புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
95 Posts - 52%
heezulia
Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
35 Posts - 58%
heezulia
Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 3 matches for இஸ்லாம்

Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் D2f4f090-3087-11ee-8f52-fbf70e4bf742

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சிறுபான்மையினரை ‘சாத்தானின் பிள்ளைகள்’ என்று குறிப்பிட்டு பேசிய பேச்சு தற்போது சர்சைக்குள்ளாகியிருக்கிறது.

இது குறித்து நாம் தமிழர் கட்சி தரப்பு என்ன சொல்கிறது?


கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசியது என்ன?


மணிப்பூரில் நடக்கும் சம்பவங்களைக் கண்டித்து, ஜூலை 30-ம் தேதியன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கிறிஸ்தவர்கள் குறித்தும் இஸ்லாமியர்கள் குறித்தும் பேசிய பேச்சுதான் தற்போது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.

அந்தக் கூட்டத்தில் பேசிய சீமான், "ஏதோ ஒரு ஓரத்தில் பாதிக்கப்பட்டு நிற்கும் மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதுல நமக்கு ஒரு லாபமும் இல்லை. மணிப்பூரில் இருக்கும் கிறிஸ்தவர்களும் ஓட்டுப்போடப் போறதில்லை... இங்க இருக்க கிறிஸ்தவர்களும் ஓட்டுப்போடப் போறதில்லை. நாம நினைச்சுக்கிட்டிருக்கோம், இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும் தேவனின் குழந்தைகள்னு. ஆனா, அது சாத்தானின் குழந்தைகளாக மாறி பல வருடங்களாகிவிட்டது,” என்றார்.

மேலும் பேசிய அவர், “இந்த நாட்டில் நடந்திருக்கும் அநீதிக்கும் அக்கிரமத்திற்கும் பெரிய பொறுப்பேற்க வேண்டியவர்கள் இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள்தான். தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் 18% வாக்குகளை தி.மு.க.வுக்குப் போட்டு, காங்கிரசுக்குப் போட்டு நாட்டை தெருவில் போட்டது இவர்கள்தான். சகிக்க முடியாத ஊழல், லஞ்சம், சீரழிவான நிர்வாகம் ஆகியவற்றுக்குக் காரணம் இவர்கள்தான். இவர்களிடம் போய் என்ன பாவத்தை ஒப்புக்கொடுப்பது. பாவத்தையே பெரும்பான்மையாக அவர்கள்தானே செய்கிறார்கள்?" என்று பேசினார்.

சீமான் கொடுத்த விளக்கம் என்ன?


இதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "தொடர்ச்சியாக 18% வாக்கை தி.மு.க. காங்கிரசிற்குப் போடுகிறார்கள். பிறகு மாற்றம் எப்படி வரும்? எதிர்க்கட்சியாக இருக்கும்போது இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்வதாகச் சொல்வார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு செய்ய மாட்டார்கள். எங்களுக்கு உரிமை இருக்கிறது, ஆதங்கம் இருக்கிறது என்பதால் சொல்கிறோம். இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தி.மு.க. செய்த ஒரு நன்மையைச் சொல்லுங்கள், நான் கட்சியை கலைத்துவிட்டுப் போகிறேன். நான் எவ்வளவோ பேசியிருக்கிறேன், அதையெல்லாம் விட்டுவிட்டு, சாத்தானின் பிள்ளைகள் என்று பேசிவிட்டாரே என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்," என்று குறிப்பிட்டார்.

வலுக்கும் கண்டனங்கள்


சீமான் குறிப்பிட்டதைப் போலவே, அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பேராசிரியர் அருணன், க. உதயகுமார் ஒருங்கிணைப்பில் ஹிந்து என். ராம், டி.எம். கிருஷ்ணா, பேராசிரியர் வசந்தி தேவி, திரைப்படக் கலைஞர் ரோஹிணி ஆகியோரை உள்ளடக்கிய தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சீமானின் இந்தப் பேச்சைக் கண்டித்துள்ளது.

"இவரின் நோக்கம் தெளிவானது. பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகள் சிதற வேண்டும். அதன் மூலம் பா.ஜ.க. அணி வெற்றிபெற வேண்டும் என்பது. இந்தச் சதி வேலைக்கு இணங்காமல் சிறுபான்மையினர் தி.மு.க. அணிக்கு வாக்களிப்பதே இவரது ஆத்திரத்திற்குக் காரணம். அதனால்தான் சாத்தானின் பிள்ளைகள் என்று படுமோசமான வசவு மொழியை உதிர்த்திருக்கிறார்," என அந்த அமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது.

மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லாவும் இந்தப் பேச்சைக் கண்டித்திருக்கிறார். "இந்த கயமைத்தனமான பேச்சு வன்மையான கண்டனத்துக்கு உரியது. தன் கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினாலேயே கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று வர்ணிப்பது அநாகரிகமானது, அருவருப்பானது, என்பதோடு அரசியல் நேர்மையற்ற செயலுமாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம்,” என்றார் அவர்.

மேலும், “மணிப்பூரில் நடக்கின்ற வன்முறைகளுக்கு மௌனமாக ஆதரிப்பவர்கள் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் தங்களுடைய தாக்குதல் இலக்காக வைத்திருக்கும் பொழுது, சீமானுக்கு கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் தான் தாக்குதல் இலக்குகளாக இருக்கிறார்கள். சாத்தானின் பிள்ளைகள் என்ற கடுமையான,அருவருப்பான வார்த்தையை கிறிஸ்தவர்களுக்கு முஸ்லிம்களுக்கும் எதிராக பயன்படுத்தி உள்ள சீமான் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்," என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

‘சிறுபான்மையினர் தங்கள் இருப்புக்காகப் போராடுகிறார்கள்’


இது குறித்து பேசிய ஜவாஹிருல்லா, "சீமான் தொடர்ந்து இப்படிப் பேசி வருகிறார். ஆரம்பத்தில் சாசனம் என்ற ஒன்றை வெளியிட்டார், அதில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தனி தேசிய இனத்தினர் என்றும் அவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். சிறுபான்மையினருக்கு எதிராக வேறு பல விஷயங்களையும் சொன்னார். அதற்கு எதிர்ப்பு வந்த பிறகு அதனை ஓரங்கட்டி வைத்துவிட்டார். சில மாதங்களுக்கு முன்பாக எல்லோரும் தாய் மதத்திற்குத் திரும்ப வேண்டும் என்றார். இது போன்ற மொழி சங்க பரிவாரங்களின் மொழி. இது மிக அருவெருப்பானது. இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் லஞ்சத்திற்கு எதிராக ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்கிறார். சிறுபான்மையினரின் இருப்பே கேள்விக்குரியதாக இருக்கும்போது அவர்கள் முதலில் அதற்காகத்தான் போராடுவார்கள்," என்றார்.

நீண்ட நாட்களாக சிறையில் உள்ள இஸ்லாமியக் கைதிகளை விடுவிக்கவில்லை; இருந்தபோதும் இஸ்லாமியர்கள் தி.மு.கவையே ஆதரிக்கிறார்கள் என்று சீமான் கூறுவது குறித்துக் கேட்டபோது, "இஸ்லாமியச் சிறைவாசிகள் பிரச்சனையைப் பொறுத்தவரை சட்டப்பேரவைக்குள்ளும் வெளியிலும் தொடர்ந்து பேசி வருகிறோம். 2021ல் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, இஸ்லாமியர்களை விடுவிக்க வேண்டும் என சட்டப்பேரவையிலேயே பேசினேன். இதற்குப் பிறகு நீண்ட நாட்கள் சிறையில் உள்ள கைதிகளை விடுவிப்பதற்கு ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், அந்த அரசாணையின் கீழ் இஸ்லாமியக் கைதிகளை விடுவிக்க வழியில்லை. இதைச் சுட்டிக்காட்டிய பிறகு, இந்த விவகாரம் குறித்து ஆராய அரசு ஆதிநாதன் குழுவை அமைத்தது. அந்தக் குழு தற்போது தனது அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது. விரைவில் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம். இஸ்லாமிய சிறைக் கைதிகளுக்காக கடந்த மாதம் கோவையில் மிகப் பெரிய போராட்டத்தையும் நடத்தினோம். ஆகவே, சீமான் சொல்வது தவறு," என்கிறார் ஜவாஹிருல்லா.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தும் சீமானின் பேச்சை கண்டித்திருக்கிறது. அவர் தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கூறியிருக்கிறது.

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கமும் சீமானின் பேச்சை வன்மையாகக் கண்டித்திருக்கிறது.

மன்னிப்புக் கேட்டால் வாக்களிப்பீர்களா?


இதனிடையே, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜவாஹிருல்லாஹ் பேசியது குறித்து சீமானிடம் பத்திரிகையாளர்கள் புதன்கிழமையன்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சீமான், "மன்னிப்பு கேட்டால் எனக்கு வாக்களிப்பீர்களா? வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டியவர்கள் நீங்கள்தான். அநீதிக்கு எதிராக நீங்கள் எங்கே போராடினீர்கள்? பழனிபாபா மட்டும்தான் அநீதிக்கு எதிராக போராடினார். ஆனால் அவரையே நீங்கள் அநியாயமாக சாகவிட்டீர்களே" என்றார்.

"எனக்கு உரிமையும் வலியும் இருக்கிறது. அதனால் நான் பேசுகிறேன். நீங்கள் எப்போது எனக்கு வாக்களித்தீர்கள். செந்தில் பாலாஜிக்கு ஒரு பிரச்னை என்றால் உடனே சிபிஐ தமிழ்நாட்டிற்குள் வர முன் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிடுகிறீர்கள். நள்ளிரவில் வீடு புகுந்து இஸ்லாமியர்களின் வீடுகளில் NIA சோதனை நடத்துக்கிறதே. இது குறித்து ஏன் கேள்வி எழுப்பவில்லை. இதெல்லாம் அவர்களிடம் கேட்க மாட்டார்கள். என் மேல் மட்டும் ஏன் கோபம் வருகிறது" என்றார்.

நாம் தமிழர் கட்சியின் பதில் என்ன?


அந்தக் கூட்டத்தில் பா.ஜ.கவை சீமான் கடுமையாக விமர்சித்தார், என்கிறார் நாம் தமிழர் கட்சியின் சர்வதேச செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன்

சீமானின் கருத்துக்கு எழுந்திருக்கும் எதிர்வினை குறித்து அக்கட்சியின் சர்வதேச செய்தித் தொடர்பாளர் பாக்கியராசனிடம் கேட்டபோது, சீமான் பேசியதற்கு முன்னும் பின்னும் பார்க்காமல் அவரது கருத்து புரிந்துகொள்ளப்படுகிறது என்கிறார்.

"சீமான் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் திட்டினார் என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். குறிப்பிட்ட அந்தப் பேச்சுக்கு முன்னும் பின்னும் அவர் கூறியதை இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அந்தக் கூட்டத்தில் பா.ஜ.கவை சீமான் கடுமையாக விமர்சித்தார். கலவரங்களை பா.ஜ.க. திட்டமிட்டு மேற்கொள்கிறது என்று தெரிவித்தார். பா.ஜ.க. கலவரத்தை விரும்புகிறது, அதனால் அதைச்செய்கிறது என்று சொன்னார். அமித் ஷா மணிப்பூருக்குச் சென்று, அனைத்து தொகுதிகளையும் வெல்வோம் என்று சொன்னதையடுத்து இந்தக் கலவரம் நடக்கிறது என்பதை நீண்ட நாட்களாக அவர் சொல்லிவருகிறார். அன்றைக்கும் அதைச் சொன்னார்.

“ 'அநீதிக்கு துணை போகாதீர்கள்' என இயேசுவும் நபிகளும் சொன்னதை ஏற்றுக்கொள்ளாமல், தவறான ஒருவருக்கு துணை போகிறீர்கள். திரும்பத் திரும்ப தி.மு.கவுக்கும் காங்கிரசுக்கும் துணையாக இருக்கிறீர்கள். சரியான ஒருவருக்கு கைகொடுப்பதில்லை என்ற பொருளில் அந்த வாசகங்களைச் சொன்னார்.

“தி.மு.கவுக்கும் காங்கிரசுக்கு வாக்களிப்பதால் என்ன நன்மை கிடைத்தது? இஸ்லாமியக் கைதிகளை விடுவிப்பதை எதிர்த்து மோசமான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்கிறது தமிழக அரசு. இப்படிச் செய்யும் தி.மு.கவை ஆதரிப்பதை எதிர்த்து கேள்விதான் கேட்க முடியும்" என்கிறார் பாக்கியராசன்.

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் குறித்துச் சீமான் பேசியவை குறித்து இதற்கு முன்பும் சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கின்றன. 2013ஆம் ஆண்டில் விவிலியம் குறித்து பேசிய விவகாரம் சர்ச்சைக்குள்ளானதைக் கண்டித்து கிறிஸ்தவ அமைப்புகள், அவரைக் கைதுசெய்ய வேண்டுமெனக் கோரின. இதற்குப் பிறகு, தமிழர்கள் எல்லாம் தாய் மதமான சைவத்திற்குத் திரும்ப வேண்டும் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

குறிச்சொற்கள் #சீமான் #பா.ஜ.க #இஸ்லாம் #கிறிஸ்தவர்
#மணிப்பூர்

பிபிசி
Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் 94fa5320-2169-11ee-941e-23d1e9ab75fa

மக்களுக்கு மலட்டுத்தன்மையை உருவாக்கும் மாத்திரை உள்ளதா? பெண்களின் உள்ளாடைகளில் ஒரு ஜெல் பயன்படுத்தி மலட்டுத்தன்மையை உருவாக்க முடியுமா? சிசேரியன் பிரசவத்தின் போது ஒரு மருத்துவர் பெண்களுக்கு ரகசியமாக கருத்தடை செய்வதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இவை அனைத்தும் இலங்கையில், இஸ்லாமியர்களை வெறுக்கும் பெளத்த மதத்தினரிடையே திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்கள். பெரும்பான்மையாக உள்ள பெளத்த சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு கருத்தடை செய்வதன் மூலம் நாட்டில் சிறுபான்மையாக உள்ள இஸ்லாமியர்களின் மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக இதுபோன்ற ரகசிய முயற்சி செய்யப்படுவதாக இந்தப் பொய்களின் வழியே சொல்லப்படுகிறது.

வடமேற்கு நகரமான குருணாகலைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் இப்படியான ஒரு நம்ப முடியாத குற்றச்சாட்டிற்கு இலக்கானார்.

"நான் ஒரு இஸ்லாமியர், 4,000 பெளத்த பெண்களுக்கு ரகசியமாக கருத்தடை செய்ததாக என் மீது குற்றம் சாட்டப்பட்டது," என்கிறார் அறுவை சிகிச்சை மருத்துவரான மொஹமத் ஷஃபி.

மருத்துவர் ஷஃபி, சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது பெளத்த பெண்களின் ஃபலோபியன் குழாய்களை (fallopian tubes) அழுத்தியதாகவும், அதனால் பெண்கள் அடுத்து குழந்தைகள் பெறுவதைத் தடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

ஷஃபி, மே 24, 2019 அன்று பயங்கரவாத சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

"நான் குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கப்பட்டேன். என்னை ஏன் இப்படி நடத்துகிறார்கள் என நினைத்தேன். என் மனைவி, குழந்தைகளுக்காக நான் உயிர் வாழவேண்டும்," என்றார் டாக்டர் ஷஃபி.

மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான ஷஃபி, 60 நாட்கள் சிறையில் இருந்தார்.

ஜூலை 2019இல், நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய பின்னரும் அவர் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்ததால் மருத்துவப் பணியிலிருந்து கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஷஃபிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லாததால், அவர் மே 2023இல் இலங்கையின் சுகாதார அமைச்சகத்தால் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள்


இலங்கையின் 22 மில்லியன் மக்கள்தொகையில் 70% பேர் பெளத்தர்களாகவும், 10% இஸ்லாமியர்களாகவும், சுமார் 12% பேர் இந்துக்களாகவும், 7% பேர் கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர்.

மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் குற்றச்சாட்டுகளுக்கு முன், டாக்டர் ஷஃபி அனைத்து மதத்தைச் சேர்ந்த நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்.

ஆனால், ஏப்ரல் 21, 2019, ஈஸ்டர் ஞாயிறு அன்று தேவாலயங்கள், சுற்றுலாத் தளங்கள் மற்றும் ஹோட்டல்களை குறி வைத்து நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள், மருத்துவர் ஷஃபியின் வாழ்க்கையையே மாற்றியது.

இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) அமைப்புடன் தொடர்புடைய, சுயாதீனமாகத் தீவிரவாதிகளாக மாறிய, ஒரு குழுவைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள், 2009இல் முடிவுக்கு வந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போருக்கு பிறகு இலங்கையில் நடந்த மிக மோசமான தாக்குதலாகக் கருதப்படுகிறது.

இந்த குண்டுவெடிப்பு இலங்கை முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கியது.

அவர்களைப் பழிவாக்கும் நோக்கத்தில் மசூதிகள், இஸ்லாமியர்களின் வீடுகள், அவர்களுக்கு சொந்தமான கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தச் சம்பவங்களின் தொடர்ச்சியாக, ஒரு கும்பலால் இஸ்லாமியர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

பொய்யான குற்றச்சாட்டு


மே 23, 2019 அன்று, ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு ஒரு மாதத்திற்குப் பின், ‘திவயின’ என்ற வெகுஜன நாளிதழ் தனது முதற்பக்கத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில், "தவ்ஹீத் ஜமாத் மருத்துவர் 4,000 சிங்கள பௌத்த தாய்மார்களுக்கு கருத்தடை செய்துள்ளார். விவரங்களை ஆதாரத்துடன் வெளியிடுகிறோம். மருத்துவரைக் கைது செய்ய தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது," என்று குறிப்பிட்டிருந்தது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்காகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு உள்ளூர் இஸ்லாமிய குழுக்களில் தேசிய தவ்ஹீத் ஜமாத்தும் ஒன்றாகும்.

அந்த செய்தித்தாள், தனது கூற்றுகளுக்கு எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. அதேவேளையில், டாக்டர் ஷஃபியின் அடையாளத்தையும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் டாக்டர் ஷஃபி மற்றும் அவரது இருப்பிடத்தின் படங்கள், பௌத்த பெண்களை கருத்தடை செய்ததாகச் சொல்லப்பட்டக் குற்றச்சாட்டுகளுடன் பேஸ்புக்கில் (Facebook) வெளிவந்தன.

"நான் பகிரங்கமாக பொதுவெளியில் இத்தகைய குற்றச்சாட்டுகளுடன் இணைக்கப்படுவது இதுவே முதல் முறை," என அவர் பிபிசியிடம் கூறினார்.

சமூக ஊடகங்களில் தனக்கு எதிராகப் பரப்பப்படும் பொய்க் குற்றச்சாட்டுகள் குறித்தும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பது குறித்தும் புகார் தெரிவிப்பதற்காக ஷஃபி, மருத்துவமனை வார்டு ஆலோசகர் மற்றும் சீனியர் ஹவுஸ் அலுவலர்களுடன், குருணாகல் கற்பிக்கும் வைத்தியசாலை இயக்குனர் சரத் வீரபண்டாராவை சந்தித்ததாகக் கூறினார்.

இருப்பினும், வைத்தியசாலையில் உள்ள விஷயங்களைப் பற்றி மட்டுமே தன்னால் பேச முடியும் எனவும், வெளியில் உள்ள விஷயங்கள் பற்றித் தன்னால் எதுவும் கூற முடியாது எனவும் டாக்டர் வீரபண்டாரா பதிலளித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, டாக்டர் ஷஃபி கைது செய்யப்பட்டார்.

“பொது இடையூறு ஏற்படாமல் இருக்க நான் வாரன்ட் இல்லாமல் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டேன்,” என்று அவர் கூறினார்.

'நச்சு ஊடகம்'


செய்தித் தொலைக்காட்சிகள் இந்தச் செய்தியை வெளியிடத் துவங்கிய பிறகு இந்த விவகாரம் மக்கள் கவனத்தை மேலும் ஈர்த்தது. இன்னும் பல தவறான குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.

"நான் கட்டமைக்கப்பட்டேன். நான் பயங்கரவாதி என்று பகிரங்கமாக முத்திரை குத்தப்பட்டேன். நச்சுத் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் என் வாழ்க்கையை அழித்துவிட்டன," என்று டாக்டர் ஷஃபி கூறினார்.

டாக்டர் ஷஃபியின் மனைவி பாத்திமா இமாரா பணிபுரிந்த மருத்துவமனைக்கு வெளியே புத்த பிக்குகள் போராட்டம் நடத்தினர்.

"எனது மனைவிக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. அவர் எங்கள் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சினார்," என்று டாக்டர் ஷாபி கூறினார், மேலும் அவர் தனது வேலையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் என்றும் கூறினார் ஷஃபி.

"எனது மூத்த மகள் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள், பள்ளிக்குச் செல்ல விரும்பினாள். ஆனால், பொதுமக்களுக்கு எங்கள் மீதிருந்த கோபத்தால் எங்களால் அதைச் செய்ய முடியவில்லை. அவள் மனச்சோர்வடைந்திருந்தாள். நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குப் புதிய பள்ளிகளைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது," என்று அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது மனைவியும் அவர்களது மூன்று குழந்தைகளும் கொழும்புக்கு குடிபெயர்ந்தனர். அப்போதிருந்து, அவரது குழந்தைகள் மூன்று பள்ளிகள் மாறியுள்ளனர்.

"எனது மனைவியும் குழந்தைகளும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஓட வேண்டியிருந்தது. மேலும் எனது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால் அவர்களிடம் பணமும் இல்லை," என்றார் ஷஃபி.

ஷஃபி பற்றி சுமார் 800 பெண்கள் வாக்குமூலம் கொடுத்திருந்த நிலையில், ஜூன் 27, 2019 அன்று இலங்கை குற்றப் புலனாய்வுத் துறையினர் டாக்டர் ஷஃபிக்கு எதிரான ரகசிய கருத்தடை நடைமுறைகள் தொடர்பாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இந்த வாக்குமூலங்களைத்தான், மருத்துவமனை நிர்வாகம் புகார் எனக் குறிப்பிட்டிருந்தது.

மேலும், அரசு புலனாய்வு சேவை உட்பட இலங்கையில் உள்ள பல்வேறு சட்ட அமலாக்க மற்றும் புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகள், ஷஃபியை பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்துவதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளன.

தேர்தல் பிரசாரம்


ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்க்கப் போவதாகச் சொன்ன கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், முன்னாள் போர்க்கால பாதுகாப்புத் தளபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், இஸ்லாமிய தீவிரவாதம் பரவுவதைத் தடுக்கப் போவதாகவும் அறிவித்தார்.

நவம்பர் 2019இல் நடைபெற்ற இந்தத் தேர்தலின்போது இஸ்லாமியர்களுக்கு எதிரான உணர்வு உச்சத்தை எட்டியது.

"இனவெறி என்பது ஒரு போதை. துரதிர்ஷ்டவசமாக, இனவெறிக்கு அடிமையானவர்கள் அதைப் பற்றி பெருமையுடன் பேசுகிறார்கள்," என்கிறார் டாக்டர் ஷஃபி.

"இலங்கை அரசியல்வாதிகள் என்னை அவதூறாகப் பேசினர். அது என்னால் கற்பனைகூடச் செய்யமுடியாத அளவுக்கு அதிர்ச்சியாக இருந்தது."

'கருத்தடை மாத்திரைகள் மற்றும் ஜெல்'


கருத்தடை என்பது இலங்கையை கைப்பற்ற இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் ஓர் ஆயுதம் என்ற திட்டமிட்டப் பொய்ப் பிரசாரம் மற்ற சந்தர்ப்பங்களிலும் எழுந்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டில், இஸ்லாமிய உணவக உரிமையாளர் ஒருவர் பௌத்த வாடிக்கையாளர்களைக் குறிவைத்து, உணவில் கருத்தடை மாத்திரைகளை' சேர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

இது இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள அம்பாறையில், இஸ்லாமியர்களுக்கு சொந்தமான உணவகம், கடைகள், ஹோட்டல்கள் மீது பௌத்த கும்பல்களால் வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

டாக்டர் ஷஃபியின் கைதுக்குப் பிறகு, முக்கிய பௌத்த பிக்குவான, வரக்காகொட ஸ்ரீ ஞானரத்னா, இஸ்லாமியர்கள் மீது கல்லெறிதலை பகிரங்கமாக பொதுவெளியில் ஆதரித்தார், இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் உணவகங்களைப் புறக்கணிக்குமாறு பௌத்த மதத்தினரை வலியுறுத்தினார்.

மற்றொரு புறம், இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான ஆடையகங்களில் பௌத்தப் பெண்களுக்கான உள்ளாடைகளில் 'கருத்தடை ஜெல்' (sterilisation gel) போடப்படுவதாக வதந்தி பரப்பப்பட்டது.

சமூக ஊடகங்களில் இந்த வதந்தி பரவியதால், பௌத்த பேரினவாதிகள் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கடைகளைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்ததுடன், அங்கு பொருட்கள் வாங்கியவர்களையும் தாக்கினர்.

அம்பாறையில் நடைபெற்ற இந்த வன்முறைக்குப் பிறகு, பொய்க் குற்றச்சாட்டுகளில் சொல்லப்பட்டதைப் போல அங்கு கருத்தடை மாத்திரைகளோ, ஜெல்களோ புழக்கத்தில் இல்லை என்று தெளிவுபடுத்தி அறிக்கை வெளியிடவேண்டிய கட்டாயத்திற்கு ஐ.நா தள்ளப்பட்டது.

ஊடக நெறிமுறைகள்


உள்ளூர் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையதளங்களில் பிரசுரிக்கப்படும் இதுகுறித்த செய்திகளுக்கு எதிராகக் குரல் எழுப்பிய சில குழுக்களில், இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கமும் ஒன்று. இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்தனவின் கூற்றுப்படி, அந்த நேரத்தில் இந்தச் செய்தி குறித்து எந்த உண்மையான புலனாய்வுக் கட்டுரைகளும் வெளியிடப்படவில்லை.

‘கதையின் இரு பக்கங்களையும் உள்ளடக்கிய’ புலனாய்வுக் கட்டுரைகளை எழுதி, ஆனால் அவை வெளியிடப்படாமல் போன பல்வேறு உள்ளூர் பத்திரிக்கையாளர்களிடம் பிபிசி பேசியது.

"இது வாசகர்களை கோபப்படுத்தும் மற்றும் செய்தித்தாள் விற்பனையை பாதிக்கும்" என்று ஆசிரியர்கள் அஞ்சுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

வெகுஜன ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் மருத்துவர் ஷஃபிக்கு எதிரான வெறுப்பு பிரசாரமே, பெளத்த பிக்குகள் இஸ்லாமியர்கள் மீது கல்லெறிய அழைப்பு விடுத்ததற்கு நேரடியான காரணம். மேலும், இது முற்றிலும் எந்த அடிப்படையும் இல்லாதது என்று ஜயவர்தன கூறினார்.

"டாக்டர் ஷஃபியை பற்றி வாக்குமூலம் அளித்த பெண்களில் 168 பேர் மட்டுமே குழந்தைப்பேறுக்காக சிரமப்பட்டதை நாங்கள் கண்டறிந்தோம். மற்றவர்கள் இந்த செய்தியைப் பற்றி கேள்விப்பட்டவுடன் முன்வந்தவர்கள்.

அவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பினர். புகார் அளித்தவர்கள் அனைவரின் பட்டியலும் எங்களிடம் உள்ளது, தோராயமாக அதை உறுதி செய்துள்ளோம். டாக்டர் ஷஃபி கைது செய்யப்பட்டப் பிறகு அந்தப் பட்டியலில் உள்ளவர்களில் 120 பேர் குழந்தை பெற்றுள்ளனர்,” என்று ஜயவர்தனா கூறினார்.

'

குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க ஒரே வழி என் கடமையைச் செய்வதுதான்’


டாக்டர் ஷஃபிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப் போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவர் மே 2023இல் குருணாகல் கற்பிக்கும் வைத்தியசாலையில் தனது பணியை மீண்டும் தொடங்கினார்.

அவரின் மூன்றாண்டு சம்பளம் சுமார் 2.7 மில்லியன் இலங்கை ரூபாயை பெற்றார். இதை அத்தியாவசிய மருந்துகள் வாங்குவதற்காக சுகாதார அமைச்சகத்திற்குத் தானமாக வழங்கினார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக, பல இலங்கை மருத்துவர்கள் சிறந்த வாழ்க்கையைத் தேடி புலம்பெயர்ந்து வருகின்றனர். ஆனால் டாக்டர் ஷஃபி, தான் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவமனையில் தொடர்ந்து பணியாற்றுவதில் உறுதியாக இருந்தார்.

"எனது குடும்ப உறுப்பினர்கள் என்னை மீண்டும் அங்கு பணிக்குச் செல்ல வேண்டாம் என்று சொன்னார்கள், ஆனால் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க ஒரே வழி அதே மருத்துவமனைக்குச் சென்று அதே நிலையில் மீண்டும் பணியாற்றுவது தான்," என்கிறார் ஷஃபி.

குறிச்சொற்கள் #இலங்கை
#இஸ்லாம்
#பௌத்தம்
#தீவிரவாதம்
#இனவாதம்

பிபிசி
Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Yazidi-women

கடந்த 2014ஆம் ஆண்டு, இராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு (IS) குழு ஆயிரக்கணக்கான யாசிதி பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமைகளாகப் பிடித்தது.

அவர்களது சக யாசிதிகள் தாமதிக்காமல் மீட்பு முயற்சியைத் தொடங்கினர். ஆனால் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களின் பணி இன்னும் முடிவடையவில்லை.

நவம்பர் 2015இல், பஹாரும் அவரது மூன்று குழந்தைகளும் ஐந்தாவது முறையாக விற்கப்பட்டனர்.

வடக்கு இராக்கின் சின்ஜார் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்திற்குள் 18 மாதங்களுக்கு முன்பு நுழைந்த ஐ.எஸ் குழுவால் சிறைபிடிக்கப்பட்ட பல யாசிதி பெண்களில் பஹாரும் ஒருவர். ஏறக்குறைய 6,000 ஆண்டுகளாக இராக்கில் வாழும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த யாசிதிகள் ஐ.எஸ் போராளிகளால் ‘காஃபிர்’களாகக் (இஸ்லாத்துக்கு எதிரானவர்களாக) கருதப்பட்டனர்.

அவரது கணவர் மற்றும் மூத்த மகன் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் சுடப்பட்டு கூட்டுப்புதைகுழியில் புதைக்கப்பட்டதாக பஹார் நம்புகிறார்.

பஹாரும் அவரது மற்ற மூன்று குழந்தைகளும் எப்படி தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்படுவார்கள் என்று நினைத்து அழுதுகொண்டே ஓர் அறையில் வரிசையாக நின்றதை அவர் நினைவு கூர்ந்தார். ஆனால் அவர்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர்.

அப்போதுதான் உண்மையான கொடுங்கனவு தொடங்கியது. பஹார் தன்னை விலைகொடுத்து வாங்கிய ஐ.எஸ் போராளிகளுக்கு சேவை செய்ய வேண்டியிருந்தது.

"அவர்கள் விரும்பும்போது நான் அவர்களுடைய மனைவிகளைப் போல் நடிக்க வேண்டும். அவர்கள் விரும்பினால் என்னை அடிப்பார்கள்," என்கிறார். அவரது 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் தாக்கப்பட்டனர். அவரது மகள்களில் ஒருவரின் முகத்தில் ரைஃபிள் துப்பாக்கியின் கைப்பிடியால் அடிக்கப்பட்டதில், அவரது முகம் படுகாயமடைந்தது.

பஹாரின் நான்காவது ‘உரிமையாளர்’ அபு கட்டாப் என்று அழைக்கப்படும் துனிசிய தேசத்தைச் சேர்ந்தவர். "நாங்கள் அவரது வீட்டில் தங்கியிருந்தோம், ஆனால் அவர் வேறு இரண்டு ஐ.எஸ் தளங்களில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்ய என்னைக் கடனாகக் கொடுத்தார். இந்த எல்லா இடங்களிலும், நான் வேலைக்குச் செல்வேன், சுத்தம் செய்வேன், கற்பழிக்கப்படுவேன்,” என்கிறார் பஹார்.

“எல்லா நேரங்களிலும் விமானத் தாக்குதல்கள் நடந்தன. ஐ.எஸ் போராளிகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பார்கள், ஆயுதங்களைப் கைமாற்றிக்கொள்வார்கள், அல்லது குண்டுவீச்சிலிருந்து மறைந்திருப்பார்கள். அந்தக் குழப்பம் ஒரு கொடுங்கனவைவிட மோசமானது."

ஒரு நாள், பஹாரும் அவரது குழந்தைகளும் அபு கத்தாபின் வீட்டில் இருந்தபோது, கறுப்புக் கண்ணாடிகள் கொண்ட வெள்ளை நிற கார் ஒன்று வந்து நின்றது. அதன் ஓட்டுநர் பல ஐ.எஸ் போராளிகளைப் போலவே நீண்ட தாடியுடன் கறுப்பு உடை அணிந்திருந்தார்.

தானும் தன் குழந்தைகளும் மீண்டும் விற்கப்படுவதை பஹார் உணர்ந்தார். இதற்கு மேல் தாங்க முடியாத பஹர், தன்னைக் கொன்றுவிடுமாறு அந்த நபரிடம் கத்தினார். ஆனால் அடுத்து நடந்தது எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

அவர்கள் காரை ஓட்டிச் செல்லும்போது, "உன்னை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன்" என்று டிரைவர் கூறினார். பஹாருக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, அல்லது அவர் அந்த நபரை நம்பவில்லை. அவர் வெறி பிடித்தவராக மாறினார்.

அந்த நபர் காரை நிறுத்திவிட்டு யாரையோ போனில் அழைத்தார். பின்னர் அவர் தொலைபேசியை பஹாரிடம் கொடுத்தார்.

அதில் அபு ஷுஜாவின் குரல் கேட்டது. ஐ.எஸ் குழுக்களிடமிருந்து பல யாசிதி பெண்கள், குழந்தைகளை மீட்க ஏற்பாடு செய்தவர் அபு ஷுஜா. தானும் தன் குழந்தைகளும் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக டிரைவர் தன்னை விலைக்கு வாங்கியிருப்பதை பஹார் அப்போது உணர்ந்தார்.

பஹார், சிரியாவில் ரக்காவிற்கு அருகில் உள்ள ஒரு கட்டுமான தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். கார் ஓட்டுநர் அவரை இறக்கிவிட்டு, ஒருவர் வருவார் என்றும், ‘சயீத்’ என்ற குறியீட்டு வார்த்தையைச் சொல்லுமாறும் கூறினார். அவர் அந்த நபருடன் செல்ல வேண்டும்.

யாரோ ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, அந்த வார்த்தையை உச்சரித்தார். அவர் பஹாரையும் அவரது மூன்று குழந்தைகளையும் தனது மோட்டார் சைக்கிளில் ஏறச் சொல்லிவிட்டு, "நன்றாகக் கேளுங்கள், நாம் ஐ.எஸ் பிராந்தியத்தில் இருக்கிறோம், சோதனைச் சாவடிகள் உள்ளன, அவர்கள் உங்களிடம் ஏதாவது கேட்டால், ஒரு வார்த்தையும் சொல்லாதீர்கள். அவர்கள் உங்கள் யாசிதி உச்சரிப்பை அடையாளம் கண்டுவிடுவார்கள்," என்றார்.

Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Isis

இராக்கின் யாசிதிகளுக்கு என்ன ஆனது?


அந்த நபர் அவர்களைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக பஹார் கூறுகிறார்.

"அவர்கள் அங்கு எங்களை மிகவும் அருமையாக நடத்தினர். நாங்கள் குளித்தோம், அவர்கள் எங்களுக்கு உணவு மற்றும் வலி நிவாரணி மருந்துகளை வழங்கினர். மேலும் 'நீங்கள் இப்போது பாதுகாப்பான கைகளில் இருக்கிறீர்கள்' என்று எங்களிடம் சொன்னார்கள்."

மற்றொரு நபர் பஹார் மற்றும் அவரது குழந்தைகளை புகைப்படம் எடுத்து அபு ஷுஜாவுக்கு அனுப்பினார்.

மறுநாள் அதிகாலை 3 மணியளவில், பஹாரையும் அவரது குடும்பத்தினரையும் எழுப்பி, மீண்டும் பயணம் செய்யத் தயாராகும்படி சொன்னார்கள். யாருடைய வீட்டில் அவர்கள் தங்கியிருந்தனரோ அந்த நபர் தனது தாயின் அடையாள அட்டையை பஹாரிடம் கொடுத்து, யாரேனும் நிறுத்திக் கேட்டால், தன் மகனை டாக்டரிடம் அழைத்துச் செல்வதாகச் சொல்ல வேண்டும் என்றார். "நாங்கள் பல ஐ.எஸ் சோதனைச் சாவடிகள் வழியாகச் சென்றோம், ஆனால் யாரும் எங்களைத் தடுக்கவில்லை."

இறுதியாக அவர்கள் சிரியா-இராக் எல்லையில் உள்ள ஒரு கிராமத்திற்கு வந்தனர், பஹாரை அபு ஷுஜா மற்றும் அவரது சகோதரர்கள் சந்தித்தனர். "நான் மூர்ச்சையாகும் நிலையில் இருந்தேன். "அதற்குப் பிறகு நடந்த எதுவும் எனக்கு நினைவில் இல்லை," என்று அவர் கூறுகிறார்.

சின்ஜாரை ஐ.எஸ் கைப்பற்றிய பிறகு 6,400க்கும் மேற்பட்ட யாசிதி பெண்கள் மற்றும் குழந்தைகள் அடிமைகளாக விற்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. மேலும் 5,000 யாசிதிகள் படுகொலை செய்யப்பட்டனர், இதை ஐ.நா. ஓர் இனப்படுகொலை எனக் கூறுகிறது.

கடந்த 2017ஆம் ஐ.எஸ் தோற்கடிக்கப்பட்டதில் இருந்து, அரண்டு போயிருந்த யாசிதி சமூகம் மீள முயன்று வருகிறது.

ரேச்சல் ரைட் அறிக்கையின்படி, இன்னும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட யாசிதிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் முகாம்களில் சிக்கித் தவிக்கின்றனர்.

Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் 26cfc0e0-20d0-11ee-941e-23d1e9ab75fa

ஆன்லைனில் விற்கப்படும் பெண்கள்


பஹாரின் மீட்புக்கு ஏற்பாடு செய்த அபு ஷுஜா மட்டும், ஐ.எஸ் குழுவால் கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபடவில்லை. ஐ.எஸ் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே வாழ்ந்த தொழிலதிபர் பஹ்சாத் ஃபஹ்ரான், யாசிதி பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்பதற்காகவும், ஐ.எஸ் போராளிகளின் குற்றங்களைப் பதிவு செய்யவும் ‘கின்யாத்’ என்ற குழுவை அமைத்தார்.

கடத்தப்பட்ட யாசிதி பெண்களையும் குழந்தைகளையும் ஐ.எஸ் போராளிகள் ஆன்லைனில் குறிப்பாக டெலிகிராமில் வாங்கி விற்பதாக கின்யாட்டுக்கு தகவல் கிடைத்தது. "இந்த ஆன்லைன் குழுக்களில் கடன் வாங்கிய பெயர்கள் அல்லது ஐ.எஸ் போராளிகளின் பெயர்களைப் பயன்படுத்தி நாங்கள் ஊடுருவுவோம்," என்று பஹ்சாத் கூறுகிறார்.

இராக்கின் குர்திஷ் பகுதியில் உள்ள தனது அலுவலக சுவரில், அவர் பார்த்த டெலிகிராம் அரட்டைகளின் அச்சிடப்பட்ட ஸ்கிரீன் ஷாட்களை அவர் சுட்டிக்காட்டினார். அவற்றில் ஆங்கிலத்தில், "12 வயதான பெண், கன்னி இல்லை, ஆனால் அழகானவள்" என்று ஒரு விளம்பரம் குறிப்பிட்து. அவர் $13,000 (£10,000) செலவு செய்து சிரியாவில் ரக்காவில் இருந்தார். அவர் ஒரு சோபாவில் ஒரு மாடல் அழகியைப் போல் சாய்ந்து அமர்ந்திருந்த சிறுமியின் படத்தைக் காட்டினார்.

Topics tagged under இஸ்லாம் on ஈகரை தமிழ் களஞ்சியம் 7b081e00-20d0-11ee-941e-23d1e9ab75fa

மீட்பு முயற்சிகள் எப்படிப்பட்டவை?


இந்த டெலிகிராம் விவாதங்கள் கடத்தப்பட்ட யாசிதிகள் எங்கிருந்தார்கள் என்ற விவரங்களைத் தரும் என்று பஹ்சாத் கூறுகிறார். "நாங்கள் அங்கு வசிக்கும் மக்களைத் தொடர்புகொண்டு, இந்தக் குழந்தையைத் தேடச் சொல்லுவோம்."

சிறுவர்கள் வீட்டைவிட்டு வெளியே அனுமதிக்கப்பட்டதால் அவர்களைக் கண்டுபிடிப்பது எளிதாக இருந்தது. “கடத்தப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கும் தகவல் அனுப்ப வேண்டும், அப்போதுதான் சிறுவர்களை எதிர்கொள்ளும்போது, நாங்கள் உண்மையானவர்கள் என்பதற்கான ஆதாரத்தை அவர்களுக்கு வழங்க முடியும்," என்கிறார் பஹ்சாத்.

"நாங்கள் குடும்பங்களையும், குழந்தைகளுடன் உள்ள பெண்களையும் மீட்கும்போது, அவர்களைக் காப்பாற்ற நாங்கள் இருக்கிறோம் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்தவும், அவர்கள் தனியாக இருக்கும்போது எங்களுக்குத் தெரியப்படுத்தவும் தொடர் குறியீடுகள் அல்லது சமிக்ஞைகளை நாங்கள் வைத்திருக்க வேண்டியிருந்தது,” என்கிறார்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தச் செயல்முறை வேறுபட்டது. ஆனால் ஒவ்வொன்றும் ஐ.எஸ் குழு சோதனைச் சாவடிகள் மூலம் பணம் மற்றும் போலி ஆவணங்களை உள்ளடக்கியது.

யாசிதிகள் ஐ.எஸ் பகுதிகளுக்குள் நுழைவது மிகவும் ஆபத்தானது, எனவே சிகரெட் மற்றும் தடைசெய்யப்பட்ட மதுவை மாற்றுவதற்கு அதிகம் பயன்படுத்தப்பட்ட உள்ளூர் கடத்தல்காரர்களின் மூலம் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தது.

"இவர்கள் எல்லாவற்றையும் பணத்திற்காகச் செய்தார்கள். அதுதான் அவர்களின் ஒரே நோக்கம். இந்தப் பெண்களை திரும்ப வாங்க பலருக்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் கொடுக்கப்பட்டது," என்கிறார் பஹ்சாத்.

சுமார் 6,417 யாசிதிகள் சிறைபிடிக்கப்பட்டனர், ஆனால் 3,568 பேர் தப்பியோடிவிட்டனர் அல்லது மீட்கப்பட்டனர் என்று கின்யாட் கூறுகிறது. பஹ்சாத் தானே 55 பேரைக் காப்பாற்றினார், ஆனால் ஐ.நா ஆதரவுடைய இடப்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின்படி (IOM), சுமார் 2,700 யாசிதி பெண்கள் மற்றும் குழந்தைகளை இன்னும் காணவில்லை. அவர்களில் பலர் இன்னும் கடத்தல்காரர்களுடன் இருக்கலாம், என்கிறது.

பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது மேலும் மேலும் சிக்கலாகிவிட்டது என்று பஹ்சாத் கூறுகிறார். ஐ.எஸ் தோற்கடிக்கப்பட்ட பிறகு, போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும் வேறு பகுதிகளுக்கு தப்பிச் சென்றுவிட்டனர். சிலர் துருக்கி, இராக், மற்றும் சிரியாவில் உள்ளனர், சிலர் ஐரோப்பாவிற்கும் சென்றனர்.

கடத்தப்பட்டபோது ஐந்து அல்லது ஆறு வயதுடைய யாசிதி குழந்தைகள் உள்ளனர். அவர்கள் தங்கள் மொழியை அல்லது அவர்கள் யார் என்பதை முற்றிலும் மறந்துவிட்டார்கள். "அவர்களுக்கு யாசிதி என்பது பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் தங்கள் குடும்பத்தையும்கூட மறந்துவிட்டார்கள்," என்று பஹ்சாத் கூறுகிறார்.

'நடைபிணமாக வாழ்கிறேன்'


யாசிதி மக்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது.

"யாசிதிகள் பல நூற்றாண்டுகளாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். முஸ்லீம் மக்கள் அவர்கள் மதம் மாறவேண்டும் அல்லது இறக்க வேண்டும் என்று இன்னும் நம்புகிறார்கள்.

அதனால்தான் ஐ.எஸ் என்பது அதன் முடிவு இல்லை என்று நாங்கள் நம்புகிறோம், அது யாசிதிகளுக்கு ஒரு பெரிய பயம்," என்கிறார் ஹைதர் எலியாஸ். இவர் மிகப்பெரிய யாசிதி வக்கீல் அமைப்பான யஸ்தாவின் தலைவர்.

சுமார் 300,000 யாசிதிகள் சின்ஜாரில் உள்ள தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். கிட்டத்தட்ட பாதிப் பேர் - பஹார் போன்றவர்கள் - இன்னும் இராக்கின் குர்திஷ் பிராந்தியத்தில் கூடார முகாம்களில் வாழ்கின்றனர். சின்ஜார் மாவட்டத்தில் உள்ள தங்கள் வீடுகளுக்கு அவர்களால் திரும்பிச் செல்ல முடியாது.

ஏனெனில் அது முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. மேலும் இராக்/சிரியா எல்லையில் அதன் மூலோபாய நிலை அதை ஆபத்தான பிரதேசமாக மாற்றுகிறது. ஐ.எஸ் அமைப்புடன் சண்டையிட வந்த போராளிகள் இப்போது மேலாதிக்கத்திற்காக ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறார்கள்.

எந்த நேரத்திலும் இன்னொரு படுகொலைக்கு ஆளாக நேரிடும் என்று சமூகம் அச்சமடைந்துள்ளதாகவும், தற்போது பல யாசிதிகள் இடம்பெயர்ந்து வருவதாகவும் எலியாஸ் கூறுகிறார். "அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வு மிகவும் முக்கியமானது. ஆனால், இப்போது அவர்கள் பாதுகாப்பாக உணரவில்லை."

பஹாரின் சுதந்திரத்தை வாங்குவதற்கு சுமார் £16,000 ($20,000) செலவானது. அவருக்கு இப்போது 40 வயதாகிறது. ஆனால் அதைவிட வயதானவராகத் தெரிகிறார். அவரது தலைமுடி இப்போது பெரும்பாலும் நரைத்திருக்கிறது.

அவர் மீட்கப்பட்டதில் இருந்து எட்டு ஆண்டுகளாக முகாமில் வாழ்கிறார். கூடாரத்தின் தரையில் மெல்லிய மெத்தையில் அமர்ந்து, காணாமல் போன தன் குடும்ப உறுப்பினர்களின் படங்களுடன் ஒரு பிளாஸ்டிக் கோப்புறையை எடுக்கிறார்.

தன் கணவனுக்கும் மூத்த மகனுக்கும் என்ன நடந்தது என்று தெரியாமலும், பலமுறை பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாலும் ஏற்பட்ட மன உளைச்சலைக் கையாள்வது, பஹாரை உடல்ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் மிகவும் மோசமாக்கியுள்ளது.

அவருடைய மற்ற குழந்தைகள் இன்னும் அவருடன் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இன்னும் அதிர்ச்சியில் இருப்பதாகவும், எல்லா நேரத்திலும் கவலையாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

"என் மகளுக்கு அவர்கள் அடித்த அடிகளால் காயங்கள் உள்ளன. நான் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் இந்த நேரத்தில், நான் இப்போது ஒரு நடைபிணமாக வாழ்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.

குறிச்சொற்கள் #ஐ.எஸ் #யாசிதி #பெண்கள் #இஸ்லாம் #பயங்கரவாதம்

பிபிசி

Back to top