புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர் திருமணம் - Page 3 Poll_c10தமிழர் திருமணம் - Page 3 Poll_m10தமிழர் திருமணம் - Page 3 Poll_c10 
44 Posts - 51%
heezulia
தமிழர் திருமணம் - Page 3 Poll_c10தமிழர் திருமணம் - Page 3 Poll_m10தமிழர் திருமணம் - Page 3 Poll_c10 
32 Posts - 37%
mohamed nizamudeen
தமிழர் திருமணம் - Page 3 Poll_c10தமிழர் திருமணம் - Page 3 Poll_m10தமிழர் திருமணம் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழர் திருமணம் - Page 3 Poll_c10தமிழர் திருமணம் - Page 3 Poll_m10தமிழர் திருமணம் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
jairam
தமிழர் திருமணம் - Page 3 Poll_c10தமிழர் திருமணம் - Page 3 Poll_m10தமிழர் திருமணம் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
சிவா
தமிழர் திருமணம் - Page 3 Poll_c10தமிழர் திருமணம் - Page 3 Poll_m10தமிழர் திருமணம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Manimegala
தமிழர் திருமணம் - Page 3 Poll_c10தமிழர் திருமணம் - Page 3 Poll_m10தமிழர் திருமணம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழர் திருமணம் - Page 3 Poll_c10தமிழர் திருமணம் - Page 3 Poll_m10தமிழர் திருமணம் - Page 3 Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
தமிழர் திருமணம் - Page 3 Poll_c10தமிழர் திருமணம் - Page 3 Poll_m10தமிழர் திருமணம் - Page 3 Poll_c10 
127 Posts - 38%
mohamed nizamudeen
தமிழர் திருமணம் - Page 3 Poll_c10தமிழர் திருமணம் - Page 3 Poll_m10தமிழர் திருமணம் - Page 3 Poll_c10 
14 Posts - 4%
prajai
தமிழர் திருமணம் - Page 3 Poll_c10தமிழர் திருமணம் - Page 3 Poll_m10தமிழர் திருமணம் - Page 3 Poll_c10 
9 Posts - 3%
jairam
தமிழர் திருமணம் - Page 3 Poll_c10தமிழர் திருமணம் - Page 3 Poll_m10தமிழர் திருமணம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழர் திருமணம் - Page 3 Poll_c10தமிழர் திருமணம் - Page 3 Poll_m10தமிழர் திருமணம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழர் திருமணம் - Page 3 Poll_c10தமிழர் திருமணம் - Page 3 Poll_m10தமிழர் திருமணம் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Rutu
தமிழர் திருமணம் - Page 3 Poll_c10தமிழர் திருமணம் - Page 3 Poll_m10தமிழர் திருமணம் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தமிழர் திருமணம் - Page 3 Poll_c10தமிழர் திருமணம் - Page 3 Poll_m10தமிழர் திருமணம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தமிழர் திருமணம் - Page 3 Poll_c10தமிழர் திருமணம் - Page 3 Poll_m10தமிழர் திருமணம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் திருமணம்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 8:30 am

First topic message reminder :

1. பொற்காலம்

உலக வரலாற்றைப் படிப்பவர்கள் ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு பொற்காலம் இருந்திருப்பதை அறிந்து கொள்ளலாம்.

புதிய உலக நாகரீகத்தின் தொட்டில் என வர்ணிக்கப்படும் கிரேக்கர்களுக்கு கி.மு. 7ம் நூற்றாண்டு தொடக்கம் கி.மு. 4ம் நூற்றாண்டு வரையிலான காலம் பொற்காலமாக இருந்திருக்கிறது.

உலகம் மந்திரம், தந்திரம் மாயம் நிறைந்த சடப்பொருள் என்ற மாயையில் இருந்து விடுபட்டு உலகத் தோற்றம், வளர்ச்சி பற்றி அறிவியல் அடிப்படையில் ஆராய முற்பட்ட பெருமை கிரேக்கர்களையே சாரும். அறிவியல் சார்ந்த எல்லாத்துறைகளிலும் கிரேக்கர்களது கை வண்ணத்தையும் கலை வண்ணத்தையும் காணலாம்.

மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன் என்ற எண்ணத்தை மாற்றி கடவுளைத் தனது உருவத்தில் படைக்க ஆரம்பித்தவர்களும் கிரேக்கர்களே. உலகம் உட்பட எல்லாவற்றையும் எண்ணங்களாகவும் (concepts) உருவங்களாகவும் (figures) கிரேக்கர்கள் பார்த்தார்கள்.

இந்தக் கால கட்டத்திலேயே புகழ்பெற்ற தத்துவ ஞானிகளான தேல்ஸ் (Thales) ( கி.மு. 640-546), அறிவு ஆசான் சாக்கரட்டிஸ் (Socrates)( கி.மு. 469-399), பிளாட்டோ ( Plato)(கி.மு. 427-347)இ அரிஸ்ரோட்டல் (Aristotle)(கி.மு. 384-322), போன்றவர்கள் தோன்றினார்கள்.

"வரலாற்றின் தந்தை" ("Father of History") என அழைக்கப்படும் ஹெரடோரஸ் (Herodotus), சொற்பொழிவாளர் டெமொதீனஸ் (Demosthenes) (கி.மு. 384-322), "ஒவ்வொரு நோய்க்கும் இயற்கையான காரணம் உண்டு" ("every illness has a natural cause") என்று கூறிய மருத்துவத்தின் தந்தை ( "Father of Medicine") என்று போற்றப்பட்ட கிப்போகிறேட்ஸ் (Hippocrates) (கி.மு. 460-377) மகதீனஸ் (Magathenes)

இதே காலத்தைத் சேர்ந்தவர்கள்தான். கணித விற்பன்னர்களான பைத்தோகரஸ் (Pythagoras) , இகுலிட் (Euclid)இ ஆர்கிமிடிஸ் (Archimedes) போன்றவர்கள் வாழ்ந்த காலமும் இதுதான்.

எகிப்து, பாரசீகம், வட மேற்கு இந்தியா இவற்றின் மீது படையெடுத்து வெற்றி கண்ட மகா அலெக்சாந்தர் (Alexander the Great) காலமும் இதுதான். மகா அலெக்சாந்தரின் ஆசிரியர் அரிஸ்ரோட்டல் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தக் கால கட்டத்தில் எழுதப்பட்ட பௌதீகம், வேதியல், தத்துவம், கணிதம், மருத்துவம், இலக்கியம், சமயம், இசை, நாடகம், சிற்பம், ஓவியம் சம்மந்தமான நூல்களை மொழிபெயர்த்துப் படித்ததினாலேயே ஐரோப்பா அறியாமை என்ற இருண்ட காலத்தில் இருந்து (Dark Age) னு அறிவுடமை நிறைந்த நாகரிக உலகத்துக்கு (கி.பி. 4வது - 11வது நூற்றாண்டு) காலடி எடுத்து வைக்க முடிந்தது.

ஐரோப்பிய மொழிகளின் அரிச்சுவடி கிரேக்க மொழியிலிருந்து சிறிய மாறுதலுடன் உருவாக்கப் பட்டதாகும். ஆங்கிலத்தில் உள்ள பல கலைச்சொற்கள் ( democracy, aristocracy, psychology) கிரேக்கத்தில் இருந்து நேரடியாக ஒலிமாற்றம் செய்யப்பட்டவையாகும்.

மேற்கூறியவற்றிலிருந்து உலக நாகரிக வளர்ச்சிக்கு கிரேக்கர்களது பங்களிப்பை ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.

ஆங்கிலேயரை எடுத்துக் கொண்டால் அவர்களது பொற்காலம் விக்டோரியா அரசியாரின் (1819-1901) 65 ஆண்டு கால நீண்ட ஆட்சிக் காலம் (1837-1901)என்று சொல்லலாம். பிரித்தானியாவின் கடல் கடந்த சாம்ராஜ்யம் இவரது காலத்திலேயே வலுப்பெற்றது. இந்தியாவின் சக்கரவர்த்தினியாக 26 ஆண்டுகள் (1976-1901)அரசு கட்டிலில் இருந்திருக்கிறார். பிரித்தானியாவின் தொழிற்புரட்சி இவரது காலத்திலேயே ஏற்பட்டது. அறிவியல், போர், பொருளாதாரம், கலை, இலக்கியத் துறை போன்ற எல்லாத் துறைகளிலும் பிரித்தானியா கொடி கட்டிப்பறந்தது. உலக ஏகாதிபத்தியத்தின் மொத்த உருவமாக இருந்த பிரித்தானியா சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று வர்ணிக்கப் பட்டது.

தமிழினத்தைப் பொறுத்தளவில் சங்க காலமே தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. தமிழர்களது நீண்ட கால வரலாற்றை உய்த்து உணர்ந்து ஆராய்பவர்கள் இந்த உண்மையை எளிதில் ஒப்புக் கொள்வார்கள்.

சங்ககாலத்தில் ஆட்சி புரிந்த அரசர்களே தமிழ் மன்னர்களாக விளங்கினார்கள். அவர்கள் மட்டுமல்ல அவர்களது பெயர்களும் தூய தமிழில் இருந்தன.

சங்கப் புலவர்களால் படைக்கப் பட்ட எட்டுத்தொகை, பத்துப் பாட்டு நூல்களும், சங்கம் மருவிய காலத்தில் எழுந்த பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் தமிழர்களது நாகரிகச் சிறப்புக்கும், கலை, பண்பாட்டிற்கும், இயற்கையோடு இசைந்த வாழ்வுக்கும் கட்டியங் கூறுகின்றன.

சங்க காலத்தில் பிற்காலத்தில் பிறமொழிப் பண்பாட்டுப் படையெடுப்பால் எழுந்த சாதி, சமய, வேறுபாடுகள் இருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் அமைப்பு ரீதியான சமயம் இருக்கவில்லை. பேய், பிசாசு, மந்திர தந்திரம், சகுனம், மேல் உலகங்கள், கீழ் உலகங்கள், நரகம், சொர்க்கம் போன்ற மூடநம்பிக்கைகள் இருக்கவில்லை. பொது மக்கள் மத்தியில் இந்த நம்பிக்கைகள் இருந்திருக்கலாம். ஆனால் படித்தவர்கள் மத்தியில் இருக்கவில்லை.

மேலே குறிப்பிட்ட சங்க இலக்கியங்களை சமூகத்தின் பல படிகளிலும் இருந்த புலவர்கள் படைத்திருக்கிறார்கள். புவி ஆண்ட மன்னர்கள் தொடக்கம் கூலவாணிகர்கள் ஈறாக கவி பாடியுள்ளார்கள். ஆடவரும் பெண்டிரும், அந்தணரும், வணிகரும், குறவனும் குறத்தியும் என்று பல்வேறு பட்ட புலவர்கள் பாடல்கள் பாடியுள்ளார்கள். சங்கப் புலவர்களின் மொத்த எண்ணிக்கை 500க்கும் அதிகமாகும். வேறு எந்த நாட்டிலும் காணாதவாறு பெண்பால் புலவர்கள் மட்டும் 50க்கும் அதிகமாக இருந்திருக்கிறார்கள். இது சங்க காலத்தில் ஆண்களைப் போலவே பெண்களும் ஒத்த கல்விகற்று ஒத்த உரிமையோடு வாழ்ந்திருந்த உயர்ந்த வாழ்க்கைமுறையைக் காட்டுகிறது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 9:40 am

8. தமிழரின் முதிசம்

தொல்காப்பிய வழியில் சங்க இலக்கியம் உணர்த்தும் அகப் புறக் கோட்பாடு உலக இலக்கிய கோட்பாட்டுக்கு தமிழர்கள் வழங்கிய முதிசம் என்று கூறலாம்.

காதலின் பல்வேறு உணர்ச்சிகளை உரிப்பொருளாக வைத்துக் கொண்டு அவற்றிற்குப் பின்னணியாக இயற்கைக் காட்சிகளையும், நிலவகைகளையும், காலங்களையும் அமைத்துகாலத்தை வென்று நிற்கும் இலக்கியங்களை சங்கப் புலவர்கள் படைத்துள்ளார்கள். முதற் பொருள் இல்லாமலும், கருப்பொருள் இல்லாமலும் பாடல்கள் இருக்கலாம். ஆனால் உரிப்பொருள் இல்லாது பாடல்கள் இல்லை.

உள்ளுறை உவமம் என்ற உத்தியை சங்கப் புலவர்கள் கையாண்டுள்ளார்கள். வர்ணனை இயற்கைக் காட்சியாக இருக்கும், ஆனால் அடிப்படையில் அது தலைவன் - தலைவி இருவருக்கும் இடையில் ஏற்படும் உறவைத்தான் மறைமுகமாக வர்ணிக்கும்.

சங்க இலக்கியம் உலகின் தலைசிறந்த இலக்கியங்களோடு ஒப்பிட்டு 'ஒப்புமையில்லாதது" எனப் பாராட்டப்பட்டுள்ளது. பிரித்தானிய கலைக்களஞ்சியம் ( நுnஉலஉடழியநனயை ழக டீசவையnniஉய) தமிழ் இலக்கிய வளம் நிறைந்த மொழி என்று புகழ்ந்து பேசுகிறது.

"In the Tamil sangam Literature, the poems are classified by theme into ‘akam’ and ‘puram’. Both the akam and the puram had well defined genres called ‘thinais’ that paralleled one another, the same poets, for example Paranar and Kapilar wrote great poems in both genres. Each landscape a repertoire of images anything in it may evokes a special feeling. The natural scene implicitly evokes the human scene. For example bee-making honey out of Kurinji flowers evokes the love of union. Not only is the poet’s language Tamil, but the landscapes, the personae and the appropriate moods and situations formulate the realities of the Tamil world into a code of symbols. For some five or six generations, the Sangam poets spoke this common language of symbols creating a body of lyrical poetry probably unequalled in passion, maturity and delicacy by anything in any Indian literature."

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 9:45 am

9. வைதீகத் திருமணம் அறிமுகம்



சங்கம் மருவிய காலத்தில் (கி.பி. 2ம் நூற்றாண்டு) எழுந்த சிலப்பதிகாரத்தில் தமிழர் திருமணம் சங்ககால மரபை மீறி வைதீக நெறிப்படி நடந்தேறியதை முதன் முதலாகப் பார்க்கிறோம்.சிலப்பதிகாரம் பெண்ணின் பெருமையையும் கற்பின் மாண்பையும் பேச வந்த காப்பியம் என்பதால் இளங்கோ அடிகள் முதலில் கண்ணகியையும் பின்னர் கோவலனையும் அறிமுகம் செய்து வைக்கிறார்.கண்ணகி புகார் நகரத்து வான்நிகர் வண்கை மாநாய்க்கன் குலக் கொழுந்து. அது போலவே கோவலன் இருநிதிக் கிழவன் மாசாத்துவான் மகன். போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும்தீதுஇலா வடமீனின் திறம் இவள் திறாம் என்றும்மாதாரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்துக்காதலாள், பெயர் மன்னும் கண்ணகி என்பார் மன்னோ.(சிலம்பு. மங்கல வாழ்த்துப் பாடல் 25)இருவரது பெற்றோரும் சேர்ந்து மனமகிழ்வோடு கோவலன் கண்ணகிக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணப் பந்தலின் அழகு, மறை வழியில் திருமணம் நடந்தமை, திருமணத்துக்கு வந்திருந்த பெண்டிரின் நலன்கள் இவற்றை எல்லாம் கூறி, மகளிர் கோவலன் கண்ணகியை மங்கல நல் அமளியில் ஏற்றியதைக் கூறிப் பின்பு இமயத்தை வென்ற சோழன் பெருமையைக் கூறி மணமக்களை வாழ்த்துகின்றனர்.அவரைஇருபெரும் குரவரும் ஒருபெரு நாளால்மணஅணி காண மகிழ்ந்தனர், மகிந்துழியானை எருத்தத்து அணிஇழையார் மேல் இரீஇமாநகர்க்கு ஈந்தார் மணம்.திருமண அறிவிப்பை யானை மேல் அணிகள் பூண்ட மகளிரை ஏற்றி இருத்தி புகார் நகரில் உள்ளோருக்கு மணச் செய்தியை அறிவிக்கின்றனர்.அவ்வழி

முரசு இயம்பின, முருடு அதிர்ந்தன, முறை எழுந்தன பணிலம், வெண்குடைதரசு எழுந்தது, ஓர்படி எழுந்தன, அகலுள் மங்கல அணி எழுந்ததுமாலை தாழ் சென்னி வயிர மணித் தூணகத்து நீலவிதானத்து, நித்திலப் பூம் பந்தர்கீழ்,வான் ஊர் மதியம் சகடு அணைய வானத்துச்சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்மாமுது பார்ப்பான் மறை வழி காட்டிடதீவலம் செய்வது காண்போர் நோன்பு என்னை!(சிலம்பு. மங்கல வாழ்த்து 45-53)பெரிய, முதிர்ச்சியுடைய அந்தணன், வணிகர்க்குரிய மறை நெறிகளின் படி வழிகாட்ட, மணமக்கள் தீவலம் வந்தனர். அக் காட்சியைக் காண்பவர் கண்கள் என்ன நோன்பு செய்தனவோ?!இதனை அடுத்து மணமக்களை வாழ்த்தி மங்கல அமளி ஏற்றினார்கள். ஏற்றி மணமக்களை வாழ்த்தும்போது பின்னர் கண்ணகிக்கு வர இருக்கும் துன்பத்தை முன்னரே எதிர்மறையில் வாழத்தியோர் வாய்மூலம் இளங்கோவடிகள் கூறிவிடுகிறார்."காதலன் பிரியாமல், கவவுக்கை ஞெகிழாமல் தீது அறுக!" என ஏத்தி, சின்மலர் கொடு தூவி அம் கண் உலகின் அருந்ததி அன்னாளை மங்கல நல் அமளி ஏற்றினார்.(சிலம்பு. மங்கல வாழ்த்து 61-63)பின்பு சோழன் வாழ்த்தப்படுகிறான்.தங்கியஇப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கைஉப்பாலைப் பொன்கோட்டு உழையதா, எப்பாலும்செருமிகு சினவேல் செம்பியன்ஒரு தனி ஆழி உருட்டுவோன் எனவே.(சிலம்பு. மங்கல வாழ்த்து 64-68)"என்றும் நிறைபெறும் இமயத்தின் இப்பக்கத்தில் பொறித்த சோழனின் புலிக்கொடி, அப்பக்கத்திலலும் இருக்கும்படி மலையைத் திரித்தான், போர்வல்ல சினம் பொருந்திய வேலையுடைய சோழன். தன் ஒப்பற்ற ஆணைச்சக்கரத்தை செலுத்துவானாக" என - வாழ்த்தினர்.

திருமணமான முதனாள் இரவு கோவலன் கண்ணகியைப் பார்த்து அவளது அழகினை போற்றி உரைக்கும் சிலப்பதிகார வரிகள் வேறு எந்த உலக இலக்கியத்திலும் காணப்படாத சுவை உடையது. புது மணமகன் நெட்டுருச் செய்து வைத்து தனது இல்லக்கிளத்தியைப் பார்த்து அடிக்கடி சொல்ல வேண்டிய பாடல்வரிகள். அது இது.

மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!

காசறு விரையே! கரும்பே! தேனே!!

அரும்பெறற் பாவாய்! ஆருயிர் மருந்தே!

பெருங்குடி வாணிகன் பெருமட மகளே!

மலையிடப் பிறவா மணியே என்கோ?

அலையிடப் பிறவா அமிழ்தே என்கோ?

யாழிடைப் பிறவா இசையே என்கோ?

தாழ்இருங் கூந்தல் தையால் நின்னை!


(சிலம்பு மனையறம்படுத்த காதை 73-80)

"குற்றமற்ற பசும்பொன்னே! வலம்புரிச் சங்கிலே பிறந்த முத்துப் போன்றவளே!

குற்றமற்ற விரைபோன்ற மணம் உடையவளே! கரும்பினும் இனிய சுவையுடையவளே! தேனினும் இனிமை உடையவளே! பெறுவதற்கு அருமையான பாவையே! என் அரிய உயிருக்கு அமிழ்தம் போன்றவளே!

பெருங்குடி வாணிகனின் பெருமை பொருந்திய இளமகளே!

நின்னை, 'மலையில் பிறவாத மணியே' என்று சொல்வேனோ?

'அலையிடப் பிறவாத அமிழ்தம்' என்று அழைப்பேனோ?

"யாழிடைப் பிறவாத இசையோ' என்று இயம்புவேனோ?

தாழ்ந்த கருமையான கூந்தலையுடை பெண்ணே!

நின்னை எவ்வாறெல்லாம் சொல்லித்தான் பாராட்டுவேனோ?"


இளங்கோ அடிகள் யாத்த சிலப்பதிகாரம் -

அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூம்என்ற மூன்று கருத்துக்களை நாட்ட எழுந்த பாட்டுடைச் செய்யுள ஆகும்.கண்ணகியை வள்ளுவர் இலக்கணம் சொன்ன "தெய்வம் தொழாள் கொழுநற் தொழுதெழுவாள் பெய்யனப் பெய்யும் மழை" என்றதற்கு அமைய இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் படைத்துள்ளார். இதனால் கண்ணகியை பலகாலும் பலவாறு புகழ்ந்து பாடியுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 9:46 am

" கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலம்;" எனக் கவுந்தி அடிகள் வாயிலாகவும்"இவளோ, கொங்கச் செல்வி, குடமலை ஆட்டி தென்தமிழ்ப்பாவை, செய்த தவக் கொழுந்து ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி எனத் தெய்வம் உற்று உரைப்பஎன சாலினி வாயிலாகவும் போற்றிப் புகழ்ந்துள்ளார்.கோவலனைப் பிரிந்த கண்ணகியை -அம்செம் சீறடி அணிசிலம்பு ஒழியமென்துகில் அல்குல் மேகலை நீங்ககொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்மங்கல அணியின் பிறிது அணி மகிழாள்கொடுங்குழை துறந்து படிந்து வீழ் காதினள்திங்கள் வாள்முகம் சிறு வியர்ப்பு இரியச்செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்பவள வாள் நுதல் திலகம் இழப்பத்மை இரும் கூந்தல் நெய் அணி மறக்கக்கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும் -(சிலம்பு. அந்திமாலைச் சிறப்பு 4757)எனச் சொற்சித்திரம் தீட்டிக் காட்டுவார் இளங்கோ அடிகள். இந்திராவிழாவை அடுத்து தண்ணகி கெட்ட கனாக் காண்கிறாள். அதனைத் தனது தோழி தேவந்திக்குக் கூறுகிறாள். அவள் கண்ணகிக்குத் தேறுதல் கூறுகிறாள்.

காவிரி கடலொடு கலக்கும் இடத்தில் மலருகின்ற நெய்தல் நில அழகிய கடற்கரைச் சோலையில் இரண்டு தடாகங்கள் உள்ளன. அவை சோ குண்டம், சூரிய குண்டம் என அழைக்கப் பெறும். அப் பொய்கைகளில் மூழ்கி மன்மதன் கோயில் சென்று தொழுதால் கணவரொடு மகிழ்வாக இருப்பர் மகளிர். நாம் ஒரு நாள் அங்குபோய் அப் பொய்கைகளில் நீராடுவோம் என்று கூறுவாள்.இதனைக் கேட்ட கண்ணகி இரண்டே இரண்டு சொற்களில் தனது தோழிக்குப் பதில் இறுக்கிறாள். அப்படிக் காமன் கோவில் சென்று வழிபடுவது எனக்கு "பீடு அன்று" என்பது அவளது பதில். சிலப்பதிகார காலத்தின்பின் கி.பி. 7 அல்லது 8ம் நூற்றாண்டில் தோன்றிய பெருங்கதையில் தீவலம் வருதல், அம்மி மிதித்தல், அரிசி தூவல், பிராமணர் ஆசி, அருந்ததி காட்டல் ஆகியவை இடம் பெறுகிறது.இதனை அடுத்து கி.பி. 9ஆம் நூற்றாண்டினதான சூளாமணியில் பெண்ணின் தந்தை தாரை வார்த்தல் (கன்னிகாதானம்) தீவலம் செய்தல், அம்மி மிதித்தல், அருந்ததி காட்டல் ஆகியவை கூறப்படுகிறது. தாரைவார்த்துக் கொடுத்தல் இதிலேதான் முதன்முறையாகப் பேசப்படுகிறது.சிந்தாமணியிலும் மணமகள் நீராட்டு, கல்பதித்த தோடு நீக்கல், காப்பு அணிவித்தல், மாலை சூட்டல், பெண்ணின் தந்தை நீர் அட்டிக் கொடுத்தல் ஆகியவை இடம் பெறுகின்றன.ஆதியில் இல்லை பாதியில் வந்ததுஎனவே வைதீக திருமணங்கள் ஆதியில் இல்லாது பாதியில் வந்தவை. அவை தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரானவை. செந்தமிழை ஒதுக்கி உயிரற்ற வடசொல் கூச்சலுக்கு முன்னுரிமை கொடுப்பவை. கன்னிகாதானம் பெண் அடிமையை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. பார்ப்பனர்களின் பழக்க வழக்கங்கள், நாகரிகம் இவைகளைச் சித்தரிக்க எழுதப்பட்ட புராணங்கள் அத்தனையும் கட்டுக்கதைகளே. இதனை நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வடலூர் வள்ளலார் உறைப்பாகச் சொல்லிப் போந்துள்ளார்."உலகியல் சன்மார்க்க முறைப்படி திருமணம், பூப்பு நன்னீராட்டல் முதலிய விழாக்களில், இருட்சாதி தத்துவச் சாத்திரக் குப்பைகளை எல்லாம் தள்ளி, கண்மூடி வழக்கங்களைஎல்லாம் மண்மூடிப் போகவிட்டு, ஒழுக்கமும் அறிவுமுள்ள பெரியார் ஒருவரை முன்னதாகக் கொண்டு, அவர் முன்னிலையில் பதி விளக்கு, குடவிளக்கு முதலிய திருவிளக்குகளை ஏற்றி சுமங்கிலிப் பெண்களால் எல்லாச் கடங்குகளையும் செய்வித்து, ஆண்டவரை வழிபாடு செய்து, தாலி கட்டுதல்-நன்னீராட்டுதல் முதலிய விழாக்களைச் செய்வித்தல் வேண்டும். சாதி, சமய பேதங்கள் ஒன்றும் பாராட்டலாகாது."

தமிழர்களின் வாழ்வியலில் அங்கிங்கென்னாதபடி எங்கும் தமிழ்மொழியும் தமிழ்ப் பண்பாடும் கோலோச்ச வேண்டும்.

ஆலயங்களில் தமிழ் ஒலிக்க வேண்டும். அப்பரும், சுந்;தரரும், ஆளுடைப் பிள்ளையாரும்,அருமணிவாசகரும் பாடிய தேவார திருவாசகங்கள் அர்ச்சனை மந்திரங்களாக முழக்கப்பட வேண்டும். ''செய்ய தமிழ் மாலைகள், நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிதல் வேண்டும்.''

தமிழர் திருமணங்களில் வண்ணத் தமிழ் ஒலிக்க வேண்டும். தமிழர் திருமணங்கள் தமிழ்மரபுத் திருமணங்களாகத் திகளவேண்டும்.

தமிழர்களது இசை தமிழிசையாகவே இருக்க வேண்டும். இசை மேடைகளில் பைந்தமிழிலேயே தமிழ்க் கலைஞர்கள் பாட வேண்டும்.

தமிழர்களது பெயர்கள் செந்தமிழில் இருக்க வேண்டும். தமிழ் உறவு முறைகளை வண்டமிழில் சொல்ல வேண்டும்.

வள்ளுவர் செய் திருக்குறளே தமிழர்களது பொது மறையாக இருக்க வேண்டும். அதுவே தமிழர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும்.

பெரியார், அண்ணா, பாரதி, பாரதிதாசன் இவர்களது கனவு இன்று தமிழீழத்தில் நனவாகிக் கொண்டிருக்கறது. அந்தக் கனவு முழுதாகக் கைப்படல் வேண்டும். சங்க காலம் மீண்டும் வரவேண்டும். வங்கக் கடலில் சோழனின் புலிக் கொடி நீக்கமற மீண்டும் பட்டொளி வீசிப் பறக்க வேண்டும்.

வாழிய செந்தமிழ் ! வாழ்கநற் றமிழர் !

வாழிய தமிழீழ மணித்திரு நாடு !


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 9:48 am

10. தமிழே உயிரே வணக்கம்!

தமிழ்நாட்டில் தமிழ்மொழியில் கல்வி, தமிழ்மொழியில் வழிபாடு, தமிழிமொழியில் இசை இவற்றிற்கு பெரிய போராட்டமே நடாத்த வேண்டியுள்ள அவலம் இன்றும் தொடர்கதையாகவே இருக்கிறது. தமிழகத்தை 1967ம் ஆண்டு தொடக்கம் இந்தி எதிர்ப்பை முதலாக வைத்து ஆட்சியைப் பிடித்த திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆண்டு வந்தாலும் "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்" என்பது இன்னும் தொலைவானத்தில் தெரியும் வானவில்லின் வர்ண ஜாலங்களாகவே இருந்துவருகிறது.

தமிழ்நாட்டில் இசை அரங்குகளில் தமிழிசையே ஒலிக்கவேண்டும் என்ற போராட்டம் தொடங்கி இன்றைக்கு அரைநூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது. இருந்தும் வேற்றுமொழிகளின் ஆதிக்கம், குறிப்பாக தெலுங்கு மொழி ஆதிக்கம் குறைந்தபாடாக இல்லை.

இவ்வளவிற்கும் இசைத் தமிழ் முத்தமிழில் ஒரு கூறாகப் பாராட்டப்பட்டு வந்திருக்கிறது. இறைவனையே ஏழிசையாய், இசைப்பயனாய் கண்டு களித்துப் போற்றியவர்கள் நாளும் தமிழ் வளர்த்த நாயன்மார்கள். தமிழ்மக்களின் வாழ்வோடு இசை இரண்டறக் கலந்திருந்தமையை தமிழ்மொழியில் இன்றிருக்கும் மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியத்திலும் சங்ககால இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். இசைக்கு இலக்கண நூல்கள் இருந்ததை-

"அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிகை நீடலும்

உளவென மொழிப இளையொடு சிவணிய

நரம்பின் மறைய என்மனார் புலவர்"


என்னும் தொல்காப்பிய சூத்திரத்தினால் அறியலாம். "இயற்றமிழில் உயிர் எழுத்தும் ஒற்றெழுத்தும் ஒலிக்கும் நிலை வேறு, அவ்வெழுத்துக்கள் இசைத்திழில் ஒலிக்கும் ஒலிநிலைவேறு, அதனை அவ்விசை நூல்களில் கண்டுகொள்க" என்கிறார் தொல்காப்பியர். "மறை" என்றால் நூல் என்று பொருள். தொல்காப்பியர் வண்ணம் இருபது வகை என்பார். "வண்ணம் என்பது சந்த வேறுபாடு" என்பார் பேராசிரியர். இதுபோலவே சங்க இலக்கியங்களில் இசைச் பண்கள், இசைக்கருவிகள், இசைக் கலைஞர்கள் பற்றிய ஏராளமான செய்திகள் இடம் பெறுகின்றன.

தமிழர் ஐவகை நிலத்துக்கும் குறிஞ்சிப்பண், முல்லைப்பண், மருதப்பண், நெய்தற்பண், பாலைப்பண் கண்டனர். அதேபோல் அந்த ஐவகை நிலத்துக்கும் அதே பெயரில் ஐவகை யாழையும், தொண்டகப்பறை (குறிஞ்சி), ஏறுகோட்பறை(முல்லை), மணமுழவு (மருதம்) மீன்கோட்பறை (நெய்தல்), நிரைகோட்பறை (பாலை) என ஐவகைப் பறையையும் கண்டனர்.

பண்ணும் பறையும் கண்டதோடு நில்லாமல் இன்ன பண் இன்ன பொழுது பாடத்தக்கது என இலக்கணமும் வகுத்தனர். யாமம் குறிஞ்சிப் பண்ணுக்குரியது. மாலை முல்லை சாதாரிப் பண்ணுக்குரியது. விடிகாலை மருதப் பண்ணுக்குரியது. நண்பகல் பாலைக்கு உரியது.

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறனாநூற்றில் வள்ளல்களில் ஒருவனான நள்ளி அள்ளிக்கொடுத்த பரிசுகளின் மயக்கத்தால் பாணர் காலையில் பாடும் மருதப் பண்ணை மாலையிலும், மாலையில் பாடும் செவ்வழிப் பண்ணை காலையிலும் முறைமாறிப் பாடுகிறார்களாம். வன்பரணர் பாடிய அந்தப் பாடல் இது.

"நள்ளி வாழியோ நள்ளி நன்ளென்

மாலை மருதம் பண்ணிக் காலைக்

கைவழி மருங்கில் செவ்வழி பண்ணி

வரவெமர் மறந்தனர் அதுநீ

புரவுக்கடன் பூண்ட வண்மை யனே!"

(புறம் 149)



தமிழில் எழுந்த இசைநூல்கள் பல இறந்துபட்டன. பரிபாடல் (முதற்சங்கம்), முதுநாரை, முதுகுருகு, களரியாவினை, வெண்டாளி, வியாழமாலை போன்ற இசை நூல்கள் இன்று இல்லை. இழந்த இந்த இசை இலக்கண நூல்களை சிலப்பதிகாரத்துக்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் பட்டியல் இட்டுக் காட்டிவிட்டு தம் காலத்து இருந்த சிகண்டி, இசைநுணுக்கம், இந்திரகாளியம் முதலான இசைநூல்களைக் குறிப்பிடுகிறார். வேதனை என்னவென்றால் இவற்றையும் இப்போது இழந்துவிட்டோம்! நம் முன்னோர்கள் அளித்த செல்வங்களை பாதுகாக்கத் தெரியாது நீருக்கும் நெருப்புக்கும் காலம்தோறும் இழந்துவிடுவது தமிழினத்தின் சாபக்கேடாக இருந்துவருகிறது.

தமிழ்நாட்டு இசை மேடைகளில் வேற்று மொழியில் பாடுவது என்ற வியாதி மகாகவி சுப்பிரமணிய பாரதியார் காலத்திலிருந்தே வருகிறது. "நானும் பார்த்துக்கொண்டே வருகிறேன், பாட்டுக் கச்சேரி தொடங்குகிறது, வித்துவான் "வாதாபி கணபதிம் என்று ஆரம்பம் செய்கிறார்."ராமநீ ஸமான மெவரு" "மரியாத காதுரா". "வரமு லொஸாகி" ....... ஐயையோ ஐயையோ ஒரே கதை.

எந்த ஜில்லாவுக்குப் போ, எந்த கிராமத்திற்குப் போ. எந்த "வித்துவான்" வந்தாலும் இதே கதைதான். தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இரும்புக்காதாக இருப்பதால் திரும்பத் திரும்பத் திரும்ப இந்த ஏழெட்டுப் பாட்டுக்களை வருஷக்கணக்காகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். தோற்காது உள்ள தேசங்களிலே இந்த துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்." இது பாரதியார் சுமார் எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் சுதேசமித்திரனில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி. முழுக்கட்டுரையையும் படித்தால் மட்டுமே பாரதியார் காலத்தில் தமிழிசை இருந்து கோலம் இல்லை அலங்கோலம் தெரியும்.

தமிழில் இசையில்லை, இசையென்றால் அது தெலுங்கு இசைதான் என்ற மாயை வெகு காலமாக இருந்து வருகிறது.

ஆனால் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தமிழரின் பொற்காலம் என வர்ணிக்கப்படும் சங்க காலத்தில் தமிழில் தமிழிசை வெள்ளமாகப் பரவிப் பாய்ந்தோடியிருந்திருக்கிறது. கலிப்பாவும் அதன் உறுப்புகளாகிய தரவு, தாழிசை, சுரிதம், வண்ணகம், அம்போதரங்கம் போன்ற இசைப்பாக்கள் இருந்திருக்கின்றன. அதே போல் பதிற்றுப்பத்தும் இசைப் பாடல்களே. ஒவ்வொரு பாட்டின் நிறைவிலும் துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்னும் நான்கு குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன.

சிலப்பதிகாரம் முழுதும் பழுதற்ற ஒரு முத்தமிழ்க் காப்பியம். அதில் காணப்படும் இசைநுட்பங்களையும் இசைக்கருவிகளையும் தென்தமிழீழத்தின் மீன்பாடும் தேனாடு பெற்றெடுத்த விபுலானந்த அடிகள் தாம் எழுதிய "யாழ்நூல் என்ற இசைத்தமிழ் நூல்" (1947) வாயிலாக வெளிக் கொணர்ந்து தமிழிசைக்கு அரும்பெரும் தொண்டாற்றியுள்ளார்.

தேவாரம், திருவாசகம், திருக்கோவையார், திருவிசைப்பா, திருவாய்மொழி, திருப்புகழ், திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம், தாயுமானவர் கண்ணிகள், வள்ளலாரின் திருவருட்பா, காவடிச்சிந்து, சித்தர்பாடல்கள், குறவஞ்சி, பள்ளு, கீர்த்தனைகள் இவை யாவும் தமிழிசைப் பாடல்களே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 9:53 am

பிங்கல நிகண்டு தமிழிசையில் 103 பண்கள் உண்டென்று செப்புகிறது. சைவ மடங்களில்ஓதப்படும் பண்கள் 21 என்றும் அவற்றை ஓதும் காலம் காலை, மாலை, பகல் என வகுக்கப்பட்டுள்ளன.

இன்றைய கர்நாடக சங்கீதம் தமிழிசையன்றி வேறல்ல. பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோமேஸ்வர புல்லோகமால் (1116-1127) என்ற மகாராஷ்டிர குறுநில மன்னன் தென்னிந்திய சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு "மானச உல்லாசம்" என்ற இசை நூலொன்றை ஆக்கினான்.

தனது நாட்டிற்கு தெற்கேயுள்ள நாடுகளில் கர்நாடகம் மகாராஷ்டிரத்துக்கு அடுத்து இருந்ததால் தான் கண்டு போற்றிய தென்நாட்டுச் சங்கீதத்திற்கு "கர்நாடக சங்கீதம்" என்று பெயர் வைத்தான். அவன் காலத்தில் தென்னாட்டில் இருந்த சங்கீதம் தமிழ்சங்கீதம் ஒன்றுதான்.

தமிழில் இருந்த ஏழிசைகளையே வடமொழியில் "சப்தசுரங்கள்" என்று எழுதி வைத்தார்கள். குரல் முதல் சுரம் சட்ஜமம் (ச) என்றும், துத்தம் இரண்டாம் சுரம் ரிஷபம்(ரி) என்றும், கைக்கிளை மூன்றாம் சுரம் காந்தாரம் (க) என்றும், உழை நான்காம் சுரம் மத்திமம் (ம) என்றும், இளி ஐந்தாம் சுரம் பஞ்சமம் (ப) என்றும், விளரி ஆறாம் சுரம் தைவதம் (த) என்றும், தாரம் ஏழாம் சுரம் நிஷாதம் (நி) என்று மாற்றி எழுதப்பட்டது.

இதேபோல் பண் இராகமாக மாற்றப்பட்டது. முல்லைப்பண் மோகனமாகவும், கோடிப்பாலை சங்கராபரணமாகவும், அரும்பாலை கரகரப்பிரியாவாகவும், செம்பாலை அரி காம்போதியாகவும், செவ்வழிப்பாலை யதுகுல காம்போதியாகவும், படுமலைப்பாலை கல்யாணியாகவும்,மேற் செம்பாலை நடைபைரவியாகவும், செந்துருத்தி மத்தியமாவதியாகவும், சாதாரி பந்துவராளியாகவும், குறிஞ்சிப்பண் நீலாம்பரியாகவும், புறநீர்மை பூபாளமாகவும் பெயர் மாற்றம்செய்யப்பட்டது.

"முத்தமிழ்க் கல்வியும் வித்தகக் கவியும்" கைவரக்கண்ட இளங்கோ அடிகள் யாத்த நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தில் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டு) ஊர்காண் காதையில் மதுரை வீதிகளில் ஆடல், இசைப்பாடல்கள், வரிக்கூத்துக்கள், பாடல், ஏழுவகைத் தூக்குகள், அதனோடு இணைகின்ற தோற்கருவிகளின் கூறுபாடுகளை உணர்ந்து, நிற்றல், இயங்கல், இருத்தல், கிடத்தல், என்ற நால்வகை மரபுடைய அவினயக் கூத்துக்களையும் அறிந்து, குரல் முதலாக தாரம் ஈறாக உள்ள ஏழ்வகை இசைக் கூறுகளையும் விரிக்கும் இசைவல்லோர் இருந்தது விரிக்கப்படுகிறது.

"ஆடலும், வரியும், பாணியும், தூக்கும்

கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து

நால்வகை மரபின் அவினயக் களத்தினும்

ஏழ்வகை நிலத்தின் எய்தியது விரிக்கும்

மலைப்பு அரும் சிறப்பின் தலைக்கோல் ........"


(சிலம்பு 14, 150-154)

"ஏழ்வகை நிலத்தின் எய்தியது விரிக்கின்" என்பதற்கு உரை எழுதிய நல்லார்க்கு அடியார் "எழுவகை நிலமாவன சரிகமபதநி என்னும் எழுவகைப்பட்ட எழுத்தடியாகப் பிறக்கும் குரல் முதல் தாரம் ஈறாக ஏழும்" என விரித்துரைக்கிறார்.

மீண்டும் ஆச்சியர் குரவையில் ஏழு இளம் பெண்களுக்கு இடைக்குல முதுமகளாகிய மாதரி இந்த ஏழு சுரங்களையும் தான் விரும்பிய பெயர்களாகச் சூட்டியதாகக் குறிக்கப்பட்டுள்ளது.

"இடைமுதுமகள் இவர்க்குப்

படைத்துக் கோள் பெயர் இடுவாள்

குடமுதல் இடமுறையாக், குரல், துத்தம்

கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என

விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே.


(சிலம்பு 17, 18-22)

புராதன தமிழ் இசைக் கணிதத்தின்படி குரல் "ம" என்ற முதல் சுரம். துத்தம் - ப, கைக்கிளை - த, உழை - நி, இளி - ச, விளரி - ரி, தாரம் -க என வகுகப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 9:54 am

இந்த ஏழு இசைகளின் ஓசைக்கு உவமை முறையே வண்டு, கிளி, குதிரை, யானை, குயில், தேனு, ஆடு என்பவையாகும். இந்த இசைகளின் சுவைக்கு உவமை முறையே தேன், தயிர், நெய், ஏலம், வாழைக்கனி, மாதுளங்கனி என்பவையாகும்.

திருவிசைப்பா பாடிய ஒன்பதிமருள் முதலாம் இராசராச சோழனின் (கி.பி. 1012-1044) பாட்டானார் கண்டாராதித்த தேவர் (கி.பி. 956-957) ஒருவர். முதலாம் இராசேத்திரனுடைய மகள் வயிற்றுப் பேரனும் கீழைச்சாளுக்கிய மன்னன் இராசராசனின் மகனுமாகிய முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1070-1120) "குலோத்துங்கன் இசை" இசைநூலொன்றை எழுதியவன் என்பதும் அவனது அரசியாரின் பெயர் ஏழிசைவல்லபி என்பதும் வரலாறு.

கர்நாடக இசைக்கு முத்துசாமி தீட்சிதர் (1,1776-1,1835), தியாகையர் (1767-1847), சியாமா சாத்திரிகள் (1,762-1,827) மூவரும் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இந்த மூவரும் ஆந்திர நாட்டவர்கள் அல்ல. இவர்கள் பிறந்த ஊர் தமிழ்நாட்டிலுள்ள திருவாரூர். இவர்கள் கேட்ட இசையெல்லாம் தமிழிசையே. ஆனால் தியாகையரின் வீட்டு மொழி தெலுங்காக இருந்த காரணத்தால் தாம்கேட்ட தமிழிசையைத் தமது தாய்மொழியான தெலுங்கில் கீர்த்தனமாகப் பாடினார். திருவையாற்றில் ஆண்டுதோறும் அவருக்கு விழா எடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு தியாகையரின் 154வது ஆராதனை விழாவாகும். சியாமா சாத்திரிகள் தெலுங்கிலும் தமிழிலும் கீர்த்தனைகள் செய்தார். தீட்சிதர் சுத்தமாக வடமொழியில் பாடினார்.

இப்படிச் சொல்வதால் இந்த கருநாடக மும்மூர்த்திகள் தோன்றுமுன், கருநாடகக் கீர்த்தனைத் தமிழ்ப் பாடல்கள் இல்லையா? கீர்த்தனை பாடுபவர்கள் இல்லையா?

இந்த மும்மூர்த்திகளுக்கும் முன்னரே தமிழிசைக்கு மும்மூர்த்திகளாக சீர்காழி முத்துத் தாண்டவர் (கி.பி. 1,600), தில்லைவிடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை (1,712-1,787), சீர்காழி அருணாசலக் கவிராயர் (1,711-1,779) இருந்தார்கள். ஆனால் அவர்கள் பிறப்புக்காரணமாக அவர்கள் காலத்தில் அவர்களது இசைவல்லுமை அரங்கம் ஏறாது இருந்துவிட்டது. தெலுங்கு இசைக்கு இருந்த ஆதிக்கத்தினாலும் அதன்மீது விசயநகர ஆட்சியாளர்களுக்கு (16ம் நூற்றாண்டு) இருந்த மோகத்தாலும் அவர்களது புகழ் வெளிச்சத்துக்கு வராது போயிற்று.

"தெருவில் வாரானோ - என்னைச் சற்றே

திரும்பிப் பாரானோ?"


என்னும் முத்துத்தாண்டவர் கீர்த்தனம்,

"காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே -எனைக்

கைதூக்கி ஆள் தெய்வமே"

என்னும் மாரிமுத்தாப்பிள்ளை கீர்த்தனமும்,

"ஆரோ இவர் ஆரோ - என்ன

பேரோ அறியேனே"


என்னும் அருணாசலக் கவிரயார் கீர்த்தனமும் அன்று மிகவும் பிரபல்யமானவையாக இருந்தன. ஒருமுறை திருவையாற்றிலே தியாகராசர் விழாவிலே எம்.எம். தண்டபாணி தேசிகர் தமிழ் பாட்டொன்று பாடிவிட்டார். தியாகராசர் வளாகமே தீட்டுப்பட்டு விட்டது என்று தெலுங்கிசை பாடவந்த கூட்டம் போர்க்கொடி தூக்கிவிட்டது! இனி தீட்டுக் கழித்தால் அன்றிப் பாடமாட்டோம் என்று அரங்கத்தைவிட்டு அந்தக் கூட்டம் வெளியேறியது.

தமிழ்நாட்டு காற்றைச் சுவாசித்துக்கொண்டு, காவேரித் தண்ணீரைக் குடித்துக்கொண்டு, தமிழ்நாட்டு உப்பைத் தின்று கொண்டு வாழ்ந்த கூட்டம் தமிழ்நாட்டில் தமிழன் தமிழில் ஒரு பாட்டுப் பாடிவிட்டதைக் கண்டு தீட்டுப்பட்டு விட்டதாகக் கூப்பாடு போட்டது தமிழ் நாட்டில் தமிழிசைக்கு எந்தளவுக்கு "மரியாதை" அன்றைக்கு இருந்தது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு!

"தமிழிசை என ஒன்றும் இல்லை இருப்பதெல்லாம் வேற்றிசையே" என்றும் "இசைக்கு மொழி இல்லை" என்றும் தமிழ்நாட்டின் வளத்தை அனுபவித்துக் கொண்டு தமிழிசைக்குப் பகைவர்கள் கேடு செய்து கொண்டிருந்த காலத்தில் தமிழிசையின் மறுபிறப்புக்கும், மறுமலர்ச்சிக்கும் தமிழிசைச் சங்கம் கண்டவரும் "தமிழிசையின் தந்தை" என்று போற்றப்பட்டவருமான வள்ளல் ராஜா சேர் அண்ணாமலை அரசர், ஆர்.கே. சண்முகனார், தந்தை பெரியார், விபுலான அடிகள், என்.எஸ். கிருஷ்ணன் போன்றோர் வித்திட்டார்கள்.

இவர்களைத் தொடர்ந்து தமிழிசைக் காவலர் ராஜா சேர் முத்தையா, வ.சு.ப. மாணிக்கனார், டி.என். இராசரத்தினம், எம்.எம். தண்டபாணிதேசிகர், "கல்கி" கிருஷ்ணமூர்த்தி, புரவலர் பொள்ளாச்சி மகாலிங்கம், போன்ற பலர் தமிழ் இசை வளர்ச்சிக்கு அளப்பரிய தொண்டு ஆற்றினார்கள். தமிழிசைப் பாடல்களை ஆக்கிய மகாகவி சுப்பிரமணியபாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், உடுமலை நாராயணகவி,சுத்தானந்தபாரதியார், கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, கவியரசர் கண்ணதாசன் போன்ற கவிஞர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். ர்ர்hh

இன்று சென்னை தமிழ் இசைச் சங்கம், மதுரை தமிழிசைச் சங்கம், பொள்ளாச்சி தமிழிசைச் சங்கம், பெரியார் முத்தமிழ் மன்றம், பெரியார் தமிழிசை மன்றம் தமிழ் இசையை நற்றமிழ் வாணர்கள் போற்றும் வண்ணம் நாடளாவிய அளவில் வளர்த்து வருகின்றன. சென்னை, மதுரை, காஞ்சி, வேலூர், சிதம்hரம் முதலாய இடங்களில் தமிழ்நாடு அரசின் இசைக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தமிழிசைக் கலைஞர்களுக்கு மாத ஊதியம், ஆண்டு தோறும் விருது, பொற்கிழி வழங்கப்படுகின்றன.

கடந்த ஏழாண்டுகளாக இயங்கிவரும் பெரியார் தமிழிசை மன்றம் தமிழிசைப் பாடல்கள் பாகம் 1, பாகம் 11 என இரண்டு ஒலிநாடாக்களை வெளியிட்டுள்ளது. இந்தப் பெரியார் தமிழிசை மன்றத்தின் தலைவர் தமிழினப் பற்றாளர்களுக்கும், தமிழீழ விடுதலையாளர்களுக்கும் ஆலமரம் போல் நிழல் தரும் புரவலரும், "நந்தன்" திங்கள் இருமுறை வெளியீட்டின் ஆசிரியருமான நா. அருணாசலம் என்பது மகிழ்ச்சி தரும் செய்தி.

இந்தத் தமிழிசைப் பாடல்களை கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி, எம்.ஏ. எம்.எல். பிஎச்டி தனது கம்பீரமான குரலில் சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தபோல் மிக இனிமையாகப் பாடியுள்ளார். பாடல்களை தமிழீழத் தேசியக் கவிஞர் காசி ஆனந்தன், புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன், கலைமாமணி முத்துக்கூத்தன் இயற்றியுள்ளார்கள். முதல் பாடல் கவிஞர் காசி ஆனந்தனின் ஆக்கம். பண் - மோகனம், தாளம் - ஆதி. பாடல் இது.

தமிழே! உயிரே வணக்கம்!

தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும் - தமிழே உயிரே

அமிழ்தே! நீ இல்லை என்றால்

அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்! - தமிழே உயிரே

தமிழே உன்னையே நினைக்கும்

தமிழன் என் செஞ்சம் இனிக்கும் இனிக்கும்!- தமிழே உன்னையே

அமிழ்தே! உன் எழில் நினைந்தால்

ஆயிரம் பூக்கள் சிரிக்கும்! சிரிக்கும்! - தமிழே உயிரே

தமிழே நீ என் இயக்கம்!

தாய்நீ துணைஎன் வழிக்கும்! நடைக்கும்! - தமிழே நீ

அமிழ்தே நீ தரும் இன்பம்.....

அடியேன் வாழ்வில்வே றெங்கே கிடைக்கும்? - தமிழே உயிரே

தமிழே இன்று உனை பழிக்கும்

தருக்கன் உலகில் இருக்கும் வரைக்கும் - தமிழே இன்று உனை

அமிழ்தே! நீ வாழும் மண்ணில்

அனலே தெறிக்கும்! அனலே தெறிக்கும்! - தமிழே உயிரே

தமிழே உனக்கேன் கலக்கம்?

தாயே! பொறம்மா முழக்கம் வெடிக்கும்! - தமிழே உயிரே

அமிழ்தே! உனை எவன் தொட்டால்

அவனை என் கைவாள் அழிக்கும்!முடிக்கும்! - தமிழே உயிரே


தமிழ் இசைக்கு இப்போது நல்ல காலம் பிறந்திருக்கிறது என்பதற்கு இந்த வெளியீடுகள் கட்டியம் கூறுகின்றன. பாடல்கள் தேனாகக் காதில் வந்து விழும்போது உள்ளமும் உடலும் மகிழ்ச்சி வெள்ளத்தில் குளிக்கிறது.

செந்தமிழர் வாழ்வில் தொட்டில் தொடக்கம் சுடுகாடுவரை வண்ணத்தமிழும், இன்பத்தமிழிசையும் அங்கிங்கு இன்னாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்க வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 9:58 am

11. திருமண உறவுமுறை - திருமண உறவு முறை

சங்ககாலத் திதிருமணங்கள் தந்தை வழியிலும், தாய் வழியிலும் நடைபெற்றது. மாமன் - மாமி மகளை மணக்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வந்துள்ளது. தமிழ் நாட்டில் மாமன்-மாமி வழக்கோடு தாய் மாமனை மணக்கும் வழக்கமும் இருக்கிறது. மாமன், மாமி என்ற சொற்கள் இளங்கோ அடிகளாலும், பல்லவ மன்னர் காலத்து ஆண்டாளாலும், நாயன்மார்களாலும், கையாளப்பட்டுள்ளது. சங்க காலத்திலும் இம்மரபு இருந்திருக்கிறது. ஆனால் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் நேரிடையாக இந்த உறவுமுறைபற்றிக் கூறவில்லை. குறுந்தொகையில் உள்ள பாடலொன்று தந்தை, தாய் உறவுடையாரே திருமணம் செய்து கொள்ளல்வழக்கம் என்பதை எதிர்மறையில் சான்று பகருகிறது. அந்த இனிய பாடல் இது.

"யாயும் ஞாயும் யாரா கியரோ!
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்!
யானும் நீயும் எவ்வழி அறிதும்!
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"


(குறுந்தொகை - பாடல் 40)

இந்தப் பாடலைப் பாடிய புலவர் பெயர் செம்புலப் பெயல் நீரார். இது அவரது இயற்பெயரல்ல. காரணப் பெயர்.

பாட்டெதிய புலவரது இயற்பெயர் தெரியாதவிடத்து அவர் பாடிய பாடலில் வருகிற பாட்டின் அடி பெரும்பாலும் உவமை ஒன்றினால் அவர் அழைக்கப்படுவது மரபு.தலைவனும் தலைவியும் சந்தித்துக் கூடிய பின்னர், இவன் தம்மைப் பிரிவானோ என்று எண்ணி ஏங்குகிறாள் தலைவி. அவள் உள்ளக் குறிப்பை உணர்ந்த தலைவன் அவளுக்கு "செந்நிலத்திலே பெய்த மழைத் தண்ணீர் எப்படி அதனோடு கலந்து விட்டதோ அந்தத் தண்ணீரைப் போல அன்பு நிறைந்த நம் உள்ளங்கள் இரண்டும் தாமாகவே கலந்து விட்டன. ஆதலால் இனிப் பிரிய மாட்டோம்" என உறுதி மொழி பகர்கிறான். திணைவகையால் இது குறிஞ்சித்திணை. குறுந்தொகைப் பாடல்கள் நாநூறிலும் இது ஒரு ஒளி விளக்கு. பண்டைத் தமிழரின் நாகரிகச் சிறப்புக்குப் கட்டியம் கூறும் பாடல்.

(பதவுரை: யாயும் - என்னுடைய தாயும். யார் ஆகியர் - எந்த வகையில் உறவினர் ஆவார். எந்தையும் - என்னுடைய தந்தையும். நுந்தையும் - உன்னுடைய தந்தையும். எம் முறை கேளிர் - எந்த முறையிலே உறவினர். யானும் நீயும் - இப்பொழுது ஒன்று சேர்ந்திருக்கும் நானும் நீயும், எவ்வழி அறிதும் - இதற்கு முன்னர் எந்த இடத்தில் பார்த்துப் பழகி அறிந்திருக்கிறோம்? செம்புலம் - செம்பாடு (செம்மண் பூமி). பெயல்நீர் போல- பெய்த மழைத் தண்ணீரைப் போல. அன்பு உடை நெஞ்சம் -அன்புள்ள நமது உள்ளம். தாம் கலந்தனவே- தாமாக ஒன்றோடு ஒன்று கலந்து விட்டன.)

சங்ககாலத்து சான்றோர் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தார்கள். நிலத்தை வைத்தே தெய்வத்தைக் குறிப்பிட்டார்கள். நிலத்தை வைத்தே ஒழுக்கத்தை வரையறுத்தார்கள். புலவர்கள் இயற்கை நிகழ்வுகளையே உவமானமாகக் கையாண்டார்கள். அதீத கற்பனை இருக்கவில்லை. தெய்வ நம்பிக்கை இருந்தது. ஆனால் மூட நம்பிக்கை இருக்கவில்லை. இல்லறமே எல்லா அறங்களிலும் சிறந்த அறம் என்றார்கள். அறம் அவர்களின் வாழ்க்கையின் ஒரு கூறாக இல்லாமல் வாழ்க்கை முழுவதுமே அறமாக இருந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 9:59 am

வைதீகத் திருமண அறிமுகம்

சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதல் காப்பியமாகும். ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்ற சிறப்பைப் பெறுகின்றன. காப்பிய அமைப்பில் மட்டும் அல்லாது இளங்கோவி அடிகளின் சிலப்பதிகாரம் கோவலன் -கண்ணகி, கோவலன் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட ஆடலரசி மாதவி இவர்களைப்பற்றிப் பாட, மணிமேகலை கோவலன் -மாதவியின் காதலில் கனிந்த மகள் மணிமேகலைபற்றி சாத்தனாரின் மணிமேகலை பேசும். காப்பியம் என்பது தூய தமிழ் சொல். அது வட சொல்லான "காவ்யா" என்றதன் திரிபல்ல.பாப்பியம், காப்பியாறு, காப்பியக்குடி என்பன முறையே நூல், ஆறு, குடிப்பெயர்களைக் குறிப்பன.சிலப்பதிகாரத்துக்கு முத்தமிழ்க் காப்பியம் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

காப்பியத்தில் உரைநடை, இசைப் பாடல்கள், நாடகப்பாங்கு மூன்றம் இருப்பதால் இப்பெயர் பெற்றது. இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் "முடிகெழு வேந்தர் மூவர்க்குமுரியது அடிகள் நீரே அருளுக" என்றதற்கு ஒப்ப முடியுடை மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்களையும், வஞ்சி, புகார், மதுரையாகிய தலை நகரங்களையும் சிலப்பதிகாரம் நடுநிலைமையுடன் புகழ்ந்து பாடும். காப்பியத்தின் தலைவன் - தலைவி (கோவலன் - கண்ணகி) பெருங்குடிப் பிறந்த மக்களாதலால் சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம் என்ற விருதையும் பெறுகிறது.தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் எட்டுவகை மெய்ப்பாடுகளை வரையறை செய்து அவற்றிற்கு இலக்கணம் இயம்புவார்."நகையே, அழுகை, இளிவரல், மருட்கை,அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, என்று அப் பால் எட்டே மெய்ப்பாடு" என்ப (தொல்.பொருள் - மெய். 6 சூத்திரம் 3)(பதவுரை-நகை -சிரிப்பு. அழுகை - அவலம். இளிவரல்- இழிபு. மருட்கை - வியப்பு. அச்சம்-பயம். பெருமிதம் - வீரம். வெகுளி - சினம். உவகை -மகிழ்ச்சி)

இந்த மெய்ப்பாடுகள் ஒவ்வொன்றையும் நான்காகப் பெருக்கி அவற்றின் விரிவு முப்பத்திரண்டு என்று தொல்காப்பியம் கூறும்.இந்த முப்பத்திரண்டு மெய்ப்பாட்டுச் சுவைகளை சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் அற்புதமாக அமைத்துள்ளார். சங்ககாலப் பாடல்கள் புலவர்கள் தம்போன்ற புலவர்களுக்கு எழுதிய இலக்கியம் என்ற தோற்றத்தைக் கொடுக்கிறது. ஏட்டில் எழுத்தாணி கொண்டு எழுதியதால் கூற வேண்டியவற்றை சுருக்கமாகவும் இறுக்கமாகவும் எழுத வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இயல்பாகவே இருந்தது. இதன் காரணமாகவே உரையாசிரியர்களின் துணையில்லாமல் சங்கப் பாடல்களை படித்து உணர்வது இயலாத காரியமாகும்.சிலப்பதிகாரம் இதற்கு பெரிதும் விதிவிலக்கு. கொஞ்சு தமிழில் படிப்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் இளங்கோ சிலப்பதிகாரம் என்னும் பாட்டுடைச் செய்யுளை படைத்துள்ளார். பாரதியார் சிலப்பதிகாரத்தை "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்" என்னுமோர் ஆரம்" என்று வர்ணித்தது முற்றிலும் பொருத்தமானதே. தமிழ் இனிமையான மொழி என்பதை ஒப்பிவிப்பதற்கு சிலப்பதிகாரத்தைச் சான்றாகக் காட்டலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 10:21 am

12. இவை இனியவை


பதினாறு பேறுகள்

அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம்

அழகுபுகழ் பெருமை இளமை

அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள் வெற்றி

ஆகும் நல் வாழ்து கர்ச்சி

தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ

சுகானந்த வாழ்வளிப் பாய்

சுகிர்தகுண சாலிபரி பாலிஅநு கூலிதிரி

சூலிமங் களவி சாலி

மகவுநான் நீதாய் அளிக்கொணதாதோ மகிமை

வளர்திருக் கடவூ ரில்வாழ்

வாமிசுப தேமிபுகழ் நாமிசிவ சாமிமகிழ்

வாமிஅபி ராமி உமையே!


(அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி)

காண்டல் இனிது

குழவி தளர்நடை காண்டல் இனிதே அவர்மழலை கேட்டல் அமிழ்தினும் இனிதே குழவி பிணிஇன்றி வாழ்தல் இனிதே மனமாண்பு இலாதவரை அகறல் இனிதே கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே வருவாய் அறிந்து வழங்கல் இனிதே பிச்சைபுக்கு ஆயினும் கற்றல் மிக இனிதே பிச்சைபுக்கு உண்பான் பிளிறாமை முன்இனிதே(மதுரை பூதஞ்சேந்தனார்-இனியவை நாற்பது நூலிலிருந்து)


பொதுமறை

எல்லாப் பொருளும் இதன்பால் உள- இதனால்
இல்லாத எப்பொருளும் இல்லையால்
(திருவள்ளுவமாலை)

கைமாறு கருதாத கடவுள் வணக்கம்!

தீயினுள் தென்றல் நீ! பூவினுள் நாற்றம் நீ!
கல்லினுள் மணியும் நீ ! சொல்லினுள் வாய்மை நீ!
அறத்தினுள் அன்பு நீ! மறத்தினுள் மைந்து நீ!
வேதத்து மறை நீ! பூதத்து முதலும் நீ!
வெஞ்சுடர் ஒளியும் நீ! திங்களுள் அளியும் நீ
அனைத்தும் நீ! அனைத்தினும் பொருளும் நீ!
ஆதலின்உறைவும் உறைவதும் இலையே, உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமா ரனையை.

(பரிபாடல் 3)


கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்

கபடுவா ராத நட்பும் கன்றாத வளமையும்
குன்றாத இளமையும் கழுபிணியி லாத உடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்

தவறாத சந்தா னமும் தாழாத கீர்த்தியும்

மாறாத வார்த்தையும் தடைகள் வராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணத கோலுமொரு

துன்பமில்லாத வாழ்வும் துயப்பநின் பாதத்தில்

அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்,

அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!

ஆதிகட வூபூரின் வாழ்வே! அமுதீதர் ஒரு பாகம்

அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமி யே!

(அபிராமியம்மை பதிகம்)

வாழி காவேரி

பூவார் சோலை மயில் ஆடப் புரிந்து குயில்கள் இசைபாட
காமார் மாலை அருகு அசைய நடந்தாய் வாழி காவேரி
காமர் மாலை அருககககு அசைய நடந்த எல்லாம் நின் கணவன
;நாமவேலின் திறம் கண்டே அறிந்தேன் வாழி காவேரி!

(இளங்கோ பாடிய சிலப்பதிகாரம் - கானல் வரி )

மலர்கள்

ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண்கயக் குவளை, குறிஞ்சி. வெட்சி

செங்கொடு வேரி, தேமா, மணிச்சிகை,

குருநிலை, மருதம், விரிபூங் கோங்கம்

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்!

(ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு (62-75). இப்படி 99 மலர்களின் பெயர்களை கபிலர் வரிசையாக அடுக்கிச் சொல்வார்)

திருமந்திரம்

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே"

(திருமூலர் திருமந்திரம்)

துறைவ கேள்

தாழைப்பூ மலர்ந்தவை போலப் புள் அல்கும் துறைவ கேள்

ஆற்றுதல் என்பது ஒன்று அலர்ந்தவர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பெனப் படுவது பாடறிந் தொழுகல்

அன்பெனப் படுவது தன்கிளை செறா அமை

அறிவெனப் படுவது பேதையார் சொல் நோன்றல்

செறிவெனப் படுவது கூறியது மாறா அமை

நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை

குறையெனப் படுவது கண்ணோடாது உயிர்வெளவல்

பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்

(கலித்தொகை - 133)



காதல் பெரிது

நிலத்தினும் பெரிதே! வானிலும் உயர்ந்தன்று,

நீரினும் ஆர் அளவு இன்றே, சாரல்

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே

(புலவர் தேவகுலத்தார்; பாடியது-குறுந்தொகை -3)



ஈகை எது?

"படமாடக் கோயில் பரமற்கொன்று ஈயின்

நடமாடக் கோயில் நம்பர்க்கங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயின்

படமாடக் கோயில் பரமர்க்கு அது ஆமே"

(திருமூலர் திருமந்திரம் - 1857)



மந்திரம் எது?

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த

மறை மொழிதானே மந்திரம் என்ப

(தொல்காப்பியர்)



ஒன்றே குலம் ஒருவனே தேவன்!

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின்! நமன் இல்லை, நாளை நாமே

சென்றே புகுங்கதி இல்லை, நும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே!


(திருமூலர் திருமந்திரம்)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 10:22 am

நன்கலம் நன்மக்கட் பேறு

படைப்புப் பல படைத்து பலரோடு உண்ணும்

உடைப்பெரும் செல்வர் ஆயினும், இடைப்படக்

குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,

இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்,

நெய்உடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,

மயக்குறு மக்களை இல்லோர்க்குப்

பயக்குறை இல்லைத்தாம் வாழும் நாளே!

(பாண்டியன் அறிவுடைநம்பி பாடியது -புறம் 188)



காதல் சிறப்பு


உடம்பொடு உயிரிடை என்ன? மற்றன்ன

மடந்தையொடு எம்மிடை நட்பு

(பொதுமறை - குறள் 1122)



இரகசியம்

யாண்டு பலவாக நரையில ஆகுதல்

யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்

மாண்டஎன் மனைவியயொடு மக்களும் நிரம்பினர்

யான்கண் டனையர் என் இளையரும் வேந்தனும்

அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை

ஆன்ளு அவிநத் அடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர்யான் வாழும் ஊரே !

(பிசிராந்தையர் பாடியது - புறம் 191)



அறிவு ஒன்றே தெய்வம்


ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி

அலையும் அறிவிலிகாள்! - பல

ஆயிரம் வேதம் அறிவுஒன்றே தெய்வம் உண்டு

ஆம், எனல் கேளீரோ?

(மகாகவி பாரதியார்)





மனைத்தக்க மனைவி

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்

கழுவுறு கலிங்கம், கழா அது உடீஇக்,

குவளை உண்கண் குய்ப்புகை கமழத்

தான்குழந்து அட்ட தீம்புளிப் பாகர்

"இனிது" எனக் கணவன் உண்டலின்,

நுண்ணிதின் மகிந்தன்று ஒள்நுதல் முகனே!

(குறுந்தொகை)



மகன் எங்கே என வினவுதி?

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்

யாண்டு உளனோ என்று வினவுதி, என்மகன்

யாண்டுளன் ஆயினும் அறியேன், ஓரும்

புலிசேர்ந்து போகிய கல்அளை போல

ஈன்ற வயிறோ இதுவே,

தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே!

( காவற்பெண்டு பாடியது - புறம் 86)



இந்திரர் அமிழ்தமும் வேண்டாம்!


"உண்டால் அம்ம இவ்வுலகம், இந்திரர்

அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத்

தமியர் உண்டலும் இலரே, முனிவு இலர்,

துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ்எனின் உயிரும் கொடுக்குவர், பழி எனின்

உலகு உடன் பெறினும் கொள்ளலர், அயர்வு இலர்,

அன்ன மாட்சி அனையர் ஆகித்,

தமக்குஎன முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே

(கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடியது - புறம் 182)



வணிகன் அல்லன்

இம்மை செய்தது மறுமைக்கு ஆம்எனும்

அறவிலை வணிகன் ஆய் அலன்

சான்றோர் சென்ற நெறியென

ஆங்குப்பட் டன்று அவன் கைவண் மையே.

( உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் -புறம் 134)



கபாடம் திறமினோ?

செக்கச் சிவந்த கழுநீரும்

செகத்தில் இளைஞர் ஆருயிரும்

ஒக்கச் செருகுங் குழல்மடவீர்

உம்பொற் கபாடந் திறமினோ

வருவார் கொழுநர் எனத்திறந்தும்

வாரார் கொழுநர் எனவடைத்தும்

திருகுங் குடுமி விடியளவுந்

தேயுங் கபாடந் திறமினோ?

(செயம்கொண்டார் பாடியது - கலிங்கத்துப் பரணி)



அகப்பூசை

நெஞ்சமே கோயில் நினைவே சுகந்தம், அன்பே

மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே!



எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே!

(தாயுமான சுவாமிகள்)

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக