புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_c10 
21 Posts - 64%
heezulia
அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_c10 
11 Posts - 33%
Geethmuru
அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_c10 
148 Posts - 55%
heezulia
அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_c10 
2 Posts - 1%
prajai
அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 5 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசூர் வம்சம் (நாவல்)


   
   

Page 5 of 17 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 17  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:00 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
அரசூர் வம்சம் - இரா முருகன்


பாயிரம்

அரசூர் பற்றி எழுது.

முன்னோர்கள் சொன்னார்கள்.

அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை.

அது புகையிலை வாடை. வீபூதி வாடை. மஞ்சள் வாடை. தூரத்துணி வாடை. பெரிய கங்காளங்களில் சோறு பொங்கும் வாடை. எள்ளுருண்டை வாடை. மாதாகோவில் அப்பத்தின் வாடை.

அவர்கள் ஓரமாக உட்கார்ந்தபடி என்னைப் பார்த்தார்கள்.

அரசூரின் வரலாற்றை எழுது. எங்களைப் பற்றி எழுது.

குடுமி வைத்தவர்கள். நார்மடிச் சேலை போர்த்திய மொட்டைத் தலையோடு பெண்கள். முட்டுக்குக் கீழே தாழ்ந்த அரைவேட்டியோடு மலங்க மலங்க விழித்துப் பார்க்கும் சிறுவர்கள். வியர்வையில் நனைந்த கல்யாணச் சேலையும் நெற்றி முழுக்க மஞ்சள் குங்குமமும், கையில் வரட்டி தட்ட எடுத்த சாணமும், முகத்தை மறைக்கும் மூக்குத்தியுமாக மிரட்சியோடு சிறுமிகள். கழுத்தில் சிலுவை மாட்டிய சிலரும் உண்டு அங்கே.

எல்லோரும் சொன்னார்கள். அன்போடு இழையும் குரல்கள். கட்டளையிடும் குரல்கள். யாசிக்கும் குரல்கள்.

வாசலில் செருப்புச் சத்தம்.

திரும்பிப் பார்த்தேன். பனியன் சகோதரர்கள்.

முன்னோர்கள் இடம் ஒதுக்கிக் கொடுக்க, பனியன் சகோதரர்கள் தரையில் உட்கார்ந்தார்கள். ஐந்து நிமிடம் முன்னால் சிகரெட் குடித்த வாடை அவர்களிடம்.

எழுது.

பனியன் சகோதரர்களும் சொன்னார்கள்.

என்ன எழுதட்டும் ?

இவர்களைப் பற்றி எழுது. எங்களைப் பற்றி எழுது. அரசூர் பற்றி எழுது.

பனியன் சகோதரர்கள் திரும்பவும் சொன்னார்கள்.

எழுதலாம்தான். ஆனால் அரசூருக்கு என்ன வரலாறு இருக்கிறது ? பனியன் சகோதரர்கள் எப்படி சகோதரர்கள் இல்லையோ அரசூருக்கும் அதேபோல் சரித்திரம் இல்லை.

ஆனாலும் பனியன் சகோதரர்கள் இருக்கிறார்கள். நூறு வருடத்துக்கு முந்திய மோட்டார் காரில் பயணம் போய்க்கொண்டு, அரசூரின் சின்னத் தெருக்களில் புகுந்து புறப்பட்டுக் கொண்டு, எதிர்ப்படுகிறவர்களில் யார் ஏமாறுகிறான் என்று பார்த்துக்கொண்டு.

முன்னோர்கள் இருக்கிறார்கள். நான் எழுத ஆரம்பித்ததுமே சூழ வந்து கவிந்து கொண்டு.

அரசூரும் இருக்கிறது.

ஆத்தா சாமி கோவில். சுற்றி நாலு தெரு. நேர் எதிர்த்தாற்போல் அய்யா சாமி கோவில். அதற்குச் சுற்றி நாலு வெளிவீதி. குறுக்காக வளைந்து ஓடும் கடைத்தெரு. ராஜா சத்திரம். பிரசவ ஆஸ்பத்திரி. நல்ல தண்ணி ஊருணி. ஃபோட்டோ ஸ்டூடியோ. வால்வ் ரேடியோ ரிப்பேர்க்கடை. தெப்பக்குளம். வேலிகாத்தான் செடிகள் மறைக்கும் பள்ளிக்கூடம். முடவைத்திய சாலை. சத்தியாக்கிரஹ மேடை. கமலாம்பா காப்பி ஓட்டல். முன்சீப் கோர்ட்.

இதெல்லாம் அரசூர்தான். இது மட்டும் இல்லை. அரண்மனை கூட உண்டு. ரொம்பச் சின்னதாக ஒரு அரண்மனை. ராஜா. ஒரு ராணி. மட்டக்குதிரை. கேடயம். வாள். துடைப்பம். கரப்பான் பூச்சி. வரிக்கணக்குப் புத்தகம். காரியஸ்தன். திவசம் கொடுக்க வாழைக்காய். சமையல்காரன். மீன் செதிள் தேய்க்கப் பாறாங்கல். சீயக்காய்ப் பொடி. சேடிப்பெண். பல்லக்கு.

எல்லாமும் எல்லாரும் இருக்க இடம் உண்டு.

நாங்கள் அரண்மனைக்குப் போனோம்.

பனியன் சகோதரர்கள் தொடங்கி வைத்தார்கள்.

அவர்கள் அரண்மனைக்குள் போயிருக்கிறார்கள்.

கோவிலில் பூத்திருவிழா வருது . வசூல் பண்ண வந்திருக்கோம்.

வெள்ளை வேட்டி. ஒட்ட வெட்டின கிராப்பு. ஒருத்தன் நெடுநெடுவென்று நல்ல உயரம். இன்னொருத்தன் குட்டையாக, குண்டாக.

மேலே சட்டை கிடையாது இரண்டு பேருக்கும். பதிலாக பனியன் மட்டும் போட்டிருக்கிறார்கள். எப்போதும் அது தான் வேஷம்.

இந்த வேஷத்தோடு அரண்மனைக்குள் பூத்திருவிழாவுக்கு வசூல் பண்ண நுழைந்ததாகச் சொன்னதும் நான் கேட்டேன் - அங்கே ஆள் அரவமில்லாமல் போய் நூறு வருஷத்துக்கும் மேல் ஆகி இருக்குமே. யாரிடம் பணம் பெயருமா என்று பார்க்கப் போனீங்க ?

இல்லாமே என்ன ? ராஜா இருந்தார். கூடவே ராணி.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:42 pm

ராம சாஸ்திரி தெலுங்கு பிரதேசத்தில் இருந்து குடி ஏறினவன். வீணையும் வாய்ப்பாட்டும் சொல்லிக் கொடுத்து ஏகத்துக்கு சம்பாதிக்கிறான். சுற்று வட்டம் இருபது கல் வட்டாரத்தில் கானடா, காப்பி, ரீதிகெளளை என்று பேர்பண்ணிக் கொண்டு பெண்டுகள் மூக்கால் பாடுவதும், பெருச்சாளி பிராண்டுகிறதுபோல் சதா வீணையை மீட்டுவதுமாக அவன் இங்கே வந்த நாலே வருஷத்தில் மாறிப்போனது. அவனும் குடக்கூலிக்குப் புகுந்த வீட்டை சொந்தமாகவே வாங்கி விட்டான்.

நம்பூத்திரி அந்தர்ஜனப் பெண்களுக்கு அவரவர்களின் மனையிலும், மற்றவர்களுக்குத் தன் கிரஹத்தில் வரச் சொல்லியும் பாட்டுச் சொல்லிக் கொடுக்கும் அந்தத் தெலுங்கனின் பெண்டாட்டியும் விதூஷியானதால் பணம் கொட்டு கொட்டென்று கொட்டுகிறது. பகவதி கூட இரண்டு மாதமாக ராம சாஸ்திரி வீட்டில் தான் கீர்த்தனம் நெட்டுரு பண்ணிப் பாடக் கற்றுக் கொண்டு வருகிறாள்.

சரிதான். ஆத்துலே இன்னிக்கு உலை வைக்கலியா ?

பசி பொறுக்க முடியாமல் கேட்டே விட்டான் குப்புசாமி அய்யன்.

கிட்டாவய்யனின் குழந்தைகள் பந்தி போஜன வீட்டில் இலையில் போட்டதை எடுத்து வைத்து சிற்றாடையில் சுருக்குப் பைக்குள் முடிந்து வைத்துக் கொண்டு வந்த வடையையும் சுவியனையும் சாப்பிட்டபடி வீட்டைச் சுற்றி ஏக களேபரமாக ஓடத் துவங்கின. ஆகச் சின்னது ஊ ஊ என்று இடுப்பில் வெள்ளி ஆலிலை அசையத் தரையில் உருள ஆரம்பித்தது.

இதோ நொடியிலே சாதம் வடிச்சு ஒரு ரசம் பண்ணிடறேன் அண்ணா. மன்னியைக் கஷ்டப் படுத்தாதீங்கோ. எடி லண்டி மிண்டைகளா. வடையைக் கடிச்சு எச்சல் பண்ணாதீங்கோ. கையால விண்டு சாப்பிடுங்கோ. காமாட்சி, இந்தப் பிசாசுகளைக் கொஞ்சம் பார்த்துக்கோடியம்மா. அந்தச் சின்னக் கோட்டானையும் தான்.

கிட்டாவய்யன் பெண்டாட்டி அவசர அவசரமாகச் சொன்னபடி சமையல்கட்டுக்குள் புகுந்தாள். துரைசாமியய்யன் பெண்டாட்டி குழந்தைகளை சின்னவளை இடுப்பில் இடுக்கியபடி மற்ற ரெண்டையும் ரேழியில் கூட்டி வைத்துக் கொண்டு கதை சொல்லப் போனாள்.

அண்ணா நான் கொல்லன் பட்டறைக்குப் போய் ஈயச் சொம்புக்கு எல்லாம் புதுசாப் பூசிண்டு, இருப்பச் சட்டிப் பிடியையும் பத்த வச்சுண்டு வந்துடறேன். லொடலொடன்னு ஆடிண்டே இருக்கு. திளைக்க வச்ச எண்ணெயோட விழுந்து வச்சா வேறே வினையே வேணாம்.

நினைவு வந்ததுபோல் துரைசாமி அய்யனும் கிளம்பிப் போனான்.

லட்சுமியும் பகவதியும் சிநேகாம்பா மன்னிக்கு ஒத்தாசையாக சமையல்கட்டுக்குள் நுழைந்தார்கள்.

குப்புசாமி அய்யன் விசாலாட்சியோடு பேசிக் கொண்டிருக்கட்டும் என்ற வாத்சல்யம் எல்லோரிடமும் தெரிந்தது.

நேற்று மதியம் சாப்பிட்டு விட்டு கொல்லைப் பக்கம் விசாலாட்சியோடு வார்த்தை சொல்லிக் கொண்டு நின்றபோது, வயசன் பற்றி அவள்தான் முழு விவரமும் சொன்னாள்.

பாவம், சிநேகாம்பா தோப்பனாருக்கு என்னமோ ஆயிடுத்து. ஒரு வாரம் பத்து நாளாக் கால் தரையிலே பாவ மாட்டேங்கறது. நாள் முச்சூடும் தூங்கியாறது. எழுந்தா தரைக்கு அரை அடி ஒரு அடி உசரத்துலே மிதக்க ஆரம்பிச்சுடறார். பட்சி பறக்கற மாதிரி இல்லே இது. கரப்பான் பூச்சியும், கோழியும் மாதிரி ஒரு மிதப்பு.

துர்தேவதை உபாதையோ ?

குப்புசாமி அய்யன் கேட்டான். எந்த துர்த்தேவதையாவது இந்த வீட்டில் நுழைந்து விட்டிருக்கும் என்ற நினைப்பே சங்கடமாக இருந்தது. அதுகள் வீட்டில் வளைய வரும் பட்சத்தில் ராத்திரி விசாலாட்சியோடு தனியாக இருக்க முடியாது.

தெரியலை. உடம்பு பெலகீனம் என்கிறாள் சிநேகாம்பா. பலகீனப் பட்டவா எல்லாம் பறக்க ஆரம்பிச்சுடறாளா என்ன ? ஏதோ கர்ம வினை பாவம்.

எல்லோரும் முதலில் பயந்திருக்கிறார்கள். ஆண்பிள்ளை யாரும் இல்லாத மனையில் வைத்தியனை ஏற்றலாமா என்று யோசித்திருக்கிறார்கள். துரைசாமி அய்யன் வந்தபோது எல்லோருக்கும் பயம் விலகி இது பழகிப்போய் விட்டிருந்தது.

கிட்டன் வந்துடட்டும். அவனோட மாமனார். அவனண்டையும் ஒரு வார்த்தை கேட்டுண்டு முடிவு பண்ணலாம். அவர் பாட்டுக்கு தேமேன்னு மாடியிலே தானே தூங்கிண்டு இருக்கார். இருக்கட்டுமே. பறந்து வெளியிலே எங்கேயும் போகலியோல்லியோ. மாடிக்கும் தோட்டத்துக்கும் தானே இறங்கி ஏறியாறது.

துரைசாமி அய்யன் சொன்னபோது வயசன் விவகாரம் இன்னும் சாதாரணமாகப் போனது.

இருந்தாலும் பகல் நேரத்தில் மாடியிலிருந்து மிதந்தபடிக்கு இறங்கி வந்த தாத்தனைப் பேத்திப் பெண்டுகள் உஷ் உஷ் என்று கையைக் கொட்டித் துணி உலர்த்தும் கொம்பால் முதுகில் தட்டி மாடிக்குத் திருப்பி இருக்கிறார்கள் என்று அறியக் குப்புசாமி அய்யனுக்கு மனக் கஷ்டமாக இருந்தது.

சிநேகாம்பா என்ன பண்ணினா ?

அவ தான் நீர்க்கக் கரைச்சு எடுத்துண்டு போய் அப்பாவுக்கு மதியமும் ராத்திரியும் ஊட்டி விட்டுண்டு இருக்கா. பெத்தவன் ஆச்சே.

அந்தப் பேச்சு அப்போது அத்தோடு முடிந்து போனது. ராத்திரி வயசனை நினைக்க எல்லாம் நேரம் இல்லை இரண்டு பேருக்கும்.

அது நேற்று நடந்தது.

குப்புசாமி அய்யன் இடுப்பு வஸ்திரத்தை இறுகக் கட்டிக் கொண்டே எழுந்து நின்றான். விசாலாட்சியின் தலைமுடியைத் திரும்ப ஆசையோடு முகர்ந்தான்.

தலையை விடுங்கோ. பாஷாண்டி மாதிரி குளிக்காம என்னை ஒண்ணும் தொட வேண்டாம். கேட்டேளா ? நான் அம்பலத்துக்குப் போகணும்.

விசாலாட்சி தலைமுடி சிக்காகாமல் குப்புசாமி அய்யன் கையில் இருந்து விடுவித்துக் கொண்டாள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:42 pm

யட்சி மாதிரி இருக்கே.

திரும்பவும் சொன்னான் குப்புசாமி அய்யன்.

கேட்டேனே. அப்போ நானும் சிநேகாம்பா தோப்பனார் போல் பறக்கட்டுமா ? அதே படிக்கு நாள் முழுக்கப் படுத்துண்டு திறந்து போட்டு உறங்கிண்டு. உங்களுக்கும் செளகரியம்.

வெளியே ஓடுவது போல் போக்குக் காட்டியபடி சொன்னாள்.

எங்கே ஓடினாலும் இங்கே தாண்டி வரப்போறே. சாயரட்சைக்கு அப்புறம் வச்சுக்கறேன். ஆமா காலையிலேருந்து ஒரே பகளமா இருக்கே ? என்ன ஆச்சு ?

நேற்று மொட்டை மாடியில் படுத்துக் கொள்ளாமல் உக்கிராணத்துக்குப் பக்கத்து உள்ளிலேயே அசந்து தூங்கி விட்டான் குப்புசாமி அய்யன்.

வெளியே கிளம்பிப் போய்க் கூடத்தில் படுத்து விடிகாலை எழுந்து வந்து முதல் வேலையாக விசாலாட்சி எழுப்பினாலும் அவன் எழுந்திருக்கவில்லை.

அய்யோ மானம் போறது. இங்கே இன்னும் தூங்கிண்டு இருந்தா எல்லோருக்கும் எல்லாம் தெரிஞ்சிடும். எந்திருங்கோ.

தெரியட்டும் போ. அவாவா பண்றதுதானே. கதவைச் சாத்திட்டுப் போடி.

அவன் திரும்பக் குப்புறப் படுத்துக் கொண்டு நித்திரை போனபோது சமையல் அறையில் காமாட்சிக்கும் சிநேகாம்பாளுக்கும் சண்டை வெடித்தது விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது.

அதன் ரிஷிமூலம் சொல்ல வந்திருக்கிறாள் விசாலாட்சி.

எல்லாம் அந்த வயசன் விவகாரம்தான்.

விசாலாட்சி குப்புசாமி அய்யன் காதோடு சொன்னாள்.

காமாட்சி விசர்ஜனத்துக்காகக் கையில் செம்போடு தோட்டத்தில் கழிப்பறைக்குப் போயிருக்கிறாள் இன்றைக்கு விடிகாலையில்.

போன இடவ மாசத்தில் வானமே பொத்துக் கொண்டு கொட்டிய மழையில் மேலே கூரை அங்கங்கே ஓட்டை விழுந்து விரிசல் கண்டிருந்தது. மச்சு மாடியே இல்லாமல் அக்கம் பக்கம் சின்னச் சின்னதாக வீடுகள் இருந்ததால் கூரையைத் திரும்ப நல்லபடிக்கு வேய இன்னும் யாரும் முன்கை எடுக்கவில்லை. கரண்டியைத் தூக்கிக் கொண்டு அலையவே நேரம் சரியாக இருக்கிறது ஆண்பிள்ளைகள் எல்லோருக்கும்.

காமாட்சி அந்தக் கூரைக்குக் கீழே குந்தியிருந்திருக்கிறாள். வயசன் கீழே வந்து விட்டுத் திரும்ப மேலே எழும்பிப் போனபோது அவளைப் பார்த்ததாகப் பராதி.

பாவம் அவர் கண்தான் சதா மூடி இருக்கே. என்னத்தைப் பார்த்திருக்கப் போறார். அதுவும் விசர்ஜனம் செய்யும் யாரையும், எத்தனை அப்சரஸாக இருந்தாலும் பார்ப்பது அருவருப்பான காரியம் இல்லையா ? நேத்திரம் நல்லபடிக்கு இருந்தாலும் இதையெல்லாம் யாராவது மான்யன் பார்ப்பானோ ?

குப்புசாமி அய்யன் கேட்டான்.

அதெல்லாம் ஒண்ணும் இல்லை. காமாட்சிக்கு வயசனை எப்படியாவது உடனெ ஆதிச்சநல்லூருக்குத் துரத்திவிட வேண்டும் என்று பிடிவாதம். சிநேகாம்பாளானால் உங்க தம்பி வரட்டும் அவர் தான் கொண்டு போய் விடவேண்டும் வேறே ஆள்கார் யாரும் இல்லே என்கிறாள்.

துரைசாமி போகலாமே ?

அவருக்குத் தான் பிருஷ்டம் வணங்காதே இந்த மாதிரிக் காரியத்துக்கு எல்லாம். பத்து நாள் வேலை பார்த்துட்டு வந்தால் பத்து நாள் தூக்கம். காமாட்சியோடவோ தனியாவோ.

கொடுத்து வச்சவன்.

குப்புசாமி அய்யன் விசாலாட்சியை விழுங்குவது போல் பார்த்தான். மனதில் நேரம் காலம் இல்லாமல் மிருக குணம் முட்டி மோதிக்கொண்டு வந்தது.

ரொம்பவே கொடுத்து வச்சவர் தான் உங்க தம்பி. ஆத்துக்காரியோட ரமிச்சு இருக்கும்போது உள்ளே நுழைஞ்சு முதுகிலே மோதி இடிச்சுண்டு யாராவது போறது எவ்வளவு சந்தோஷமான விஷயம் ? அதுவும் தரைக்கு அரை அடி மேலே கண்ணை மூடிண்டு மிதந்தபடிக்கு.

அவள் போன பிறகும் அவளுடைய சிரிப்பு குப்புசாமி அய்யன் காதில் கேட்டபடி இருந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:44 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் பதினைந்து


ஒரு பெரிய பாடை.

மூங்கிலை வளைத்துக் கட்டி முத்துப் பல்லக்கு போல் செய்திருக்கிறது. உள்ளே சாட்டின் விரிப்பு. தலைக்கு வைத்துக் கொள்ள சாட்டின் தலையணை. பாடையைச் சுற்றிலும் மல்லிகையும், துலுக்க ஜவ்வந்தியும், ரோஜாப் பூவுமாக சரம் சரமாகக் கட்டி வைத்திருக்கிறது. போதாதற்கு அங்கங்கே வெட்டிவேர் வேறே மணமாகத் தொங்குகிறது. பாடைக்குள் ஏறப் படிகள் வளைந்து பளபளவென்று செம்பில் வடித்து வைத்திருக்கின்றன. நான்கு பெரிய மரச் சக்கரங்களின் பலத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கிற அதன் முன்னால் குதிரை பூட்ட விசாலமான அமைப்பு. உட்கார்ந்து ஓட்ட வசதியாக ஒரு ஆசனம். வியர்க்கூறு ஏறிய முதுகையும் வேட்டி தழைந்த இடுப்பில் மேலேறி வந்த அழுக்கு அரைஞாண்கொடியையும் காட்டி உள்ளே இருந்து சஞ்சரிக்கப் பட்டவர்களை அன்னத் திரேஷமாக அருவருப்படையச் செய்யாமல் ஓட்டுகிறவனுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு சல்லாத்துணிப் படுதா.

சக்கரம் வைத்த பாடை கல்லும் முள்ளுமாக ஒரு கட்டாந்தரையில் நிற்கிறது. குதிரைகள் போன இடம் தெரியவில்லை. ஓட்டுகிறவனும் தான் காணோம். கொஞ்சம் தள்ளி நாலைந்து பேர் வியர்க்க விறுவிறுக்கக் குழி தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆச்சு. அந்தத் தேவிடியாப் புள்ளயைக் கொண்டாந்து கிடத்த வேண்டியதுதான்.

கையில் பிடித்த மண்வெட்டியில் எச்சில் துப்பித் தூரத்தில் எறிந்து விட்டு, குழிக்குள் ஒண்ணுக்குப் போய்க் கொண்டே ஒருத்தன் சொல்கிறான். அது பனியன் சகோதர்களில் குட்டையன்.

ராஜா பாடைக்குள்ளே படுத்திருக்கிறார்.

நெட்டை பனியன் கருப்பு பெட்டியில் பழுக்காத் தட்டைச் சுழல விட்டபடி பல்லக்குக்குள் குனிகிறான்.

அங்கே வெதுவெதுன்னு குழியிலே படுத்துக்கிட்டு இதை ஆனந்தமாக் கேக்கலாமே.

ஏதோ புரியாத மொழியில் பாடிய அந்தப் பழுக்காத் தட்டின் எல்லா வார்த்தைகளும் ராஜா செத்துப் போய்விட்டதாக அறிவிக்கின்றன.

கம்பங்களி கூட தயார். உப்புப் போடலை. அந்த ஆள் இடுப்புலே முடிஞ்சு வச்சிருக்கான். எடுத்துப் போட்டுக்கட்டும்.

சமையல்காரன் தோசை திருப்பியை குழிக்குள் எறிந்து கொண்டே சொல்கிறான். அதை வைத்து என்ன எழவு குழி வெட்டினானோ ? செய்கிற வேலையில் ஒரு சுத்தம் வேணாம் ?

ராஜாவுக்குக் கோபம் மூக்குக்கு மேல் வருகிறது. எழுந்து போய் அவனை இடுப்புக்குக் கீழே உதைத்துக் கொட்டையைக் கூழாக்க வேண்டும். முடியாமல் அசதி. பாட்டு வேறே கட்டிப் போடுகிறது.

குதிரை ஓட்டுகிறவன் ஆசனத்தில் நக்னமாக ஏறி உட்கார்ந்து சாட்டின் திரையை விலக்குகிறாள் ராணிக்குப் பிரியமான சேடிப் பெண். கால்களில் பித்தவெடிப்பு ஏறி இருக்கிறது. கணுக்காலில் ரோமங்கள் கொலுசில் உரச ராஜாவை எட்டி உதைக்கிறாள் அவள். இடுப்புக்குக் கீழே இன்னும் தீவிரமாகப் பார்க்க விடாமல் ராஜாவின் கண்ணில் உதைத்து மூட வைக்கிறாள். வலிக்கிறது. ஆனாலும் இதமாக இருக்கிறது.

நாசியில் படிந்த அந்தப் பாதங்களை வாடை பிடிக்கிறார் ராஜா. கிறங்க வைக்கும் வியர்வை வாடை. உப்புப் புளியும், அரண்மனைத் தாழ்வாரத்துப் புழுதியும், சமையல்கட்டில் மீன்செதிலையும் கொட்டடியில் குதிரைச் சாணத்தையும் மிதித்து வந்த கதம்ப வாசனையும் கூடவே வீட்டு விலக்காகிக் குளித்த ஸ்திரியின் தனி வாடையுமாகப் போதையேற்றும் பாதங்கள்.

குழிக்கு உள்ளே இவளும் படுத்துப்பா. வாங்க போகலாம்.

நெட்டை பனியன் சேடிப்பெண்ணின் மார்பைத் திருகியபடி சொல்கிறான்.

அவளைத் தொடாதேடா முண்டைக்குப் பிறந்தவனே உன் ஜாமான் முடி பொசுங்கி விடும் என்று சபித்துப் போடுகிறார் ராஜா.

சேடிப் பெண்ணின் பாதங்கள் இப்போது ராஜாவின் இடுப்புக்குக் கீழ் ஓங்கி ஓங்கிக் குத்த இடுப்புத் துணி நனைகிறது.

விழித்துக் கொண்டார் அவர்.

மங்கலான வெளிச்சம். ராணி கையால் அவர் உடம்பு முழுக்க உலுக்கி, அடித்துத் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறாள். இடுப்பில் வேட்டி விலகி ஈர வட்டம் உணர்ச்சியில் படுகிறது.

ராஜாவுக்குப் பெருமையாக இருக்கிறது. இன்னும் ஜீவன் இருக்கிறது என்பதற்கு அத்தாட்சி. சீக்கிரமே ராணிக்குப் புத்திர பாக்கியம் ஏற்படலாம். குழிக்குள் இறங்கிப் படுக்க ராணி வருவாளா ? சேடிப் பெண் எங்கே ? ராணியின் காலுக்கு என்ன வாடை இருக்கும் ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:45 pm

ராஜா திரும்பக் கண்ணை மூடிக் கொண்டார்.

எவ்வளவு நேரமாக எழுப்பி ஆகிறது. அது என்ன விருத்தி கெட்ட ஒரு தூக்கம் ?

ராணி குரல் காதில் அறைய கண்ணை மறுபடி திறந்து முழுசாக இந்த உலகத்துக்கு வந்தார் ராஜா.

அவர் பாடையில் இல்லை. படுக்கையில் தான் இருப்பு. பக்கத்தில் எந்தக் களவாணியும் குழி வெட்டிக் கொண்டிருக்கவில்லை. ராணி மட்டும் தான் நிற்கிறாள். குளிக்காமல் கொள்ளாமல் ஒரு பழைய சேலையை உடுத்தித் தலை கலைய, கண்ணில் அப்பின மைக்கு மேலே பீளை தள்ளி இருக்க அவள் நிற்கிறாள்.

அப்பாரு போயிட்டாரு. தாக்கல் வந்திருக்கு. எழுந்திருங்க.

கட்டிலில் தலைமுகட்டில் உட்கார்ந்து நாராசமாக ஒப்பாரி வைத்து அழுகிறாள் அவள். தினசரி ஒரு பழுக்காத் தட்டு சங்கீதம் கேட்டிருந்தால் அவளாலும் நேர்த்தியாகப் பாட முடியும்.

புஸ்தி மீசைக் கிழவன் மண்டையைப் போட்டாச்சா ?

ராஜாவுக்கு இனம் புரியாத சந்தோஷம் மனதில் எட்டிப் பார்க்கிறது. தாமிரபரணி பக்கம் இருந்து இங்கே அரண்மனைச் சிறுவயல் பகுதிக் கிராமத்துக்குக் குடிபெயர்ந்ததே தன்னைச் சீண்டத்தானா என்று ராஜா நினைக்கும்படிக்கு, இங்கே வரும்போதெல்லாம் ராஜாவை வார்த்தையால் குத்திக் கொண்டே இருப்பான்.

எப்ப என் பேரப்பிள்ளையை சிம்மாசனத்துல இருந்தப் போறீங்க ?

அவன் தொல்லை பொறுக்க முடியாமல் போன நேரத்தில்தான் சேடிப் பெண் ராஜாவிடம் வந்து புஸ்திமீசைக் கிழவன் வாய் உபச்சாரம் செய்யச் சொல்லி சதா தொந்தரவு செய்வதாகப் புகார் சொன்னாள்.

கடுமையாகக் கண்டித்து அன்றைக்கு விரட்டி அனுப்பியதுதான். அப்புறம் ராஜாவையோ சேடிப் பெண்ணையோ சீண்ட அவன் இங்கே வரவேயில்லை.

அது நடந்து மூணு மாசம் ஆகியிருக்கும்.

எங்க அப்பார் மேலே உங்களுக்கு மரியாதை இல்லே. அதான் சட்டுனு கிளம்பிப் போய்ட்டார். இனிமே உசிர் உள்ள வரைக்கும் இங்கே படிவாசல் மிதிக்க மாட்டார். மானஸ்தர் அவரு.

கிழவன் இறங்கிப் போனதற்கு அடுத்த நாள் ராணி சொன்னபோது மசிரு போச்சு என்று மனதில் நினைத்துக் கொண்டு ராஜா ஆட்டுத் தொடையைக் கடித்துக் கொண்டிருந்தார்.

ஆயிரம் சிப்பாயை அணி வகுத்து நடத்திப் போனவரு இப்படி அநாதையா விடிய ஒரு நாழிகைக்கு மண்டையைப் போடணும்னு எழுதி வச்சிருக்கே. போறபோது என்ன நினைச்சாரோ ? என்னையத்தான் நினைச்சாரோ ?

ராணி திரும்பப் பிலாக்கணம் வைக்க ஆரம்பித்தாள்.

சரி, இப்ப என்ன செய்யணும்ங்கிறே ?

ராஜா அவள் குரலின் இம்சை பொறுக்க முடியாமல் தோளைத் தொட்டு அவளை அணைத்து அழுகையை நிப்பாட்டிப் போட்டார்.

இது கூட நான் சொல்லணுமா என்ன ? உடனே போய் உங்க தகுதிக்கும் அந்தஸ்துக்கும் உறவுக்கும் தகுந்த எல்லா மரியாதையும் செஞ்சு அவரை அடங்கப் பண்ண வேண்டாமா ? என் உடன்பிறப்பு எல்லாம் தாமரபரணிக் கரை தாண்டி வந்திருக்கும் இன்னேரம். நாம தான் இங்கியே புடுங்கிட்டுக் கிடக்கோம்.

ராணி அப்படியே கிளம்பி வரத் தயாராக இருந்தாள். ராஜாவும் அவ்விதமே கிளம்ப வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.

காலைக் கடன் முடிக்காமல் எப்படிப் போகிறது வெளியே ? அரையில் வேறு நனைந்து நாறிக் கொண்டிருக்கிறது. தாடையில் முள் முள்ளாக முடி குத்துகிறது. நாசுவனுக்கு ஆளனுப்பிக் காரியம் முடிய இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும். பசி வேறு தலையைத் தூக்க ஆரம்பித்திருக்கிறது. தோசையும் முட்டைக் குழம்பும் தேங்காய் வெல்லம் கலந்த பூரணமுமாகச் சாப்பிடு என்கிறது நாக்கு.

கொஞ்சம் பொறு. வெய்யில் ஏற்றதுக்குள்ளே கிளம்பிடலாம். என்ன எல்லாம் கொண்டு போகணும்னு அய்யரையும் கலந்துக்கலாம்.

உங்க தலையிலே எழவெடுத்த வெய்யில் ஏற. வரப் போறீங்களா இப்பவே என்னோட இல்லே நான் கிளம்பட்டா ?

ராணிக்கு உடனே போக வேண்டும். ஆனால் ஆஸ்தான ஜோசியரும் புரோகிதருமான அய்யர் இந்த மாதிரியான சாவுச் சடங்குகளில் விவரமான ஞானம் உள்ளவர். அவர் சொல்வதை ராஜா கேட்பதும் நல்லதுதான்.

யாரங்கே ? ராணி புறப்படப் பல்லக்கைச் சித்தம் பண்ணு.

ராஜா இரைய ஆரம்பித்தது குத்திருமலில் பாதியில் நின்றது.

எந்தத் தூமயக் குடிக்கியும் வரவேணாம். எனக்கே போய்க்கத் தெரியும்.

ராணி படபடவென்று வெளியேறினாள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:45 pm

பெட்டி வண்டியில் அவளும் கூடவே கால்மாட்டில் அவளுக்குப் பிரியமான சேடிப் பெண்ணும் இருக்க, குதிரைக்காரன் வண்டியை நெட்டோட்டமாக ஓட்டிக் கொண்டு போனது கொஞ்ச நேரம் கழித்து ஜன்னலுக்கு வெளியே தெரிந்தது.

குட்டியாக இன்னும் ஒரு தூக்கம் போடலாமா ? அந்தப் பக்கத்து வீட்டுப் பார்ப்பாரப் பிள்ளைகள் இன்றைக்கு ஏன் பழுக்காத் தட்டு சங்கீதத்தை சத்தமாக வைக்கவில்லை ?

வெய்யில் ஏறுவதற்குள் வருவதாகச் சொன்னது நினைவுக்கு வந்தது. அதற்குள் கொல்லைக்குப் போய், சவரம் செய்து கொண்டு, குளித்து, அய்யரைப் பார்த்து. ஏகப்பட்ட வேலை இருக்கிறது.

மெல்ல நடந்து போய் அரண்மனைச் சமையல் அறை நிலை வாசலில் இரு கையையும் ஊன்றிக் கொண்டு குனிந்து பழனியப்பா என்று சத்தமாகச் சமையல் காரனைக் கூப்பிட்டார்.

ஜாடியிலிருந்து ஒரு பெரிய தொன்னை நிறைய வல்லாரை லேகியத்தையும் வென்னீரையும் அவன் கொண்டு வந்து கொடுத்தால் தான் காலைக்கடன் நிம்மதியாகக் கழியும்.

சமயங்களில் சமையல் கட்டுக் கதவைப் பிடித்தபடி குனிந்து பழனியப்பா என்று விளித்த மாத்திரத்தில் பின்னாலும் முன்னாலும் சந்தோஷமாக முட்டிக் கொண்டு வந்து விடும். இன்றைக்கு அதிர்ஷ்டம் இல்லை.

சமையல்காரன் பக்தி பூர்வம் தொன்னையை வாழை இலையால் மூடி அதை ஒரு வெள்ளித் தட்டில் வைத்து, பக்கத்தில் பஞ்ச பாத்திரத்தில் வென்னீருமாக வந்து நின்றான்.

காலை நேரத்திலேயே கள்ளுத்தண்ணி சாப்பிட்டு வந்திருக்கிறாயோடா திருட்டுப் பயலே ?

ராஜா அபிமானத்தோடு புன்சிரித்துக் கொண்டு விசாரித்தார். என்னமோ அவன் மேல் இப்போது பிரியமாக இருந்தது. ஒரு வாய் லேகியம் உள்ளே போவதற்குள் வயறு கடகடக்க ஆரம்பித்திருக்கிறது.

ஐயனார் சத்தியமா இல்லே மஹாராஜா. அந்த வாசனை பிடித்தே வருஷக் கணக்கில் ஆகிறது.

அப்படியானால் இன்றைக்கு ஊற்றிக் கொள்.

ராஜா குப்பாயத்தில் கையை விட்டு ஒரு வெள்ளி நாணயத்தை அவனிடம் எறிந்தார்.

வெள்ளித் தட்டைத் தரையில் வைத்து விட்டு மூலைக் கச்ச வேட்டியை தட்டுச் சுற்றாக்கிக் கொண்டு தோட்டப் பக்கம் போகும்போது முட்டைக் குழம்பும் தோசையும் சித்தம் பண்ணச் சமையல்காரனிடம் சொல்ல மறக்கவில்லை.

தோட்டத்தில் இன்னொரு வேலைக்காரன் செம்பும் தண்ணீருமாக நின்றான். தோட்டத்து மாமர நிழலில் குரிச்சி போட்டு தரையில் கத்தியும் கிண்ணியுமாக நாசுவன்.

வாழ்க்கை கிரமப்படிப் போய்க் கொண்டிருப்பதாக ராஜாவுக்குத் திருப்தி.

இடக்குப் பண்ணாத வயிறும் மழுமழுத்த கன்னமும் வயிறு நிறைய தோசையும் முட்டைக் குழம்புமாகக் கிளம்பிப் போய் புஸ்தி மீசைக் கிழவனை வழியனுப்பி விட்டு வரலாம். சாவின் வேடிக்கை விநோதங்களை எல்லாம் பார்த்து, கலந்து கொண்டு அனுபவித்து ரொம்பவே நாளாகி விட்டது.

கால் கழுவிக் கொள்ள சேவகன் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கும்போது ராஜாவுக்கு பனியன் சகோதரர்கள் நினைவு வந்தது.

அந்தப் படப்பெட்டியை எடுத்து வரச் சொன்னால் என்ன ? கிழவனைச் சிங்காரித்து ஒரு படம் எடுத்து வீட்டில் எதாவது மூலையில் மாட்டி வைத்தால் ராணியும் சந்தோஷப்படுவாள்.

கொஞ்சம் நேரம் கழித்தே வாங்க.

ராஜா பனியன் சகோதரர்களுக்கு மனதுக்குள் கட்டளை பிறப்பித்தார்.

நாசுவன் முகத்திலும் கம்புக்கூட்டிலும் மயிர் நீக்கி விட்டு ராஜாவைக் கேட்டது இது.

கீழேயும் எடுக்கட்டா தொரே ?

ஈரம் இன்னும் உலர்ந்து தொலைக்காததால் வேணாம் என்றார் ராஜா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:46 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் பதினாறு


ராஜா அரண்மனை சிறுவயலை அடைந்தபோது அதிர்வேட்டு முழங்கிக் கொண்டிருந்தது.

வேட்டுக்காரன் ஊருணிக்கரைப் பொட்டலில் பத்துப் பதினைந்து அதிர்வேட்டுக்களை வரிசையாக நிறுத்திப் பொருதி வைத்தபடி வெய்யிலில் நீள ஓடிக் கொண்டிருந்தான். புகையும் வெடிமருந்து வாடையும் காதை அடைக்கும் சத்தமுமாக அந்தப் பிரதேசமே மாறி இருந்தது.

அப்புறம் தப்புக்கொட்டுக்காரர்கள். கையில் எடுத்த கொட்டும், தோளில் தொங்க விட்டுக் கொண்டதுமாக வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்துக் கொட்டடித்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள் ஒரு பெரிய கூட்டமாக. அவர்களில் ஒருவன் ஒப்புச் சொல்ல மற்றவர்கள் தாயாரே தாயாரே என்று தாவித் தாவிக் கொட்டடித்தார்கள். கந்தர்வ கானமாக இல்லாவிட்டாலும் சகித்துக் கொள்ளும்படியாக இருந்தது அது.

கந்தர்வ நாட்டில் என்னத்துக்கு ஒப்பாரி வைப்பது ? ராஜாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது. நரைமீசையைத் தடவிச் சரி செய்வது போல் வாயை மூடிக் கொண்டார்.

இன்றைக்குப் பார்த்துப் பார்த்துக் காரியம் செய்து பிரயாணம் கிளம்ப எல்லா நடவடிக்கையும் மேற்கொண்டாலும் தாமதமாகி விட்டது.

சமையல்காரன் தோசையை ஒரு பக்கம் தீய்த்து விட்டான். முட்டைக் குழம்பில் காரம் குறைச்சல். எல்லாவற்றையும் சகித்துக் கொண்டார் ராஜா. இவனோடு எழவெடுத்துக் கொண்டிருந்தால் மாமனார்க் கிழவன் எழவு முடிந்து கருமாதி ஆரம்பிக்கும் நாளைக்குத் தான் போய்ச் சேரமுடியும் என்று புத்தி எச்சரித்தது காரணம்.

அய்யர் கூப்பிட்டனுப்பியபோது புதுமாப்பிள்ளை போல் கொஞ்சம் முறுக்கோடு தான் வந்தார். திவசத்துக்கு இறங்கி வந்த முன்னோர்கள் மாமிசமும் சாராயமும் கேட்டு அவர் கொடுத்த எள்ளையும் நீரையும், சொன்ன மந்திரத்தையும் மதிக்காமல் போனது அவரை வெகுவாக மனம் நோகச் செய்திருந்தது. நாமக்கல் ஜமீந்தார் கூப்பிடுகிறார் வாவா என்று. அவ்வளவு தூரம் இந்த வயசான காலத்தில் போவானேன் என்று தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறேன் என்று அவர் காரண காரியமில்லாமல் இரண்டு தடவை சொன்னார்.

அரசூரை விடப் பெரிய ஊர் அது. ஆடும் மாடும் நிறையத் தொலைந்து போகும். மூக்குத்தியையும் வெள்ளி அரைஞாணையும் கழற்றி வைத்த இடத்தை மறந்துவிட்டவர்கள் இன்னும் நிறையப் பேர் இருப்பார்கள். அது இருக்கும் இடம் தெரிய அய்யருக்குத் தட்சணை வைத்துத் திண்ணையில் குந்த, அய்யர் சோழிகளை நிறுத்தாமல் உருட்டி எங்கே தேட வேண்டும் என்று சொல்வார்.

தொலைத்தது கிடைத்த சந்தோஷத்தில் படுத்து எழுந்து பத்து மாசம் கழித்து ஜாதகம் கணிக்க வண்டி கட்டிக் கொண்டு வந்து கூப்பிடுவார்கள். அந்த ஊர் ஜமீந்தார் துடைத்து வைத்த கஜானாவோடு இல்லாமல் கொஞ்ச நஞ்சமாவது பசையோடு இருப்பார். திதி திவசத்துக்கு இறங்கும் அவருடைய முன்னோர்கள் நல்ல வயசாளிகளாக எள்ளையும் தண்ணீரையும் திருப்தியோடு ஏற்றுக் கொண்டு தேவபாஷை அசுரபாஷை எல்லாவற்றிலும் வாழ்த்திப் போவதால், மழையும், குளிர்ச்சியும், விளைச்சலும், போகமும், சம்போகமும் ஒரு குறைச்சலுமில்லாமல் நடக்கும்.

ராஜா ஒரு நிமிடம் அய்யயரைத் தீர்க்கமாகப் பார்த்துவிட்டு உள்ளே போய் ஒரு மரத்தட்டில் நாலு வெற்றிலையும் பாக்கும் ஒரு வராகனுமாக வந்தார். குருவி போல் சேர்த்து வைத்த வராகனில் ஒன்று குறைந்து விட்டதில் கொஞ்சம் வருத்தம் தான் என்றாலும் அய்யரைப் போக விடக்கூடாது என்று தீர்மானம் செய்திருந்தார்.

இரும்புப் பெட்டியிலிருந்து மஞ்சள் துணிப்பையை அவிழ்த்து வராகனை எடுத்தபோது முன்னோர்கள் பேசுவார்கள் என்று எதிர்பார்த்தார். மயான அமைதியாக இருந்தது இன்றைக்கு. அப்புறம் தான் நினைவு வந்தது முன்னோர்கள் புஸ்தி மீசைக் கிழவனைக் கைபிடித்து மேலே கூட்டிப் போக அரண்மனை சிறுவயல் போயிருப்பார்கள் என்று.

அய்யர் வராகனைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு மடியில் முடிந்து கொண்டார். தான் நாலு தலைமுறையாக அரசூர் சக்கரவர்த்திகளின் விசுவாச ஆஸ்தான புரோகிதர் மற்றும் பஞ்சாங்கக்காரர் என்று பூணூலை இழுத்து விட்டுக் கொண்டு அறிவித்தார். நாமக்கல்லார் நாமம் போட்டு விடுவார்கள். நான் ஏற்கனவே பட்டை நாமம் பரக்கச் சாத்திண்டு வந்திருக்கேனே என்று சிரித்தார்.

மரியாதைக்கு ராஜாவும் சிரித்து வைத்தார். இந்தப் பார்ப்பான் படி இறங்கிப் போகும்போது யாரையாவது ஒளிவாக அனுப்பி வராகனைப் பிடுங்கிக் கொண்டு பூணூலை அறுத்து விட்டு இவனையும் நாலு சார்த்தி விட்டு வரச் சொல்லலாமா என்று யோசனை வர, அதை முளையிலேயே கிள்ளி எறிந்தார்.

அய்யர் சொன்னபடிக்கு நாலு வீசை கருப்பட்டி, எட்டுக் கவுளி வெற்றிலை, மூணு பலம் ஜாதிபத்திரி, அரை ஆழாக்கு ஆமணக்கு எண்ணெய், நீல வஸ்திரம், கம்பளிக் கயறு, பட்டுக் கோவணம் என்று சேவகர்களை ஏவி வாங்கி வந்ததில் இன்னொரு வராகனையும் இரும்புப் பெட்டியிலிருந்து எடுக்க வேண்டிப் போனது.

ஆனாலும் எல்லாம் அதது அதனதன் பாட்டில் விரசாக நடந்து முடிந்தது.

குதிரை வண்டியில் எல்லாவற்றையும் ஏற்றிக் கொண்டு இருந்தபோது தான் பனியன் சகோதரர்களின் நினைவு வந்தது. அவர்களுடைய படம் பிடிக்கும் பெட்டி வேணுமே.

பனியன் சகோதரர்கள் கொஞ்சம் தாமதித்துத்தான் வந்தார்கள்.

கார் மக்கர் பண்ணி விட்டது. ரிப்பேர் செய்து கொண்டு வந்தோம்.

பாதி தான் பேசுகிற பாஷையும் பாதி புரியாததுமாக ஏதோ சொன்னார்கள்.

சரி போகிறது. இப்போது அது ஓடும் தானே ?

ராஜா ஆஸ்டின் காரைச் சுட்டிக் காட்டிக் கேட்டார்.

ஓ பிரமாதமா. பெட்ரோல் ஐயங்காரிடம் ஆத்திர அவசரத்துக்குப் பெட்ரோல் வாங்கி வந்தோம் சமஸ்தானம் அவசரமாக் கூப்பிட்டதாலே. யுத்த காலமாச்சுதா. ஒண்ணும் கிடைக்கிறதில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:47 pm

எங்கே யுத்தம் ? யார் யாரோடு சண்டை போடுகிறார்கள் ? அவ்வளவு காசு கொட்டிக் கிடக்கிறதா என்ன ஊரில் ?

ராஜா கேட்க நினைத்தார். இது அவர் காலத்துக்கு அப்புறம் நடந்த சங்கதி. தெரிந்து கொண்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. புஸ்தி மீசைக் கிழவனைப் பல்லக்கு ஏற்றுவது தான் இப்போது நடக்க வேண்டிய காரியம். அதுக்கு முன்னால் இந்தக் களவாணிகள் நூதனமான வண்டியில் வந்து இறங்கி அதற்கு மசகெண்ணெயோ மற்றதோ போட்ட வகையில் காசு வசூலிக்கப் பார்க்கிறான்கள்.

ராஜா அந்த அவசரத்திலும் இடுப்பு மடிப்பில் உப்பு எடுத்து வைத்துக் கொள்ள மறக்கவில்லை. நறநறவென்று இடுப்பில் வியர்வையோடு அது இழைகிறது பழகிப் போய் சுகமாக இருந்தது.

படம் பிடிக்கும் பெட்டி கொண்டு வந்திருக்கிறீர்களா ?

ராஜா கேட்டபோது ஆமாம் என்றார்கள் இரண்டு பேரும் ஒரே குரலில். அந்த மூடுவண்டிக்குள் வைத்திருக்கிறதாம்.

சரி எல்லாத்துக்கும் சேர்த்துக் கொடுத்திடறேன். கிளம்பி நேரா அரண்மனைச் சிறுவயல் வந்து சேருங்கள்.

ராஜா சொல்லிக் கொண்டே குதிரை வண்டியில் ஏறப் போனார்.

நீங்களும் காரிலேயே வந்து விடுங்களேன். விரசாகப் போய்விடலாம்.

அதுவும் நல்ல யோசனையாகத்தான் பட்டது. நூதன வாகனம். ராஜா காலத்துக்குப் பிற்பட்ட மனுஷர்கள் ஏற்படுத்தி எடுத்து வந்திருக்கிறார்கள். ஏதாவது குளறுபடியாகிப் போய் இது குடை சாயும் பட்சத்தில் ராஜாவுக்கும் தாரை தப்பட்டை முழங்க பல்லக்கு சவாரி கிடைக்கிற அபாயம் உண்டு.

நான் சாரட்லேயே வரேன். நீங்க கிளம்புங்க.

கொஞ்சம் பெரிய குதிரை வண்டியை சாரட் என்று சொல்லக் கூடாதுதான். ஆனாலும் இவன்கள் என்ன சொன்னாலும் கேட்பார்கள். எந்தக் காலத்தில் இருந்து வந்தால் என்ன ? காசு எல்லார் வாயையும் அடைத்துப் போடுமே.

ராஜா குதிரை வண்டியில் ஆடி அசைந்து போய்க் கொண்டிருந்த போது பனியன் சகோதரர்கள் காரில் விருட்டென்று கிளம்பி முந்திக் கொண்டு போனார்கள்.

போகட்டும். போய்க் காத்திருக்கட்டும். ராஜா போகாமல் மாமனார்க் கிழவன் பரலோகம் புக முடியாது. எல்லாக் கோலாகலத்தையும் கருப்புப் பெட்டியில் அடைக்க ராஜா உத்தரவு கொடுத்தால் தான் பயல்கள் காரியம் மேற்கொள்ள முடியும்.

போகும் வழிக்குத் தாகம் எடுத்தால் தணிக்க கூஜாவில் மோர், இனிப்பான ஊருணித் தண்ணீர், பானகம் எல்லாம் வண்டியில் எடுத்து வைத்திருந்தான் சமையல் காரன். வழியில் வயிறு பசித்தால் கொஞ்சம் போல் பசியாறக் கடலை உருண்டை, அதிரசம் எல்லாம் ஒரு சஞ்சியில்.

பாதி வழி போவதற்குள்ளேயே எல்லாம் தின்று தீர்த்து, குடித்துத் தீர்த்து, வண்டியை நாலு தடவை நிற்கச் சொல்லி வழிக்கு ஓரமாகக் குந்தவைத்து அற்ப சங்கை தீர்த்துக் கொண்டு விட்டார் ராஜா.

அப்புறம் எதிர்ப்பட்ட ஊருணியில் தண்ணீர் மொண்டு வர, வழியில் பலாச்சுளையும் வெள்ளரிக்காயும் வாங்க என்று ராஜாவின் வண்டிக்குப் பின்னால் ஓடிக் கொண்டும் மட்டக் குதிரையில் சவாரி செய்து கொண்டும் வந்த சேவகர்கள் பரபரப்பாக அலைந்தார்கள்.

வருடத்துக்கு ஒரு தடவையாவது வியர்வை சிந்தி வேலை செய்யட்டும். அது நல்லதுக்குத்தான் என்று ராஜா சொல்லிக் கொண்டு பலாச்சுளையைக் கடிக்க அரண்மனை சிறுவயல் வந்து விட்டிருந்தது.

தண்ணியிலே தாமரப் பூ

தாயாரே தாயாரே

தரையெல்லாம் ஆவரம்பூ

தாயாரே தாயாரே

வாழக்காய் எங்களுக்கு

தாயாரே தாயாரே

வைகுந்தம் உங்களுக்கு

தாயாரே தாயாரே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:48 pm

ராஜா பார்க்க வேண்டும் என்பதற்காக நிறுத்தி நிதானமாக ஒப்புச் சொன்னார்கள். அவர் அங்கீகரித்துத் தலையை ஆட்டும் போது காரை விட்டு இறங்கி அதன் மேல் சாய்ந்தபடிக்குத் தாளம் போட்டுக் கொண்டிருந்த பனியன் சகோதரர்கள் கண்ணில் பட்டார்கள்.

இவன்களோடு வந்திருந்தால் இப்படி முந்தி முந்தியே வந்திருக்கலாம். ஆனால், பார்க்க வைத்துக் கொண்டு பலாச்சுளையும் அதிரசமும் சாப்பிட முடியாது. ராஜாவானதால் அதைக் குடிபடைகளோடு பங்கு போட்டும் தின்ன முடியாது.

ஒப்புக்காரன் ராஜாவைக் கும்பிட்டான். அவன் ஒப்புச் சொல்வதை நிறுத்திக் கண்காட்ட, நாயனக்காரன் வாத்தியத்தை மேலே உயர்த்தி ஊதினான்.

ஐயய்யோ போய்ட்டாகளே போய்ட்டாகளே.

ராஜா நடந்த வழியில் அவருக்கு முன்னால் ஒரு சரவெடியைப் பற்ற வைத்துக் கொண்டு குலை தெறிக்க ஓடினான் அதிர்வேட்டுக்காரன்.

இழவு விழுந்த வீட்டில் வேறு எப்படியும் வரவேற்பு தரப்படமாட்டாது என்று ராஜாவுக்குத் தெரியும்.

ஐயய்யோ போய்ட்டாகளே போய்ட்டாகளே.

திரும்ப நாயனம் முழங்க வீட்டுக்குள்ளிருந்து பெண்கள் மூக்கைச் சிந்தி முந்தானையில் துடைத்துக் கொண்டு வெளியே வந்தார்கள். முக்கியஸ்தர்களிலும் முக்கியஸ்தர் வந்திருப்பதாக நாயன முழக்கத்திலும் வெடிச் சத்தத்திலும் அறிந்து கொண்ட அவசரம் தெரிந்தது.

எல்லோருக்கும் பின்னால் ராணி நடந்து வந்து வாசல் அருகிலேயே நின்றாள்.

எப்போதையும் விட இப்போது அவள் அதி சுந்தரியாக இருப்பதாக ராஜாவுக்குப் பட்டது. சேடிப் பெண் ராணிக்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்த்தாள். அவள் ராணியை விட ரூபவதியாகிப் போனதாகவும் தோன்றியது.

சாவு வீட்டில் வைத்து இப்படிக் காமாந்தகரானாகக் கூடாது என்று தீர்மானம் பண்ணிக் கொண்டு ராஜா முன்னால் நடந்தார்.

அவரிடம் ஏதோ சிடுசிடுப்பாக ராணி சொல்லத் தொடங்கும் முன்னால் உள்ளே இருந்து மைத்துனர்கள் எதிர்ப்பட்டார்கள். இரண்டு பேரும் சிவப்பு வஸ்திரம் தரித்து இருந்தார்கள். பாதிச் சாப்பாட்டில் எழுப்பி இழுத்து வந்தமாதிரி இருந்தது அவர்களை.

ராஜா அவர்களை ஒவ்வொருவராக ஆதரவாகக் கையைப் பிடித்துக் கொள்ள அவர்கள் 'ஆமா ' என்றார்கள்.

இழவு விழுந்ததற்கு தான் ஆஜர் கொடுத்து வருத்தப்பட்டதும், அது கணக்கில் வரவு வைத்துக் கொள்ளப் பட்டதும் முடிய, ராஜா சம்பிரதாயமான கேள்விகளைச் சுற்றி இருந்தவர்களை இலக்கு இல்லாமல் பார்த்துக் கேட்க ஆரம்பித்தார்.

எப்படி ஆச்சு ? எத்தனை மணிக்கு ? நேத்துக்கு ராத்திரி என்ன சாப்பிட்டார் ? தொடுக்குத் தொடுக்குன்னு இருந்தாரே இந்த வயசிலும் ?

என்னென்னமோ பதில்கள் காதில் விழ யாரோ உள்ளே பார்த்து மரியாதையாகக் கையைக் காட்டினார்கள்.

வாசலில் திரும்ப பெரிய வெடிச் சத்தம்.

ராஜா திரும்பிப் பார்த்தார். நீர்மாலை எடுக்கப் பெண்கள் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். புஷ்பப் பல்லக்கை மூங்கில் வளைத்துச் சீராக்கிக் கொண்டிருந்தவர்கள் மரநிழலில் புகையிலை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

ராஜா கனவில் வந்த பல்லக்கில் அது அரைத் தரத்தில் இருந்தது.

இந்தத் தடியன்களை ஏன் கூடவே கூட்டி வந்திருக்கிறீர்கள் ?

ராணி ராஜாவின் காதில் கிசுகிசுத்தபோது, பின்னால் பனியன் சகோதரர்கள் வந்து கொண்டிருந்தது ராஜாவுக்கு நினைவு வந்தது.

காரியமாத் தான். உங்க அப்பாரை விதம் விதமாப் படம் பிடிச்சு வச்சு ஆயுசு முடியப் பார்த்துக்கிட்டே இருக்கலாம்.

ராஜா கருணை பொழியும் புன்சிரிப்பைச் சிந்தும் போது இன்னொரு வராகன் குறையப் போகிறது என்ற நினைப்பும் கூடவே வந்தது.

யாரோட ஆயுசு முடியற மட்டும் ?

ராணியின் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:56 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் பதினேழு


உள்ளொடுங்கிய அறை. உயரம் குறைவான ஒரு மேசை. பக்கத்தில் கால் ஆடிக் கொண்டு ஒரு நாற்காலி. அதன் தோள் புறத்தில் சிங்கம் மாதிரி உருட்டி வைத்திருக்கிறான் தச்சன். வாயைப் பிளந்து கொண்டு நிற்கும் சிங்கங்களுக்கு நடுவே உட்கார்ந்து ராஜா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

வடையும் சுவியனும் நெய்யப்பமுமாக வந்த மணியமாக இருக்கிறது. கூடவே இஞ்சித் துவையலும், காரமாகக் கொத்துமல்லி அரைத்து விட்ட புளிக்குழம்புமாக யார் யாரே பெண்கள் மரியாதையோடு உள்ளே வந்து வந்து இலையப் பார்த்துப் பரிமாறி விட்டுக் குனிந்த தலை நிமிராமல் திரும்பிப் போகிறார்கள். எல்லோரும் உறவுக்காரர்கள். ராணியைப் பெண் எடுத்த வகையில் வீட்டுக்கு வந்திருக்கும் மாப்பிள்ளைக்குத் தரும் மரியாதை அது.

ஆறு அடி தள்ளி, ராஜா கண்ணில் படும்படியாக, கருங்காலிக் கட்டை போல் நடுக் கூடத்தில் புஸ்தி மீசைக் கிழவன் நீட்டி நிமிர்ந்து படுத்திருக்கிறான். மூக்கிலும் வாயிலும் பஞ்சைத் திணித்தது பிதுங்கி வழிகிறது ராஜா சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இடத்திலிருந்தே தெரிகிறது. தலை மாட்டில் குமட்டுகிற வாடையோடு தூபக்காலில் ஏதோ புகைந்து கொண்டிருக்கிறது. ஒன்றும் இரண்டுமாகக் கட்டெறும்புகள் மோப்பம் பிடித்துக் கொண்டு ஊற ஆரம்பித்திருக்கின்றன.

காரியமாக நாவிதர் கிழவனின் முகத்தை மழித்துக் கொண்டிருக்கிறது கண்ணில் படுகிறது. போகிற இடத்தில் இந்த வசதி எல்லாம் இருக்காது என்பதால் கிழவனும் முகத்தைத் திருப்புகிற பக்கம் எல்லாம் சலிக்காமல் காட்டியபடி படுத்துக் கிடக்கிறான்.

தூரத்தில் கேட்கும் வேட்டுச் சத்தமும், விட்டு விட்டுக் கேட்கும் கொட்டுச் சத்தமும் நீர்மாலைக்குப் போன பெண்கள் இன்னும் தெப்பக் குளத்தை அடையவில்லை என்று சொல்கின்றன ' அவர்கள் குளித்துக் கரையேறிக் குடங்களில் தண்ணீரோடு இங்கே வருவார்கள். அப்புறம் கூடத்திலேயே கிழவன் குளிக்கப் போகிறான். அதற்குள் சாப்பிட்டு முடித்து விட வேண்டும்.

வீட்டுக்குப் பின்புறம் புதிதாகக் கொட்டகை வேய்ந்த இடத்தில் ஏகக் களேபரமாக இன்னொரு பந்தி நடந்து கொண்டிருக்கிறதும் அதில் சாப்பிடுகிறவர்கள், பரிமாறுகிறவர்கள் தலையும் ராஜா இருந்த இடத்தில் இருந்தே தெரிகிறது. சாமானிய ஜனங்கள் அதெல்லாம். ஆனாலும் அவர்களுக்கும் நெய்யப்பமும், சுவியனும், வடையும் எதேஷ்டமாகக் கிடைக்கும்.

சுறுசுறுப்பான சமையல்காரர்கள் கொஞ்சம் தள்ளி வெளித் தோட்டப் பக்கம் அடுப்பு வைத்து எல்லாம் சமைத்து எடுத்து வியர்வையை வழித்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தோசைக் கல்லிலும் வடை பொறியும் கடலை எண்ணெயிலும் அதெல்லாம் கலந்திருக்கலாம். அரண்மனைச் சமையல்காரனா என்ன ? பார்த்துப் பார்த்துச் சமைக்க ? அதுவும் ஒரு பெருங்கூட்டத்துக்கு ஆக்கிப் போடும்போது இதையெல்லாம் சகித்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

மாப்பிள்ளைத் தொரே. கூச்சம் இல்லாம சாப்பிடுங்க. இதென்ன தொக்கு தொசுக்குன்னு கிள்ளித் தின்னுக்கிட்டு ?

காது வளர்த்த கிழவி ஒருத்தி உரிமையோடு ராஜா இலையில் இன்னும் நாலு தவலவடைகளைப் போடுகிறாள். எண்ணெய் மினுக்கிக் கொண்டு கர்ப்பிணிப் பெண்ணின் மார் போல் பருத்து இதமாக இருந்த அவற்றைத் தின்னத் தின்ன இன்னும் இன்னும் என்கிறது நாக்கு. செத்தேன் என்று வயிறு ஓலமிடுகிறது.

கூடவே கருவாட்டுக் குழம்பு இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அசைவம் எல்லாம் கருமாதிக்குத் தான்.

இருபது குடம் கள்ளுத் தண்ணி வாங்கிக்குங்க. கிராமணி கிட்டே சொல்லி விட்டிருக்கேன் மீதித் துட்டை துஷ்டி முடிஞ்சு கொடுத்திடறேன்னு. இப்பதிக்கு இதைக் கொடுங்க போதும். மாட்டு வண்டியை எல்லாம் ஓட்டிட்டு வரப் போறது யாரு ? நீ ஒண்ணு அப்புறம் நம்ம மருதையன், ஒச்சன், நாச்சியப்பன். நாச்சியப்பன் வேணாம். மாலைக்கண்ணு அவனுக்கு. ஒண்டிப்பிலி ஓட்டிட்டு வரட்டும். குடத்தை எல்லாம் கீழே விழாமப் பையப் பதனமா எடுத்துட்டு வாங்கப்பூ.

ராஜாவின் மைத்துனர்கள் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறார்கள். இழுத்துப் பறித்துக் கொண்டு இடுப்புத் துணியில் மூத்திரம் போய்க் கொண்டு கிழவன் கிடந்து உயிரை வாங்காமல் போங்கடா பேய்ப்பயகளா என்று விருட்டென்று கிளம்பிப் போனதில் எல்லோருக்கும் சந்தோஷம் என்று முகத்தில் தெரிகிறது.

மாப்பிள்ளைத் தொரை, வென்னித் தண்ணி சாப்பிடுறீங்களா ? வயத்துக்கு இதமா இருக்கும். ராத்திரிக்கு எல்லாம் முடியற நேரத்துலே கள்ளுத் தண்ணியும் வந்து சேர்ந்திடும்.

மைத்துனர்கள் மாப்பிள்ளை ராஜாவை உபசரித்துக் கொண்டே ஓடுகிறார்கள். இழவு வீட்டிலும் மாப்பிள்ளைக்குப் போக மிச்சம் மீதி மரியாதை தான் கட்டையைச் சாய்த்தவனுக்கு என்று புரிந்த ராஜா புஸ்தி மீசைக் கிழவனைப் பார்த்துத் தலையை ஆட்டுகிறார் என்னடா புரிஞ்சுதா என்பது போல்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:01 pm

ராஜா கை கழுவ எழுந்திருக்கச் சற்று சிரமமாக இருக்கிறது. சேடிப் பெண் போல் யாராவது கைலாகு கொடுத்தால் சுகமாக இருக்கும்.

வத்தலும் தொத்தலுமாக இரண்டு கிழவர்கள் உறவு முறை சொல்லிக் கொண்டு வந்து மலையைக் கெல்லுகிறது போல் பிரயத்தனத்தோடு எழுப்பி விடுகிறார்கள்.

ராஜா பின்கட்டில் நாலைந்து பேர் காலையும் கையையும் கழுவத் தண்ணீர் விடச் சுத்தி செய்து கொண்டு தோட்டத்து ஓரமாகப் பார்த்தார். கையில் செம்பில் நீரோடு இன்னொருத்தன் முன்னால் ஓடினான். விட்டால் கோவணத்தைக் கூட அவிழ்த்து ஒத்தாசை செய்வார்கள்.

ராஜா திரும்பி உள்ளே வந்தபோது யாரோ உறவுக்காரப் பெண் குனிந்து புஸ்தி மீசைக் கிழவனின் கண்ணோரம் பஞ்சால் துடைக்கிறது கண்ணில் பட்டது. வாய்ப் பக்கம் பஞ்சை எடுக்கிறாள். கிழவன் ஒரு வினாடி எழுந்து உட்கார முயற்சி செய்தது போல் ராஜாவுக்குத் தெரிந்தது.

பெண்ணே, பக்கத்தில் அதிகமாகக் குனியாதே. வாய் உபச்சாரம் செய்யச் சொல்லிக் கையைப் பிடித்து இழுத்து விடுவான். கெட்ட பயலாக்கும் இவன்.

அவள் புரிந்து கொண்டது போல் இன்னும் நிறையப் பஞ்சைக் கொத்தாக அடைத்து விட்டு ராஜாவைப் பார்த்துப் புன்னகைத்தபடி வெளியே போனாள். வீட்டுக்குள் வேறு யாரையும் காணோம்.

கிழவனைப் பக்கத்தில் பார்க்க வேண்டும் என்று ராஜாவுக்குத் தோன்றியது. இனிமேல் எந்த உபத்திரவமும் செய்ய மாட்டான். ராஜாவின் பீஜபலத்தைப் பற்றி எள்ளலும் எகத்தாளமுமாக வார்த்தை விடமாட்டான். இன்னும் கொஞ்ச நேரம். குளித்து விட்டுக் கிளம்பினால் நேரே குழிக்குள் போய்ப் படுத்துக் கொள்ள வேண்டியது தான்.

கூடத்தில் ராஜா நுழைந்தபோது இரண்டு பக்கத்திலும் முன்னோர்கள் உட்கார்ந்து மொணமொணவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தொட்டு இழுக்க மாட்டேண்டா வக்காளி என்று கிழவன் தன் உடம்போடு அட்டைப் பூச்சி போல் ஒட்டிக் கொண்டிருந்தான்.

உமக்கு என்னத்துக்குக் கவலை ? எல்லாம் உம்ம மாப்பிள்ளை ஏற்பாடு பண்ணிடுவாரு. கூட வந்து சேரும். ஆக வேண்டிய காரியம் ஏகத்துக்குக் கிடக்கு. அங்கே வந்து பாரும். என்னமா இருக்கு ஒவ்வொண்ணும்னு.

முன்னோர்களில் ஒருத்தர் நைச்சியமாகச் சொன்னார்.

இந்த ஆளு கேக்கிற எல்லாத்தையும் செய்ய எங்கிட்டே எங்கே பணம் இருக்கு ? நீங்களும் விட்டுட்டுப் போகலே. துரைத்தனத்தாரும் ஒரு காசு ரெண்டு காசாப் பார்த்துத் தான் கொடுக்கறாங்க.

ராஜா அவசரமாக முறையிட்டார். இவர்கள் ஏற்கனவே சீமைச் சாராயம் கேட்கிறார்கள். இந்தக் கிழவன் அதோடு கூட மற்ற உபச்சாரம் எல்லாம் எதிர்பார்க்கிறவன். அய்யரைக் கொண்டு நடத்த வைக்கிற விஷயமில்லை அதெல்லாம்.

சும்மா இருப்பா நீ வேறே. எப்படியாவது தாடையைப் பிடிச்சுக் கெஞ்சி அவனைக் கூட்டிட்டுப் போகப் பாக்கிறேம். இப்ப என்னத்துக்கு எல்லா எழவையும் அவனுக்கு நினைவு படுத்தறே ?

முன்னோர்களில் ஒருத்தர் காலில் கட்டெறும்பாகக் கடித்தார். ராஜா காலை விலக்கி உதறிக் கொண்டு நின்றார்.

கள்ளு வருதாமில்லே. முதல் குடத்தை இங்கே கொண்ணாந்து வை. நாங்க எல்லோரும் வாசனையாவது பாக்கிறோம். அமாவாசைக்கு அந்த தரித்திரம் பிடிச்ச பார்ப்பானைப் பிடிச்சு சீமைச் சாராயத்தை ஊத்தி விடு. பக்கத்து புகையிலைக்கார வீட்டுப் பாப்பாத்தியம்மா வேறே எனக்கு எனக்குன்னு வரா.

ஒண்ணும் புரியலே.

ராஜா தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டினார்.

உனக்கு என்ன புரியும் ? வல்லாரை லேகியம் உருட்டி முழுங்கி வயத்தைப் பிடிச்சுட்டுக் குத்த வைப்பே. மூக்குப் பிடிக்கத் திம்பே. அந்நிய ஸ்திரிக்குக் கால் பிடிச்சு விடுவே. அவளை உதைக்க விட்டு அரையை நனச்சுப்பே. நான் கேட்டா வாயைத் திறக்க மாட்டேனுட்ட்டா அந்தக் கழுதை.

புஸ்தி மீசைக் கிழவன் படபடவென்று பேசினான். செத்துப் போனால் எல்லோரையும் திட்டலாம் போல் இருக்கிறது. மாப்பிள்ளை மரியாதை எல்லாம் இருப்பவர்கள் செய்ய மட்டும் விதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

சரி சரி இப்ப என்ன அதுக்கு ? கள்ளு வந்தாப் போதும்.

முன்னோர்கள் கூட்டமாகக் கிழவனைக் கையைப் பிடித்து இழுத்தார்கள்.

பாப்பாத்தியம்மா எப்படி இருப்பா பார்க்க ?

கிழவன் ஆசை ஆசையாகக் கேட்டபடி அவர்கள் கூடப் போனான்.

Sponsored content

PostSponsored content



Page 5 of 17 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக