ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:39 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by யினியவன் Today at 2:35 pm

» அடக்கம்!....
by இரா.பகவதி Today at 2:29 pm

» காதலாகிப் போனதடி மனசு
by யினியவன் Today at 2:28 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by யினியவன் Today at 2:16 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 2:13 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்

Post by ஜாஹீதாபானு on Wed Jan 04, 2012 2:08 pm


”வீட்டுக்கு போலாமா..”

“இன்னும் கொஞ்ச நேரம் தாத்தா”

“அரை மணி தானே சொன்னே.. இப்ப ஒரு மணி நேரம் ஆச்சு”

“பிளீஸ் தாத்தா”

பூங்காவின் பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள். சறுக்கு மரம் ஆடியாகி விட்டது.

மஞ்சள் பூக்களைத் திரட்டி யானை பொம்மைக்கு போட்டு அழகு பார்த்தாகி

விட்டது. முன்பெல்லாம் ரேடியோ அலறிக் கொண்டிருக்கும். செய்திகள்

வாசிப்பது சரோஜ் நாராயணசாமி .. இப்போது ரேடியோ இல்லை.

”தாத்தா..”

“என்னடா”

“அங்கே பாருங்க”

“நில்லு.. ஓடாதே”

அவன் ஓடிய திசையில் ஒரு குட்டி நாய். திசை தப்பி வந்த பறவை போல..

கண்களில் ஒரு மிரட்சி..
“நம்ம வீட்டுக்குக் கொண்டு போலாமா”

‘வேண்டாம்’ என்று சொல்ல நினைத்தவர் சொல்லவில்லை.

“ம்” தலையாட்டினார்.

“அது என்ன சாப்பிடும்”

“நீ என்ன சாப்பிடுவே”

“பால்.. பிஸ்கட்.. பருப்பு சாதம்..”

“அதுவும் இதெல்லாம் சாப்பிடும்”

”எங்கே படுக்கும்”

“தனியா பெட் போடலாம்..”

“ஸ்வீட் தாத்தா”

இப்போது அவன் கவனம் முழுக்க அந்த நாயின் மேல். அது இவனிடம் ஒட்டிக் கொண்டது. பின்னாலேயே ஓடியது. அல்லது அவன் அதன் பின்னால் ஓடினான்.

இன்னும் ஒரு கால் மணி கரைந்தது.

மெல்ல இருட்டுவதற்கான ஆயத்தங்களை வானம் செய்ய ஆரம்பித்தது.

லைப்ரரியில் புத்தகம் எடுக்க வந்திருந்தேன். எடுத்தாகி விட்டது.

சா. கந்தசாமியின் ‘அவன் ஆனது’ மறு வாசிப்பிற்காக.

கிளம்பும்போது அந்த நாய்க்குட்டி.. பொடியன்.. தாத்தா. எதிர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன்.

கிளம்பணும்.. கிளம்பணும் என்று சொன்னவர் நிதானமாய்த்தான் இருந்தார்.
குரலில் அதட்டல் இல்லை.

“போலாமா.. இருட்டப் போறது”

“ம்..”

“நாய்க் குட்டிய என்ன பண்ணலாம்”

‘ம்ம்’

யோசித்து சொன்னான்.

“விட்டுட்டு போயிரலாம்.”

“ஏண்டா.. ஆசைப்பட்டியே”

“அதோட அம்மா தேடுவாங்க”

தாத்தா பேச்சிழந்து போனார். அதே நேரம் அவருக்குத் தெரிந்தவர் போலும்..

ஒருவர் அவரைப் பார்த்து விட்டார்.

“கணேசா.. நான் ஊர்ல இல்லடா.. என்னடா இப்படி ஆயிடுச்சு”

தாத்தா தம் நண்பனிடம் ‘வேணாம்’ என்பது போல உதட்டில் விரலை வைத்துக்

காட்டினார். அதைக் கவனிக்கும் பொறுமை இல்லை வந்தவரிடம்.

“உன் மாட்டுப் பொண்ணு.. ஆக்சிடெண்ட்ல போயிட்டாளாமே.. இந்த

பச்சைக் குழந்தைய விட்டுட்டு.. ஆடிப் போயிட்டேண்டா”

பூங்கா வாசலில் வந்த ஆட்டோவை கை தட்டி நிறுத்தினார் கணேசன் தாத்தா.

பேரனை இழுத்துக் கொண்டு ஏறி.. ஆட்டோ விர்ரென்று போனது.
திகைத்துப் போய் வந்தவர் நிற்க.. குட்டி நாய் ஆட்டோ பின்னால் சற்று தூரம் ஓடி நின்றது.

வெளியே வந்தேன். மனசுக்குள் இருட்டு கவிழ ஆரம்பித்திருந்தது.

ரிஷபன்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்

Post by ரேவதி on Wed Jan 04, 2012 2:11 pm

2 நாட்களாக உங்கள் கதையை படிக்கவே இல்லை...இன்றுதான் படித்தேன் என் அவ்ட்டர் படமும் நாய்க் குட்டி படம்தான் அருமையிருக்கு அருமையிருக்கு




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்

Post by உமா on Wed Jan 04, 2012 2:11 pm

சோகமான கதை. சோகம்



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்

Post by ஜாஹீதாபானு on Wed Jan 04, 2012 2:13 pm

ரேவதி wrote:2 நாட்களாக உங்கள் கதையை படிக்கவே இல்லை...இன்றுதான் படித்தேன் என் அவ்ட்டர் படமும் நாய்க் குட்டி படம்தான் அருமையிருக்கு அருமையிருக்கு

அதனால தான் இந்தக் கதை போட்டேன் ஜாலி நன்றி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்

Post by ஜாஹீதாபானு on Wed Jan 04, 2012 2:14 pm

உமா wrote:சோகமான கதை. சோகம்

சோகம் நன்றி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்

Post by மலிக்கா on Wed Jan 04, 2012 2:14 pm

கதை அருமை..

மலிக்கா
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 490
வசிப்பிடம்: துபை
சேர்ந்தது: 28/03/2011
மதிப்பீடு: 37

http://niroodai.blogspot.com   http://fmalikka.blogspot.com   http://kalaisaral.blogspot.com

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்

Post by ஜாஹீதாபானு on Wed Jan 04, 2012 2:15 pm

மலிக்கா wrote:கதை அருமை..

நன்றி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்

Post by kitcha on Wed Jan 04, 2012 2:26 pm

கிளம்பும்போது அந்த நாய்க்குட்டி.. பொடியன்.. தாத்தா. எதிர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன்.


“உன் மாட்டுப் பொண்ணு.. ஆக்சிடெண்ட்ல போயிட்டாளாமே.. இந்த

இந்த வரிகளின் அர்த்தம் எனக்கு புரியவில்லை

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்

Post by ஜேன் செல்வகுமார் on Wed Jan 04, 2012 2:38 pm

வெளியே வந்தேன். மனசுக்குள் இருட்டு கவிழ ஆரம்பித்திருந்தது. மகிழ்ச்சி

நல்ல சிறு கதை!!!மனதை சிறிது காயப்பதுதியது!!

ஜேன் செல்வகுமார்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2802
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 362

http://janeselvakumar.blogspot.com/

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்

Post by ஜாஹீதாபானு on Wed Jan 04, 2012 2:51 pm

kitcha wrote:
கிளம்பும்போது அந்த நாய்க்குட்டி.. பொடியன்.. தாத்தா. எதிர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன்.


“உன் மாட்டுப் பொண்ணு.. ஆக்சிடெண்ட்ல போயிட்டாளாமே.. இந்த

இந்த வரிகளின் அர்த்தம் எனக்கு புரியவில்லை

பையனோட அம்மா இறந்து போயிட்டாங்கணு அந்தப் பெரியவர் பையனின் தாத்தாவிடம் கேட்கிறார் .இது புரிய்லயா

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்

Post by நியாஸ் அஷ்ரஃப் on Wed Jan 04, 2012 2:58 pm

kitcha wrote:
கிளம்பும்போது அந்த நாய்க்குட்டி.. பொடியன்.. தாத்தா. எதிர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன்.

“உன் மாட்டுப் பொண்ணு.. ஆக்சிடெண்ட்ல போயிட்டாளாமே.. இந்த

இந்த வரிகளின் அர்த்தம் எனக்கு புரியவில்லை


கிளம்பும்போது அந்த நாய்க்குட்டி.. பொடியன்.. தாத்தா. எதிர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன்.


கதாசிரியர் லைப்ரரியிலிருந்து கிளம்பும்போது (நாய்க்குட்டி , பொடியன் , தாத்தா ) இதெல்லாம் நடந்தது அதை எதிர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன் என்கிறார். புன்னகை


“உன் மாட்டுப் பொண்ணு.. ஆக்சிடெண்ட்ல போயிட்டாளாமே.. இந்த


இந்த மாட்டுப்பொண்ணு என்பது சிறுவனுடைய அம்மாவாக இருக்க வேண்டும்.



நியாஸ் அஷ்ரஃப்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1313
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 15/06/2010
மதிப்பீடு: 92

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்

Post by kitcha on Wed Jan 04, 2012 2:59 pm

ஜாஹீதாபானு wrote:
kitcha wrote:
கிளம்பும்போது அந்த நாய்க்குட்டி.. பொடியன்.. தாத்தா. எதிர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன்.


“உன் மாட்டுப் பொண்ணு.. ஆக்சிடெண்ட்ல போயிட்டாளாமே.. இந்த

இந்த வரிகளின் அர்த்தம் எனக்கு புரியவில்லை

பையனோட அம்மா இறந்து போயிட்டாங்கணு அந்தப் பெரியவர் பையனின் தாத்தாவிடம் கேட்கிறார் .இது புரிய்லயா


எதையும் எளிதாக புரிந்துகொள்ள முடியாது(மரமண்டை). மாட்டுப் பொண்ணு என்ற வார்த்தை புரியவில்லை அதுதான் கேட்டேன்.

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்

Post by நியாஸ் அஷ்ரஃப் on Wed Jan 04, 2012 3:00 pm

கதை அருமை பாட்டி சூப்பருங்க பகிர்வுக்கு நன்றிகள் !! நன்றி

நியாஸ் அஷ்ரஃப்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1313
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 15/06/2010
மதிப்பீடு: 92

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்

Post by ஜாஹீதாபானு on Wed Jan 04, 2012 3:03 pm

kitcha wrote:
ஜாஹீதாபானு wrote:
kitcha wrote:
கிளம்பும்போது அந்த நாய்க்குட்டி.. பொடியன்.. தாத்தா. எதிர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன்.


“உன் மாட்டுப் பொண்ணு.. ஆக்சிடெண்ட்ல போயிட்டாளாமே.. இந்த

இந்த வரிகளின் அர்த்தம் எனக்கு புரியவில்லை

பையனோட அம்மா இறந்து போயிட்டாங்கணு அந்தப் பெரியவர் பையனின் தாத்தாவிடம் கேட்கிறார் .இது புரிய்லயா


எதையும் எளிதாக புரிந்துகொள்ள முடியாது(மரமண்டை). மாட்டுப் பொண்ணு என்ற வார்த்தை புரியவில்லை அதுதான் கேட்டேன்.

பிராமண வீட்டில் மருமகளை மாட்டுபொண்ணு என்று தான் சொல்வாங்க . எனக்குத் தெரியுது உங்களுக்கு தெரியல என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்

Post by ரா.ரா3275 on Wed Jan 04, 2012 3:12 pm

சென்டிமெண்ட் சூப்பர்...ரிஷபன் யாரு?...நீங்களா?...கடிக்கறீங்க... கத சொல்றீங்க... கவித எழுதறீங்க...உங்க பேரு ஜாகீதாபானு இல்லீங்க...சகலகலா பானுங்க....கலக்குங்க... மகிழ்ச்சி




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum