புதிய பதிவுகள்
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்புகழ் - பாடல் 1307 Poll_c10திருப்புகழ் - பாடல் 1307 Poll_m10திருப்புகழ் - பாடல் 1307 Poll_c10 
57 Posts - 55%
heezulia
திருப்புகழ் - பாடல் 1307 Poll_c10திருப்புகழ் - பாடல் 1307 Poll_m10திருப்புகழ் - பாடல் 1307 Poll_c10 
41 Posts - 40%
mohamed nizamudeen
திருப்புகழ் - பாடல் 1307 Poll_c10திருப்புகழ் - பாடல் 1307 Poll_m10திருப்புகழ் - பாடல் 1307 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
திருப்புகழ் - பாடல் 1307 Poll_c10திருப்புகழ் - பாடல் 1307 Poll_m10திருப்புகழ் - பாடல் 1307 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்புகழ் - பாடல் 1307 Poll_c10திருப்புகழ் - பாடல் 1307 Poll_m10திருப்புகழ் - பாடல் 1307 Poll_c10 
99 Posts - 58%
heezulia
திருப்புகழ் - பாடல் 1307 Poll_c10திருப்புகழ் - பாடல் 1307 Poll_m10திருப்புகழ் - பாடல் 1307 Poll_c10 
62 Posts - 36%
mohamed nizamudeen
திருப்புகழ் - பாடல் 1307 Poll_c10திருப்புகழ் - பாடல் 1307 Poll_m10திருப்புகழ் - பாடல் 1307 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
திருப்புகழ் - பாடல் 1307 Poll_c10திருப்புகழ் - பாடல் 1307 Poll_m10திருப்புகழ் - பாடல் 1307 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்புகழ் - பாடல் 1307


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Apr 04, 2013 11:38 pm



அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும்

மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.


அகரமுமாகி அதிபனுமாகி அதிகமுமாகி அகமாகி
இகரமுமாகி எவைகளுமாகி இனிமையுமாகி வருவோனே



அகரமும் இகரமும் ஆனவன் முருகன் ஆதியும் அந்தமும் ஆனவன் முருகனே என்கிறது திருப்புகழ் !!

ஆனால் கடவுளோ ஆதியும் அந்தமுமில்லாதவர் துவக்கம் அல்லது முடிவு என்கிற வரையரைகளுக்கு அப்பாற்பட்டவர் !!

படைக்கப்பட்டவைகள் மட்டுமே முதலும் முடிவும் என்ற பரிமாணம் உள்ளவை !!

திருப்புகழ் பொய் சொல்லாதது !

ஏனென்றால் முருகன் அருணகிரியாரின் நாவிலே வேல் கொண்டு எழுதி பாடு என பணித்ததால் அருளில் நிறம்பி பாடப்பட்டவை அதன் முழு அர்த்தம் பாடிய அருணகிரிக்கும் புரிந்திருக்கும் என சொல்லமுடியாது !!

பின் ஏன் முருகன் துவக்கமும் முடிவுமானவன் என்று திருப்புகழ் சொல்லுகிறது ?

இப்பாடலை தொடர்ந்து வாசித்தால் மட்டுமே இந்த புதிரை அவிழ்க்கமுடியும் !!

எவைகளுமாகி -- அதாவது படைக்கப்பட்ட எவைகளுமானவன் என்கிறது !

அதாவது முருகனுக்குள் அனைத்தும் படைக்கப்பட்டுள்ளது

அகமாகி -- அதாவது மனிதர்களின் அகமாக உள்ளே உறைபவன்

ஆகா ஆகா இதைத்தானே நாங்கள் சொல்லிக்கொண்டுள்ளோம் ஞானசூன்ய பக்தர்களே

கடவுள் எனக்குள்ளேதான் உள்ளார் எதற்காக வெளியே தேடி அலைகிறீர்கள் என அத்வைதத்தை அரைகுறையாக புரிந்துகொண்டவர்களும் நாலு சித்தர் பாடல்களை கையிலே வைத்துக்கொண்டு ஆன்மீகவாதிகள் போல காட்டிக்கொள்ளும் நவீனநாத்திகவாதிகளும் கைகொட்டுகிறார்கள்

அதிகமுமாகி -- முருகன் எல்லாமுமானான் அகமாக அவைகளில் உறைகிறான் அப்புறமும் மீந்துபோய் மிச்சம் வெளியேயும் நிற்கிறான் இதுதான் விசிஷ்டாத்வைதம் !! இறைவன் அகத்திலும் புறத்திலும் இருக்கிறான் ! சகலத்திலும் தனித்தும் இருக்கிறான் !

அதிபனுமாகி -- அதாவது படைக்கப்பட்டவைகளுக்கு ஆட்சியாளனும் அவனே

ஆனால் மனிதர்கள் சுயமடைந்து ஆட்சியாளனை விட்டு ஒதுங்கிக்கொள்ள முடியும் அசுர ஆவிகள் மனித உணர்ச்சிகளை சிந்தனையை தூண்டி மனிதர்களை கடவுளோடு ஒப்புறவாக இல்லாதபடி பிரித்துவிடுகின்றன !

அவ்வாறு தன்முனைப்பு கொள்பவர்களால் பூமியில் சண்டைசச்சரவுகள் குழப்பங்கள் உண்டாகி வாழ்வு துக்கமயமாகிறது

அப்போது யார் சற்குருவாகிய முருகனை சரணடைந்து அவனது ஆழுமைக்கு ஒப்புக்கொடுக்கிறார்களோ அவர்களுக்கு முருகனின் ஞானமாகிய வேல் ஒத்தாசை செய்து பக்தி பேரானந்தத்தை அருளுகிறது

அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய்

உருவாக்குபவனும் நீயே ! படைப்புகளை கண்கானிக்கிறவனும் நீயே ! காக்கிறவனும் நீயே !

இரு நிலமீதில் எளியனும் வாழ எனதுமுன்னோடி வரவேணும்

மனித ஆத்துமா பிறவியெடுத்துள்ள நிலையில் ஏதோ ஒரு பெயர் சொந்தபந்தம் ஜாதி மதம் மொழி நாடு கவுரவம் அந்தஸ்து என அடையாளத்துடன் வாழ்கிறது அது நிரந்தரம் என்பதாகவும் நம்பிக்கொண்டுள்ளது ! குழு உணர்வு அது வாழ்வதற்கு அவசியமும் கூட ஆனால் இறந்து மறுபிறவி எடுக்கும்போது ஏறுக்குமாறாக பிறந்து தன்னை வேறொரு குழுவாக நினைத்துக்கொள்ளும் போன பிறவியில் தூக்கிவைத்து ஆடிய குழுவுக்கு பதிலாக வெறுத்த குழுவிலேயே கூட கடவுள் ஒரு ஆத்துமாவை பிறக்கவைத்து விடலாம் ! முந்தைய பிறவியின் பாவம் புண்ணியம் ஞானம் மட்டுமே புதுப்பிறவியை வாட்டுமே தவிற முந்தைய பிறவி ஞாபகங்கள் அதற்கு தடைசெய்யப்பட்டு விடுகின்றன !

ஆனால் ஒரு ஆத்துமா இறந்தபிறகும் புதுப்பிறவி கிடைக்கும்வரை அது பூமியின் பாதளத்தில் செயல்பட முடியாமல் ஓய்ந்திருக்கும் அப்போது இறந்த பிறவி ஞாபகங்கள் கடமைகள் உறவுகளை நினைத்து தவிக்கும்

அப்படி யாரேனும் இருந்தால் அவர்களை ஆறுதல் படுத்தவும் அவர்களுக்காக கடவுளை வேண்டவும் திவசம் கொடுப்பதை வழக்கமாக்கினார்கள்

பூமியிலும் புதுபிறவியெடுக்குமுன் பாதாளத்திலும் நான் இருக்கும்போது சற்குருவே நான் நிம்மதியடைய அருள்புரிவீராக என வேண்டுவது நமக்கு அவசியம்

வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே


பக்தி செய்வதற்கும் தியானம் பழகுவதற்கும் நல்வழியில் நடப்பதற்கும் ஏதேனும் சில தகுதி விரதங்கள் அவசியம் என்ற பிரமை அல்லது தாழ்வுமனப்பாண்மை பல நல்லவர்களைக்கூட கடவுளின் பக்கம் வரவிடாமல் தடுத்துவிடுகிறது

ஆனால் சற்குரு முருகன் மூலமாக கடவுளை அண்டுவோர் நாகரீகமே தெரியாத காட்டுவாசியாகவும் தனக்குத்தெரிந்த எதையாவது கடவுளுக்கென்று செய்தாலே போதுமானது ஆறு துர்க்குணங்களும் சீரமைக்கப்படுவதும் வாழ்வில் பக்திப்பேரானந்தம் உண்டாவதும் முருகளால் உறுதி செய்யப்படும் !!

மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே

நற்குணங்கள் அதிகரித்து தெய்வீக இயல்புகள் ஒரு மனிதனிடத்து பெருகும்போது அவன் அசுரர்களுக்கு இடம்கொடாதவனாக அவர்களோடு முறன்பாடுகள் அதிகரிக்கிறது ! ஆன்மீகத்தில் சிறிது வளர்ந்தாலே அசுராஅவிகள் ஒரு மனிதனுக்கு தடங்கல்கள் பிரச்சினைகள் கொண்டுவருகின்றன ! அவனது பலகீனங்களை குறிபார்த்து அடித்து அவனை வீழ்த்துவதில் கவணமாக உள்ளன ! அவைகளோடு முறன்பட்டு தடுமாறி வீழ்ந்து எழுந்து ஒருசாதகன் வளருவதை வலாரிகளுடன் மறுவுதல் என்கிறது திருப்புகழ் ! அவ்வாறு மறுவிமறுவி அவைகளை வெல்லும் பக்குவமும் பயிற்சியும் அடைந்த சாதகன் அசுரர்களை அடக்குகிறவனாக பூமியில் மாறுகிறான் ! அத்தகையோர் மூலமாக பூமியில் பரலோக ராஜ்ஜியம் விரிவு படுத்தப்படுகிறது ! அன்பு சந்தோசம் சமாதானம் பலருக்கும் பெருக்கொடுத்து ஓடுகிறது ! அத்தகைய உபகுருக்கள் மூலமாக பல சாதகர்கள் மேன்மையடையும் வழி -- குரு பார்க்க கோடி பாவம் தீருகின்ற வழி சற்குருவாகிய முருகனாலேயே உபகுருக்கள் உண்டாகின்றனர் ! மகபதியாகி மகிழ்களிகூறும் வடிவினர்களான உபகுருக்கள் மூலமாக முருகனே வெளிப்படுகிறார் !!

திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.

பழமுதிர் சோலை மலையின் மீது வீற்றிருக்கும் முருகனே !! நீயே திருமால் !! திருமால் ஆன பெருமாள் !!

தொல்காப்பியம் தான் இப்போது கிடைக்கும் நூல்களில் மிக மூத்த -- பழமையான நூல் ! சங்ககாலம் என்ற ஆதி நாட்களின் நூல் இது ! தமிழுக்கு இலக்கணம் இந்த நூல் மூலமாகவே வரையறுக்கப்பட்டுள்ளது !இந்த நூலில் தமிழர்களின் வாழ்வுநெறி பண்பாடு வழிபாடு குறித்து பல குறிப்புகள் உள்ளன !!

அதில் பழந்தமிழ் மக்கள் வணங்கிய இரு பெரும் இயற்கைத் தெய்வங்கள் = மாயோன், சேயோன்!
* மாயோன் = பெருமாள் = முல்லைக் கடவுள்
* சேயோன் = முருகன் = குறிஞ்சிக் கடவுள் மட்டுமே என காணப்படுகிறது ! சிவனைப்பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை

மாயோன் மேய காடுறை உலகமும்,
சேயோன் மேய மைவரை உலகமும்,
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்,
வருணன் மேய பெருமணல் உலகமும்,
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே! --- தொல்காப்பியம் !!


ஆதியிலே தமிழர்கள் அருப கடவுளை வழிபட்டவர்களே ! அதை இயற்கை வழிபாடு என திரித்து சொல்லுகிறார்கள் ! அதன் பின்பு மாயோன் என்ற நாராயணன் மூலமாகவும் சேயோன் என்ற முருகன் மூலமாகவும் அதாவது குருவாக வைத்து கடவுளை வழிபட்டனர் ! தொல்காப்பியத்தில் உள்ள ஆதாரம் இங்கு சுட்டப்பட்டுள்ளது ! அப்போது சிவன் வழிபாடு இருக்கவில்லை ! ஆனால் சிவன்தான் சற்குரு மூலமாக மட்டுமே கடவுளை அடையமுடியும் என உலகிற்கு சொன்னார் எனப்தே குருகீதையாகும் !!

சிவன் வழிகாட்டியபடி சற்குருவாக நாராயணனை அல்லது முருகனை வைத்து அரூப கடவுளை வழிபடும் வழக்கம் மட்டுமே ஆதி தமிழர்களிடம் இருந்திருக்கிறது !!

அரூபமான கடவுளிடமிருந்து வந்த முதல் வெளிப்பாடு அவரது சத்தம் ! ஆகுக என்ற அவரது வார்த்தை முதல் வெளிப்பாடு !
நரல் என்றால் சத்தம்
நரல்+ ஆய +நன்= நாராயணன்


அதனால்தான் சங்கை கையில் போட்டார்கள் ஆக்கமும் அழிவும் அவருக்கள்ளிருந்து தோன்றி அவருக்குள் மறைவதால் சக்கரத்தை போட்டார்கள் 1 நாராயணனுக்கு ஒரு உருவத்தை கற்பிக்கும்முன்பு அவர் மாயோன் ! சகலமுமாகி விண்ணிலே மாயமாக இருந்து தாங்குபவர் !

அவர் அவ்வப்போது பூமிக்கு அவதாரமாக இறங்கி வருவார் என்பதே சேயோன் அல்லது மனிதமாக மாறி வருவதால் அவர் முருகன் !

இந்த முருகனுக்கும் ஆதியிலே உருவம் இல்லை ! ஆறுபடை வீடுகளிலும் வேல் மட்டுமே கருவறையில் செதுக்கப்பட்டுள்ளது !பின்னாளில் உருவத்தை கொண்டு ஒட்டிக்கொண்டார்கள் ! சமீபத்தில் மாமல்லபுரம் புலிக்குகை அருகில் பூமியில் புதையுண்டிருந்த ஒரு கோவில் வெளிப்பட்டது ! அது கிரிஸ்துவுக்கும் முன்பு 400 வருடங்களுக்கு முற்பட்டது என கண்டறிந்திருக்கிறார்கள் ! அந்தக்கோவிலில் கருவறையில் வேல் மட்டுமே உள்ளது அது ஒரு பழமையான முருகன் கோவில் 1 உருவம் இல்லை !

ஆக கடவுளால் நாராயணன் படைக்கப்பட்டார் ! அவருக்குள் சகலமும் உற்பத்தியாகி அவருக்குள்ளேயே அழிந்துகொண்டும் உள்ளது ! அவர் பூமியில் மனிதனாக அவதரித்து வந்தால் அவர் முருகன் !

ஆகவே ஆதியும் அந்தமும் இல்லாத கடவுளால் படைக்கப்பட்ட நாராயணன் அல்லது முருகனும் ஆதி உள்ளவர்களே ! கடவுள் நாடினால் அந்தமும் உண்டாகலாம் ! ஆகவே திருப்புகழும் முருகன் ஆதியும் அந்தமும் உள்ளவன் என்கிறது !!


ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி !!


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக