பல்வேறு ஆய்வுகள் மூலம் ஆராய்ந்து அதில் உள்ள மருத்துவத் தன்மையின் உறுதியை அறிந்த அமெரிக்கா தற்போது மஞ்சளுக்கான காப்புரிமையையும் பெற்று மருத்துவத் தேவைகளுக்கு மஞ்சளை அதிகம் பயன் படுத்தி வருகிறது. மஞ்சளின் பெருமைகளை உலக மக்கள் தெரிந்து கொள்ள இன்று ஜூலை 14 உலக மஞ்சள் தினம் கொண்டாடப்படுகிறது.

#மஞ்சள் இல்லாமல் நம் வாழ்வின் எந்த ஒரு செயலும் நடைபெறாது. நம் வாழ்வில் இரண்டறக்கலந்த மங்கலப்பொருட்களுள் பொன்னிறமும் மருத்துவ அருங்குணமும் மிக்க  மஞ்சளுக்கே முதலிடம் என்பது அனைவரும் அறிவோம். இந்தியாவின் மிகப்பழமையான நறுமணப் பொருளாக விளங்கும் மஞ்சள் இந்து மதச் சடங்குகள் மற்றும் விழா  நிகழ்வுகளின்போது புனிதப் பொருளாக பயன்படுத்தப் படுகிறது. மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து கடவுளைக் கூட மஞ்சளில் காட்டி விடுகிறது ஆன்மிகம். மஞ்சள் மகாலெட்சுமி விரும்பும் பொருள் என்பதால் லட்சுமியின் அருள் கிடைக்க பெண்கள் மஞ்சளைப் பூசுகின்றனர். பெண்களின் அழகைப் பேணவும் மஞ்சள் பெரிதும் உதவுகிறது.

உணவுப் பொருள்களிலும் முதலிடம் பிடிக்கிறது மஞ்சள் நிறத்தை தருவதோடு அதை தினமும் சமையலில் சேர்த்து நாம் உண்ணும்போது உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழவும் உதவுகிறது மஞ்சள்.

கல்கி ஆன்லைன் சார்பாக மஞ்சள்தின வாழ்த்துகளை தெரிவித்து மஞ்சள் பற்றிய கருத்துகளை சேலம் லீ பஜார் வணிகர்கள் சங்கத்தின் செயலாளரும் பல வருடங்கள் அனுபவமிக்க பிரபல மஞ்சள் வியாபாரியுமான  
திரு. சந்திரசேகரிடம்  கேட்டோம்.

“தமிழ்நாட்டிலேயே ஏன் உலகத்திலேயே சேலம்தான் மஞ்சளுக்கு பெயர் பெற்றது. சேலம் சுற்றியுள்ள கள்ளக்குறிச்சி, ஆத்தூர், சின்ன சேலம், உளுந்தூர்பேட்டை, நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், ஒடுவங்குறிச்சி போன்ற பகுதிகளில் விளையும் மஞ்சள்தான் முதல் தரம். அடுத்ததுதான் ஈரோடு என சொல்லலாம்.  மஞ்சளில் உள்ள குர்குமின் அளவுதான் மஞ்சளின் தரத்தை நிர்ணயிக்கிறது. இந்த குர்குமினின் அளவு ஈரோடு மஞ்சளில் 2.5 என்றால் சேலம் மஞ்சளில் 4.5க்கும் மேல் இருப்பதால்தான் முதல் தர மஞ்சளுக்கு தற்போது விலையும் அதிகம் ஆகிவிட்டது. இந்த வகைகள் பெரும்பாலும் அமெரிக்கா, இலண்டன், அரபு நாடுகள் போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி விடுவதுதான் உண்மை. காரணம் அவர்கள் வியாபாரிகளுக்குத் தேவையான விலையைத் தருவதுதான். வெளிநாடுகளில் தரத்துக்கே முதல் இடம் தருகிறார்கள். ஆஸ்திரேலியா, யுஎஸ்க்கு இங்கிருந்து விளைந்த பச்சை மஞ்சள் போகிறது. அவர்கள் அதை மருந்துக்கள் தயாரிக்கப்  பயன்படுத்துகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் நம்மிடம் இருந்து வாங்கி, அதை மருந்தாக்கி நம்மிடமே லாபம் பார்க்கிறார்கள்.

ஆனி, ஆடியில் விதைத்தால் தையில் அறுவடை ஆகும் மஞ்சள். ஆரம்ப காலத்தில் இந்தியா முழுவதுமான மஞ்சள் தேவைக்கு நம்மிடம் இருந்தே சென்றது. ஆனால், கடந்த சில வருடங்களாக மத்தியபிரதேசம் போன்ற வடநாட்டினர் இங்கிருந்து தரமான மஞ்சள் விதைகளை வாங்கிச்சென்று அங்கு பயிரிட்டு இங்கு அனுப்பும் அளவுக்கு அதிக விளைச்சல் காண்கின்றனர். காரணம் அங்கிருக்கும் களிமண் பூமி. இங்கு நம் மண்ணில் பத்து மூட்டை மஞ்சள் விளைந்தால் அங்கு ஐம்பது மூட்டைகள் விளைகிறது. மஞ்சள் மட்டும் திரும்பத் திரும்ப ஒரே இடத்தில போட்டு எடுத்தால் விளைச்சலும் சத்தும் குறைகிறது. நமது மண்ணில் விளைச்சல் குறைய இதுவே காரணம். இந்த வருடம் விளைச்சல் இங்கும் அதிகம்தான். எனினும் விவசாயிகள் விலை ஏற்றத்தால் விதைகளை பாதுகாக்காமல் விடும் காரணத்தால் அடுத்த வருட மஞ்சள் உற்பத்தியைப் பாதிக்கும் வாய்ப்புள்ளது. நல்ல விலை கிடைக்கிறதே என்று  வடநாட்டினருக்கு நம் மண்ணில் விளைந்த  மஞ்சள் விதைகளை விற்றதால் இன்று அவர்களிடம் இருந்து மீண்டும் நாம் வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

   மஞ்சளின் பூர்வீகம் இந்தியாவின் தமிழ்நாடு என்பதுதான் உண்மை. அமெரிக்காவும் சைனாவும் அதன் மருத்துவ குணத்தை அறிந்து அதன் உற்பத்தியைப் பெருக்கி தற்போது காப்புரிமையையும் அமெரிக்கா பெற்று விட்டது. முன்பெல்லாம் மஞ்சளை வேகவைத்து பதப்படுத்தி காயவைத்து பாலிஷ் செய்து, பொடியாக்கி... இப்படி அனைத்தையம் மக்களாகிய நாமே செய்து வந்தோம். ஆனால், இப்போது அதற்கு இயந்திரங்கள் வந்து விட்டன. சேலம் மஞ்சள்தூள்தான் எல்லா இடங்களுக்கும் செல்கிறது” என்கிறார் சந்திரசேகர்.

மங்கையர் மலர்

மஞ்சள்


மருத்துவ குணம் நிறைந்ததாக மஞ்சள் அறியப்பட்டாலும் கூட சில பிரச்சினை உள்ளவர்கள் மஞ்சளை உணவில் சேர்ப்பது நல்லதல்ல. அது குறித்து தெரிந்து கொள்வோம்.

♦ மஞ்சளில் மருத்துவ குணங்கள் நிறைந்திருந்தாலும் உணவில் 3 கிராம் அளவுக்குள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

♦ பித்தப்பை பிரச்சினை உள்ளவர்கள் மஞ்சள் அதிகளவு எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

♦ மஞ்சளில் உள்ள குர்குமின் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் என்பதால் நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

♦ இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் கோளாறு உள்ளவர்கள் #மஞ்சள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

♦ கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள் மஞ்சள் உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தலாம்.

♦ உணவு தவிர்த்த பிற ஆரோக்கிய, முக அழகு செயல்பாடுகளுக்கு மஞ்சளை தாராளமாக பயன்படுத்தலாம்.

இன்றைய காலகட்டத்தில் யாருக்குத்தான் பணக்கஷ்டம் இல்லை? அனைவருக்கும் தேவைப்படும் ஒரு மதிப்புமிக்க பொருளாக உள்ளது பணம். இந்த அவசியத் தேவையான பணம் ஒருபுறமிருந்தாலும், வீட்டில் எப்போதுமே தீர்ந்துபோகாமல், இருந்துகொண்டே இருக்க வேண்டியதாக ஐந்து பொருட்கள் திகழ்கின்றன. இந்த ஐந்து பொருட்களில் ஒன்று தீர்ந்துபோய் விட்டாலும் அந்த வீட்டில் பெரும் வாழ்க்கை நெருக்கடி வரப்போகிறது என்பதற்கான அர்த்தமாகவே அது கருதப்படுகிறது.




அந்த ஐந்து பொருட்களில் முதலாவதாகச் சொல்லப்படுவது #உப்பு. இந்த உப்பு எப்போதுமே வீட்டில் தீர்ந்து போய்விடக்கூடாது. அப்படி உப்பு முழுவதுமாகத் தீர்ந்து போய்விட்டால் உங்களுக்கு ஏதோ ஒரு பெரிய பணக்கஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம். அதனால் வீட்டை நிர்வகிக்கும் பெண்கள் எப்பொழுதுமே ஒரு பாக்கெட் உப்பு வீட்டில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது.



அடுத்து, இரண்டாவது மற்றும் மூன்றாவது பொருளாகக் கருதப்படுவது #மஞ்சள், #குங்குமம். வீட்டில் எப்பொழுதும் மஞ்சள், குங்குமம் இல்லை என்ற வார்த்தையே இருக்கக் கூடாது. ஆம், மஞ்சள் மற்றும் குங்குமம் முழுமையாக தீர்ந்துபோகும் நிலை வந்தாலும் உங்களுக்கு பெரிய பணக் கஷ்டம் வரப்போகிறது என்றுதான் அர்த்தம். அதனால், மஞ்சள் குங்குமம் காலியாவதற்கு முன்பே அதை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்வது நல்லது.



நான்காவதாக, அனைவரின் பசியைப் போக்கும் #அரிசி எப்பொழுதும் வீட்டில் முழுமையாக தீர்ந்துபோய்விடக்கூடாது. அடுத்த வேளை உணவு சமைக்க அரிசி இல்லை என்ற வார்த்தை வீட்டில் எழக்கூடாது. வீட்டில் அரிசி தீர்ந்துபோவதற்கு முன்பாகவே அதை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி அரிசி முழுமையாக வீட்டில் தீர்ந்து போய்விட்டாலும் அந்த வீட்டில் பெரிய நெருக்கடி வரக் கூடும்.



ஐந்தாவது முக்கியமான விஷயம், வீட்டுப் பெண்களின் #சந்தோஷம். எந்த ஒரு வீட்டில் பெண்கள் சந்தோஷமாக இல்லாமல், மிகவும் துக்கத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ, அந்த வீட்டிலும் சந்தோஷம் துளியும் இருக்காது. அதனுடன், லட்சுமி கடாட்சமும் அந்த வீட்டில் இருக்காது. லட்சுமி கடாட்சம் இல்லாத வீட்டில் காசு பணம் சேராது. அதனால் வீட்டுப் பெண்கள் எப்பொழுதும் சிரிப்புடனும் சந்தோஷத்துடன் இருக்கும்படி பார்த்துக் கொள்வது குடும்பத்தில் சுபிட்சத்தை ஏற்படுத்தும். எந்த வீட்டில் மேற்கண்ட ஐந்து விஷயங்களும் நிறைவாக உள்ளதோ அந்த வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள் என்பது ஐதீகம்.

Back to top