புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசூர் வம்சம் (நாவல்)
Page 2 of 17 •
Page 2 of 17 • 1, 2, 3 ... 9 ... 17
First topic message reminder :
பாயிரம்
அரசூர் பற்றி எழுது.
முன்னோர்கள் சொன்னார்கள்.
அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை.
அது புகையிலை வாடை. வீபூதி வாடை. மஞ்சள் வாடை. தூரத்துணி வாடை. பெரிய கங்காளங்களில் சோறு பொங்கும் வாடை. எள்ளுருண்டை வாடை. மாதாகோவில் அப்பத்தின் வாடை.
அவர்கள் ஓரமாக உட்கார்ந்தபடி என்னைப் பார்த்தார்கள்.
அரசூரின் வரலாற்றை எழுது. எங்களைப் பற்றி எழுது.
குடுமி வைத்தவர்கள். நார்மடிச் சேலை போர்த்திய மொட்டைத் தலையோடு பெண்கள். முட்டுக்குக் கீழே தாழ்ந்த அரைவேட்டியோடு மலங்க மலங்க விழித்துப் பார்க்கும் சிறுவர்கள். வியர்வையில் நனைந்த கல்யாணச் சேலையும் நெற்றி முழுக்க மஞ்சள் குங்குமமும், கையில் வரட்டி தட்ட எடுத்த சாணமும், முகத்தை மறைக்கும் மூக்குத்தியுமாக மிரட்சியோடு சிறுமிகள். கழுத்தில் சிலுவை மாட்டிய சிலரும் உண்டு அங்கே.
எல்லோரும் சொன்னார்கள். அன்போடு இழையும் குரல்கள். கட்டளையிடும் குரல்கள். யாசிக்கும் குரல்கள்.
வாசலில் செருப்புச் சத்தம்.
திரும்பிப் பார்த்தேன். பனியன் சகோதரர்கள்.
முன்னோர்கள் இடம் ஒதுக்கிக் கொடுக்க, பனியன் சகோதரர்கள் தரையில் உட்கார்ந்தார்கள். ஐந்து நிமிடம் முன்னால் சிகரெட் குடித்த வாடை அவர்களிடம்.
எழுது.
பனியன் சகோதரர்களும் சொன்னார்கள்.
என்ன எழுதட்டும் ?
இவர்களைப் பற்றி எழுது. எங்களைப் பற்றி எழுது. அரசூர் பற்றி எழுது.
பனியன் சகோதரர்கள் திரும்பவும் சொன்னார்கள்.
எழுதலாம்தான். ஆனால் அரசூருக்கு என்ன வரலாறு இருக்கிறது ? பனியன் சகோதரர்கள் எப்படி சகோதரர்கள் இல்லையோ அரசூருக்கும் அதேபோல் சரித்திரம் இல்லை.
ஆனாலும் பனியன் சகோதரர்கள் இருக்கிறார்கள். நூறு வருடத்துக்கு முந்திய மோட்டார் காரில் பயணம் போய்க்கொண்டு, அரசூரின் சின்னத் தெருக்களில் புகுந்து புறப்பட்டுக் கொண்டு, எதிர்ப்படுகிறவர்களில் யார் ஏமாறுகிறான் என்று பார்த்துக்கொண்டு.
முன்னோர்கள் இருக்கிறார்கள். நான் எழுத ஆரம்பித்ததுமே சூழ வந்து கவிந்து கொண்டு.
அரசூரும் இருக்கிறது.
ஆத்தா சாமி கோவில். சுற்றி நாலு தெரு. நேர் எதிர்த்தாற்போல் அய்யா சாமி கோவில். அதற்குச் சுற்றி நாலு வெளிவீதி. குறுக்காக வளைந்து ஓடும் கடைத்தெரு. ராஜா சத்திரம். பிரசவ ஆஸ்பத்திரி. நல்ல தண்ணி ஊருணி. ஃபோட்டோ ஸ்டூடியோ. வால்வ் ரேடியோ ரிப்பேர்க்கடை. தெப்பக்குளம். வேலிகாத்தான் செடிகள் மறைக்கும் பள்ளிக்கூடம். முடவைத்திய சாலை. சத்தியாக்கிரஹ மேடை. கமலாம்பா காப்பி ஓட்டல். முன்சீப் கோர்ட்.
இதெல்லாம் அரசூர்தான். இது மட்டும் இல்லை. அரண்மனை கூட உண்டு. ரொம்பச் சின்னதாக ஒரு அரண்மனை. ராஜா. ஒரு ராணி. மட்டக்குதிரை. கேடயம். வாள். துடைப்பம். கரப்பான் பூச்சி. வரிக்கணக்குப் புத்தகம். காரியஸ்தன். திவசம் கொடுக்க வாழைக்காய். சமையல்காரன். மீன் செதிள் தேய்க்கப் பாறாங்கல். சீயக்காய்ப் பொடி. சேடிப்பெண். பல்லக்கு.
எல்லாமும் எல்லாரும் இருக்க இடம் உண்டு.
நாங்கள் அரண்மனைக்குப் போனோம்.
பனியன் சகோதரர்கள் தொடங்கி வைத்தார்கள்.
அவர்கள் அரண்மனைக்குள் போயிருக்கிறார்கள்.
கோவிலில் பூத்திருவிழா வருது . வசூல் பண்ண வந்திருக்கோம்.
வெள்ளை வேட்டி. ஒட்ட வெட்டின கிராப்பு. ஒருத்தன் நெடுநெடுவென்று நல்ல உயரம். இன்னொருத்தன் குட்டையாக, குண்டாக.
மேலே சட்டை கிடையாது இரண்டு பேருக்கும். பதிலாக பனியன் மட்டும் போட்டிருக்கிறார்கள். எப்போதும் அது தான் வேஷம்.
இந்த வேஷத்தோடு அரண்மனைக்குள் பூத்திருவிழாவுக்கு வசூல் பண்ண நுழைந்ததாகச் சொன்னதும் நான் கேட்டேன் - அங்கே ஆள் அரவமில்லாமல் போய் நூறு வருஷத்துக்கும் மேல் ஆகி இருக்குமே. யாரிடம் பணம் பெயருமா என்று பார்க்கப் போனீங்க ?
இல்லாமே என்ன ? ராஜா இருந்தார். கூடவே ராணி.
பாயிரம்
அரசூர் பற்றி எழுது.
முன்னோர்கள் சொன்னார்கள்.
அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை.
அது புகையிலை வாடை. வீபூதி வாடை. மஞ்சள் வாடை. தூரத்துணி வாடை. பெரிய கங்காளங்களில் சோறு பொங்கும் வாடை. எள்ளுருண்டை வாடை. மாதாகோவில் அப்பத்தின் வாடை.
அவர்கள் ஓரமாக உட்கார்ந்தபடி என்னைப் பார்த்தார்கள்.
அரசூரின் வரலாற்றை எழுது. எங்களைப் பற்றி எழுது.
குடுமி வைத்தவர்கள். நார்மடிச் சேலை போர்த்திய மொட்டைத் தலையோடு பெண்கள். முட்டுக்குக் கீழே தாழ்ந்த அரைவேட்டியோடு மலங்க மலங்க விழித்துப் பார்க்கும் சிறுவர்கள். வியர்வையில் நனைந்த கல்யாணச் சேலையும் நெற்றி முழுக்க மஞ்சள் குங்குமமும், கையில் வரட்டி தட்ட எடுத்த சாணமும், முகத்தை மறைக்கும் மூக்குத்தியுமாக மிரட்சியோடு சிறுமிகள். கழுத்தில் சிலுவை மாட்டிய சிலரும் உண்டு அங்கே.
எல்லோரும் சொன்னார்கள். அன்போடு இழையும் குரல்கள். கட்டளையிடும் குரல்கள். யாசிக்கும் குரல்கள்.
வாசலில் செருப்புச் சத்தம்.
திரும்பிப் பார்த்தேன். பனியன் சகோதரர்கள்.
முன்னோர்கள் இடம் ஒதுக்கிக் கொடுக்க, பனியன் சகோதரர்கள் தரையில் உட்கார்ந்தார்கள். ஐந்து நிமிடம் முன்னால் சிகரெட் குடித்த வாடை அவர்களிடம்.
எழுது.
பனியன் சகோதரர்களும் சொன்னார்கள்.
என்ன எழுதட்டும் ?
இவர்களைப் பற்றி எழுது. எங்களைப் பற்றி எழுது. அரசூர் பற்றி எழுது.
பனியன் சகோதரர்கள் திரும்பவும் சொன்னார்கள்.
எழுதலாம்தான். ஆனால் அரசூருக்கு என்ன வரலாறு இருக்கிறது ? பனியன் சகோதரர்கள் எப்படி சகோதரர்கள் இல்லையோ அரசூருக்கும் அதேபோல் சரித்திரம் இல்லை.
ஆனாலும் பனியன் சகோதரர்கள் இருக்கிறார்கள். நூறு வருடத்துக்கு முந்திய மோட்டார் காரில் பயணம் போய்க்கொண்டு, அரசூரின் சின்னத் தெருக்களில் புகுந்து புறப்பட்டுக் கொண்டு, எதிர்ப்படுகிறவர்களில் யார் ஏமாறுகிறான் என்று பார்த்துக்கொண்டு.
முன்னோர்கள் இருக்கிறார்கள். நான் எழுத ஆரம்பித்ததுமே சூழ வந்து கவிந்து கொண்டு.
அரசூரும் இருக்கிறது.
ஆத்தா சாமி கோவில். சுற்றி நாலு தெரு. நேர் எதிர்த்தாற்போல் அய்யா சாமி கோவில். அதற்குச் சுற்றி நாலு வெளிவீதி. குறுக்காக வளைந்து ஓடும் கடைத்தெரு. ராஜா சத்திரம். பிரசவ ஆஸ்பத்திரி. நல்ல தண்ணி ஊருணி. ஃபோட்டோ ஸ்டூடியோ. வால்வ் ரேடியோ ரிப்பேர்க்கடை. தெப்பக்குளம். வேலிகாத்தான் செடிகள் மறைக்கும் பள்ளிக்கூடம். முடவைத்திய சாலை. சத்தியாக்கிரஹ மேடை. கமலாம்பா காப்பி ஓட்டல். முன்சீப் கோர்ட்.
இதெல்லாம் அரசூர்தான். இது மட்டும் இல்லை. அரண்மனை கூட உண்டு. ரொம்பச் சின்னதாக ஒரு அரண்மனை. ராஜா. ஒரு ராணி. மட்டக்குதிரை. கேடயம். வாள். துடைப்பம். கரப்பான் பூச்சி. வரிக்கணக்குப் புத்தகம். காரியஸ்தன். திவசம் கொடுக்க வாழைக்காய். சமையல்காரன். மீன் செதிள் தேய்க்கப் பாறாங்கல். சீயக்காய்ப் பொடி. சேடிப்பெண். பல்லக்கு.
எல்லாமும் எல்லாரும் இருக்க இடம் உண்டு.
நாங்கள் அரண்மனைக்குப் போனோம்.
பனியன் சகோதரர்கள் தொடங்கி வைத்தார்கள்.
அவர்கள் அரண்மனைக்குள் போயிருக்கிறார்கள்.
கோவிலில் பூத்திருவிழா வருது . வசூல் பண்ண வந்திருக்கோம்.
வெள்ளை வேட்டி. ஒட்ட வெட்டின கிராப்பு. ஒருத்தன் நெடுநெடுவென்று நல்ல உயரம். இன்னொருத்தன் குட்டையாக, குண்டாக.
மேலே சட்டை கிடையாது இரண்டு பேருக்கும். பதிலாக பனியன் மட்டும் போட்டிருக்கிறார்கள். எப்போதும் அது தான் வேஷம்.
இந்த வேஷத்தோடு அரண்மனைக்குள் பூத்திருவிழாவுக்கு வசூல் பண்ண நுழைந்ததாகச் சொன்னதும் நான் கேட்டேன் - அங்கே ஆள் அரவமில்லாமல் போய் நூறு வருஷத்துக்கும் மேல் ஆகி இருக்குமே. யாரிடம் பணம் பெயருமா என்று பார்க்கப் போனீங்க ?
இல்லாமே என்ன ? ராஜா இருந்தார். கூடவே ராணி.
அவனுக்கு அவமானமாக இருந்தது. சந்தோஷமாக இருந்தது. பயமாக இருந்தது.
வீடு எழும்பியபோது சங்கரன் ஊரில் இல்லை. சுப்பிரமணிய அய்யர் அவனை தனுஷ்கோடிக்கு அந்தப் பக்கம் அனுப்பி இருந்தார்.
சித்தப்பா சபேசய்யரோடு அங்கே புகையிலைக் கடையைப் பார்த்துக் கொள்ளப் போனான் சங்கரன்.
லிகிதம் எழுதுவதும் உண்டியல் எழுதுவதும் கணக்கும் வழக்கும் பிடிபட்டுப் போனது அங்கே வைத்துத்தான்.
ஏட்டுப் பள்ளிக்கூடத்தில் பிரி முறுக்கிக் கொண்டு ஓடிய சமாச்சாரம் அதெல்லாம். அங்கே சுப்புராம வாத்தியாரின் வசவும் திட்டும் மறக்க முடியாமல் இன்னும் மனதிலேயே நிற்கிறது.
நாக்கிலே தர்ப்பையைப் போட்டுப் பொசுக்க.
உங்கப்பன் கோமணத்தை அவுத்த நேரம் ராவுகாலம்டா பிரம்மஹத்தி. எட்டு மாகாணி ரெண்டா ? எந்தத் தேவிடியாப் பட்டணத்துலே ?
சுப்புராம வாத்தியார் தேகம் தளர்ந்து போய்த் தடியை ஊன்றிக் கொண்டு எப்போதாவது கடைத்தெருவுக்கு வருகிறார். நீர்க்காவி வேட்டியும், கிழிந்த மேல்துண்டுமாகக் கண்ணுக்கு மேல் கையை வைத்துக் கொண்டு பார்க்கும்போது சங்கரன் பக்கத்தில் போய்க் கையைப் பிடித்துக் கூட்டி வந்து பலகையில் இருத்தி ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு ரெண்டு பாக்கும் வெற்றிலையும் கொடுக்கும் வழக்கம்.
எட்டு மாகாணி அரை என்று அவரிடம் சொல்ல வேண்டும். கொட்டகுடித் தேவிடியாளின் அரைக்கட்டு மனதைப் போட்டு இம்சைப் படுத்துவதையும் சொல்லலாம். அவருக்குக் காது கேட்பதில்லை இப்போது.
சாமி. தொண்டிக்குப் போற சரக்கு வண்டி வந்திருக்கு. தெருக்கோடியிலே நிக்க வச்சுட்டு வந்திருக்கேன். சரக்கு ஏத்திடலாமா ?
ஐயணை முண்டாசை எடுத்துப் பிரித்தபடி வந்தான்.
எத்தனை சிப்பம் ஐயணை ?
தடிமனான கணக்குப் புத்தகத்தைத் திறந்தபடி மைக்கூட்டில் கட்டைப் பேனாவை நனைத்தபடி கேட்டான் சங்கரன்.
குனிந்து பார்க்கலாமோ ?
பார்த்தபோது தெரிந்த ஸ்தனங்களின் வனப்பு கிறங்க அடித்தது. அது அகஸ்மாத்தாக மாடிக்குப் போனபோது.
தற்செயலான அந்த நிமிஷங்களுக்காகத் தவம் கிடக்கிறான் சங்கரன்.
தினசரி தானமாக ஒரு வினாடி கீழே இருந்து கண்கள் சந்திக்க வரும். உடை நெகிழ்ந்த ஈரமான மேல் உடம்பில் மறு வினாடி படிந்த பார்வையை வலுக்கட்டாயமாக விலக்கி அடுத்த நாள் விடிய ஏங்க ஆரம்பித்தபடி இறங்குவான அவன்.
தப்பு என்றது மனசு. தப்பு என்று முன்னோர்கள் புகையிலை அடைத்த இருட்டு அறைகளின் ஈரக் கசிவில் கலந்து பரவிச் சொன்னார்கள்.
இன்றைக்கு சுப்பம்மாக் கிழவியின் குரலில் ஏறிப் பாடுகிறார்கள். எகத்தாளம் செய்கிறார்கள். எச்சரிக்கிறார்கள்.
நாசமாகப் போங்கள். உங்கள் மேல் ஒரு மயிருக்கும் எனக்கு மரியாதை கிடையாது. செத்தொழிந்து போனவர்கள் இங்கேயே என்ன எழவுக்குச் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள் ?
மளுக் என்று கட்டைப்பேனா முறிந்து மசி கணக்குப் புத்தகத்தில் சிதறியது.
சாமி. சகுனம் சரியில்லே. அப்புறம் அனுப்பிச்சுக்கலாமா ?
ஐயணை மரியாதையோடு கேட்டான்.
பார்க்கலாமோ. குனிந்து.
பார்க்கலாமே.
சங்கரன் உரக்கச் சொன்னது புரியாமல் விழித்தான் ஐயணை.
வீடு எழும்பியபோது சங்கரன் ஊரில் இல்லை. சுப்பிரமணிய அய்யர் அவனை தனுஷ்கோடிக்கு அந்தப் பக்கம் அனுப்பி இருந்தார்.
சித்தப்பா சபேசய்யரோடு அங்கே புகையிலைக் கடையைப் பார்த்துக் கொள்ளப் போனான் சங்கரன்.
லிகிதம் எழுதுவதும் உண்டியல் எழுதுவதும் கணக்கும் வழக்கும் பிடிபட்டுப் போனது அங்கே வைத்துத்தான்.
ஏட்டுப் பள்ளிக்கூடத்தில் பிரி முறுக்கிக் கொண்டு ஓடிய சமாச்சாரம் அதெல்லாம். அங்கே சுப்புராம வாத்தியாரின் வசவும் திட்டும் மறக்க முடியாமல் இன்னும் மனதிலேயே நிற்கிறது.
நாக்கிலே தர்ப்பையைப் போட்டுப் பொசுக்க.
உங்கப்பன் கோமணத்தை அவுத்த நேரம் ராவுகாலம்டா பிரம்மஹத்தி. எட்டு மாகாணி ரெண்டா ? எந்தத் தேவிடியாப் பட்டணத்துலே ?
சுப்புராம வாத்தியார் தேகம் தளர்ந்து போய்த் தடியை ஊன்றிக் கொண்டு எப்போதாவது கடைத்தெருவுக்கு வருகிறார். நீர்க்காவி வேட்டியும், கிழிந்த மேல்துண்டுமாகக் கண்ணுக்கு மேல் கையை வைத்துக் கொண்டு பார்க்கும்போது சங்கரன் பக்கத்தில் போய்க் கையைப் பிடித்துக் கூட்டி வந்து பலகையில் இருத்தி ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு ரெண்டு பாக்கும் வெற்றிலையும் கொடுக்கும் வழக்கம்.
எட்டு மாகாணி அரை என்று அவரிடம் சொல்ல வேண்டும். கொட்டகுடித் தேவிடியாளின் அரைக்கட்டு மனதைப் போட்டு இம்சைப் படுத்துவதையும் சொல்லலாம். அவருக்குக் காது கேட்பதில்லை இப்போது.
சாமி. தொண்டிக்குப் போற சரக்கு வண்டி வந்திருக்கு. தெருக்கோடியிலே நிக்க வச்சுட்டு வந்திருக்கேன். சரக்கு ஏத்திடலாமா ?
ஐயணை முண்டாசை எடுத்துப் பிரித்தபடி வந்தான்.
எத்தனை சிப்பம் ஐயணை ?
தடிமனான கணக்குப் புத்தகத்தைத் திறந்தபடி மைக்கூட்டில் கட்டைப் பேனாவை நனைத்தபடி கேட்டான் சங்கரன்.
குனிந்து பார்க்கலாமோ ?
பார்த்தபோது தெரிந்த ஸ்தனங்களின் வனப்பு கிறங்க அடித்தது. அது அகஸ்மாத்தாக மாடிக்குப் போனபோது.
தற்செயலான அந்த நிமிஷங்களுக்காகத் தவம் கிடக்கிறான் சங்கரன்.
தினசரி தானமாக ஒரு வினாடி கீழே இருந்து கண்கள் சந்திக்க வரும். உடை நெகிழ்ந்த ஈரமான மேல் உடம்பில் மறு வினாடி படிந்த பார்வையை வலுக்கட்டாயமாக விலக்கி அடுத்த நாள் விடிய ஏங்க ஆரம்பித்தபடி இறங்குவான அவன்.
தப்பு என்றது மனசு. தப்பு என்று முன்னோர்கள் புகையிலை அடைத்த இருட்டு அறைகளின் ஈரக் கசிவில் கலந்து பரவிச் சொன்னார்கள்.
இன்றைக்கு சுப்பம்மாக் கிழவியின் குரலில் ஏறிப் பாடுகிறார்கள். எகத்தாளம் செய்கிறார்கள். எச்சரிக்கிறார்கள்.
நாசமாகப் போங்கள். உங்கள் மேல் ஒரு மயிருக்கும் எனக்கு மரியாதை கிடையாது. செத்தொழிந்து போனவர்கள் இங்கேயே என்ன எழவுக்குச் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள் ?
மளுக் என்று கட்டைப்பேனா முறிந்து மசி கணக்குப் புத்தகத்தில் சிதறியது.
சாமி. சகுனம் சரியில்லே. அப்புறம் அனுப்பிச்சுக்கலாமா ?
ஐயணை மரியாதையோடு கேட்டான்.
பார்க்கலாமோ. குனிந்து.
பார்க்கலாமே.
சங்கரன் உரக்கச் சொன்னது புரியாமல் விழித்தான் ஐயணை.
அரசூர் வம்சம் - அத்தியாயம் ஐந்து
சங்கரன் சிரித்தான்.
வியாபாரத்துலே சகுனமாவது ஒண்ணாவது.
உள்ளே இருந்து ஐயணை உமி எடுத்துவந்து கணக்குப் புத்தகத்தில் தூவினான்.
வேறே பக்கத்துலே எழுதுங்க சாமி.
இவனை அனுப்பிவிட்டு ஒரு தூக்கம் போடலாம் என்று நினைத்தான் சங்கரன்.
முப்பது சிப்பம் உள்ளே தனியா இருக்கு. எடுத்திட்டுப் போய் தொண்டிக்கு ஏத்தி அனுப்பிடு.
நாலு பக்கம் தள்ளிப் புதுக் கணக்காக சிப்பத்துக்கு ஒண்ணே காலணா வீதம் பதிந்து எழுதினான்.
ராவன்னாமானா தெக்கூர் வகையில் பற்று ரெண்டு ரூபா ஐந்து அணா ஆறு காசு. முன்பணம் வாங்கிய வகையில் ஒரு ரூபா எட்டணா. நிலுவை.
கூட்டெழுத்து. இவன் எழுதியது புரியாமல் போன வாரம் பரசுராமன் எழுத்துக் கூட்டிப் படிக்க முயற்சி செய்து சிரித்தது நினைவு வந்தது.
அம்பலப்புழையில் இருந்து வந்தவன் அவன். சுப்பிரமணிய அய்யரின் தமக்கை மகன்.
அம்மாஞ்சி. என்னடா இது. அம்மாஞ்சிக் கணக்கா இருக்கேடா. இப்படி எழுதியா இங்கே ஒப்பேத்தறேள் ?
அம்பலப்புழையில் மலையாளத்தில் நிறுத்தி நிதானமாக எழுதிக் கணக்கு வழக்கு வைக்க நாயர்கள் உண்டாம். ரூபாய் அணா பேச்சே இல்லை. சக்கரம் தான் எல்லாம்.
அவன் நம்பூத்திரி போல, தரவாட்டு நாயர் போல எல்லாம் பேசிக்காட்டினான். ஹ ஹ என்று புரண்டு வர மாப்பிள்ளைமார் என்ற துருக்கர்கள் பேசும் மலைப்பிரதேச மலையாளத்தையும் வெகு வினோதமாக உச்சரித்தான்.
சாமி. ஆச்சு முப்பது சிப்பமும் வண்டியேத்தியாச்சு. வீட்டுலே விசேசம்னாரு அய்யா. வெத்திலை பாக்கு வாங்கிட்டு ஓடிவந்துடறேன்.
ஐயணை வேகுவேகுவென்று தலையில் முண்டாசை இறுக்கிக் கொண்டு நடந்தான்.
உதிரியாக இனிமேல் யாராவது புகையிலை வாங்க வரலாம். வெய்யில் நேரத்தில் வருவது குறைச்சல் தான். வெய்யில் தாழ்ந்து விளக்கு வைக்கும் நேரத்தில் கடையில் கூட்டம் இருக்கும்.
சங்கரன் கணக்கு மேசைக்குப் பக்கமாக மல்லாக்கப் படுத்தான். அவன் மாரில் கவிழ்ந்தவள் அவனை விட வயதானவள். கண்ணும் மாருமாக கை இரண்டும் அவளை வளைக்க எழுந்தன.
கண்ணில் தூக்கம் கவிந்து வந்தது.
புகையிலை வாடையும் தேயிலைத் தோட்ட வாடையுமாக சுற்றிச் சூழ்ந்தது.
யாழ்ப்பாணத்தில் சபேசய்யரோடு கடையில் உட்கார்ந்திருப்பது போல் பிரமை சங்கரனுக்கு.
அவன் படகேறி அங்கே போய்த் திரும்பி இந்த ஆவணி அவிட்டத்துக்கு ஒரு வருடம் ஆகி விட்டது.
ஏட்டுப் பள்ளிக்கூடத்தில் தரையைத் தேய்த்து சங்கரனுக்குப் பதிமூன்று வயதானபோது சுப்பிரமணிய அய்யர் அவனை யாழ்ப்பாணத்துக்குத் தன் தம்பி சபேசய்யர் வசம் இருந்து வியாபாரம் பழக அனுப்பி வைத்தார்.
சபேசய்யரும் புகையிலை வியாபாரத்தில் தான் மும்முரமாக இருந்தார். இரண்டாம் தலைமுறைப் புகையிலை வியாபாரிகள் அடுத்த தலைமுறையைத் தயார்ப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம்.
சபேசய்யர் தன்னை சபேசன் பிள்ளை என்று கடல் கடந்த இடத்தில் சொல்லிக் கொண்டார். பூணூலைக் கழற்றி வைத்ததோடு அவனையும் கழற்றச் சொன்னார். அவன் சங்கரலிங்கமானான்.
பிராமணர்கள் சைவப்பிள்ளைமார்களுக்குக் காரியஸ்தர்களாக இருந்த பிரதேசம் அது. அவர்கள் பேச்சிலும் பிராமணக் கொச்சை அழிந்துபோய் ஊர்ப் பேச்சோடு ஒன்றாகப் போயிருந்தார்கள்.
சங்கரய்யரை விட சங்கரலிங்கம் எல்லா விதத்திலும் தோதாக இருக்கும் என்று யோசனை சொன்ன சபேசய்யரால் அவன் பேசுகிற விதத்தை மட்டும் கடைசிவரை மாற்ற முடியவில்லை.
அவரோடு மலைப் பிரதேசத்துக்குப் பிரயாணப்பட வேண்டி வந்தது.
பசுமை விரிக்கும் தேயிலைத் தோட்டங்கள். குடியேறி வந்த இந்தப் பக்கத்துக் காரர்கள். வெற்றிலை மென்று துப்பும் பழக்கத்திலிருந்து மீளாதவர்கள். உழைத்த களைப்புத் தெரியாமல் இருக்க கள்ளை மாந்திப் போதை தலைக்கேற ஏற்றப்பாட்டு பாடுகிறவர்கள். ஏற்றமும் கமலையும் வயலும் இனி ஆயுசுக்கும் அவர்களுக்குத் திரும்ப அனுபவமாகாது என்று சங்கரனுக்குப் பட்டபோது அவனுக்கு மனக் கஷ்டமாக இருந்தது.
ஆனாலும் அவன் புகையிலை விற்க வந்தவன். இருக்கிற பழக்கம் போதாதென்று இதுவேறே. வாயில் அடக்கிப் பழகினால் திரும்பத் திரும்ப அதக்கி மென்று சாறை விழுங்கி லகரி ஏற்றி ஆசுவாசத்தைத் தரக்கூடிய வஸ்து.
சிப்பம் சிப்பமாக விற்றான். கங்காணிகளோடு உடன்பாடு செய்துகொண்டு அவர்கள் மூலம் நிரந்தரமாக வருமானத்துக்கு வழிசெய்து விட்டுத் திரும்பினான்.
சங்கரலிங்கம் பிள்ளைவாள். சபாஷ்.
சபேசன் பிள்ளை அவன் முதுகில் தட்டிக் கொடுத்து நாலு வருஷம் சென்று ஊருக்கு அனுப்பியபோது இங்கே புதுவீடு எழும்பி இருந்தது.
பக்கத்திலே ஜமீந்தார் கிரஹத்தை இக்கினியூண்டாக்கிவிட்டுச் சடசடவென்று உயர்ந்த காரைக் கட்டடம். நீள நெடுக வெள்ளைச் சுண்ணாம்பும் செம்மண் காவியுமாக அந்தஸ்தாக நின்ற வீடு.
ஜமீந்தார் மாளிகையின் கருங்கல் வனப்பு இல்லாவிட்டாலும் உயரம் காரை வீட்டை எடுப்பாக்கிக் காட்டியது.
சுப்பிரமணிய அய்யர் அக்ரஹாரத்தில் இருந்த பழைய வீட்டை வேதபாடசாலை ஆக்கி இருந்தார். லாஹிரி வஸ்து விற்றுக் காசு சேர்ப்பதற்குப் பிராயச்சித்தமாக அதைச் செய்திருந்தார்.
வீடு முழுக்கச் சுற்றி வந்து மாடிக்கு வந்தான் சங்கரன்.
பெரியம்பி உள்ளே இருக்கான். பார்த்துட்டு வா. மத்த நாள்னா நன்னாப் பேசுவான். பழகுவான். அவனைப் பார்க்க முன்னூறு நானூறு வருஷம் கழிச்சு இருக்கப்பட்டவன் எல்லாம் வருவான். வாசல்லே இருந்து மாடிக்குப் போறதுக்கு தனிப் படிக்கட்டே அவனுக்காகத்தான். ஆனா இன்னிக்குப் பவுர்ணமி. யாரும் வரமாட்டா. நீ போய்ப் பாரு. என்ன, கொஞ்சம் அவஸ்தையா நடந்துப்பான். அவன் போக்குலே விட்டுடு. நாளைக்குச் சரியாயிடுவான்.
சுப்பிரமணிய அய்யர் அவன் மாடிப்படி ஏறும்போது சொன்னார்.
தமையன் சாமிநாதனா அது ? சாமிநாத ஸ்ரெளதிகளாகக் கம்பீரமான குரலில் ருத்ரமும் சமகமும் சொல்லிக் கொண்டு மடத்தில் வேதவித்தாக இருக்க வேண்டியவன் ஒட்டி உலர்ந்த தேகமும் குத்திருமலுமாக இருட்டு அறைக்கு நடுவே நக்னமாக நின்று சுயமைதுனம் செய்தபடி சிரிக்கிறான். பின்னால் ஒரு வினோதமான பெட்டியிலிருந்து ஒப்பாரி ஒலிக்கிறது.
வம்சமே அழியறது பாருடா அம்பி.
தரையில் விந்துத் துளிகளைக் காலால் மிதித்து அரைத்து அரைத்துத் தேய்த்தபடி சாமிநாதன் நகர்ந்துவர, சங்கரன் அவசரமாக வெளியே வந்து கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டான்.
அவனுக்கு மனம் முழுக்க வேதனை கவிந்து வந்தது. அடைத்த அறைக்குள்ளிருந்து இன்னும் சத்தமாக ஒப்பாரிப் பாட்டு வந்தபோது பெருங்குரலெடுத்துக் கூடவே அழ வேண்டும் என்று தோன்றியது.
சங்கரனைப் போல் சராசரி இல்லை சாமிநாதன். ஞான சூரியன் என்பார் சுப்பிரமணிய அய்யர் தன் சீமந்த புத்திரனைப் பற்றிப் பெருமையாக.
சாம வேதத்தை ஊன்றிப் படித்துக் கிரஹித்து ஸ்ருதி மாறாமல் ஓதி ஸ்ரெளதிகளாக அங்கீகாரம் வர ஒரு மாதம் இருக்கும்போது அவனுக்கு மனம் புரண்டு போனது.
சங்கரன் ஏட்டுப் பள்ளிக்கூடத்துக்குச் சுவடி தூக்கிப் போன கடைசி வருடம் அது.
வீட்டு விசேஷத்துக்காக இறங்கி வந்த மூத்த குடிப் பெண்டுகளில் கன்னி கழியாமலே இறந்து போயிருந்த யாரையோ சாமிநாதன் மந்திரத்தால் கட்டிப் பகல் நேரத்தில் கூடியதால் சாபம் ஏற்பட்டதாக சுப்பம்மாக் கிழவி ஒருதடவை பாடியபோது வீட்டில் எல்லோரும் அதை நிறுத்தச் சொன்னார்கள்.
பாதி புரிந்தும் புரியாமலும் சங்கரன் படகேறி சபேசய்யரைத் தேடிப் போனான் அப்புறம்.
கன்னி கழிந்த அந்த மூத்தகுடிப் பெண் வீட்டில் நடந்த அடுத்த விசேஷத்தின் போது, சுப்பம்மாள் நாக்கில் இருந்து எல்லோரையும் காதுகேட்கச் சகிக்காத வார்த்தைகளால் வைது தீர்த்து இறங்கிப் போனதோடு வீட்டையும் மாற்றி இங்கே வந்து விட்டார் சுப்பிரமணிய அய்யர்.
இந்த வீட்டிலும் அந்த மூத்த குடிப்பெண்ணின் சாபம் சூழ்ந்திருந்ததாகத் தோன்ற மற்ற முன்னோர்களைக் கூப்பிட்டுப் பேசி அவள் அடுத்த ஜன்மம் எடுத்து இதையெல்லாம் மறக்க நடவடிக்கை எடுத்தாள் அவர்.
பக்கத்திலே ஜமீந்தார் கிரஹத்தை இக்கினியூண்டாக்கிவிட்டுச் சடசடவென்று உயர்ந்த காரைக் கட்டடம். நீள நெடுக வெள்ளைச் சுண்ணாம்பும் செம்மண் காவியுமாக அந்தஸ்தாக நின்ற வீடு.
ஜமீந்தார் மாளிகையின் கருங்கல் வனப்பு இல்லாவிட்டாலும் உயரம் காரை வீட்டை எடுப்பாக்கிக் காட்டியது.
சுப்பிரமணிய அய்யர் அக்ரஹாரத்தில் இருந்த பழைய வீட்டை வேதபாடசாலை ஆக்கி இருந்தார். லாஹிரி வஸ்து விற்றுக் காசு சேர்ப்பதற்குப் பிராயச்சித்தமாக அதைச் செய்திருந்தார்.
வீடு முழுக்கச் சுற்றி வந்து மாடிக்கு வந்தான் சங்கரன்.
பெரியம்பி உள்ளே இருக்கான். பார்த்துட்டு வா. மத்த நாள்னா நன்னாப் பேசுவான். பழகுவான். அவனைப் பார்க்க முன்னூறு நானூறு வருஷம் கழிச்சு இருக்கப்பட்டவன் எல்லாம் வருவான். வாசல்லே இருந்து மாடிக்குப் போறதுக்கு தனிப் படிக்கட்டே அவனுக்காகத்தான். ஆனா இன்னிக்குப் பவுர்ணமி. யாரும் வரமாட்டா. நீ போய்ப் பாரு. என்ன, கொஞ்சம் அவஸ்தையா நடந்துப்பான். அவன் போக்குலே விட்டுடு. நாளைக்குச் சரியாயிடுவான்.
சுப்பிரமணிய அய்யர் அவன் மாடிப்படி ஏறும்போது சொன்னார்.
தமையன் சாமிநாதனா அது ? சாமிநாத ஸ்ரெளதிகளாகக் கம்பீரமான குரலில் ருத்ரமும் சமகமும் சொல்லிக் கொண்டு மடத்தில் வேதவித்தாக இருக்க வேண்டியவன் ஒட்டி உலர்ந்த தேகமும் குத்திருமலுமாக இருட்டு அறைக்கு நடுவே நக்னமாக நின்று சுயமைதுனம் செய்தபடி சிரிக்கிறான். பின்னால் ஒரு வினோதமான பெட்டியிலிருந்து ஒப்பாரி ஒலிக்கிறது.
வம்சமே அழியறது பாருடா அம்பி.
தரையில் விந்துத் துளிகளைக் காலால் மிதித்து அரைத்து அரைத்துத் தேய்த்தபடி சாமிநாதன் நகர்ந்துவர, சங்கரன் அவசரமாக வெளியே வந்து கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டான்.
அவனுக்கு மனம் முழுக்க வேதனை கவிந்து வந்தது. அடைத்த அறைக்குள்ளிருந்து இன்னும் சத்தமாக ஒப்பாரிப் பாட்டு வந்தபோது பெருங்குரலெடுத்துக் கூடவே அழ வேண்டும் என்று தோன்றியது.
சங்கரனைப் போல் சராசரி இல்லை சாமிநாதன். ஞான சூரியன் என்பார் சுப்பிரமணிய அய்யர் தன் சீமந்த புத்திரனைப் பற்றிப் பெருமையாக.
சாம வேதத்தை ஊன்றிப் படித்துக் கிரஹித்து ஸ்ருதி மாறாமல் ஓதி ஸ்ரெளதிகளாக அங்கீகாரம் வர ஒரு மாதம் இருக்கும்போது அவனுக்கு மனம் புரண்டு போனது.
சங்கரன் ஏட்டுப் பள்ளிக்கூடத்துக்குச் சுவடி தூக்கிப் போன கடைசி வருடம் அது.
வீட்டு விசேஷத்துக்காக இறங்கி வந்த மூத்த குடிப் பெண்டுகளில் கன்னி கழியாமலே இறந்து போயிருந்த யாரையோ சாமிநாதன் மந்திரத்தால் கட்டிப் பகல் நேரத்தில் கூடியதால் சாபம் ஏற்பட்டதாக சுப்பம்மாக் கிழவி ஒருதடவை பாடியபோது வீட்டில் எல்லோரும் அதை நிறுத்தச் சொன்னார்கள்.
பாதி புரிந்தும் புரியாமலும் சங்கரன் படகேறி சபேசய்யரைத் தேடிப் போனான் அப்புறம்.
கன்னி கழிந்த அந்த மூத்தகுடிப் பெண் வீட்டில் நடந்த அடுத்த விசேஷத்தின் போது, சுப்பம்மாள் நாக்கில் இருந்து எல்லோரையும் காதுகேட்கச் சகிக்காத வார்த்தைகளால் வைது தீர்த்து இறங்கிப் போனதோடு வீட்டையும் மாற்றி இங்கே வந்து விட்டார் சுப்பிரமணிய அய்யர்.
இந்த வீட்டிலும் அந்த மூத்த குடிப்பெண்ணின் சாபம் சூழ்ந்திருந்ததாகத் தோன்ற மற்ற முன்னோர்களைக் கூப்பிட்டுப் பேசி அவள் அடுத்த ஜன்மம் எடுத்து இதையெல்லாம் மறக்க நடவடிக்கை எடுத்தாள் அவர்.
அந்தப் பெண்ணின் கர்ப்பத்தில் இருந்த சிசுவுக்கும் சேர்த்து இந்தக் கடைத்தேற்றுதலைச் செய்ய வேண்டி வந்ததால் பத்து இருபது நாள் தொடர்ந்து நீண்ட சடங்குகள் காரணமாக ஏகமாகச் செலவானதாகச் சபேசய்யர் சங்கரனிடம் ஒருதடவை சொன்னார்.
மூத்தகுடிப் பெண்ணின் உபத்திரவம் இல்லாமல் போனதோடு சாமிநாதனுக்கு அவள் ஆசிர்வாதத்தால் வெள்ளைக்கார தேசத் தர்க்கம், தத்துவம், விஞ்ஞானம் என்று எல்லாம் கூடி வந்தது. ஆனாலும் அவள் கருவில் இருந்து அழிந்த சிசு சபித்துப் போட்டதில் பவுர்ணமிகளில் அவன் ஸ்திதி மோசமாகி விடும்.
திரும்பி வந்த தினத்தில் சாமிநாதனைப் பார்த்துவிட்டு சங்கரன் வெளியே வர, எதிரே புகையிலை அடைத்த இருண்ட அறை. கதவைத் திறந்து உள்ளே போனான்.
ஈரமும், வாடை கவிந்தும் இருந்த இருட்டில் தேயிலைத் தோட்டங்களை நினைத்துக் கொண்டான் சங்கரன். அங்கே கேட்ட ஏற்றப்பாட்டுக்களை நினைவில் கொண்டு வர முயன்றபடி அறையில் மேற்கு வசத்தில் இன்னொரு கதவு மூலம் வெளியே வந்தான்.
முன்னால் நிமிர்ந்து பார்க்க கூரை வேயாத மொட்டைமாடி உசரமாக நின்றது.
வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக் கொண்டு கைப்பிடிச் சுவரைப் பிடித்து ஏறினான்.
குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ.
குனிந்து பார்க்கலாமோ.
பார்த்தான்.
அந்தக் கண் இரண்டும் சங்கரனின் மார்பைத் துளைத்துப் போனதுபோல் இருந்தது.
கழுத்தில் தாலி இருக்கிறது. கல்யாணமான ஸ்திரி. தன்னை விட வயதானவளாக இருக்கக் கூடும்.
அவள் கண்ணைத் தாழ்த்திக் கொண்டாள். சங்கரன் அவசரமாகக் கீழே இறங்கியபோது மை தீற்றிய அந்தக் கண்களும் கூடவே வந்தன.
இது நித்தியப்படி வழக்கமாகிப் போனது.
அதாவது மாதத்தில் மூன்று நாள் சங்கரன் மாடி ஏறுவதில்லை. மற்றப்படி கடைக்குப் போகிற நேரத்தை இதை உத்தேசித்துக் கவனமாக மாற்றிக் கொண்டான் சங்கரன்.
என்ன, ஒரு அரை மணிக்கூறு தாமதித்தால் என்ன போச்சு ? ராத்திரி திரும்பி வர நேரம் பிடிக்கிறதில்லையா ?
குனிந்து பார்க்கலாமோ. பெண்டுகள்.
அம்பி வெய்யில்லே மொட்டை மாடியிலே என்ன பண்ணிண்டு இருக்கே ? ஜபம் பண்றியா ?
சங்கரன் பார்த்துக் கொண்டிருந்தபோது பரசுராமனும் கைப்பிடிச் சுவர் ஏறி மேலே வந்தான் போன வாரம். அன்றைக்குப் பகலில் அவன் அம்பலப்புழை திரும்ப உத்தேசித்திருந்தான்.
மேலே இருந்து இரண்டு ஜோடிக் கண்கள் பார்த்தது தெரிந்த ராணி அப்புறம் பார்வையை உயர்த்தவே இல்லை.
அம்பி, நீ அம்பலப்புழைக்கு வாயேன்.
பாதித் தூக்கத்தில் பரசுராமன் கூப்பிடுகிற மாதிரி இருந்தது.
போகலாம். அங்கே மாடி இருக்குமோ.
மூத்தகுடிப் பெண்ணின் உபத்திரவம் இல்லாமல் போனதோடு சாமிநாதனுக்கு அவள் ஆசிர்வாதத்தால் வெள்ளைக்கார தேசத் தர்க்கம், தத்துவம், விஞ்ஞானம் என்று எல்லாம் கூடி வந்தது. ஆனாலும் அவள் கருவில் இருந்து அழிந்த சிசு சபித்துப் போட்டதில் பவுர்ணமிகளில் அவன் ஸ்திதி மோசமாகி விடும்.
திரும்பி வந்த தினத்தில் சாமிநாதனைப் பார்த்துவிட்டு சங்கரன் வெளியே வர, எதிரே புகையிலை அடைத்த இருண்ட அறை. கதவைத் திறந்து உள்ளே போனான்.
ஈரமும், வாடை கவிந்தும் இருந்த இருட்டில் தேயிலைத் தோட்டங்களை நினைத்துக் கொண்டான் சங்கரன். அங்கே கேட்ட ஏற்றப்பாட்டுக்களை நினைவில் கொண்டு வர முயன்றபடி அறையில் மேற்கு வசத்தில் இன்னொரு கதவு மூலம் வெளியே வந்தான்.
முன்னால் நிமிர்ந்து பார்க்க கூரை வேயாத மொட்டைமாடி உசரமாக நின்றது.
வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக் கொண்டு கைப்பிடிச் சுவரைப் பிடித்து ஏறினான்.
குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ.
குனிந்து பார்க்கலாமோ.
பார்த்தான்.
அந்தக் கண் இரண்டும் சங்கரனின் மார்பைத் துளைத்துப் போனதுபோல் இருந்தது.
கழுத்தில் தாலி இருக்கிறது. கல்யாணமான ஸ்திரி. தன்னை விட வயதானவளாக இருக்கக் கூடும்.
அவள் கண்ணைத் தாழ்த்திக் கொண்டாள். சங்கரன் அவசரமாகக் கீழே இறங்கியபோது மை தீற்றிய அந்தக் கண்களும் கூடவே வந்தன.
இது நித்தியப்படி வழக்கமாகிப் போனது.
அதாவது மாதத்தில் மூன்று நாள் சங்கரன் மாடி ஏறுவதில்லை. மற்றப்படி கடைக்குப் போகிற நேரத்தை இதை உத்தேசித்துக் கவனமாக மாற்றிக் கொண்டான் சங்கரன்.
என்ன, ஒரு அரை மணிக்கூறு தாமதித்தால் என்ன போச்சு ? ராத்திரி திரும்பி வர நேரம் பிடிக்கிறதில்லையா ?
குனிந்து பார்க்கலாமோ. பெண்டுகள்.
அம்பி வெய்யில்லே மொட்டை மாடியிலே என்ன பண்ணிண்டு இருக்கே ? ஜபம் பண்றியா ?
சங்கரன் பார்த்துக் கொண்டிருந்தபோது பரசுராமனும் கைப்பிடிச் சுவர் ஏறி மேலே வந்தான் போன வாரம். அன்றைக்குப் பகலில் அவன் அம்பலப்புழை திரும்ப உத்தேசித்திருந்தான்.
மேலே இருந்து இரண்டு ஜோடிக் கண்கள் பார்த்தது தெரிந்த ராணி அப்புறம் பார்வையை உயர்த்தவே இல்லை.
அம்பி, நீ அம்பலப்புழைக்கு வாயேன்.
பாதித் தூக்கத்தில் பரசுராமன் கூப்பிடுகிற மாதிரி இருந்தது.
போகலாம். அங்கே மாடி இருக்குமோ.
அரசூர் வம்சம் - அத்தியாயம் ஆறு
விடிகாலையிலேயே கலுபிலு என்று சத்தம். அடிபிடி சண்டை.
வீட்டில் ஸ்திரிகள் இருந்தாலே போதும். கூக்குரலுக்கும் சிரிப்புக்கும் அழுகைக்கும் சச்சரவுக்கும் கும்மாளத்துக்கும் குறைச்சல் இல்லை.
எங்கப்பா ஆலப்பாட்டிலேருந்து வரச்சே பாண்டிப் பணம் நாலணா மடிசஞ்சியிலே முடிஞ்சுண்டு வந்தார். சஞ்சி இருக்கு. மேல் துண்டும் முண்டும் இருக்கு. காசு மாத்ரம் போன எடம் தெரியலை. அடைக்கா கட்கறவாளத் தெரியும். ஆனை கக்குவா அவாளையும் தெரியும். ஆசனத் துவாரத்திலே செருகி வச்சாலும் அஞ்சு தம்படியைக் கூடக் கட்கற வர்த்தமானம் நூதனமில்லியோ.
கிட்டாவய்யன் பெண்டாட்டி சிநேகாம்பாள் தான் கீச்சுக் கீச்சென்று கத்திக் கொண்டிருக்கிறாள். விடிந்ததிலிருந்து புகைந்து கொண்டிருக்கிறது அவளுக்கும் அவள் ஓரகத்தியும் கிட்டாவய்யன் தமையன் துரைசாமி அய்யன் பெண்டாட்டியுமான காமாட்சிக்கும் நடுவே தர்க்கம். குதர்க்கம்.
துப்புக் கெட்டவளே. காலம்பற அம்பலம் தொழுதுட்டு வந்து நாமம் சொன்னாலும் புண்யம் உண்டு. வையாதேடி யாரையும் முண்டை. ஒத்துப் போ மன்னியோட.
கிட்டாவய்யன் அவள் காதில் நாலைந்து தடவை சொல்லவே அவள் எரித்து விடுவது போல் பார்த்தாள்.
ஆத்துக்காரனே பொண்டாட்டியை முண்டைன்னு வசு தீர்க்கறதை விட இது உத்தமம்தான். நீங்க இறங்கிப் போய்ட்டு வாங்கோ. ஆலோசனை சொல்ல வந்துட்டேள் பெரிசா. திருவிதாங்கூர் திவான்னு நெனப்பு.
அலுத்துப் போய் வாசலுக்கு வந்திருக்கிறான்.
மூத்த தமையன் துரைசாமி அய்யன் மைநாகப்பள்ளிக் குரூப்பு வீட்டில் இழவு விழுந்த ஏழாம் நாள் தேகண்டத்துக்கு என்று நேற்றுத்தான் கிளம்பிப் போனான். இருந்தால் அவனும் தன் பெண்டாட்டி காமாட்சியிடம் இதே போல்தான் சொல்வான்.
பெண்டுகள் கேட்கிறதில்லை. அடித்துக் கொள்கிறார்கள். ஆண்கள் வாசலுக்குப் போன, வீட்டில் இல்லாத தைரியத்தில் வசைபாடிக் கொள்கிறார்கள்.
அப்புறம் சமாதானமாகி மத்தியானம் இழைந்து சாயந்திரம் குளித்துவிட்டு ஒன்றாக பகவதி க்ஷேத்ரமும் சர்ப்பக்காவும் போய்த் தொழுதுவிட்டு வருகிறார்கள். முற்றத்தில் விளக்கேற்றி வைக்கிறார்கள். பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து கண்ணை மூடி அம்மே நாராயணா தேவி நாராயணா என்று நாம ஜபம் செய்கிறார்கள். சேர்ந்து உலைவைக்கிறார்கள், ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டு சத்தம் வராமல் சிரிக்கிறார்கள். பதிவான இடங்களில் படுத்து நித்திரை போகிறார்கள். விடிகாலையில் மறுபடி குளிக்கும் முன்னால் சணடைக் கோழிகளாகக் கொத்திப் பாய்ந்து குதறிக் கொள்கிறார்கள்.
எங்கப்பா மடிசஞ்சியிலே முடிஞ்சு கொண்டு வந்த தட்சணைப் பணம். என் குழந்தைகளுக்கு முட்டாயும் சேவும் வாங்கித் தரதுக்கு வச்சிருந்தது. கண்குத்திப் பாம்பு மாதிரி நொடிக்கொரு விசை இடுப்பைத் தடவித் தடவிப் பாத்தபடியே படுத்துண்டிருந்தார். அவருக்கு வந்த ஒரு கஷ்டம். ஹே ஈஸ்வரா.
சிநேகாம்பாள் அழுகிற சத்தம்.
அவரா. வெய்யில் கண்ணைக் குத்தற போது கூட ஏந்திருக்காம மொட்டை மாடியிலே வேஷ்டி விலகினது தெரியாமப் படுத்து உறங்கிண்டு இருக்கப்பட்டவர். இப்படிப் பெரியவா பாஷாண்டியாத் தூங்கிண்டு கிடந்தா நாலணாவும் போகும். இடுப்பு வஸ்திரமும் சேர்ந்தே நழுவிடுமாக்கும்.
காமாட்சி மன்னி குரல் எட்டு ஊருக்குக் கேட்கும்.
என்ன எக்காளமும் எகத்தாளமும். பாவம் புகைச்சல் இருமலோட அவர் ராத்திரி முழுவன் கொரச்சுக் கொரச்சு விடிகாலையிலே செத்தக் கண்ணயரறார்.
கிட்டாவய்யன் பெண்டாட்டி சிநேகாம்பாள் அழுகைக்கு நடுவே சொல்கிறாள்.
கொட்டக் கொட்ட முழிச்சிண்டு இருக்காரோ என்னமோ. ராத்திரியிலே மொட்டை மாடியிலே இருந்தபடிக்கே நாலு கொடம் மூத்ரம் ஒழிச்சுக் கொட்டியாறது. கீழே யாராவது நடந்து போனா புண்ய ஸ்நானம் தான் அர்த்த ராத்திரியிலே. யாராவது தீர்த்தமாடிக் கீழே இருந்து ஆசீர்வாதம் கேட்டு நல்ல வார்த்தை சொல்லியிருப்பா. இது மடிசஞ்சியிலே திவச தட்சணையா முடிஞ்சு வச்சிருந்த நாலணாவைப் பிரியமா விட்டெறிஞ்சிருக்கும்.
மன்னி காமாட்சி விடுவதாக இல்லை. அப்படி இப்படிச் சுற்றி சிநேகாம்பா சொல்லப் போகிறது காசை எடுத்தது காமாட்சி தானென்று.
அதற்கு முன் முஸ்தீபு பலமாகக் கட்டிக் கொண்டால் எந்த அபவாதத்தையும் சமாளிக்கத் திராணி ஏற்பட்டுவிடும் காமாட்சி மன்னிக்கு.
பெரியவாளை தூஷிக்காதேடி கடங்காரி. அதான் உனக்கு இத்தனை வருஷமா வம்ச விருத்தியாகம துணியை இடுக்கிண்டு தூரம் குளிச்சுண்டு கிடக்கே. எங்கப்பாவாவது மூத்ரம் ஒழிச்சார். போன ஆராட்டு சமயத்துலே பூதக்குளத்துலே இருந்து உன் தமக்கை ஆத்துக்காரர் வந்தாரே. நாள் முழுக்க மனைப் பலகையைப் போட்டுண்டு கொட்டக் கொட்ட முழிச்சுப் பாத்துண்டு, வாசலும் மித்தமும் அடிச்சுத் தூர்க்க வந்த கல்யாணிக் குட்டியைக் கையைப் பிடிச்சு இழுத்தது ஊரோட நாறினதே. ஓர்மை இருக்கோன்னோ.
சிநேகாம்பா அழுகையை நிறுத்தி சரியான நேரத்தில் சரியான விஷயம் நினைவுக்கு வந்த சந்தோஷத்தோடு இன்னும் கொஞ்சம் கீசு கீசு என்று இரைகிறாள்.
நீ ஏன் சொல்ல மாட்டே. நேத்ரம் பழுதாகி பிஷாரடி வைத்தியன் கிட்டே தைலம் புரட்டிப் போக வந்தார் எங்க அத்திம்பேர். என் குரலும் கல்யாணிக்குட்டி கொரலும் ஒரே மாதிரி இருக்கறதாலே.
மன்னி காமாட்சி பேச ஆரம்பித்து அபத்தம் பற்றிப் போனதாக மனதில் பட சட்டென்று நிறுத்திக் கொள்கிறாள்.
ஓஹோ அப்படிப் போறதா குட்டிச் சாத்தான் குசும்பு. அந்த மனுஷ்யன் உன் கையைத் தான் இழுக்கற வழக்கமா ? பகல்லே கை. அப்புறம் ராத்திரியிலே மத்ததா ?
சிநேகாம்பாள் இப்போது சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தாள். தன்னோடு போகத்தின் போது கூட அவள் இப்படிச் சந்தோஷித்ததில்லை என்று வாசலில் நிற்கிற கிட்டாவய்யனுக்குத் தோன்றியது. ஆலப்பாட்டில் இருந்து மடிசஞ்சியில் நாலணாவைக் கட்டிக் கொண்டு வந்து பறிகொடுத்துவிட்டு நிற்கிற அவளுடைய அப்பா விஷயம் கூட மறந்து போயிருக்கும்.
ஆமாண்டி என் பொன்னு ஆலப்பாட்டு மடத்துக்காரி. குட்டி சாத்தன் ஏவலும் மத்தியானத்துலே மல்லாத்திக் கிடத்தி வம்ச விருத்தி பண்றதையும் தவிர உங்க புருஷாளுக்கு வேறே உருப்படியா ஏதாவது காரியம் உண்டோ.
மன்னி சுருக்கென்று குத்துகிறாள்.
ஆலப்பாட்டு மடம் என்ற ஆலப்பாட்டுக் குடும்ப வீடு ஜோசியத்துக்குப் பேர்போனது. அந்தப் பெருமைக்காகவே கிட்டாவய்யனுக்கு அங்கே பெண் எடுத்தார்கள்.
சோழி உருட்டிப் போட்டுக் கணக்குக் கூட்டிப் பார்க்கிற விஷயம் ஜோசியம். அது பெண்டுகள் சச்சரவின்போது துர்தேவதைகளோடு ஈஷிக் கொண்டு இழைகிற பில்லி சூனியமாகி விடும்.
மற்றப்படி ஆலப்பாட்டு வீட்டில் மத்தியானத்தில் பெண்டாட்டியோடு சுகித்தது என்பது பிராயம் தள்ளிப்போய்க் கல்யாணம் கழிந்து வந்த ஒரு முப்பாட்டன் செய்து சிரிப்புக்கிடமான காரியம். எத்தனையோ வருஷம் முந்தின சமாச்சாரம். சிநேகாம்பாளே ஒரு சுமுகமான நேரத்தில் வேடிக்கை விநோதம் பேசிக் கொண்டிருந்தபோது காமாட்சி மன்னியிடம் சொன்னது. அதுவும் இந்தச் சந்தர்ப்பத்தில் அஸ்திரமாகப் பிரயோகமாகிறது.
ஆமா. அவா வம்ச விருத்தி பண்ணா. நீ பக்கத்திலே விசிறிண்டு நின்னே. நாலணாவை மடிசஞ்சியிலேருந்து கட்டவள் நீதானேடா.
சிநேகாம்பாள் விஷயத்துக்கு வந்துவிட்டாள். இப்போது நிறுத்தாவிட்டால் மத்தியானம் வரை இவர்கள் குளிக்காமல் கொள்ளாமல் தொடர்ந்து கொண்டே இருப்பார்கள். நடுவே சிநேகாம்பாளின் குழந்தைகள் எழுந்து வந்தாலும் அததுகளைக் கவனித்து சவரட்சணை செய்தபடி சம்வாதம் பாட்டுக்கு முன்னால் போகும்.
ஏய் சிநேகாம்பா நிறுத்திக்கோ. சொல்லிட்டேன். இப்பவே நிறுத்திக்கோ.
கிட்டாவய்யன் கீழே இருந்து இரைகிறான்.
மன்னியை நேரடியாகக் கோபிக்க முடியாது. அவன் இரைவது அவளுக்கும் சேர்த்துத்தான்.
அந்தக் கிழவனோட மூத்திரத் துணியை நினச்சாலே குமட்டிண்டு வருது. அதுலே கையை வேறே விட்டுக் காசை எடுக்கப் பிராந்தா என்ன இங்கே ஆருக்கும் ?
காமாட்சி மன்னி முணுமுணுத்துக் கொண்டே குளிக்கக் கிளம்புகிறாள்.
சிநேகாம்பா அழுகையை நிறுத்தி சரியான நேரத்தில் சரியான விஷயம் நினைவுக்கு வந்த சந்தோஷத்தோடு இன்னும் கொஞ்சம் கீசு கீசு என்று இரைகிறாள்.
நீ ஏன் சொல்ல மாட்டே. நேத்ரம் பழுதாகி பிஷாரடி வைத்தியன் கிட்டே தைலம் புரட்டிப் போக வந்தார் எங்க அத்திம்பேர். என் குரலும் கல்யாணிக்குட்டி கொரலும் ஒரே மாதிரி இருக்கறதாலே.
மன்னி காமாட்சி பேச ஆரம்பித்து அபத்தம் பற்றிப் போனதாக மனதில் பட சட்டென்று நிறுத்திக் கொள்கிறாள்.
ஓஹோ அப்படிப் போறதா குட்டிச் சாத்தான் குசும்பு. அந்த மனுஷ்யன் உன் கையைத் தான் இழுக்கற வழக்கமா ? பகல்லே கை. அப்புறம் ராத்திரியிலே மத்ததா ?
சிநேகாம்பாள் இப்போது சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தாள். தன்னோடு போகத்தின் போது கூட அவள் இப்படிச் சந்தோஷித்ததில்லை என்று வாசலில் நிற்கிற கிட்டாவய்யனுக்குத் தோன்றியது. ஆலப்பாட்டில் இருந்து மடிசஞ்சியில் நாலணாவைக் கட்டிக் கொண்டு வந்து பறிகொடுத்துவிட்டு நிற்கிற அவளுடைய அப்பா விஷயம் கூட மறந்து போயிருக்கும்.
ஆமாண்டி என் பொன்னு ஆலப்பாட்டு மடத்துக்காரி. குட்டி சாத்தன் ஏவலும் மத்தியானத்துலே மல்லாத்திக் கிடத்தி வம்ச விருத்தி பண்றதையும் தவிர உங்க புருஷாளுக்கு வேறே உருப்படியா ஏதாவது காரியம் உண்டோ.
மன்னி சுருக்கென்று குத்துகிறாள்.
ஆலப்பாட்டு மடம் என்ற ஆலப்பாட்டுக் குடும்ப வீடு ஜோசியத்துக்குப் பேர்போனது. அந்தப் பெருமைக்காகவே கிட்டாவய்யனுக்கு அங்கே பெண் எடுத்தார்கள்.
சோழி உருட்டிப் போட்டுக் கணக்குக் கூட்டிப் பார்க்கிற விஷயம் ஜோசியம். அது பெண்டுகள் சச்சரவின்போது துர்தேவதைகளோடு ஈஷிக் கொண்டு இழைகிற பில்லி சூனியமாகி விடும்.
மற்றப்படி ஆலப்பாட்டு வீட்டில் மத்தியானத்தில் பெண்டாட்டியோடு சுகித்தது என்பது பிராயம் தள்ளிப்போய்க் கல்யாணம் கழிந்து வந்த ஒரு முப்பாட்டன் செய்து சிரிப்புக்கிடமான காரியம். எத்தனையோ வருஷம் முந்தின சமாச்சாரம். சிநேகாம்பாளே ஒரு சுமுகமான நேரத்தில் வேடிக்கை விநோதம் பேசிக் கொண்டிருந்தபோது காமாட்சி மன்னியிடம் சொன்னது. அதுவும் இந்தச் சந்தர்ப்பத்தில் அஸ்திரமாகப் பிரயோகமாகிறது.
ஆமா. அவா வம்ச விருத்தி பண்ணா. நீ பக்கத்திலே விசிறிண்டு நின்னே. நாலணாவை மடிசஞ்சியிலேருந்து கட்டவள் நீதானேடா.
சிநேகாம்பாள் விஷயத்துக்கு வந்துவிட்டாள். இப்போது நிறுத்தாவிட்டால் மத்தியானம் வரை இவர்கள் குளிக்காமல் கொள்ளாமல் தொடர்ந்து கொண்டே இருப்பார்கள். நடுவே சிநேகாம்பாளின் குழந்தைகள் எழுந்து வந்தாலும் அததுகளைக் கவனித்து சவரட்சணை செய்தபடி சம்வாதம் பாட்டுக்கு முன்னால் போகும்.
ஏய் சிநேகாம்பா நிறுத்திக்கோ. சொல்லிட்டேன். இப்பவே நிறுத்திக்கோ.
கிட்டாவய்யன் கீழே இருந்து இரைகிறான்.
மன்னியை நேரடியாகக் கோபிக்க முடியாது. அவன் இரைவது அவளுக்கும் சேர்த்துத்தான்.
அந்தக் கிழவனோட மூத்திரத் துணியை நினச்சாலே குமட்டிண்டு வருது. அதுலே கையை வேறே விட்டுக் காசை எடுக்கப் பிராந்தா என்ன இங்கே ஆருக்கும் ?
காமாட்சி மன்னி முணுமுணுத்துக் கொண்டே குளிக்கக் கிளம்புகிறாள்.
கிட்டாவய்யனுக்கும் தன் மாமனார் பற்றி அப்படி ஒன்றும் பெரிய அபிப்ராயம் இல்லை. ஆனாலும் நாலணா போனது நிஜமாகவே இருக்கக் கூடும். காமாட்சி மன்னி எடுத்திருக்க மாட்டாள்தான். இந்த எழவெடுத்த பகளமும் கூப்பாடும் மனுஷனை நிலைகுலைய வைக்கிறது. பார்க்க வேண்டிய காரியம் எதையும் முழு கவனத்தோடு செய்ய முடிவதில்லை.
பெண்டுகள் இல்லாமல் போயிருந்தால் கிரஹம் தான் எத்தனை நிசப்தமாக இருக்கும்.
சத்தமும் நிசப்தமும் பெண்கள் மாத்திரம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. வீட்டு மனுஷ்யர்கள், குழந்தைகள், ஸ்திரிகள் என்று கூடி இருந்து ஜீவிக்கிறதில் உண்டாகிற கலகமும், பிணக்கும் சந்தோஷமும் மற்றதும் இதெல்லாம்.
கிட்டாவய்யன் தலையை ஆட்டிக் கொண்டான்.
போகட்டும். அவனுக்குத் தலைக்கு மேல் வேலை இருக்கிறது. பொழுது சாய ஆதிச்சநல்லூரில் இருக்க வேண்டும் அவன்.
சோமா, இருப்புச் சட்டியொண்ணையும் காணலை. பின்கட்டில் போய்ப்பார்
சத்தமாக வீட்டுக்குள் பார்த்துக் குரல் எறிந்தபடி வெங்கலப் பானைகளை ஒவ்வொன்றாகக் காளை வண்டியில் ஏற்றினான் கிட்டாவய்யன்.
இருப்புச் சட்டியெல்லாம் ராமேந்திரன் எடுத்துப் போயாச்சு அண்ணா. பூந்தி தேய்க்கும் ஜாரிணிக் கரண்டியும் கூட அவன் நேற்று உச்சைக்கே கொண்டு போனானே.
சோமநாதன் ஆள்காட்டி விரலில் எச்சில் படாமல் சக்கரைப் புகையிலையைக் கடைவாயில் திணித்தபடி உள்ளே இருந்து ஓடி வந்தான்.
ஆதிச்சநல்லூரில் கிருஷ்ணனுண்ணி நாயரின் புடமுறி நாளைக்கு. ராஜாங்க சேவகனாக இருந்த ராஜசேகரக் கைமளின் இரண்டாமத்துப் பெண்ணை, ஒன்பது கஜச் சேலை கொடுத்து வெற்றிலை பாக்கு மாற்றிக் கல்யாணம் செய்து கொள்கிறான் கிருஷ்ணனுண்ணி.
கைமளிடம் பெரிசாகக் கிருஷ்ணன் நாயர் எதுவும் கேட்கவில்லை. அவருடைய மகள் சீதேவியே அவனுக்கு எதேஷ்டம். நல்ல வலுவும் தரக்கேடில்லாத தேக வனப்பும் மிக்கவள். பரம்பில் கூடமாட வேலை பார்க்கவும், தொழுத்தில் பசுக்களைப் பராமரித்துப் பால் கறக்கவும், ஒரு மெழுக்குப் புரட்டியும், சோறும் ஆக்கிப் போடவும், சாயந்திரம் நிலவிளக்கேற்றி வைத்து நாமஜபம் செய்யவும் பழக்கமான பெண்குட்டி.
கைமளிடம் கிருஷ்ணன் நாயர் ஒரே ஒரு கோரிக்கை மாத்திரம் வைத்தான். அது கல்யாணச் சமையல் பற்றியதாக இருந்தது.
அம்பலப்புழை அய்யர் குடும்பத்திலிருந்து தேஹண்டத்துக்கு வரணும். எரிசேரியும், அவியலும், பிரதமனும் மற்றதும் எல்லாம் அய்யனும் கூட்டரும் ஆக்கியாலே தனியான ருசியும் ஸ்வாதுமாயிருக்கும்.
கிட்டாவய்யன் கிளம்பிக் கொண்டிருக்கிறான். கைமள் குடும்பக் கல்யாணம். அப்புறம் புனலூரில் ஒரு திரண்டுகுளி. கருநாகப்பள்ளியில் சாமவேத பூஷணமான ருத்தாத்திரி ஓய்க்கனின் சஷ்டி அப்த பூர்த்தி. அது கழிந்து கொல்லத்தில் கருணாகர மேனோனின் நூதன கிரஹப் பிரவேசம்.
எல்லாம் கிட்டாவய்யனோ அவன் சகோதரர்மாரோ வந்து நடத்திக் கொடுக்கவேண்டும். எரிசேரியும், புளிசேரியும், மிளகூட்டானும், சாம்பாரும், பூந்தி லட்டும், ஜாங்கிரியும், பருப்பு வடையும் அவர்கள் செய்தாலே சாப்பிடக் கழியும்.
பசியோடு காத்திருக்கிறார்கள் எல்லோரும்.
பெண்டுகள் இல்லாமல் போயிருந்தால் கிரஹம் தான் எத்தனை நிசப்தமாக இருக்கும்.
சத்தமும் நிசப்தமும் பெண்கள் மாத்திரம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. வீட்டு மனுஷ்யர்கள், குழந்தைகள், ஸ்திரிகள் என்று கூடி இருந்து ஜீவிக்கிறதில் உண்டாகிற கலகமும், பிணக்கும் சந்தோஷமும் மற்றதும் இதெல்லாம்.
கிட்டாவய்யன் தலையை ஆட்டிக் கொண்டான்.
போகட்டும். அவனுக்குத் தலைக்கு மேல் வேலை இருக்கிறது. பொழுது சாய ஆதிச்சநல்லூரில் இருக்க வேண்டும் அவன்.
சோமா, இருப்புச் சட்டியொண்ணையும் காணலை. பின்கட்டில் போய்ப்பார்
சத்தமாக வீட்டுக்குள் பார்த்துக் குரல் எறிந்தபடி வெங்கலப் பானைகளை ஒவ்வொன்றாகக் காளை வண்டியில் ஏற்றினான் கிட்டாவய்யன்.
இருப்புச் சட்டியெல்லாம் ராமேந்திரன் எடுத்துப் போயாச்சு அண்ணா. பூந்தி தேய்க்கும் ஜாரிணிக் கரண்டியும் கூட அவன் நேற்று உச்சைக்கே கொண்டு போனானே.
சோமநாதன் ஆள்காட்டி விரலில் எச்சில் படாமல் சக்கரைப் புகையிலையைக் கடைவாயில் திணித்தபடி உள்ளே இருந்து ஓடி வந்தான்.
ஆதிச்சநல்லூரில் கிருஷ்ணனுண்ணி நாயரின் புடமுறி நாளைக்கு. ராஜாங்க சேவகனாக இருந்த ராஜசேகரக் கைமளின் இரண்டாமத்துப் பெண்ணை, ஒன்பது கஜச் சேலை கொடுத்து வெற்றிலை பாக்கு மாற்றிக் கல்யாணம் செய்து கொள்கிறான் கிருஷ்ணனுண்ணி.
கைமளிடம் பெரிசாகக் கிருஷ்ணன் நாயர் எதுவும் கேட்கவில்லை. அவருடைய மகள் சீதேவியே அவனுக்கு எதேஷ்டம். நல்ல வலுவும் தரக்கேடில்லாத தேக வனப்பும் மிக்கவள். பரம்பில் கூடமாட வேலை பார்க்கவும், தொழுத்தில் பசுக்களைப் பராமரித்துப் பால் கறக்கவும், ஒரு மெழுக்குப் புரட்டியும், சோறும் ஆக்கிப் போடவும், சாயந்திரம் நிலவிளக்கேற்றி வைத்து நாமஜபம் செய்யவும் பழக்கமான பெண்குட்டி.
கைமளிடம் கிருஷ்ணன் நாயர் ஒரே ஒரு கோரிக்கை மாத்திரம் வைத்தான். அது கல்யாணச் சமையல் பற்றியதாக இருந்தது.
அம்பலப்புழை அய்யர் குடும்பத்திலிருந்து தேஹண்டத்துக்கு வரணும். எரிசேரியும், அவியலும், பிரதமனும் மற்றதும் எல்லாம் அய்யனும் கூட்டரும் ஆக்கியாலே தனியான ருசியும் ஸ்வாதுமாயிருக்கும்.
கிட்டாவய்யன் கிளம்பிக் கொண்டிருக்கிறான். கைமள் குடும்பக் கல்யாணம். அப்புறம் புனலூரில் ஒரு திரண்டுகுளி. கருநாகப்பள்ளியில் சாமவேத பூஷணமான ருத்தாத்திரி ஓய்க்கனின் சஷ்டி அப்த பூர்த்தி. அது கழிந்து கொல்லத்தில் கருணாகர மேனோனின் நூதன கிரஹப் பிரவேசம்.
எல்லாம் கிட்டாவய்யனோ அவன் சகோதரர்மாரோ வந்து நடத்திக் கொடுக்கவேண்டும். எரிசேரியும், புளிசேரியும், மிளகூட்டானும், சாம்பாரும், பூந்தி லட்டும், ஜாங்கிரியும், பருப்பு வடையும் அவர்கள் செய்தாலே சாப்பிடக் கழியும்.
பசியோடு காத்திருக்கிறார்கள் எல்லோரும்.
அரசூர் வம்சம் - அத்தியாயம் ஏழு
மூணு தலைமுறையாகக் கரண்டி பிடிக்கும் குடும்பம் கிட்டாவய்யனுடையது. பாண்டிக்கார அய்யன்மார் என்று கொல்லம் பிரதேசம் முழுக்கப் பிரசித்தம். வீட்டில் தமிழ் பேசும் குடும்பம்.
மூணு சகோதரர்கள். மூணு சகோதரிகள்.
மூத்தவன் குப்புசாமி அய்யன். அடுத்தவன் துரைசாமி அய்யன். கடைசி புத்திரன் கிட்டாவய்யன். அவனுக்குப் பத்து பிராயம் ஆனபோது தகப்பனார் போய்ச் சேர்ந்து அண்ணா குப்புசாமி அய்யன் கரண்டி உத்தியோகத்துக்குத் தலையெடுத்திருந்தான்.
குப்புசாமி அய்யன் விசாலாட்சி மன்னியையும் துரைசாமி அய்யன் காமாட்சி மன்னியையும் ஆலப்புழையில் கல்யாணம் கழித்துக் கூட்டி வந்த மறுவருடம் மருமகள் ரெண்டு பேர் கையிலும் வீட்டு நிர்வாகத்தைக் கொடுத்து விட்டு கிட்டாவய்யன் அம்மாவும் போய்ச் சேர்ந்தாகி விட்டது.
எச்சுமி கிட்டாவய்யன் அக்கா. ஒரு வயசு மாத்திரம் வித்யாசம் ரெண்டு பேர்க்கும்.
அலமேலு அவன் தங்கை. அப்புறம் பகவதி.
கடைக்குட்டி பகவதி திரண்டுகுளி இந்த இடவ மாதத்தில் தான் நடந்தது. சுந்தரிப் பெண்குட்டியான அவளுக்குக் கல்யாண ஆலோசனைகள் வந்தமணியம் இருக்கின்றன. பாண்டியில் அரசூர்ப் பட்டணத்தில் புகையிலை வியாபாரம் செய்யும் அம்மா வழி உறவிலிருந்து சம்பந்தம் குதிர்ந்திருக்கிறது தற்போது. வரன் தனுஷ்கோடி கடந்து எல்லாம் போய் வியாபாரத்தில் புலி என்று பேரெடுத்த அதி சமர்த்தனாம். அரசூர் போய்ப் பார்த்துவிட்டு வந்த கிட்டாவய்யனின் பெரியப்பா பிள்ளை பரசுராமன் வாய் ஓயாமல் சொல்கிறான்.
பகவதிக்காவது வேறு தொழில் பண்ணுகிற புருஷன் வாய்க்கட்டும். கிட்டாவய்யனின் மற்ற சகோதரிகளைக் கைபிடித்தவர்களும் கரண்டி பிடிப்பவர்கள் தாம். மதுரையில் இருந்தும், நன்னிலத்தில் இருந்தும் பெண் எடுக்க வந்து இங்கேயே தங்கி விட்டவர்கள்.
ராமேந்திரனும் சோமநாதனும் அப்படி வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைகள்.
ராமேந்திரன் எச்சுமி வீட்டுக்காரன். சோமநாதன் அலமேலுவை பாணிக்ரஹணம் செய்தவன்.
இரண்டு சகோதரிகளுக்கும் போன தைப்பூயத்தின் போதுதான் ஒரே நாளில் ஒரே பந்தலில் கிட்டாவய்யனும் தமையனார்களும் கல்யாணம் செய்து வைத்தார்கள்.
சோமா, ராமேந்திரன் அத்திம்பேர் ஆதிச்சநல்லூர்லேருந்து ஏதாவது சொல்லிவிட்டாராமா ? அலமேலுவுக்குப் பிரசவ லேகியம் வாங்கி அனுப்பறேன்னாரே ? எச்சுமி கிட்டே விஜாரிச்சியோ ?
கிட்டாவய்யன் மாட்டை வண்டியில் பூட்டினான். இல்லை என்று தலையாட்டினான் சோமனாதன்.
ஒரு நாள் முன்னாலேயே கிளம்பிக் கைமள் வீட்டு விசேஷத்துக்காகக் காய்கறியும் இலைக்கட்டும், கொல்லத்தில் அஸ்கா சக்கரையும் அல்வா கிண்ட கோதுமையும் எல்லாம் வாங்கிச் சித்தப்படுத்தி வைக்க ராமேந்திரனைக் கிட்டாவய்யன் அனுப்பி வைத்திருக்கிறான்.
அண்ணா. எட்டு பெரிய கரண்டி, நாலு குண்டான். பந்த்ரெண்டு வெங்கலப் பானை. ரெண்டு ஈயச் செம்பு. செப்புக் கங்காளம் மூணு. முப்பத்து நாலு குவளை. எண்ணிக்கறேளா.
வேண்டாம் சோமா. நீ பாத்துட்டே இல்லியோ. திரிச்சு வரும்போதும் நீயே ஒருகைப்பாடா ஏத்தி விட்டுட்டா சரியா இருக்கும்.
சோமன் திருப்தியோடு கைத்துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டு குடுமியை இறுக முடிந்து கொண்டான்.
செரி. நீ வண்டியிலே ஏறி ஓட்டிண்டு வா. நான் இதோ பெரியப்பா கடையிலே புகையிலையும் முறுக்கானும் வாங்கிண்டு பின்னாலேயே வரேன். கிருஷ்ணா குருவாயூரப்பா. முல்லைக்கல் பகவதி. பழனி சுப்ரமண்யா. எல்ல்லோரும் எப்போவும் கூடவே வந்து இருந்து ரட்சிக்கணும்.
அண்ணா நான் பனைஓலை விசிறியை எடுத்துண்டு வந்துடறேன்.
சோமன் வீட்டுக்குள் ஓடினான்.
அலமேலுவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பப் போகிறான்.
கர்ப்பிணிப் பெண்ணிடம் சொல்லிக் கொண்டு கிளம்பக்கூடாது என்று ஏதோ சாஸ்திரம் சொல்கிறது. என்ன சாஸ்திரம் என்று கிட்டாவய்யனுக்குத் தெரியாது.
சட்டுனு வா சோமா. நாழியாயிண்டே இருக்கு. என்னமோ ஏதோன்னு ராமேந்திரன் அத்திம்பேர் அங்கே கெடந்து அலமந்து நின்னுண்டு இருப்பார்.
இதோ ஆச்சு அண்ணா.
வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைகளை வேலை ஏவக் கிட்டாவய்யனுக்கு மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
கிட்டாவய்யனோடோ, அவன் தமையனார்கள் குப்புசாமி அய்யன், துரைசாமி அய்யன் கூடவோ புனலூர், பூயப்பள்ளி, சூரநாடு, வடக்கேவிள, குளத்துப்புழ என்று வருடம் முழுக்க தேகண்டம் என்னும் சமையல் உத்தியோகத்துக்காக இன்னும் நாலைந்து அரிவெய்ப்புக் காரர்கள், இனிப்புப் பதார்த்தம் பண்ணுகிறவர்கள், காய் நறுக்கி, சாதம் வட்டித்து, பப்படத்துக்கு எண்ணெய் சுடவைத்து ஒத்தாசை பண்ணுகிறவர்கள் என்று ஏழெட்டுப் பேரோடு ஓடி நடக்கிறதிலும் உக்கிராணத்தை நிர்வகிக்க ஒத்தாசை செய்வதிலும் புதுசு புதுசாகச் ஆக்கவும் பொரிக்கவும் கற்றுக் கொள்வதிலும் அவர்களுக்கும் அனுபவம் ஏறிக் கொண்டிருக்கிறது.
இன்னும் இரண்டு வருடத்தில் ராமேந்திரனும், சோமனும் தனியாகக் கிளம்பி விடலாம் அவரவர்களுக்கு ஒரு கோஷ்டி சேர்த்துக் கொண்டு.
அப்போது எச்சுமியையும், அலமேலுவையும் தனிக்குடித்தனம் வைக்க வேண்டி வரும்.
இல்லாவிட்டாலும் வீட்டில் ஆள்கூட்டம் பெருகிக் கொண்டு போகிறது. மூணு சகோதரர்களின் குடும்பங்களும் கீழ் வீட்டில். கூடவே வயசுக்கு வந்த கடைக்குட்டித் தங்கை பகவதியும்.
மேலே மச்சில் சகோதரிகளின் குடும்பங்கள்.
எல்லாப் புருஷர்களும் ராத்திரி மொட்டைமாடியில் படுத்துக் கொள்ள ஸ்திரிகளும் குழந்தைகளும் வீட்டுக்குள்.
பூனை போல ஓசைப்படாமல் இறங்கி, இருட்டில் அவரவர்களுக்கு நிர்ணயித்திருந்த இடத்தில் பெண்டாட்டியைத் தேடிச் சத்தம் போடாமல் உசுப்பிக் கரப்பானும், எறும்பும் ஓடும் உக்கிராணத்துச் சாணி மெழுகிய தரையிலோ, மிளகாயும் அரிசிச் சாக்கும் வைத்த உள்ளில் உமி மூட்டைக்கு மேலோ கிடத்தி அவசரமாகப் புணர்ந்து சுகித்து வெளியே அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்த்தபடி காதில் பூணூலோடு சுத்தம் செய்து கொள்ள கிணற்றடிக்குப் போவதில் கிட்டாவய்யனுக்கு அலுப்புத் தட்டிக் கொண்டு வருகிறது.
சில பொழுது உசுப்பும்போது குழந்தைகள் எழுந்து உட்கார்ந்து பரக்கப் பரக்க விழித்தபடி ஓமப்பொடியோ இனிப்பு சோமாசியோ கேட்டபடி அழ ஆரம்பிக்கும்.
உக்கிராணத் தரையில் கொட்டாவியோடு வஸ்திரத்தை நெகிழ்த்திக் கொண்ட ஸ்திரியைக் கிடத்தும்போது அதிக உணர்ச்சி காரணமாக உடனே ஸ்கலிதமாகிச் சரி போய்ப் படுத்துக்கோ என்று திரும்ப நடக்க வேண்டி வரும்.
பின் கட்டில் வீட்டு விலக்கால் பிரஷ்டையான பகவதியோ, மற்ற சகோதரிகளோ மன்னிமார்களில் யாராவதோ சாக்கு விரிப்பில் தூங்கச் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கக் கூடும். உக்கிராணத்தில் மூச்சு விட்டாலும் அங்கே சத்தம் கேட்கும். சதா அதையெல்லாம் நினைத்தபடி ஜாக்கிரதையாகப் போகம் அனுபவிக்க வேண்டும்.
அரிசி மூட்டை அடைத்த உள்ளில் எலி ஒரு தடவை கிட்டாவய்யனின் புட்டத்தில் விழுந்து அந்தப்பக்கம் ஓடினது.
கிணற்றடியில் தண்ணீர் சேந்தித் தேக சுத்திக்கு ஒதுங்கியபோது கிட்டாவய்யனின் தமையன் துரைசாமியோ குப்புசாமியோ கோவணத்தை உலர்த்திக் கொண்டு கண்ணில் படுவதுண்டு.
ஒரு தடவை தன் வீட்டுக்காரி சிநேகாம்பாள் பிரஷ்டையாக வெளியறையில் இருப்பது ஞாபகம் இல்லாமல்
கீழே குழந்தைகளோடு குழந்தையாகக் கிடந்த இளைய மன்னி காமாட்சியை எழுப்பிவிட்டான் கிட்டாவய்யன்.
அந்த அரை நிமிட ஆலிங்கனம் இன்னும் மனதில் இருக்கிறது கிட்டாவய்யனுக்கு. மன்னி தாய் ஸ்தானம் என்று கேட்டுக் கேட்டுப் பழகிய மனது அது. எட்டமனூரில் ஒரு தடவை தேகண்டத்துக்குப் போனபோது நிலாக் கால ராத்திரியில் துண்டு விரித்துப் படுத்திருந்தபோது திரும்பத் திரும்ப இது மனதில் வந்து இம்சைப் படுத்த, எழுந்து உட்கார்ந்து நூத்தெட்டு காயத்ரி சொன்னான் கிட்டாவய்யன்.
துரைசாமிக்கு இன்னும் புத்திரபாக்கியம் இல்லை. காமாட்சிக்கு சூல் கொள்ளாமல் உதிர்ந்து போகிறது. ஒரு விசை நெல்லிமுள்ளிக்கோ குல தெய்வ ஆராதனைக்காக தூரதேசமான ராமேஸ்வரத்துக்கோ போய்வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று ஆலப்பாட்டில் இருந்து போனதடவை கிட்டாவய்யனின் மாமனார் வந்தபோது சோழி பரத்தி ஜோசியம் பார்த்துச் சொன்னார்.
இன்னும் இரண்டு வருடத்தில் ராமேந்திரனும், சோமனும் தனியாகக் கிளம்பி விடலாம் அவரவர்களுக்கு ஒரு கோஷ்டி சேர்த்துக் கொண்டு.
அப்போது எச்சுமியையும், அலமேலுவையும் தனிக்குடித்தனம் வைக்க வேண்டி வரும்.
இல்லாவிட்டாலும் வீட்டில் ஆள்கூட்டம் பெருகிக் கொண்டு போகிறது. மூணு சகோதரர்களின் குடும்பங்களும் கீழ் வீட்டில். கூடவே வயசுக்கு வந்த கடைக்குட்டித் தங்கை பகவதியும்.
மேலே மச்சில் சகோதரிகளின் குடும்பங்கள்.
எல்லாப் புருஷர்களும் ராத்திரி மொட்டைமாடியில் படுத்துக் கொள்ள ஸ்திரிகளும் குழந்தைகளும் வீட்டுக்குள்.
பூனை போல ஓசைப்படாமல் இறங்கி, இருட்டில் அவரவர்களுக்கு நிர்ணயித்திருந்த இடத்தில் பெண்டாட்டியைத் தேடிச் சத்தம் போடாமல் உசுப்பிக் கரப்பானும், எறும்பும் ஓடும் உக்கிராணத்துச் சாணி மெழுகிய தரையிலோ, மிளகாயும் அரிசிச் சாக்கும் வைத்த உள்ளில் உமி மூட்டைக்கு மேலோ கிடத்தி அவசரமாகப் புணர்ந்து சுகித்து வெளியே அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்த்தபடி காதில் பூணூலோடு சுத்தம் செய்து கொள்ள கிணற்றடிக்குப் போவதில் கிட்டாவய்யனுக்கு அலுப்புத் தட்டிக் கொண்டு வருகிறது.
சில பொழுது உசுப்பும்போது குழந்தைகள் எழுந்து உட்கார்ந்து பரக்கப் பரக்க விழித்தபடி ஓமப்பொடியோ இனிப்பு சோமாசியோ கேட்டபடி அழ ஆரம்பிக்கும்.
உக்கிராணத் தரையில் கொட்டாவியோடு வஸ்திரத்தை நெகிழ்த்திக் கொண்ட ஸ்திரியைக் கிடத்தும்போது அதிக உணர்ச்சி காரணமாக உடனே ஸ்கலிதமாகிச் சரி போய்ப் படுத்துக்கோ என்று திரும்ப நடக்க வேண்டி வரும்.
பின் கட்டில் வீட்டு விலக்கால் பிரஷ்டையான பகவதியோ, மற்ற சகோதரிகளோ மன்னிமார்களில் யாராவதோ சாக்கு விரிப்பில் தூங்கச் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கக் கூடும். உக்கிராணத்தில் மூச்சு விட்டாலும் அங்கே சத்தம் கேட்கும். சதா அதையெல்லாம் நினைத்தபடி ஜாக்கிரதையாகப் போகம் அனுபவிக்க வேண்டும்.
அரிசி மூட்டை அடைத்த உள்ளில் எலி ஒரு தடவை கிட்டாவய்யனின் புட்டத்தில் விழுந்து அந்தப்பக்கம் ஓடினது.
கிணற்றடியில் தண்ணீர் சேந்தித் தேக சுத்திக்கு ஒதுங்கியபோது கிட்டாவய்யனின் தமையன் துரைசாமியோ குப்புசாமியோ கோவணத்தை உலர்த்திக் கொண்டு கண்ணில் படுவதுண்டு.
ஒரு தடவை தன் வீட்டுக்காரி சிநேகாம்பாள் பிரஷ்டையாக வெளியறையில் இருப்பது ஞாபகம் இல்லாமல்
கீழே குழந்தைகளோடு குழந்தையாகக் கிடந்த இளைய மன்னி காமாட்சியை எழுப்பிவிட்டான் கிட்டாவய்யன்.
அந்த அரை நிமிட ஆலிங்கனம் இன்னும் மனதில் இருக்கிறது கிட்டாவய்யனுக்கு. மன்னி தாய் ஸ்தானம் என்று கேட்டுக் கேட்டுப் பழகிய மனது அது. எட்டமனூரில் ஒரு தடவை தேகண்டத்துக்குப் போனபோது நிலாக் கால ராத்திரியில் துண்டு விரித்துப் படுத்திருந்தபோது திரும்பத் திரும்ப இது மனதில் வந்து இம்சைப் படுத்த, எழுந்து உட்கார்ந்து நூத்தெட்டு காயத்ரி சொன்னான் கிட்டாவய்யன்.
துரைசாமிக்கு இன்னும் புத்திரபாக்கியம் இல்லை. காமாட்சிக்கு சூல் கொள்ளாமல் உதிர்ந்து போகிறது. ஒரு விசை நெல்லிமுள்ளிக்கோ குல தெய்வ ஆராதனைக்காக தூரதேசமான ராமேஸ்வரத்துக்கோ போய்வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று ஆலப்பாட்டில் இருந்து போனதடவை கிட்டாவய்யனின் மாமனார் வந்தபோது சோழி பரத்தி ஜோசியம் பார்த்துச் சொன்னார்.
அப்போது அவருக்குத் துரைசாமி அய்யன் நாலணா தட்சணையும் தாம்பூலமும் கொடுத்தான். காசு எல்லாம் எதுக்கு என்று அவர் தாம்பூலத்தை மட்டும் மடிசஞ்சியில் முடிந்து கொண்டார்.
வீட்டுக்கு மூத்தவனான குப்புசாமி அய்யனுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்து பெரியம்மையில் போய்ச் சேர்ந்து இந்த விஷுவுக்கு நாலு வருஷம் ஆகப் போகிறது. வீட்டில் வளைய வருகிற குழந்தைகள் மூணுமே கிட்டாவய்யனுடையவை. மூணுமே பெண்கள்.
குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுகள் எழுவதற்குள் கிளம்பிவிட வேண்டும். இல்லாவிட்டால் கடைக்குட்டி அழும். மூத்த இரண்டும் சித்தாடையும் நார்ப்பின்னலுமாக எங்கே போறே என்று கேட்டு நச்சரிக்கும்.
கிட்டாவய்யனுக்குக் குழந்தைகள் மேல் வாத்சல்யம் தான். மூக்கு ஒழுகிக் கொண்டிருக்கும் சின்னவளைத் தூக்கிக் கொண்டு உத்தரியத்தில் மூக்கைத் துடைத்தபடி தோப்பும் துரவுமாகச் சுற்றி வருவான் அவன் ஊரில் இருக்கும்போது.
அது மாதத்தில் ஒருதடவை நடந்தாலே அதிகம். ஆனாலும் கரண்டி பிடிக்க வெளியூர் போய்த் திரும்பும்ப் போது குழந்தைகளுக்கு இனிப்பு மிட்டாய் வாங்கி வருவதற்குத் தவறுவதில்லை அவன்.
கண்டவனும் பிருஷ்டம் அலம்பிக் கொண்ட அசுத்தக் கையால் உண்டாக்கிக் கொடுக்கிறதை எல்லாம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொண்டு வந்து நீட்டினால் அதுகள் ஒட்டக் கழித்து விட்டு வாந்தியும் பேதியுமாக வீட்டில் ஒடுங்கப் போகிறதுகள்.
கிட்டாவய்யனின் வீட்டுக்காரி சிநேகாம்பாள் எத்தனை உருட்டி விழித்துத் தடுத்தாலும் குழந்தைகள் அதையெல்லாம் கையில் கொடுத்த உடனே பொதியழித்துச் சாப்பிட்டு விடும். இதுவரை அதுகள் ஆரோக்கியத்துக்கு எந்த குறைச்சலும் வராமல்தான் சுற்றி வருகின்றன.
சீனி மிட்டாய் எழவு வேண்டாம். அவள் கோவிக்கிறாளே என்று ஒருதடவை குழந்தைகள் விளையாட மரப்பாச்சி வாங்கி வந்தான் கிட்டாவய்யன்.
மாசம் ஒருதடவை தொட்டுத் தடவினால் இதுகளும் சுரணை மரத்துப் போன வெறும் பாச்சியாகி விடப்போகிறது பார்த்துக் கொண்டேயிருங்கள்.
சிநேகாம்பாள் அக்கம்பக்கம் யாரும் இல்லையா என்று பார்த்தபடி தன் மார்க்கூட்டைக் காட்டிச் சொல்வது இது.
இந்தத் தடவை ஆதிச்சநல்லூரிலோ கொல்லத்திலோ தட்டானிடம் சொல்லி வைத்து ஒரு ஜதை தங்க வளையலோடு திரும்பினால் அவள் சந்தோஷப்படலாம்.
ஸ்வர்ணமும் சுகம் கொடுக்கக் கூடியதுதான். சம்போகத்தில் வருவது போல் ரெண்டு பேருக்கு மாத்திரம் இல்லாமல் வேறு மாதிரி.
கிளம்பலாமா அண்ணா ?
சோமன் உள்ளே இருந்து அவசரமாகப் பனைஓலை விசிறியோடு ஓடி வந்தான். அலமேலு அவன் உதட்டைக் கடித்து அனுப்பியிருக்கிறாள். நாக்கால் மேல் சுண்டை நீவியபடி வருகிறான்.
கிட்டாவய்யனும் உள்ளே போய் இன்னொரு பனைஓலை விசிறியோடு திரும்பலாமா என்று யோசித்தான். சிநேகாம்பாளுக்குக் கொஞ்சம் முன்னால் நீண்ட பல்வரிசை.
குழந்தைகளும் நித்திரை கலைந்து எழுந்திருக்கும்.
எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்.
விசாலாட்சி மன்னி குளித்துத் தலையில் நுனிமுடிச்சோடு நிர்மால்ய தரிசனத்துக்காக திருவம்பலத்துக்குக் கிளம்பிக் குறுக்கே புகுந்து போனாள். அவள் உதட்டில் சின்னதாக ஒரு சிரிப்பு. போகிற காரியம் ஜெயிக்கட்டும் என்று அந்தச் சிரிப்பு சொன்னது.
நல்ல சகுனம் அண்ணா.
சோமன் காளைவண்டியைக் கிளப்பினான்.
வீட்டுக்கு மூத்தவனான குப்புசாமி அய்யனுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்து பெரியம்மையில் போய்ச் சேர்ந்து இந்த விஷுவுக்கு நாலு வருஷம் ஆகப் போகிறது. வீட்டில் வளைய வருகிற குழந்தைகள் மூணுமே கிட்டாவய்யனுடையவை. மூணுமே பெண்கள்.
குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுகள் எழுவதற்குள் கிளம்பிவிட வேண்டும். இல்லாவிட்டால் கடைக்குட்டி அழும். மூத்த இரண்டும் சித்தாடையும் நார்ப்பின்னலுமாக எங்கே போறே என்று கேட்டு நச்சரிக்கும்.
கிட்டாவய்யனுக்குக் குழந்தைகள் மேல் வாத்சல்யம் தான். மூக்கு ஒழுகிக் கொண்டிருக்கும் சின்னவளைத் தூக்கிக் கொண்டு உத்தரியத்தில் மூக்கைத் துடைத்தபடி தோப்பும் துரவுமாகச் சுற்றி வருவான் அவன் ஊரில் இருக்கும்போது.
அது மாதத்தில் ஒருதடவை நடந்தாலே அதிகம். ஆனாலும் கரண்டி பிடிக்க வெளியூர் போய்த் திரும்பும்ப் போது குழந்தைகளுக்கு இனிப்பு மிட்டாய் வாங்கி வருவதற்குத் தவறுவதில்லை அவன்.
கண்டவனும் பிருஷ்டம் அலம்பிக் கொண்ட அசுத்தக் கையால் உண்டாக்கிக் கொடுக்கிறதை எல்லாம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொண்டு வந்து நீட்டினால் அதுகள் ஒட்டக் கழித்து விட்டு வாந்தியும் பேதியுமாக வீட்டில் ஒடுங்கப் போகிறதுகள்.
கிட்டாவய்யனின் வீட்டுக்காரி சிநேகாம்பாள் எத்தனை உருட்டி விழித்துத் தடுத்தாலும் குழந்தைகள் அதையெல்லாம் கையில் கொடுத்த உடனே பொதியழித்துச் சாப்பிட்டு விடும். இதுவரை அதுகள் ஆரோக்கியத்துக்கு எந்த குறைச்சலும் வராமல்தான் சுற்றி வருகின்றன.
சீனி மிட்டாய் எழவு வேண்டாம். அவள் கோவிக்கிறாளே என்று ஒருதடவை குழந்தைகள் விளையாட மரப்பாச்சி வாங்கி வந்தான் கிட்டாவய்யன்.
மாசம் ஒருதடவை தொட்டுத் தடவினால் இதுகளும் சுரணை மரத்துப் போன வெறும் பாச்சியாகி விடப்போகிறது பார்த்துக் கொண்டேயிருங்கள்.
சிநேகாம்பாள் அக்கம்பக்கம் யாரும் இல்லையா என்று பார்த்தபடி தன் மார்க்கூட்டைக் காட்டிச் சொல்வது இது.
இந்தத் தடவை ஆதிச்சநல்லூரிலோ கொல்லத்திலோ தட்டானிடம் சொல்லி வைத்து ஒரு ஜதை தங்க வளையலோடு திரும்பினால் அவள் சந்தோஷப்படலாம்.
ஸ்வர்ணமும் சுகம் கொடுக்கக் கூடியதுதான். சம்போகத்தில் வருவது போல் ரெண்டு பேருக்கு மாத்திரம் இல்லாமல் வேறு மாதிரி.
கிளம்பலாமா அண்ணா ?
சோமன் உள்ளே இருந்து அவசரமாகப் பனைஓலை விசிறியோடு ஓடி வந்தான். அலமேலு அவன் உதட்டைக் கடித்து அனுப்பியிருக்கிறாள். நாக்கால் மேல் சுண்டை நீவியபடி வருகிறான்.
கிட்டாவய்யனும் உள்ளே போய் இன்னொரு பனைஓலை விசிறியோடு திரும்பலாமா என்று யோசித்தான். சிநேகாம்பாளுக்குக் கொஞ்சம் முன்னால் நீண்ட பல்வரிசை.
குழந்தைகளும் நித்திரை கலைந்து எழுந்திருக்கும்.
எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்.
விசாலாட்சி மன்னி குளித்துத் தலையில் நுனிமுடிச்சோடு நிர்மால்ய தரிசனத்துக்காக திருவம்பலத்துக்குக் கிளம்பிக் குறுக்கே புகுந்து போனாள். அவள் உதட்டில் சின்னதாக ஒரு சிரிப்பு. போகிற காரியம் ஜெயிக்கட்டும் என்று அந்தச் சிரிப்பு சொன்னது.
நல்ல சகுனம் அண்ணா.
சோமன் காளைவண்டியைக் கிளப்பினான்.
- Sponsored content
Page 2 of 17 • 1, 2, 3 ... 9 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 17
|
|