புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10 
3 Posts - 5%
prajai
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10 
2 Posts - 4%
viyasan
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10 
1 Post - 2%
manikavi
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10 
1 Post - 2%
Rutu
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10 
1 Post - 2%
சிவா
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10 
10 Posts - 63%
ரா.ரமேஷ்குமார்
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10 
2 Posts - 13%
manikavi
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10 
1 Post - 6%
Rutu
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 15, 2013 1:24 pm

First topic message reminder :

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்
ரமணி

01. காஞ்சி முனிவரின் ஹாஸ்யம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

எப்போதும் பூஜை எல்லாமே உபதேசம்
தப்பாத விரதங்கள் என்றில்லை துறவிக்கு.
நகைச்சுவை இழையும் கேலியும் கிண்டலும்
நகையென மின்னும்
தகைசால் தெய்வீகத் துறவி
ஜகத்குரு காஞ்சி மஹானின் பேச்சிலே.

மராட்டிய மாநில மூதூர் ஒன்றில்
விராட்டுரு முனியின் வீதியோர முகாம்.
யானைமேல் அமர்ந்து
நாலுபேர் சாலைவழிப்
போவதைப் பார்த்தார் பெரியவர்.
அவர்களை உடனே அழைத்து உசாவினார்:
இவர்ந்து யானைமேல் எங்குச் செல்கிறீரோ?

நாங்கள் ஓர்காலம் நீங்காத செல்வமுடன்
பாங்காக வாழ்ந்தோம் ஸ்வாமீ!
எந்தைதம் காலம் எய்திய காலை
விந்தையான முறையில்
தனங்கள் அனைத்தும் தானம் செய்துவிட்டு
வனமிகிவ் வானை எம்வசம் தந்து
கற்றது ஊரெல்லாம் சொற்றியே
உற்ற காலம் கழித்து வாழ்வீர்
என்று சொல்லி நன்று மறைந்தாரே!

அதன்படி நாங்களும் அங்கும் இங்கும்
மெதுவாக யானைமேல்
ஊர்விட்டு ஊர்சென்று
பேர்மிகு புராணக் கதைகள் சொல்கிறோம்
பக்திப் பாக்கள் பாடுகிறோம்
ஏதோ கொஞ்சம்
தீதில்லாப் பொருள்கிடைக்கும் எமக்கும் யானைக்குமே!

ஹாஹா என்று சிரித்தார் பெரியவர்.
இங்கேயும் இதுதான் நடைமுறை!
இவர்களும் என்னை யானைபோல்
தவறாது ஊர்விட்டு ஊராக
அழைத்துச் செல்லும் இடங்களில் நானும்
உழைக்கிறேன் பக்தி உள்பலம் பெருகவே.

இவர்கட்கும் சாப்பாடு பணமெனக் கிடைக்கும்
எனக்கும் பக்தர்கள்
எனக்கும் உமக்கும் ஒரேதொழில்!
பெரியவர் சிரிப்பில் நகைச்சுவை உணர்வும்
சரிசம உள்ளமும் கண்ட பக்தருளம்
விரிவும் உவகையும் வியப்பும் உற்றதே!

--ரமணி 08/01/2013

*****



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 07, 2015 10:35 am

ayyasami ram
பெரியவா படங்களுக்கு நன்றி.

மனதில் ஒரு நிம்மதி
அவர்தம் சந்நிதியில் .

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 XWlcZxfmROSBlUcwkhCN+images

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu May 07, 2015 11:07 am

அருமுனி அறவுரை
1. பிள்ளையார் தத்துவம்
(அளவியல் வெண்பா)

[காஞ்சி முனிவர் உரையிலிருந்து:
’தெய்வத்தில் குரல்’, பாகம் 1 பக்.42-46]


தேங்காய் உடைத்துத் திருவருள் வேண்டுவோம்
ஈங்கதன் காரணம் ஈசன் தலையையே
ஓங்காரப் பிள்ளை ஒருமுறை கேட்டதே!
தேங்காயின் முக்கண்ணுள் தேன். ... 1

சிதறுதேங் காயின் சிறப்பென்ன வென்றால்
சிதறினைக் கொள்வர் சிறாரே - அதனை
உகந்தருள் செய்வார் உமைமகன், இஃதேன்?
அகங்கார ஓட்டுள் அமுது. ... 2

ஆனை உடல(து) அமர்ந்தே பயணிக்க
மோனையாய் உள்ளது மூஞ்சுறு - மேனி
மலைபோல் இருந்தும் மனதுட் புகுந்தே
இலகாய் அமர்வார் இனிது. ... 3

மானுக்கு வாலும் மயிலுக்குத் தோகையும்
ஆனைக்குக் கொம்பும் அழகெனிலிவ் - வானை
கொடியோனைக் கொம்பினால் கொன்றபின் கொம்பை
ஒடித்தெழுதும் காவியம் ஒன்று. ... 4

புள்ளி விரிக்கும் புனித இறையிணையின்
பிள்ளையாய் வந்துநம் பிள்ளையாரே - உள்ள
முதற்பொருளாய் நிற்கும் முழுமுதற் றெய்வம்
முதலில் துதிகொள்ளும் முத்து. ... 5

தொந்திக் கணபதிமுன் தோப்புக் கரணங்கள்
உந்துதல் ஏனெனில் ஓர்முறைகோ - விந்தன்
சகடம் பறிக்கவர் தன்காதைப் பற்றி
விகடமாய்ச் செய்தார் விழுந்து. ... 6

விக்கினம் நீங்க விநாயகர் போற்றியே
முக்கணமும் உள்ளவரும் மோனமே - சிக்கல்
இகவாழ்வில் தீரும் இனிதே இனிநாம்
சுகமாகக் கொள்வோம் சுமை. ... 7

--ரமணி, 07/05/2015, கலி.24/01/5116
(சங்கடஹர சதுர்த்தி தினம்)

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon May 11, 2015 6:41 pm

அருமுனி அறவுரை
2. அத்வைத தரிசனம்
(அளவியல் வெண்பா)

[காஞ்சி முனிவர் உரையிலிருந்து:
’தெய்வத்தில் குரல்’, பாகம் 1 பக்.49-51]


சீவன் பிரமமெனும் செம்பொருள் ஒன்றென்றே
ஆவதால்நாம் எல்லோரும் ஆண்டவன் ஆவோம்
அருமுனி சங்கரர் ஆதியில் சொன்னார்
உருவம் அனைத்துமே ஒன்று. ... 1

இரண்ய கசிபு இதைத்தானே சொன்னான்?
நரசிம்ம ரென்றுலக நாதன் - அரக்கனைக்
கொன்றாரே! சங்கரர் கொள்வதும் ராட்சசன்
சொன்னதும் ஒன்றாமோ சொல்? ... 2

அரக்கனவன் சொன்ன(து) அவனைத் தவிரப்
பரம்பொருள் இல்லை! பரமாம் பொருள்தவிர
வேறொன்றும் இல்லையென வேதியர் சங்கரர்
ஆறுதல் சொன்னார் அறிந்து. ... 3

தன்னகங் காரத்தைத் தள்ளினால் சீவாத்மா
ஒன்றாய்க் கலந்தே ஒளிபெற்றே - நன்றாகத்
தானே பரம்பொருள் தானே கடலெனத்
தானாகக் கண்டறிவ தாம். ... 4

நாம்கடவுள் இல்லையெனில் நாம்கட வுள்தவிர
ஆம்பொருள் வேறேன்றே ஆகுமே! - தாமோர்
பொருளில்லை வேறு பொருளுமுண் டென்றால்
பரமெவண் ஆகும் பரம்? ... 5

ஆண்டவன் நாமென்னும் அத்வைதி ஆண்டவன்
மாண்பைக் குறைப்பதில்லை; மாறாக - ஆண்டவன்
அல்பமாம் சீவனென் றாவதில்லை என்றடித்துச்
சொல்வோர் செயலத் தொழில். ... 6

கடலாய் விரிந்த கடவுளேதன் சக்தி
உடல்பல வாம்சிற் றுருவாய்ப் - படைத்தே
நதியாய்த் துளைகிணறாய் நம்மூர்க் குளமாய்
விதிகொள் உயிராம் விளை. ... 7

மனிதனாம் போது மனம்தந்தே பாவ
வினையுடன் புண்ய விளையென்(று) - அனுபவிக்கச்
செய்தோர் நிலையில் சிவமாம் பொருளாகி
உய்ய வழிசெய்யும் ஊற்று. ... 8

நிலையற் றமன நிலையிலே பாவ
வலைபுண் ணியவளம் வற்றித் - தொலைய
இயலா நிலையில் இறைபோற்றும் பக்தி
பயில்வதால் கிட்டும் பலன். ... 9

குரங்குமனம் பற்றும் குரம்பை அழுகல் ... ... [குரம்பை = உடல்]
பரமன் அழுகாப் பழமென்(று) - உரமுடன்
பக்தியில் ஆண்டவன் பாதவிணை பற்றினால்
முக்தியாம் ஞான முறும். ... 10

--ரமணி, 08/05/2015, கலி.25/01/5116

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri May 15, 2015 8:43 am

அருமுனி அறவுரை
3. தர்மமே தலைகாக்கும்
(அளவியல் வெண்பா)

[காஞ்சி முனிவர் உரையிலிருந்து:
’தெய்வத்தில் குரல்’, பாகம் 1 பக்.123-129]


வருடம் புதியாய் வருமடை யாளம்
மரவர்க்க ராச்சிய மக்கள் - அரசுடன்
வேம்பும் இலையுதிர்த்தே மீண்டும் வசந்தத்தில்
ஓம்பும் துளிரின் ஒளி. ... 1

அரசுடன் வேம்பை அருமணம் செய்வித்(து)
இரண்டின் அடியிலும் ஏகதந்தன் நாகம்
உருவைத்துப் போற்றும் உளமே நமது;
தருமம் விரியும் தரு. ... 2

இயற்கையாம் அன்னை இதுபோல் மரங்கள்
வெயிலிளங் காலசுக வெம்மை - வெயில்முதிர்
காலம் தருநிழல் காணவழி வைத்தது
சாலச் சிறந்தவோர் சால்பு. ... 3

முருகனே நாகத்தின் மூலமென்று கொண்டே
தெரிந்தவோர் சொல்லாய்த் தெலுங்கில் - இரண்டுக்கும்
பேர்சுப்ப ராயுடுவாய்ப் பேச மரத்தடியில்
ஏரம்பன் தம்பி யிணை. ... 4

நியதி பிரபஞ்ச நீதி;-நெறிக் கேடாம்
நியதி இயங்காது நீங்க; - நியதி
உருகொள்ளும் சீவசடம் ஒத்துவாழ்ந் துய்ய;
தருமம் மனிதன் தகை. ... 5

ஏதோவோர் சக்தி உலகம் அனைத்திலும்
ஏதோவோர் தர்மம் இயற்றுமே - ஏதேனும்
நாமமாய் நீறாய் நமாஸாய்ச் சிலுவையாய்த்
தீமையகல் வாழ்வெனத் தீர்வு. ... 6

அந்தவோர் சக்தியே ஆண்டவன் என்றுலகில்
வந்த மதங்கள் வழிபடுமே - அந்தம்
எதுவென் றறியா எளியன் மனிதன்
இதுவுலக வாழ்வின் இயல். ... 7

உடல்விழையும் உள்ளத்தின் உள்ளலாம் செல்வம்
நடையெதிர் கால நலமாம் - மடமையிதே!
ஆயுளின் காப்பாய் அமையுமோ செல்வசுகம்?
தோயும் தருமமே தோள். ... 8

கடவுளுக்கே சொந்தம்நாம் காணுலகம் என்று
நடப்பதே தர்மம் நமக்கு - உடையார்
அவர்முன் சிறுதுரும்பே ஆவோம்நாம் என்றே
தவிர்ப்போம் சுயநலத் தை. ... 9

சுயநலம் தள்ளி சுதருமம் பக்தி
பயில்வதே மாந்தரின் பாதை - நயம்மேவும்
பக்தியுற அன்பே பரமென்(று) அணைக்கும்!
முக்திக்கு பக்தி முதல். ... 10

மனதுறும் பக்தி மகிழ்வின் செயலாய்த்
தினமும் வழிபாடு சேவை - தனதென்று
கொள்ளாத் தியாகமென்று கொள்கை - யெனமதம்
விள்ளுமே வாழ்வின் விடை. ... 11

தருமத்தில் வாழ்ந்தால் தன்னுயிர் தெய்வம்
அரசாள் உலகம் அடையும்; - பரமாகும்
ஓருயிர்; தெய்வ உலகிலே சேவைசெய்யச்
சேருமெனப் பல்வகையில் தீர்ப்பு. ... 12

முடிவு எதுவெனினும் மோனமா னந்தம்
தடையேதும் இல்லாத் தகையாய் - அடியோடு
துன்பம் துயரம் துராசைகள் தோல்வியிலா
இன்பநிலை என்போம் இதை. ... 13

இந்தநிலை எய்தி இறைசுகம் கொள்ளவே
எந்த தருமந்தான் ஏற்றதெனில் - சொந்தமென
வந்தடையும் முன்னோர் வழியில் செயல்படச்
சிந்திக்க நேரும் சிறப்பு. ... 14

இராமர் தருமம் இகத்திலே கொண்டால்
பிராணிகளும் கொள்ளும் பிரியம் - இராவணன்
துர்நெறி கொள்வார்க்குச் சோதர னும்பகை!
தர்மமே காக்கும் தலை. ... 15

--ரமணி, 08/05/2015, கலி.25/01/5116

*****


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 15, 2015 9:54 am

கடவுளுக்கே சொந்தம்நாம் காணுலகம் என்று
நடப்பதே தர்மம் நமக்கு - உடையார்
அவர்முன் சிறுதுரும்பே ஆவோம்நாம் என்றே
தவிர்ப்போம் சுயநலத் தை. ... 9

ஆம் உண்மை நன்றி ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 5 1571444738

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
badri2003
badri2003
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014

Postbadri2003 Fri May 15, 2015 3:31 pm

ரமணி அய்யா, உங்கள் கவிதைகளை kanchiforum.orgல் படித்து இன்புறும் சிறியவன் ஒருவன் அடியேன். அழகு. அற்புதம்.

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri May 29, 2015 11:33 am

ஜகத்குரு தரிசனம்
31. வீணை இசைத்த வித்தகர்!
(கலிவிருத்தம்)

சதாராவில் ஓர்சமயம் தங்கினார் பெரியவர்
விதானமாய் அரசமரம் விளைநிழல் இருக்க
நிதானமாய் அதன்வேரில் நிலத்தில் படுத்தார்
யதார்த்தமாய் ஓர்திரை யதிராஜர் முன்னே. ... 1

வீணையுடன் தரிசித்தார் வித்துவான் ஒருவர்
ஆணையை வேண்டினார் அருமுனிமுன் வாசித்தார்
காணுவோர் யாவருமே கனிமழையில் நனைந்தனர்
வீணையைக் அவரிடம் வித்தகர் கேட்டனரே! ... 2

அருமுனி கேட்டதில் அனவருக்கும் ஆச்சரியம்!
சுருதியைச் சேர்த்தவர் சொன்னார் சரிபார்க்க
சரியெனச் சொன்னதும் சகத்குரு வாசித்தார்
ஒருசில நிமிடம் தொடர்ந்தது வாசிப்பே. ... 3

அழுதார் வித்துவான் அகம்பதறிக் கால்விழுந்தே
தொழுதார் ஆவியைத் தோய்த்தே கண்ணீரில்
பழுது பொறுத்தருளப் பணிவுடன் வேண்டினார்
இழைகல்விச் செருக்கை இனிவிடென் றார்முனியே. ... 4

விடைபெற்று நண்பரிடம் வித்துவான் சொன்னார்
விடையோனின் மலைதூக்க விழைந்தான் இராவணன்
அடிவிரலால் அம்பலத்தான் அவனைச் சாய்க்கவே
கொடைவேண்டிச் சாமகானம் கொண்டிசைத்தான் அல்லவா? ... 5

நானங்கே சாமகானம் நாடியே வாசித்தேன்
ஆனமட்டும் முயன்றும் அதுசரியாய் வரவில்லை
கானத்தை யாரறிவார்? கர்வமே தலைதூக்க
நானெதையோ வாசித்து நலிவை நிறைத்தேனே. ... 6

பெரியவர் சர்வக்ஞர்! பேதம் உடன்கண்டார்!
சரிசெய்தே வாசித்தார் தரித்திரனை மன்னித்தே!
தெரிந்ததைச் செய்வாய் தெரியாத தைத்தெளிவாய்த்
தெரிந்துகொள் எனும்புத்தி தீட்டினார் மனத்துள்ளே! ... 7

--ரமணி, 29/05/2015, கலி.15/02/5116

உதவி:
http://periva.proboards.com/thread/9358/maha-periva-knows-veena-vadyam

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Jun 06, 2015 7:58 pm

ஜகத்குரு தரிசனம்
32. சாத்திரமும் எள்ளுப் புண்ணாக்கும்!
(அளவியல் வெண்பா)

வெளிநாட்டில் பக்தருக்கு வேலை யெனவே
அளித்திருக்கும் வாய்ப்பில் அவரும் - களித்தே
குடும்பத்தின் சூழல் குறைகள் களைய
உடும்பாய்ப் பிடித்தார் உவந்து. ... 1

சாத்திரம் மீறியதாய்ச் சஞ்சலம் வாட்டவே
தீத்திறப் பார்ப்பனர் தீதகல - சாத்திரக்
காவலர் ஆகிய காஞ்சிமுனி கோலத்தை
நாவுள்ளம் சித்தரித்தார் நன்று. ... 2

[தீத்திறப் பார்ப்பனர் = வேத வேள்விகள் செய்யும் அந்தணர் குலம்;
சித்தரித்தார் = விவரமாய் எழுதினார், சித்தம் தரித்தார்]

விடுமுறை நாளில் வெகுகாலம் காணக்
கிடைக்காத் தரிசனம் கிட்ட - அடியார்
விமான நிலையம் விடுத்தே முனிவர்
சமாஜம் உடனேவந் தார். ... 3

அன்று சமையலில் ஆவதைக் கேட்டமுனி
நின்றே சிலவற்றை நீக்கியே - இன்னின்ன
சேரென்று சொன்னதில் சிப்பந்திக் காச்சரியம்
சீரார் முனியின் செயல்! ... 4

பத்தர் முனிகண்டு பாதம் பணியவே
இத்தருணம் உண்ணச்செய் என்றுசொன்னார் - பக்தர்
வயிறாரச் சாப்பிட்டு வந்தார் முனிவர்
உயிராகப் பார்த்தாரே உற்று. ... 5

விரதம் முடிந்ததா வித்தகர் கேட்கக்
கருவிழி நீர்வழியக் கண்டே - உருகிப்
பெரியவா என்றுமட்டும் பேசிநின்றார்  பக்தர்
தரிசனத்தில் தீர்ந்த தவிப்பு. ... 6

எதுவும் புரியாமல் எல்லோரும் பார்க்க
யதிசொன்னார் இங்கிவன் யாத்திரை யாக
வரும்வரை ஏதுமே வாயுண்ண வில்லை
விரதத்தில் வந்தார் விழைந்து. ... 7

இடையிலே சம்பவம் இன்னொன்று: பக்தர்
கொடுவென் றெதைக்கேட்டுக் கொள்ள? - திடமுனி
கேட்ட(து) அதிசயம்! கேட்டறியா தார்கேட்ட
ஆட்டத்தில் ஆடினரே அங்கு! ... 8

வந்தவர் உண்ண, வரமுனி ஆணையிட்டார்
இந்தா இவனிடம் எள்ளுப்புண் ணாக்குடன்
தையலிலை வாங்கித் தரச்செய்தே கொண்டுவா!
கையுடன்செல் என்றார் கனிந்து. ... 9

அருள்லீலை ஏனோ? அருமுனி சொன்னார்
பிரியம் இவனுக்கென் பேரில் - ஒருபார்ப்பான்
சாகரம் தாண்டினால் சாத்திரம் சொல்வதெனில்
ஆகா(து) எதுவும் தர. ... 10

சாத்திரமே நானிங்கு சார்ந்துநிற்க வேண்டும்தான்
பாத்திரம் ஓர்பெரும் பக்தரென்றால் - பாத்திரமும்
வேண்டும்தான் சாத்திரம் வேண்டல் அனுசரித்தே
ஆண்டுநான் கொள்வேன் அகம். ... 11

எள்ளுப்புண் ணாக்கினை இந்த மடப்பசு
கொள்வதில் நாளை கொடுத்திடும் பாலை
எனக்குத் தரநீங்கும் எல்லாக் குறையும்
மனத்தில் இவனுக்கும் மாண்பு. ... 12

சாத்திரம் தர்மம் தவறாத காஞ்சிமுனி
சூத்திரத்தில் பக்தர் சுகமுற்றே - நேத்திரம்
நீரோடக் கைகூப்பி நிற்க முனிதருமம்
வேரோடும் பக்தியில் வேய்ந்து. ... 13

--ரமணி, 06/06/2015, கலி.23/02/5116

உதவி:
http://periva.proboards.com/thread/9379/

*****

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 06, 2015 8:34 pm

மகாபெரியவா எது செய்தாலும் தகுந்ததோர் காரணம் இருக்கும் .
எடுத்துச் சொல்ல ,தெளிவாகும் பல விஷயங்கள் .
தொடர்ந்து களிப்பூட்டுங்கள் ,ரமணி அவர்களே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Jun 06, 2015 9:10 pm

மிக்க நன்றி, ரமணியன் அவர்களே.
ரமணி


Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக