புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மார்கழி மாத சிறப்புகள்… Poll_c10மார்கழி மாத சிறப்புகள்… Poll_m10மார்கழி மாத சிறப்புகள்… Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மார்கழி மாத சிறப்புகள்… Poll_c10மார்கழி மாத சிறப்புகள்… Poll_m10மார்கழி மாத சிறப்புகள்… Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
மார்கழி மாத சிறப்புகள்… Poll_c10மார்கழி மாத சிறப்புகள்… Poll_m10மார்கழி மாத சிறப்புகள்… Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
மார்கழி மாத சிறப்புகள்… Poll_c10மார்கழி மாத சிறப்புகள்… Poll_m10மார்கழி மாத சிறப்புகள்… Poll_c10 
17 Posts - 4%
prajai
மார்கழி மாத சிறப்புகள்… Poll_c10மார்கழி மாத சிறப்புகள்… Poll_m10மார்கழி மாத சிறப்புகள்… Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மார்கழி மாத சிறப்புகள்… Poll_c10மார்கழி மாத சிறப்புகள்… Poll_m10மார்கழி மாத சிறப்புகள்… Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மார்கழி மாத சிறப்புகள்… Poll_c10மார்கழி மாத சிறப்புகள்… Poll_m10மார்கழி மாத சிறப்புகள்… Poll_c10 
8 Posts - 2%
jairam
மார்கழி மாத சிறப்புகள்… Poll_c10மார்கழி மாத சிறப்புகள்… Poll_m10மார்கழி மாத சிறப்புகள்… Poll_c10 
4 Posts - 1%
Jenila
மார்கழி மாத சிறப்புகள்… Poll_c10மார்கழி மாத சிறப்புகள்… Poll_m10மார்கழி மாத சிறப்புகள்… Poll_c10 
4 Posts - 1%
Rutu
மார்கழி மாத சிறப்புகள்… Poll_c10மார்கழி மாத சிறப்புகள்… Poll_m10மார்கழி மாத சிறப்புகள்… Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மார்கழி மாத சிறப்புகள்… Poll_c10மார்கழி மாத சிறப்புகள்… Poll_m10மார்கழி மாத சிறப்புகள்… Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்கழி மாத சிறப்புகள்…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2015 12:53 pm

மாதங்களில் நான் மார்கழி என்று மாதவனால் பெருமை
பெற்று மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும்
மார்கழி மாதம்.

தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல்
ஆனி மாதம் வரையில் பகல் பொழுதாகவும், ஆடியில் இருந்து
மார்கழி மாதம் வரையில் இரவாகவும் கருதப்படுகிறது.

இதில் பகலை உத்தராயனம் என்றும் இரவை தட்சிணாயனம்
என்றும் அழைப்பார்கள். இவ்வாறு பார்க்கும்பொழுது மார்கழி
மாதம், தேவர்கள் விழிப்பதற்கு ஆயத்தமாகும் விடியற்காலை
நேரமாகிறது. அக்காலத்தையே பிரம்ம முகூர்த்தம் என்கிறோம்.

இந்த மாதத்தில் அதிகாலையிலேயே எழுந்து நீராடி தெய்வத்தை
வணங்கினால் நோய் நீங்கி, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும்
என்பது நம்பிக்கையாகும். அதனாலேயே இம் மாதத்தில்
எல்லோரும் அதிகாலையில் எழுவது என்பது வழக்கமான நடை
முறையில் ஒன்றாக இருக்கிறது. இதற்கு ஒரு அறிவியல் காரணமும்
உண்டு.

மார்கழியில் அதிகாலைப் பொழுதில், (4.30 மணி முதல் 6.00 மணி)
வளி மண்டலத்தில் தூய்மையான ஒசோன் படலம் பூமிக்கு மிகத்
தாழ்வாய் இறங்கி வருகிறது. ஓஸான் என்பது அடர்த்தியான
ஆக்ஸிஜனாகும். அதை சுவாசித்தால், நோய் எதிர்ப்பு சக்தியும்,
ஆரோக்கியமும் கிடைப்பதால் உடல் இயக்கம் எளிதாகிறது.

ஆகவே அதன் பலனைப் பெற இம்மாதத்தில் பெண்களை காலையில்
கோலமும் ஆண்களை பஜனை பாடல்களை பாடவும் செய்தனர் என்று
அறிவியலார் கூறுகின்றனர்.

மார்கழி மாதத்தை சூன்ய மாதம் என்பர்.
சூன்யம் என்றால், ஒன்றுமில்லாதது எனப் பொருள். நம் வாழ்க்கை
ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக்
கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவத்தைக்
கடைபிடிக்க வேண்டும். லௌகீகங்களுக்காக இல்லாமல், ஆன்மீக
நிகழ்வுகளுக்காக மட்டுமே என்று இம்மாதத்தை முன்னோர் ஒதுக்கி
வைத்தார்கள்.

நமது உடலையும் உள்ளத்தையும் நல்ல விதமாக ஆக்கிக்கொள்வதற்கு
உரிய மாதம் மார்கழி மாதம். இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால்,
வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை
நடத்தாமல் தவிர்த்தனர். இதற்காகவே, ஆண்டாளும், மாணிக்கவாசகரும்,
திருப்பாவை, திருவெம்பாவை பாடி, நமக்கு வழிகாட்டியுள்ளனர்.


சிவபெருமான் உண்ட நஞ்சை அவர் கண்டத்திலேயே தடுத்து,
அந்த நஞ்சு அவரைத் தீண்டா வண்ணம் காத்த கார்த்யாயனியை வேண்டி
தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக இம்மாதத்தில் வருகின்ற திருவாதிரை
அன்று விரதமிருக்கிறார்கள். இதையே பாகவதம் மார்கழி மாதத்தில்
ஆயர் மகளிர் கார்த்தியாயினியை வழிபட்டு, அவியுணவு உண்டு கண்ணனை
அடைந்தார்கள் என்றும் கூறுகிறது. கன்னியர் இந்நோன்பிருந்து கார்த்தியாயினி
தேவியை வழிபட, தகுந்த கணவன் கிடைப்பான். சுமங்கலிகள் கடைப்பிடித்தால்,
தம்பதியர் ஒற்றுமை கூடும்.

மார்கழி மாதத்தை, மார்கசீர்ஷம் என்று வடமொழியில் சொல்வர்.
மார்கம் என்றால், வழி – சீர்ஷம் என்றால், உயர்ந்த – வழிகளுக்குள்
தலைசிறந்தது என்பது பொருள். இறைவனை அடையும் உயர்
வழியே சரணாகதி.

ஆண்டாள் பொழுது புலர்வதற்குமுன் எழுந்து தமது தோழியர்களை
அழைத்து ஆற்றில் நீராடி, அங்குள்ள மணலினால் பாவை போன்ற
உருவம் செய்து, மலர்கள் சூட்டி, அப்பாவையை கெüரி தேவியாக
பாவித்து, “பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி’ பாடித்
துதித்து பின் ஆலயம் சென்று வழிபட்டு நோன்பு நோற்றாள்.

அவளுடைய அன்பை உணர்ந்த ஸ்ரீரங்கநாதர், ஆண்டாளை
ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வரச் செய்தார். ஆண்டாள் ஸ்ரீரங்கநாதனின்
திருவடிகளை வணங்கி நாகணையை மீதேறி பெருமாளுடன் சேர்ந்து
அவருடன் ஒன்றானாள். உண்மையான பக்தியின் மூலம் ஆண்டவனை
நிச்சயம் அடைய முடியும் என்று, இந்த கலியுகத்திலும் வாழ்ந்து
காட்டியவள் ஆண்டாள்.
அவள் செய்த நோன்பையே பாவை நோன்பென்று குறிப்பிடுகின்றனர்.

இம்மாதத்தில் வரும் திருவாதிரை விரதம் சைவர்களுக்கு
இன்றியமையாதது. மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக்
கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை நோன்பு நோற்கப்படுகின்றது.
பத்தாவது நாளான திருவாதிரை அன்று அதை நிறைவு செய்வார்கள்.
இவ்விரதம், இவ் வருடம் 26.12.2015 அன்று கொண்டாடப்படுகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2015 12:53 pm

இந்த மார்கழியில் சிவபெருமானும், ஏனைய தேவர்களும் பூமிக்கு
வந்து தவமிருப்பதாக ஐதீகம். சிவபெருமான், சிதம்பரத்தில் நந்தனாரை
ஆட்கொண்ட நாள் திருவாதிரைத் திருநாள்!

மார்கழித் திருவாதிரை நாளில் நடராஜப் பெருமானை வழிபடவேண்டும்.
திருவாதிரை நாளில் உமையம்மை, பதஞ்சலி முனிவர் கண்டு மகிழ,
சிவபெருமான் திருநடனம் ஆடினார். தாருகாவனத்து முனிவர்களின்
செருக்கை அடக்கி, அவர்களால் ஏவப்பட்ட மதயானையைக் கொன்று,
அதன் தோலை அணிந்து, முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது
காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தியதே
“ஆருத்ரா தரிசனம்’ என்று சொல்லப்படுகின்றது.

————————————-

– என்.பி. ஹரிணி – வெள்ளிமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 13, 2015 1:16 pm

அவளுடைய அன்பை உணர்ந்த ஸ்ரீரங்கநாதர், ஆண்டாளை
ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வரச் செய்தார். ஆண்டாள் ஸ்ரீரங்கநாதனின்
திருவடிகளை வணங்கி நாகணையை மீதேறி பெருமாளுடன் சேர்ந்து
அவருடன் ஒன்றானாள். உண்மையான பக்தியின் மூலம் ஆண்டவனை
நிச்சயம் அடைய முடியும் என்று, இந்த கலியுகத்திலும் வாழ்ந்து
காட்டியவள் ஆண்டாள்.அவள் செய்த நோன்பையே பாவை நோன்பென்று குறிப்பிடுகின்றனர்.


:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 13, 2015 1:24 pm

மார்கழியில் அதிகாலைப் பொழுதில், (4.30 மணி முதல் 6.00 மணி)
வளி மண்டலத்தில் தூய்மையான ஒசோன் படலம் பூமிக்கு மிகத்
தாழ்வாய் இறங்கி வருகிறது. ஓஸான் என்பது அடர்த்தியான
ஆக்ஸிஜனாகும். அதை சுவாசித்தால், நோய் எதிர்ப்பு சக்தியும்,
ஆரோக்கியமும் கிடைப்பதால் உடல் இயக்கம் எளிதாகிறது

எல்லோரும் அறிய வேண்டிய அரிய விஷயம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 13, 2015 1:30 pm

T.N.Balasubramanian wrote:
மார்கழியில் அதிகாலைப் பொழுதில், (4.30 மணி முதல் 6.00 மணி)
வளி மண்டலத்தில் தூய்மையான ஒசோன் படலம் பூமிக்கு மிகத்
தாழ்வாய் இறங்கி வருகிறது. ஓஸான் என்பது அடர்த்தியான
ஆக்ஸிஜனாகும். அதை சுவாசித்தால், நோய் எதிர்ப்பு சக்தியும்,
ஆரோக்கியமும் கிடைப்பதால் உடல் இயக்கம் எளிதாகிறது

எல்லோரும் அறிய வேண்டிய அரிய விஷயம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1180187


அதனால் தான் அந்த மாதத்தில் நாங்கள் சீக்கிரம் எழுந்து வாசலில் பெரிய பெரிய கோலங்கள் போடுகிறோம்....நிறைய நல்ல காற்றை சுவாசிக்கலாம் என்று......கோவில்களில் காலை பஜனைகள் வைப்பதும் அதற்காகத்தானே ஐயா.........உங்களுக்குத் தெரியாதது இல்லை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 2:17 pm

ayyasamy ram wrote:
ஆகவே அதன் பலனைப் பெற இம்மாதத்தில் பெண்களை காலையில்
கோலமும் ஆண்களை பஜனை பாடல்களை பாடவும் செய்தனர் என்று
அறிவியலார் கூறுகின்றனர்.
.
மேற்கோள் செய்த பதிவு: 1180173
அருமையான விசயம் ஐயா, நல்ல பகிர்வு. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக