புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10 
74 Posts - 44%
heezulia
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10 
6 Posts - 4%
prajai
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10 
6 Posts - 4%
Jenila
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10 
2 Posts - 1%
jairam
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10 
1 Post - 1%
M. Priya
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10 
10 Posts - 5%
prajai
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10 
8 Posts - 4%
Jenila
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Rutu
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10 
2 Posts - 1%
jairam
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி


   
   

Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 5:28 am

First topic message reminder :

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Uyir

பழங்கால இந்தியாவில் செக்ஸை வாழ்க்கையின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாக நினைத்தார்கள். சாப்பிடுவது, தூங்குவது மாதிரி அதுவும் ஒரு விஷயம். அதை ஒதுக்கி வைக்கவோ, ரகசிய பொருளாகப் பதுக்கி வைக்கவோ அவர்கள் நினைத்ததில்லை. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அரும்பும் அன்பு, காதலாக மலர்ந்த பிறகு அவர்கள் இணைந்து நடத்தும் திருமண வாழ்க்கை இந்த உறவில்தான் முழுமை பெறுகிறது என்பது அவர்களுக்குப் புரிந்திருந்தது.

இல்லறத்தில் ஆண், பெண் இடையே இருக்கும் உறவு, ஒளிவு மறைவில்லாதது. அன்பு செலுத்துவது, உண்மையாக இருப்பது, மரியாதை தருவது என எதுவுமே ஒன்வே டிராஃபிக் இல்லை. செக்ஸிலும் இப்படித்தான்... அது இருவரின் தேவைகளையுமே முழுமையாக பூர்த்தி செய்யும்படி அமைய வேண்டும் என்றனர் ரிஷிகள். ‘பெண் என்பவகள் ஆணுக்கு படுக்கையில் சந்தோஷம் தருவதற்காகப் படைக்கப்பட்டவகள் இல்லை. அந்த உறவில் சுகம் தேடும் உரிமை அவளுக்கும் இருக்கிறது. அந்த இன்பம் கிடைக்காதபட்சத்தில் அவகள் திருமண உறவுக்கு வெளியில் அதைத் தேட தயங்க மாட்டாகள். அதனால் குடும்பத்தில் மட்டுமில்லை... சமூகத்திலும் பிரச்னைகள் உருவாகும்’ என்பது அந்த ரிஷிகள் சொன்ன வாக்கு.

முடிவாக அவர்கள் சொன்ன நீதி... ‘இந்த உறவில் கொடுப்பவர், எடுப்பவர் என்ற வித்தியாசம் இல்லை!’ நமது ரிஷிகள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்த உண்மைகளை நாற்பது வருடங்களுக்கு முன்புதான் தீவிர ஆராய்ச்சிகளின் வாயிலாக மேற்கத்திய நாகரிகம் புரிந்து கொண்டிருக்கிறது.
வாழ்க்கையின் முழுமையான பரிமாணத்தை நமது மதிப்புக்குரிய முன்னோர் காட்டினார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நமது இந்த மரபு வேரைப் பிடுங்கி எறிந்து, "பாலுணர்வு" என்பதையே ஒரு மிகப் பெரிய கவர்ச்சி அம்சம் போல ஆக்கி, "ஒருவனுக்கு ஒருத்தி" என்பதன் புனிதத்தையும் இல்லாமல் ஆக்கி, அவர்களது "டேக் இட் ஈஸி" கலாசாரத்தை நமக்கும் விதைத்து விட்டனர்.

இதிலிருந்து மீண்டு வர என்ன வழி? நமது பாரம்பரிய ஞானத்தின் வேர்களைத் தேடி, செக்ஸ் தொடர்பான சிக்கல்களுக்கு அறிவியல்ரீதியான தீர்வுகளைக் காணும் முயற்சி தான் இந்தத் தொடர். மிகுந்த கண்ணி யத்தோடும், அளவற்ற ஜாக்கிரதை உணர்வோடும் இந்தத் தொடரை அணுகியிருக்கிறார் தன் ஆராய்ச்சிகளின் மூலம் உலகளவில் புகழ்பெற்ற செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.

இந்தத் தொடரைப் படிக்கும் எவரும் "உணவு, தூக்கம் போலவே பாலுணர்வும்கூட உயிர்களின் தவிர்க்கமுடியாத அடிப்படைத் தேவை" என்பதையும், அதுபற்றி முழுமையாகத் தெரிந்து கொகள்வது எத்தனை அவசியம் என்பதையும் தெளிவாக உணர்வார்கள்.

அது ஒரு பெட்ரூம்... பகட்டான அலங்காரங்களோ, திகட்ட வைக்கும் ஆடம்பர வசதிகளோ இல்லாத மிகச் சாதாரணமான பெட்ரூம். ஆனாலும் அது சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டது. வெறும் பத்து ஆண்டுகளில் பத்தாயிரம் முறை பலபேர் வந்து பரவசமான கலவி இன்பத்தை அனுபவித்த படுக்கை அறை என்ற பெருமையை அது பெற்றது.

தங்கள் காதல் மனைவியைக் கட்டியணைத்தபடி வந்த அன்புக் கணவர்கள், கேர்கள் ஃபிரெண்டை முத்தமிட்டபடி நுழைந்த டீன்ஏஜ் காதலர்கள், தனியாக அறைக்குகள் நுழைந்து காத்திருந்து முன்பின் அறிமுகமில்லாத பெண்களை துணையாகத் தேடிக் கொண்டவர்கள், ‘வயது எங்கள் உணர்ச்சிகளுக்கு அணை போடவில்லை’ என்று நிரூபிக்கும் விதமாக தங்கள் மனைவியோடு வந்து அந்தப் படுக்கையைப் பயன்படுத்திக் கொண்ட கிழவர்கள், ‘எங்களுக்கு ஜோடியே தேவையில்லை’ என்ற படி தனி ஆட்களாக வந்து சுய இன்பத்தில் பரவசப்பட்டவர்கள்... இப்படி பலவிதமான மனிதர்களை அந்த அறை பத்து ஆண்டுகளில் பார்த்திருக்கிறது.

வெளிச்சம், இருட்டு என்ற வித்தியாசம் எல்லாம் அவர்களில் பலருக்கு இல்லை. ஒரேநாளில் வெவ்வேறு நேரங்களில் விதம்விதமான உணர்வுகளுடன் அந்த அறைக்கு பல ஜோடிகள் வந்தன. படுக்கை விரிப்பை மாற்றக்கூட அவகாசம் தராமல், அடுத்தடுத்து பத்து ஜோடிகள் வந்து போனதும் நடந்திருக்கிறது.
இவ்வளவு பிஸியான அந்த அறை.. ஒரு நட்சத்திர ஹோட் டலின் ‘தேனிலவு சூட்’ அல்லது ஏதாவது குளிர்பிரதேச சுற்றுலா தல ரிஸார்ட்ஸாக இருக்கும் என்று தானே நீங்கள் நினைத்தீர்கள்.

ஸாரி... அது தப்பு. அந்த அறை, ஒரு மருத்துவக் கல்லூரியின் பரிசோதனைக் கூடம். அங்கு இப்படி பத்தாயிரம் தடவை பலர் பரவச நிலையை அனுபவித்தது, ஓர் ஆராய்ச்சிக்காக! அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் இருக்கும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி... அதில் இருக்கும் மகப்பேறு மற்றும் பெண்கள்நலப் பிரிவில்தான் நடந்தது இந்த ஆராய்ச்சி.

‘இதில் போய் என்ன ஆராய்ச்சி!’ என முகத்தைச் சுளிப்பவர்கள், தவறாமல் அடுத்த பாராவுக்கு போங்கள்.

இந்த வித்தியாசமான ஆராய்ச்சி நடந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்... ‘இருண்ட கண்டம்’ என பெயர்பெற்று மர்மப் பிரதேசமாக இருந்த ஆப்பிரிக்க கண்டத்தைக்கூட மனித இனம் அலசி ஆராய்ந்து விட்ட நேரம் அது. எங்கோ தொலைதூரத்தில் இருந்தபடி மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை
வகைப்படுத்தி பெயர் வைக்கும் அளவுக்கு அறிவியல் அப்போது உச்சத்தில் இருந்தது.

ஆனால், அப்போதும் புரியாத புதிராக இருந்தது, ஆண்பெண் நிகழ்த்தும் அந்தரங்க உறவின் அர்த்தங்கள். அந்த உறவின்போது எந்தெந்த உறுப்புகளுக்குகள் என்னவிதமான மாற்றங்கள் நிகழ்கின்றன? ஒட்டுமொத்த உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன? புதிய உயிரை உருவாக்கி அடுத்தடுத்த தலைமுறைகளை உலகுக்கு படைக்கும் ஆதார சக்தி எப்படி ஆணிடமிருந்து பெண்ணுக்குப் பரிமாறப்படுகிறது? பிரபஞ்சத்தை சிருஷ்டித்ததாகக் கூறப்படும் கடவுகள், ஒவ்வொரு ஜீவனையும் உயிர் கொடுத்து உருவாக்கும் பணியை மட்டும் ஏன் அந்தந்த ஜீவராசிகளிடமே கொடுத்தார்? அந்த உறவு என்பது வெறுமனே உயிர்களை உருவாக்க மட்டும்தானா? மனித இனத்தை எடுத்துக் கொண்டால், இதில் ஆணின் பங்கு என்ன... பெண்ணின் பங்கு என்ன? சுருக்கமாக சொல்லப் போனால் ஆண்களும், பெண்களும் இதை ஏன் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள்? இந்த உறவில் பலபேருக்கு நாட்டம் இல்லாமல் போவதற்கும், சிலர் மட்டும் எப்போதும் இதே நினைப்புடன் வெறியோடு திரிவதற்கும் காரணம் என்ன? பலபேருக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போவதற்கு என்ன காரணம்?



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 8:13 am

மேற்கத்திய நாகரிகத்தில் இயல்பான வாழ்க்கையிலிருந்து செக்ஸைத் தனியாகப் பிரித்துப் பார்த்தனர். ஆனால், நம்மவர்கள் செக்ஸை வாழ்க்கையிலிருந்து அப்பாற் பட்ட விஷயமாக நினைக்கவில்லை. உணவு, உறக்கம் போல அதையும் வாழ்க்கையின் இயல்பான செயல்பாடுகளில் ஒன்றாகக் கருதினர். நம்மைப் பார்த்து மேற்கத்திய அறிஞர்கள் பிரமிப்பதற்கு இந்தப் பக்குவம்தான் காரணம்!

செக்ஸை ஆபாசமான விஷயமாகக் கருதாமல், ‘இலக்கி யம், மருத்துவம் போன்ற மற்ற கல்விகளைப் போல அதையும் கற்றுக்கொடுக்க வேண்டும்’ என சொன்ன முதல் நாடு இந்தியாதான்! செக்ஸை வெறுமனே ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே இருட்டறையில் நடக்கிற அந்தரங்க விஷயமாகப் பார்க்காமல் அதன் சமூக, உளவியல் மற்றும் ஆத்மார்த்த பின்னணிகளை இணைத்துப் பார்த்ததும் நம் முன்னோர்கள்தான்!

‘நமது வாழ்க்கை முறை, உடல்நலன், நாம் வாழும் சூழ்நிலை, நமது நம்பிக்கைகள், சமூக பழக்கங்கள் என எல்லாமே நமது செக்ஸ் வாழ்க்கையைப் பாதிக்கின்றன. ஒவ்வொருவரது செக்ஸ் உணர்வின் வெளிப்பாடு களைப் பொறுத்தே அவர்களது உடல்நிலை மற்றும் மனநிலை அமையும்’ என அந்தக்கால மகான்கள் சொன்னார்கள்.
இந்தியர்களைப் பொறுத்தவரை, செக்ஸைப் பற்றிய ஆரம்பக் கல்வியைக் கடவுளே நேரடி யாக அளித்ததாக நம்புகிறார்கள். வேதங்களும் இதை உறுதிசெய்கின்றன. ‘பிரபஞ்சத்தை உருவாக்கிய கடவுள் பிரஜாபதி, அதில் மனித இனத்தை யும் படைத்தார். அவர்கள் இந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும் என்ற நெறிமுறை களையும் அவரே உருவாக்கினார். மனிதர்கள் பின் பற்ற வேண்டிய ஒழுக்கம், பொறுப்பு, அமைதியான வாழ்க்கைமுறை என எல்லா விஷயங்களையும் பிரஜாபதி வரையறுத்தார். ‘சிருஷ்டி ஸ்திதி பந்தனம்’ எனப்படும் இந்த நூலை அவர் கையால் எழுதவில்லை. வாய்மொழியாக முனிவர்களிடம் சொன்னார். இது ஒரு லட்சம் அத்தியாயங்கள் கொண்ட பிரமாண்டமான நூலாக இருந்தது.

மனித வாழ்க்கையின் குறிக்கோள்கள் என நான்கு விஷயங்களைச் சொல்வார்கள். தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகியவைதான் அந்த நான்கும்!
தர்மம் நியாயமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது! அர்த்தம் வாழ்க்கையில் புகழையும், செல்வத்தை யும் குவிப்பது! காமம் ஆசைப்படும் எல்லாவற்றையும் நேர்மையான வழியில் அடைந்து, சந்தோஷமான தாம்பத்ய வாழ்க்கையைப் பெறுவது! மோட்சம் தர்மப் படி வாழ்ந்தால், மரணத்துக்கு பிறகு கிடைப்பது! தர்மம், அர்த்தம், காமம் ஆகிய மூன்றும் நெறிப்படி இருந்தால், தானாகவே மோட்சம் கிடைக்கும். ஆகவே பிரஜாபதி, மோட்சத்தைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. அவர் உருவாக்கிய நூலின் ஒரு லட்சம் அத்தி யாயங்களும் மற்ற மூன்று விஷயங் களைப் பற்றியவைதான்!

ஆனால், இவ்வளவு பெரிய நூலை சாதாரண மக்கள் படித்து உணர்ந்து கொள்வது இயலாத விஷயம் என்பதால், இவற்றின் சாரத்தை சுருக்கி சிறிய நூல்களாக மாற்ற முயற்சி நடந்தது. பிரஜாபதியின் நூலில் தர்மம் பற்றி சொல்லப்பட்டிருந்த பகுதியைத் தனியாக எடுத்து சுருக்கிய மனு, ‘தர்ம சாஸ்திரம்’ என்ற பெயரில் நூல் ஆக்கினார். இதேபோல தேவகுருவான பிரகஸ்பதி, அர்த்தம் பகுதியை ‘அர்த்த சாஸ்திரம்’ என்ற பெயரில் சுருக்கமான நூல் ஆக்கினார். காமம் பகுதியை நந்திதேவர் சுருக்கி, ‘காம சாஸ்திரம்’ படைத்தார்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 8:19 am

இந்தக் காம சாஸ்திரமே ஆயிரம் அத்தியாயங்கள் கொண்டது. இதுவும் பெரிதாக இருக்கிறது என கருதிய ஸ்வேதகேது என்ற முனிவர், ஐந்நூறு அத்தி யாயங்கள் கொண்ட நூலாக சுருக்கினார்.

இதுகூட சாதாரண ஆட்கள் படிக்க முடியாத அளவுக்கு நீளமாக இருப்பதாக முனிவர்கள் கருதினர். இதை மீண்டும் சுருக்கும் பொறுப்பு பாஞ்சால தேசத்தில் (தற்போதைய பஞ்சாப்) வாழ்ந்த பாப்ரவியா என்ற முனிவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் இதை நூற்றைம்பது அத்தியாயங்களாக சுருக்கினார். இந்த நூற்றைம்பது அத்தியாயங் களும் ஏழு பாகங்களாகப் பிரிக்கப் பட்டு இருந்தன. இதில் முதல் பாகம் ‘சாதாரணம்’. வாழ்க்கைக் குறிக் கோள்கள் பற்றிய அறிமுக பாகம் இது! அடுத்தது, ‘சாம்ப்ரயோகிகம்’. செக்ஸில் ஈடுபடுவதற்கு முன்ன தாக ஆணும், பெண்ணும் செய்ய வேண்டிய தொடுதல், முத்தமிடுதல், கிள்ளுதல், கடித்தல், தழுவுதல் போன்ற பரவசத்தைத் தூண்டும் ஆரம்ப விளையாட்டுக்கள் பற்றி விளக்கும் பாகம். மூன்றாவது, ‘கன்யா சம்ப்ர யுக்தம்’. எப்படி ஒரு பெண்ணைக் கவர்ந்து மனைவியாக அடைவது என விளக்கும் பாகம். நான்காவது, ‘பாரியாதி காரிகம்’. ஒரு நல்ல மனைவியின் கடமைகள், உரிமை கள் என்னென்ன என விளக்கும் பாகம். ஐந்தாவது பாகம், ‘பாரதாரி கம்’. அடுத்தவர்களின் மனைவியைக் கவர்ந்து உறவு வைத்துக்கொள் ளும் விதங்கள் பற்றி விளக்கும் பிரிவு இது! ஆறாவது பாகம், ‘வைசேஷிகம்’. தேவதாசிகளின் குணங்கள், அவர்கள் கற்று வைத்திருக்கும் கலை கள், அவர்களது சாகசங்கள் ஆகியவைப் பற்றி விலாவாரியாக சொல்லும் பாகம். ஏழாவது, ‘ஒளபநிஷதம்’. செக்ஸ் பிரச்னை களுக்கான சிகிச்சை, மந்திரங்கள் ஆகியவைப் பற்றிய பாகம் இது!

பாப்ரவியா உருவாக்கிய இந்தத் தொகுப்பு முழுமையானதாக இருந்தாலும், இதுவும் பெரிது என பலரும் கருதினர். இதனால் அதன்பின் பல முனிவர்கள் இதில் ஒவ்வொரு பாகத்தையும் தனியாக எடுத்து சுருக்கி, கோனார் உரை மாதிரி தனித்தனி குட்டி நூல்களாகப் படைத்தனர். யாருக்கு என்ன தேவையோ, அதை மட்டும் எடுத்துப் படித்துக் கொள்ளலாம். ஆனால், இவற்றைத் தனித்தனியாகப் படிப்பவர்கள் முழுமையான செக்ஸ் அறிவு பெறமுடியாத பிரச்னை ஏற்பட்டது.

இந்த இடத்தில்தான் வாத்ஸாயனர் வருகிறார். இந்த எல்லா நூல்களையும் எடுத்து, அவற்றின் சாரம்சங்களை சுருக்கி, சாதாரண மனிதர்களும் புரிந்துகொள்கிற சுலபமான நடையில் அவர் படைத்ததுதான் ‘காமசூத்திரம்’.

ஆயுர்வேத சிகிச்சையில் ஒரு மருந்தை எடுத்து அனலில் காய்ச்சக் காய்ச்ச அது சுண்டி வீரியம் அதிகமாகும். அப்படி ஒரு லட்சம் அத்தியாயங்களில் கடவுள்

சொன்னதை சுருக்கி முப்பத்தாறு அத்தியாயங்களில் சொன்ன வீரியமான புத்தகம் காமசூத்திரம்!



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 8:31 am

பிரஜாபதியில் ஆரம்பித்து வாத்ஸாயனருக்கு முன்பு வரை காமம் பற்றி எழுதியவர்கள் வாழ்ந்த காலம்... அந்த நூல்கள் படைக்கப்பட்ட நேரம் போன்ற வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் இல்லை. அது மட்டுமில்லை... அந்த நூல்களும் இப்போது இல்லை. கையால் எழுதி வைக்கிற பழக்கம் இல்லாத காலத்தவை என்பதால், காலப்போக்கில் அவை அழிந்துவிட்டன.

துரதிர்ஷ்டவசமாக நம் முன்னோர்கள் இலக்கி யங்களைப் படைத்த அளவுக்கு வரலாற்றை எழுதி வைக்கவில்லை. அதனால் நூல்கள் எப்போது எழுதப்பட்டன... அவற்றை எழுதியவர்களின் குடும்பப் பின்னணி என்ன... எதற்காக அவர் அந்த நூலை எழுதினார்... அதற்கு எந்த மாதிரியான வரவேற்பு கிடைத்தது... ஏதாவது சர்ச்சைகள் எழுந்தனவா? இப்படி எதையும் நாம் தெரிந்துகொள்ள வாய்ப்பின்றி போய்விட்டது.

நல்லவேளையாக, வாத்ஸாயனர் காலத்திலிருந்து எழுதப்பட்ட நூல்கள் எல்லாமே இருக்கின்றன. எழுதியவர்களைப் பற்றிய தகவல்களும் ஓரளவுக்கு இருக்கின்றன. கி.பி. முந்நூறு முதல் நானூறாம் ஆண்டு வரையிலான காலத்தில்தான் வாத்ஸாயனர் வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள். வாத்ஸாயனர் என்பது அவரது குடும்பப் பெயராம். இயற்பெயர் ‘மல்லங்க’ என்கிறார்கள் சில பேர். வேறு சிலரோ ‘மல்லினாக’ என்கிறார்கள்.

அதேபோல ‘அவர் பெண்வாசனை இல்லாத பிரம்மச்சாரியாக வாழ்ந்தார்’ என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் இதை நம்ப மறுக்கும் பலர், ‘இல்லவே இல்லை. அவர் பிரம்மச்சாரியாக இருந்தால் எப்படி தாம்பத்ய உறவின் உணர்வுகளைத் துல்லியமாக விவரித்து இருக்க முடியும்? அனுபவிக்காமல் அவரால் எழுதி இருக்கவே முடியாது’ என்கிறார்கள்.

அவர் அனுபவித்து எழுதினாரோ அல்லது பலரது படுக்கை அறை அனுபவங்களைக் கேட்டு எழுதினாரோ... யாருக்கும் தெரியாது! ஆனால், சகல சாஸ்திரங்களையும் படைத்த மேற்கத்திய உலகில் ‘காம சூத்திரம்’ மாதிரி துல்லியமான ஒரு செக்ஸ் நூல், கடந்த பதினெட்டாம் நூற்றாண்டு வரைகூட இல்லை. சூத்திரம் என்றால் சொல்ல வேண்டிய விஷயத்தை சுருக்கமாக, தெளி வாகச் சொல்வது என்று அர்த்தம். வாத்ஸாயனர் அதை சரியாக செய்திருக் கிறார். அதனால்தான் உலக செக்ஸாலஜி நிபுணர்கள் இன்றைக்கும் இந்தியர்களைப் பொறாமை யோடு பார்க்கிறார்கள். செக்ஸின் பல்வேறு பரிமாணங்களை அலசி யிருக்கும் அவர், ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தார். எந்த மாதிரியான உறவுகள் சரி... எது தப்பு என தீர்மானிக்கும் நீதிபதியாக அவர் தன்னைக் கருதிக் கொள்ளவில்லை. ‘இப்படி எல்லாம் உலகத்தில் நடக்கிறது’ என பயணக் குறிப்பு எழுதுவது போல ஒரு பார்வையாளனின் மனநிலையோடு விவரித்து இருக்கிறார். நல்லது எது, கெட்டது எது என தீர்மானிக்கும் பொறுப்பை அதைப் படிக்கிறவர்கள் கையில் கொடுத்து விடுகிறார்.

உதாரணமாக, ‘பாரதாரிகம்’ என்ற பகுதியை எடுத்துக் கொள்ளுங்கள். அடுத் தவர்களின் மனைவிகளை எப்படிக் கவர்ந்து, அவர்களோடு செக்ஸ் வைத்துக்கொள்வது என்ற யுக்தியைக் கற்றுத்தரும் பிரிவு இது! வாத்ஸாய னருக்கு முன்பு இருந்த முனிவர்கள் எழுதியதை சுருக்கி அவர் கொடுத்திருந் தார். ‘சகலமும் அறிந்த முனிவர்கள் நல்ல கருத்துகளைத்தானே போதிக்க வேண்டும். இதுபோன்ற மோசமான விஷயங்களைக் கற்றுத் தரலாமா?’ என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.

இதற்கு பதிலாக இதை வேறு கோணத் தில் பாருங்கள். இதைப் படிக்கும் ஒவ்வொரு ஆணையும், ‘இதோ பாருப்பா! இந்த உலகம் ரொம்ப மோச மானது. நிறைய ஆம்பளைங்க அடுத்தவன் பொண்டாட்டியை எப்படி கவுக்கலாம்னு திரியறா னுங்க... அவனுங்க இந்த இந்த மாதிரி டெக்னிக்குகளைப் பயன்படுத்து வானுங்க. உன் வீட்டுப்பக்கம் இப்படி யாராவது உலாத்தினா, நீ உஷாரா இரு. உன் மனைவியை எவனும் கவுத்துடாம பார்த்துக்கோ!’ என வாத்ஸாயனர் எச்சரிப்பதாக ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது? இது தான் காமசூத்திரத்தின் சிறப்பு.

இன்னமும்கூட காமசூத்திரத்தை ஆபாச நுலாகக் கருதி அதற்கு அட்டை போட்டு மறைத்து, ரகசியமாகப் படிப்பவர்கள் நிறைய பேர். அந்தக் காலத்தில் இதை எப்படி பார்த்தார்கள்?

வாழ்க்கை ரகசியங்களைச் சொல்லித்தரும் வேதங்களே கூட, காமத்துக்கு மரியாதை கொடுத்தன. வேதங்களில் தலையாயது என ரிக் வேதத்தைச் சொல்வார்கள். இந்த வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் 129-வது சூக்தம் நான்காவது மந்திரம் இப்படிச் சொல்கிறது. ‘காமம்தான் உலகில் முதலில் பிறந்தது. காமம்தான் மனசுக்கு முதல் வித்து. அந்த மனசை வைத்து ரிஷிகள் தவத்தின் மூலம் இருத்தலுக்கும், இல்லாமல் இருத்தலுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தினர்’ என்கிறது அந்த மந்திரம்.
அதர்வ வேதமும், ‘உலகத்தில் முதலில் பிறந்தது காமம்தான்’ என்கிறது. அதர்வ வேதத்தின் ஒன்பதாவது காண்டம் இரண்டாவது சூக்தம் 19 மற்றும் 21வது மந்திரங்கள் இதைச் சொல்கின்றன. ‘உலகத்தில் முதலில் தோன்றிய காமம் சக்தி வாய்ந்தது. கடவுளோ, முன்னோர்களோ, மனிதர்களோ அதற்கு நிகர் கிடையாது. ஓ காமமே! எல்லையற்ற பேரளவு கொண்டவன் நீ... எல்லா உயிர்களிலும் நீ நிறைந்திருக்கிறாய்... சூரியன், சந்திரன், காற்று, அக்னி ஆகிய எல்லா தேவர்களையும்விட நீ மேலானவன்... எப்போதுமே நீ மேலானவன்’ என்று காமத்தை வணங்குகின்றன அந்த மந்திரங்கள்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 8:31 am

காமசூத்திரத்தில் சொல்லியிருக்கும் பல விஷயங்கள் இன்றைக்கும் பொருந்தும். உதாரணமாக, தேவதாசிகளுக்கு என அவர் சொன்ன பல அறிவுரைகள், எல்லோருக்குமே உபயோகப்படும் விதத்தில் இருக்கின்றன. இப்படி காலத்தைத் தாண்டி நிற்பதுதான் காமசூத்திரத்தின் வெற்றி. வாழ்க்கையை ஒளிமயமாக்கும் செக்ஸ் உறவுக்கு அவர் சொன்ன அறிவுரைகள்...

காமசூத்திரம் பல விஷயங்களில் மேற்கத்திய ஆராய்ச்சி நூல்களுக்கு நிகராக இருப்பதுதான் எல்லோரை யும் பிரமிக்க வைக்கிறது. அது மட்டுமில்லை... அந்த நூலை எழுதிய விதத்தில்கூட பல புரட்சிகளைச் செய்திருக் கிறார் வாத்ஸாயனர். வழக்கமாக அந்தக் கால புலவர்கள் பலர் நூல் எழுதும்போது முதலில் கடவுள் வாழ்த்து பாடுவார்கள். வாத்ஸாயனர் அதைக்கூட காமத்துக்கே அர்ப்பணித்து இருக்கிறார்.

காமசூத்திரத்தின் முதல் சூத்திரமே ‘தர்மார்த்த காமேபியோ நம’ என்றுதான் ஆரம்பிக்கிறது. மனிதர் களுக்கு தேவையான விஷயங்களான தர்மம், அர்த்தம், காமம் ஆகிய மூன்றையும்தான் இஷ்ட தேவதைகளாக அவர் நினைத்துப் பிரார்த்திக்கிறார். தர்மமும், அர்த்த மும் இல்லாத வெற்றுக் காமம் மனிதனை பாதை மாற்றி வீழ்த்திவிடக் கூடியது. அதனால் இந்த இரண்டுடனும் காமத்தை சேர்த்து பார்க்கிறார் அவர். அதோடு அவ ருக்கு முன் காமத்தைப் பற்றி எழுதிய ரிஷிகளையும் வணங்குகிறார்.
காமசூத்திரத்தில் என்ன இருக்கிறது? ஏழு பாகங்களைக் கொண்ட இந்த நூலின் முதல் பாகம் சாதாரணம். இதில் பொதுவாக வாழ்க்கையைப் பற்றி பேசுகிறார் அவர். ‘தர்மம், அர்த்தம், காமம் ஆகிய மூன்றையும் வாழ்க்கையில் எப்படி அடைவது? சாதாரண மனிதனின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்? வாழ்க்கையின் குறிக் கோள் என்ன?’ என பல விஷயங்களை இங்கு தத்துவார்த் தமாக அலசுகிறார் வாத்ஸாயனர். சாதாரண மனிதர் களிடமிருந்து படித்த, நகரவாசிகளைத் தனி யாக பிரிக்கும் அவர், நகரம் பற்றியும், நகர வாழ்க்கை பற்றி யும் பட்டிக்காட்டு மக்களுக்கு விளக்கிச் சொல்கிறார்.

அடுத்து காதலுக்குத் தூது விடுவது பற்றிய அறிவுரை களுக்குத் தாவும் அவர், எந்தெந்த இடத்தில் யார்யாரை தூதராகப் பயன்படுத்துவது நல்லது என சொல் கிறார். இன்றைக்கு எஸ்.எம்.எஸ். வரை ஹைடெக் ஆகிவிட் டாலும்கூட இப்போதைய காதலர்களுக்கும் தூது என்பது சமயத்தில் தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது.
இரண்டாவது பாகத்தில் நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறார். செக்ஸ்தான்... உறவின் உச்சகட்டம் என்கிறார்களே... அந்த நிமிடத்தில் என்ன நடக்கும்... அதன் உணர்ச்சி எப்படி இருக்கும் என விவரிக்கிறார். ‘கட்டிலில் புரண்டு உச்சகட்டத்தை அடைவதற்கு முன் என்னென்ன செய்ய வேண்டும்... எப்படி அன்பை வெளிப்படுத்தினால் அந்த உறவு என்றென்றும் இனிக்கும்’ என பல உபாயங்களை சொல்கிறார் அவர். இறுகக் கட்டிப் பிடிப்பது, தொட்டுத் தழுவுவது, சொறிந்து கொடுப்பது, முத்தமிடுவது, நகங்களால் வலிக்காமல் பிராண்டுவது, பற்களால் காதலோடு கடிப்பது... என எந்தெந்த விஷயங் களை உடலின் எந்த பாகத்தில்... எப்படி செய்தால் செக்ஸ் உணர்வு கிளர்ந்து எழும் என பட்டியல் போடுகிறது காமசூத்திரம். ‘பிரணய கலகம்’ என ஒரு சுவாரஸ்யமான விஷயம். சில காதலர்கள் படுக்கை அறைக்கு வந்து பொய்ச்சண்டை போடுவார்கள்... ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ளு வார்கள்... தலையணைகளால் அடித்துக் கொள்வார்கள்... அப்பு றம் கைச்சண்டையில் ஈடுபட்டு கட்டிப் பிடித்து சண்டை போடுவார்கள். சண்டை உச்சகட்டம் அடைய அடைய அவர்கள் நெருங்கி விடுவார்கள். கடைசியில் அமைதியாகி விடுவார்கள். அவர்களுக்கு செக்ஸ் உணர்வைத் தூண்டும் விஷயமாக இந்த சண்டைதான் இருக்கிறது. இதை ‘பிரணய கலகம்’ என்கிறார் வாத்ஸாயனர். ‘செக்ஸ் உறவை சில நிமிடங்களில் அனுபவித்து அகன்று விடாமல், அதற்கு முன்னும், பின்னும் செய்ய வேண்டிய சில விளையாட்டுக்களைக் களிப்போடு செய்யுங்கள். அப்போதுதான் ஒவ்வொரு முறையும் அந்த உறவு தித்திக்கும்’ எனச் சொல்லும் வாத்ஸாயனர், அந்த விளையாட்டுக்களையும் கற்றுத் தருகிறார்.

ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நடக்கும் இயல்பான செக்ஸ் உறவு இல்லாமல் வித்தியாசமான மற்ற பழக்கங்கள் பற்றியும் பேசுகிறார்

வாத்ஸாயனர். ஆண் மாதிரியான உருவ அமைப்பும், குணங்களும் கொண்டு இருக்கும் பெண்கள் பற்றி சொல்கிறார். நடுத்தர வயது ஆசாமிகள் இளம் பையன்களைத் தேடிப்பிடித்து அவர்களோடு உறவு வைத்துக் கொள்ளும் ஹோமோ செக்ஸ் பழக்கம், வாய்வழி உறவு... என அந்தக்கால இந்தியாவில் நடைமுறையில் இருந்த பலவித செக்ஸ் பழக்கங்கள் பற்றியும் ஒரு பார்வையாளனின் மனநிலையோடு ஜாக்கிரதையாக சொல்கிறார் அவர்.

மூன்றாவது பாகம், படுக்கை அறையில் ஒரு பெண்ணை எப்படி சரிக்கட்டி மனைவி ஆக்குவது என கிளாஸ் எடுக்கிறது. மனைவியை எப்படி தேர்ந்தெடுப்பது... எப்போது உறவு கொண்டால் என்ன மாதிரி விளைவுகள் ஏற்படும்... எப்படி நம்பிக்கை ஊட்டி உறவுக்கு சம்மதிக்க வைப்பது... ஒரு ஆண் சொல்லும் ஒவ்வொரு விஷயத்துக்கும் பெண் தன் புலன்களால் ரீயாக்ட் செய்வாள்... அந்தப் புலன்களின் மொழிகளுக்கு எப்படி அர்த்தம் புரிந்து கொள்வது... பெண்ணுக்கு செக்ஸ் ஆசையை எப்படித் தூண்டிவிடுவது... தூண்டிவிட்ட பிறகு எரியும் காமத் தீயில் எப்படி கலப்பது என சகலமும் சொல்கிறார். கூடவே இந்த உறவுக்கு அடிப்படையான திருமணம் பற்றியும் விலாவாரியாகச் சொல்லி இருக்கிறார்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 8:32 am

நான்காவது பாகம், மனைவியின் கடமைகள் மற்றும் உரிமைகள் பற்றியது. அந்தக் காலத்தில் ஒரே ஆண் பல பெண்களை மனைவிகளாகக் கொள்வது வழக்கமாக இருந்தது. அவர்களுக்காக ஆலோசனைகளும் இதில் இருக்கிறது. ‘எல்லா மனைவிகளும் கணவனின் இடத்தில் வசிக்க வேண்டும். கணவன் மீது மட்டுமே காதலைப் பொழிய வேண்டும்’ என பெண்களுக்கு அட்வைஸ் செய்கிற அவர், இப்படி பல மனைவிகளைக் கொண்டிருக்கும் ஆண்களுக்கும் தனியாக வகுப்பு எடுக்கிறார். ‘முதல் மனைவிக்கு எப்படி மரியாதை கொடுப்பது... புதிதாக வரும் இளம் மனைவிகளை எப்படி நடத்துவது... புது மனைவியை மற்றவர்கள் கஷ்டமின்றி ஏற்றுக் கொள்ள என்ன செய்வது...’ என அவர் சொல்லித்தரும் பாடங்கள் நவீன கால இரண்டு பெண்டாட்டிக்காரர்களுக்கும் பொருந்துவது. இறுதியாக, ‘பல மனைவிகளை வைத்திருக்கும் ஆணின் பரிதாபமான குணங்களை’ படம் பிடித்துக் காட்டி, அந்தப் பாதை மோசமானது என்பதையும் புரியவைத்து விடுகிறார்.

ஐந்தாவது பாகம், அடுத்தவர் மனைவியைக் கவரும் பழக்கம் பற்றியது. ஒரு ஆண் அடுத்த வீட்டுக்காரரின் மனைவியுடன் எப்படித் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வான்... எந்த மாதிரி கேரக்டர் கொண்ட ஆண்கள் எப்படி எப்படி அடுத்தவன் பெண்டாட்டிக்கு வலை விரிப்பார்கள்... இந்த விபரீத உறவுக்கு யார் யாரால் தடை போட முடியும்... இவர்களது உணர்வுகள் எப்படி இருக்கும்... இப்படி ஏற்படும் திருட்டு உறவுகளுக்கு யார் தரகு வேலை பார்ப்பார்கள்... என சாதாரண மனிதர்கள் வாழ்க்கையில் நிகழும் பொருந்தாத உறவுகளுக்கு விளக்கம் தரும் வாத்ஸாயனர், மகாராணிகளின் அந்தப்புரங்கள் பற்றியும் விவரிக்கிறார். ‘அந்தப்புரக் காவலர்கள் எந்த மாதிரி குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களை எப்படி வேற்று ஆண்கள் மடக்கி சரிக்கட்டிவிட்டு மகாராணியின் சயன அறைக்குப் போகிறார்கள்’ என்று போகிறது இந்தப் பகுதி!
ஆறாவது பாகம் தேவதாசிகள் பற்றியது. ‘ஒரு வசதியான கஸ்டமரின் தோற்றம் எப்படி இருக்கும்? செக்ஸ் உறவுக்கு முன்னால் ஒரு ஆணை எப்படி தூண்டி பரவசம் அடைய வைப்பது... அந்த ஆணின் அன்பான காதலி போலவே தன்னைப் பாவித்துக்கொண்டு எப்படி செயல்படுவது...’ என அவர்களுக்கு வகுப்பு எடுக்கும் வாத்ஸாயனர், சில சமயங்களில் வேற்று ஆண்கள் இவர்கள் மீது காதல் கொண்டு பைத்தியமாக அலைவார்கள். இப்படிப்பட்ட உறவுகளின் பலவீனம் என்ன... இவற்றை எப்படி கத்தரிப்பது என்றும் சொல்கிறார் அவர்.

ஏழாவது பாகம் முழுக்க ஒப்பனை மற்றும் மருந்து சமாசாரங்கள். ‘எப்படி அலங்காரம் செய்து மற்றவர்களைக் கவர்வது... செக்ஸ் உணர்ச்சியை எப்படி அதிகரிப்பது... அதில் உச்சகட்ட சுகத்தை எப்படி அடைவது... ஒரே இரவில் பல தடவை சுகம் அனுபவிக்க என்ன செய்வது... செக்ஸ் உறுப்புகளை எப்படி பெரிதாக்குவது... முறையற்ற செக்ஸ் பழக்கங்கள்...’ என சகலத்தையும் சொல்கிறார் வாத்ஸாயனர்.

இந்த எல்லாமே புரிந்துகொள்ளப்படுகிற விதத்தில்தான் உபயோகப்படுகிறது.

இன்னொரு ஆச்சர்யம்... பல வெளிநாட்டு அறிஞர்கள் ஏகப்பட்ட பேரை வைத்து ஆராய்ச்சி நடத்திக் கண்டுபிடித்து இப்போது சொல்லியிருக்கும் விஷயங்களை, அந்தக் காலத்திலேயே சர்வசாதாரணமாக சொல்லிக்கொண்டு போகிறார் வாத்ஸாயனர். அந்த ஒற்றுமைகள்...

உளவியல் அறிஞர் சிக்மன்ட் ஃபிராய்டு செக்ஸ் இச்சைக்கு ‘லிபிடூ’என்று பெயர் வைத்தார். ‘‘ஒருவருக்கு செக்ஸ் இச்சை கிளர்ந்து எழுந்தால், அதை முறையாகத் தணித்துக்கொள்ளும் வடிகால் அவருக்கு வேண்டும். அப்படி செய்யாமல் செக்ஸ் ஆசையை அடக்கி வைத்தால் அவரது உடலோ, மனமோ அல்லது இரண்டுமோ சீரழிந்துவிடும்’’ என்றார் அவர். இப்படி செக்ஸ் ஆசையை அடக்கிவைத்த பலர் மன நோயாளிகள் ஆனதை உதாரணமாகக் காட்டி அவர் இதைச் சொன்னார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஃபிராய்டு இதைச் சொன்னபோது, மேற்கத்திய மருத்துவ உலகமே அவரது அறிவை மெச்சியது. ஆனால், அவருக்கு 1500 ஆண்டுகள் முன்னதாகவே இதை வாத்ஸாயனர் சொல்லி இருந்தது, அவர்களில் யாருக்கும் தெரியாது.

‘ஒரு மனிதன் இயல்பாக வாழ செக்ஸ் சுகத்தை அனுபவிப்பது அவசியம். அப்படி அது கிடைக்காவிட்டாலோ, தாமதமாகக் கிடைத்தாலோ அவன் முறையற்ற செயல்பாட்டில் ஈடுபடுவான். இதனால் அவனுக்கு மட்டுமில்லை... சமுதாயத்துக்கும் ஆபத்து’ என்றார் வாத்ஸாயனர்.

காம சூத்திரத்தின் நோக்கம் எப்படி செக்ஸ் வைத்துக் கொள்வது என கற்றுத் தருவதோ... பல்வேறு வகை செக்ஸ் உறவு பொஸிஷன்களை விளக்குவதோ இல்லை. ஒரு ஆணும், பெண்ணும் என்ன செய்வதால் குழந்தை பிறக்கிறது... அப்படி பிறந்த குழந்தை முழுமையான மனிதனாக உலகில் வாழ என்னென்ன கடமைகளைச் செய்ய வேண்டும் என்று விவரிக்கும் வழிகாட்டி இது!

சமஸ்கிருதத்தில் உடலை ‘தேகம்’ என்று சொல்வார்கள். இந்த வார்த்தை எப்படி வந்தது தெரியுமா? உடல் ‘தஹ்யமாகும்’ குணம் கொண்டது. தஹ்யமாவது என்றால் எரிந்துவிடுவது என அர்த்தம். தஹ்யமாகும் பொருள் என்பதால், இது தேகம். இந்த உடலுக்கு ஏராளமான குணங்கள் இருக்கின்றன... உடலுக்குள் இருக்கும் மனதில் விதம்விதமான ஆசைகள் எழுகின்றன. இவற்றில் காமம் மட்டுமே உடலைப் போலவே எரியக்கூடிய விஷயமாக இருக்கிறது. காமத் தீ பற்றி எரிந்தால், அதை முறையான உறவின் மூலம் அணைக்க வேண்டும்.

அடங்காத காமவெறியோடு ஒருவன் வரம்பு மீறினால் அவனது உடல்நலம் கெடுகிறது... அதனால் அவன் குடும்பமும் பாதிக்கப்படுகிறது... அவன் வசிக்கும் ஊர் பிரச்னைகளை சந்திக்கிறது. இப்படி முறைகெட்டவர்களாக பலர் உருவானால், ஒரு நாடே சீரழிகிறது. சீற்றத்தோடு எரிமலை துப்பும் நெருப்புக் குழம்பு வீடுகளை, உயிர்களை மூழ்கடித்துக் கருகவைப்பது போல கட்டுக்கு அடங்காத காமம், அழிவை ஏற்படுத்துகிறது.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 8:32 am

ஒவ்வொரு குடும்பத்திலும் நல்லவர்கள் உருவாக வேண்டும் என்றால், அவர்களுக்கு ஆரோக்யமான செக்ஸ் உறவு பற்றிய புரிதல் இருக்க வேண்டும். இப்படி செக்ஸைப் பயன்படுத்தி தங்கள் உடலையும், அதன் மூலம் நாட்டின் ஆரோக்கியத்தையும் எப்படி பராமரிப்பது என சொல்லித்தரவே காமசாஸ்திரங்கள் தோன்றின.

இப்படி தோன்றிய அநேக காமசாஸ்திரங்களில் வாத்ஸாயனர் எழுதிய காமசூத்திரம் சிறந்ததாக கருதப்படுவதற்கு காரணங்கள் உண்டு. வாத்ஸாயனர் தனக்கு முன்னால் பலர் எழுதிய எல்லா நூல்களிலும் என்ன இருந்தது என்ற சாரம்சத்தைத் தொகுத்துத் தந்து விடுகிறார். அதோடு நிற்கவில்லை... அவர்கள் சொன்ன கருத்துகளில் ஏற்கக்கூடியது எது... ஏற்க முடியாததாக என்னென்ன இருக்கிறது என்பதையும் இனம்பிரித்துச் சொல்கிறார்.

இன்னொரு ஆச்சர்யம்... காம சூத்திரத்தைப் படிக்கும் பலருக்கு எந்த இடத்தில் என்ன சந்தேகம் தோன்றுமோ, அதை அவரே ஒரு கேள்வியாக எழுப்பி, ‘இப்படி நீங்கள் கேள்வி கேட்கலாம்... அதற்கு இதுதான் பதில்!’ என சொல்கிறார். ஒரு மனிதனின் வாழ்க்கையை நான்கு கட்டங்களாகப் பிரிக்கிறது காமசூத்திரம். பூமியில் பிறந்து, வாழ்ந்து, கடைசியில் இறக்கும் ஒவ்வொரு ஜீவனையும் இந்தப் பூமிக்கு வருகைபுரிந்த யாத்ரிகர்கள் போலவே கருதினார்கள் ரிஷிகள். இதனால் மனிதனின் வாழ்க்கை ஒரு பயணமாகவே கருதப்பட்டது. இந்த ‘லோக யாத்திரை’யின் முதல்கட்டம் பிரம்மச்சர்யம். இதற்கு கல்யாணம் செய்து கொள்ளாமல் கட்டை பிரம்மச்சாரியாக இருப்பது என அர்த்தம் இல்லை. கல்விக்கு முக்கியத்துவம் தரவேண்டிய இளம்பிராயம்தான் இந்த முதல்கட்டம்! ‘அந்த வயதில் அறிவைப்பற்றி மட்டும் யோசி. மற்ற ஆசைகளை ஒதுக்கு’ என்ற அறிவுரையோடு கல்வியைத் கற்றுத் தருவார்கள் குருமார்கள்.


திருமணங்களில் ‘காசி யாத்திரை’ என ஒரு சடங்கு உண்டு. அந்தக் காலத்தில் உயர்கல்வி படிக்கும் வசதி காசியில்தான் இருந்தது. தங்கள் மேதாவிலாசத்தை வளர்த்துக்கொள்ள பல நாட்டு இளைஞர்கள் காசிக்குப் படிக்கப் போவது வழக்கமாக இருந்தது. ஆனால், ஒருவர் குருகுலப் படிப்பு முடித்து காசிக்குக் கிளம்பும் முன்னதாக அவருடைய தாய்மாமன் வழிமறித்து, ‘‘நீங்கள் படித்தது போதும் மாப்பிள்ளை. இதோடு பிரம்மச்சர்யத்தை முறித்துக் கொள்ளுங்கள். என் பெண்ணை உங்களுக்குத் தருகிறேன். நீங்கள் இனி கிரகஸ்தனாக வாழுங்கள்’’ என தன் பெண்ணைத் திருமணம் செய்து வைப்பார். இந்த பழைய வழக்கம்தான் இப்போதும் திருமணச் சடங்குகளில் ஒன்றாக நீடிக்கிறது.

கிரகஸ்த்யம்... லோக யாத்திரையின் இரண்டாவது கட்டம் தாம்பத்ய உறவில் சுகம் அனுபவிப்பது, குடும்பத்தை உருவாக்குவது, காப்பாற்றுவது என ஒரு ஆணும், பெண்ணும் இணைந்து செய்ய வேண்டிய கடமைகள் பல இந்தப் பருவத்தில் இருக்கின்றன!

மூன்றாவது கட்டம் வானபிரஸ்தம். இதை ‘அரை ஓய்வு’ என்பார்கள். தோளுக்கு மேல் வளர்ந்து பொறுப்புகளைச் சுமக்க தயாராகிவிட்ட பையனிடம் எல்லா அதிகாரங்களையும் கொடுத்துவிட்டு, ஒதுங்கி இருந்து அவனுக்கு வழிகாட்டுவது. அதிகாரம் இல்லாமல் சும்மா உட்கார்ந்து பொழுதைக் கழிக்கிறோமே என எரிச்சலும் வராது... அதிக வேலைச் சுமையும் கிடையாது. ‘எல்லாம் என் வழிகாட்டுதல்படிதான் நடக்கிறது’ என பெருமிதத்தோடு வாழலாம்.

காலப்போக்கில் இந்தக் கட்டத்துக்கு மனிதர்கள் வர மறுத்ததுதான் பல பிரச்னைகளுக்குக் காரணமாக இருந்தது. மொகலாய மன்னர்கள் பலர் உயிரை விடும்வரை அரியணையை விட மறுத்தார்கள். அதிகார போதை இல்லாமல் அவர்களால் வாழ முடியவில்லை. விளைவு... பிள்ளையே அப்பாவைக் கொன்றுவிட்டு ஆட்சியைப் பிடித்தார். அல்லது தன் பிள்ளையையே எதிரியாக நினைத்து அப்பா கொன்றார்.

நவீன காலத்தில் கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பு சிதைந்ததற்கும் வானபிரஸ்தம் போக தயாராக இல்லாத குடும்பத் தலைவர்கள் பலரே காரணம்.
லோக யாத்திரையின் நான்காவது கட்டம் சந்நியாசம். எல்லாப் பொறுப்புகளையும் துறந்துவிட்டு ஓய்வாக பொழுதைக் கழிப்பது... வீட்டிலோ அல்லது காட்டில் இருக்கும் ரிஷிகளின் ஆசிரமத்திலோ!

தன் தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் இப்படி முறைப்படி லோக யாத்திரை மேற்கொள்ள தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதுதான் ஓர் அரசனின் கடமை!
இப்படி வாழ்க்கை தத்துவங்களை வேறெந்த செக்ஸ் புத்தகமும் சொல்லித் தரவில்லை.

பணம் சம்பாதிக்கும் வழியான அர்த்தத்தைச் சொல்லித்தர நூல் தேவை. தர்மம் செய்து புண்ணியம் சம்பாதிக்கும் வழியைக் கற்றுத் தரவும் நூல் தேவை. விலங்குகளிலிருந்து மனிதர்களை வித்தியாசப்படுத்தும் விஷயங்கள் இந்த இரண்டும்தான்! இவை சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியவை. ஆனால், காமத்தைச் சொல்லித்தர எதற்கு தனியாக புத்தகம்? விலங்குகளும்தான் செக்ஸில் ஈடுபடுகின்றன. அவற்றுக்கு யார் புத்தகம் போட்டு சொல்லிக் கொடுத்தார்கள்? பிறகு ஏன் மனிதனுக்கு மட்டும் சொல்லித் தரவேண்டும்?

இப்படி நிறைய பேர் வாத்ஸாயனரிடம் கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது!



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 8:32 am

நீங்கள் கேட்பது சரிதான். மிருகங்கள், பசு, பறவை என எல்லாம் எந்நேரமும் சாப்பாடு பற்றிதான் யோசிக்கின்றன. உணவை முறைப்படி சம்பாதிப்பது அவர்கள் தர்மம் கிடையாது. சண்டை போட்டு அடுத்தவர் உணவை பிடுங்கிக் கொள்கின்றன. செக்ஸ் விஷயத்திலும் அவை அப்படித்தான்! வன்முறையாகப் புணர்ச்சியில் ஈடுபடுகின்றன. மனிதர்கள் அப்படி இல்லை. முறையான வழியில் சம்பாதித்து சாப்பிட்டால்தான் வாழ்க்கையில் அமைதி, சுகம் இருக்கும். அதே மாதிரி மனித வாழ்க்கையில் காமமும் முறையாக அனுபவிக்க வேண்டிய ஒன்று. ஒரு ஆணும், பெண்ணும் சரியான முறையில் உறவில் ஈடுபட வேண்டும். சரியான உபாயங்களைக் கற்கவில்லை என்றால் இது நடக்காது. அதனால் இதைக் கற்றுத்தர வேண்டியிருக்கிறது’ என்று சொல்லி வைத்திருக்கிறார் வாத்ஸாயனர்.


‘டியூரெக்ஸ் ஆணுறை நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் செக்ஸ் பழக்கங்கள் பற்றி சர்வே செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறது. கடந்த 2002ம் ஆண்டு இப்படி நடத்திய சர்வேயில் வெவ்வேறு நாடுகளில் எப்படி முத்தமிடுகிறார்கள் என்பது பற்றியும் ஆராய்ந்தார்கள். முடிவில், ‘இந்தியர்களுக்கு முத்தமிடுவதில் ஆர்வம் இல்லை. சரியாக முத்தமிடவும் தெரியவில்லை’ என தடாலடியாக சொல்லியிருந்தார்கள்.

இதுபற்றி பிரபல பத்திரிகை ஒன்றில் என்னிடம் கருத்துக் கேட்டார்கள். ‘‘முத்தம் என்றால் எதைச் சொல்கிறீர்கள்? மொத்தம் இருபத்தேழு வகையான முத்தங்கள் பற்றி காமசூத்திரம் சொல்லியிருக்கிறதே. உலகில் வேறெந்த தேசத்திலும் முத்தத்தைப் பற்றி இவ்வளவு விவரமான புத்தகம் இதுவரை இல்லையே. அப்புறம் இந்தியர் களுக்கு முத்தம் பற்றி தெரியவில்லை என்றால் என்ன அர்த்தம்?’’ என்று நான் எதிர்க்கேள்வி கேட்டேன். அவர்கள் ஷாக் ஆகிவிட்டார்கள்.

ஆமாம். ‘சும்பண விகல்பம்’ (சும்பணம் என்றால் முத்தம்!) என்ற தலைப்பில் முத்தத்தைப் பற்றி வரைந்து தள்ளியிருக்கிறார் வாத்ஸாயனர்.

‘செக்ஸ் உறவில் முத்தம் ஏன்?’ இப்படி ஒரு கேள்வி கேட்டு இதற்கு பதிலும் சொல்கிறார் அவர். ‘பொதுவாக ஆண்கள் வெறிபிடித்த மாதிரி முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். இதனால் படுக்கை அறைக்குள் நுழையும் ஆணைப் பார்த்தாலே பெண்ணுக்கு வெறுப்பு ஏற்படும். செக்ஸ் என்பது வெறியைத் தணித்துக் கொள்ள செய்யும் ஒரு விஷயம் இல்லை. அங்கே இன்பத்தை ஆணும், பெண்ணும் பகிர்ந்துகொள்ள வேண்டும். மென்மையான சில விளையாட்டுக்கள் மூலம் பெண்ணைத் தூண்டி செக்ஸ§க்குத் தயார்ப்படுத்த வேண்டும். அதில் முத்தம் முக்கியமானது. எப்போது ஒரு பெண் உணர்ச்சிகள் கிளர்ந்து எழ, ஆணோடு சேர்ந்து ஈடுபடுகிறாளோ அப்போதுதான் ஆணுக்குக் கிடைக்கும் இன்பமும் அதிகமாக இருக்கும். வெறுப்பில் அல்லது பயத்தில் மரக்கட்டையாகக் கிடக்கும் பெண்ணுடன்உறவில் ஈடுபடுவது முறையற்ற செயல்’ என சொல்கிறார் வாத்ஸாயனர். ‘இரண்டு உதடுகளையும் ஒருசேரக் குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. இப்படி செய்யும்போது விநோதமான ஒரு சத்தம் வரும். இதுதான் முத்தம். எங்கே முத்தமிடுகிறாயோ அந்த இடத்தைப் பொறுத்து, முத்தமிடும் முறைகளும், அந்த முத்தத்தால் எழும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும்’ என அடிப் படை வகுப்பு எடுக்கிற வாத்ஸாயனர், எங்கே, எப்படி முத்தமிடுவது... முத்தமிடும் வேகம் எப்படி இருக்க வேண்டும்... பற்களால் பெண்ணின் உதடுகளை வலிக்காமல் கடித்து முத்தமிட்டு பரவசத்தை எப்படி அடைவது... தூங்கும் பெண்ணை எப்படி முத்தமிடுவது... விழித்திருக்கும்போது முத்தம் கொடுத்து செக்ஸ் உறவுக்கு எப்படி தயார்ப்படுத்துவது... அந்த உறவை ஆரம்பிக்கும் முன் எந்த மாதிரி முத்தமிட வேண்டும்... உறவு முடிந்து ஓய்வெடுக்கும்போது எப்படி முத்தமிடுவது... இப்படி எல்லாவற்றையும் பட்டியல் போடுகிறார்.

ஓர் ஆண், பெண்ணை எங்கெங்கே முத்தமிடலாம்? பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட உணர்ச்சிப் பிரதே சங்கள் என எட்டு இடங்களை சுட்டிக் காட்டுகிறார் அவர். உச்சிப் பொட்டு, நெற்றி, கண்கள், கன்னங்கள், உதடு, நாக்கு, மார்பின் மையப்பகுதி, மார்பகங்கள் ஆகிய எட்டு இடங்கள்தான் அவை.

இது தவிர இன்னும் மூன்று ரகசிய இடங்கள் அடங்கிய ஒரு பட்டியலைத் தனியே தருகிறார். அக்குள், தொடையிடுக்கு, ஜனன உறுப்பு ஆகியவை அவை. கலாஸ்தானம் என இந்த இடங்களை அவர் சொல்கிறார். ‘பொதுவாக இப்படித்தான் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். இங்கெல்லாம் முத்தமிடும்போது பரவச உணர்வு எழும். ஆனால், இதில் எது தப்பு, எது சரி என்று நான் சொல்ல மாட்டேன். ஒவ்வொரு வரும் அவர் வாழும் தேசம், காலம், சூழ்நிலை ஆகிய வற்றைப் பொறுத்து அவரவருக்கு எது சரி என்று தெரிகிறதோ அப்படி முத்தமிட்டுக் கொள்ளுங்கள்’ என்று தீர்மானமாகச் சொல்லி விடுகிறார் அவர்.

ஒவ்வொரு வகை முத்தத்துக்கும் அவர் அழகாக பெயர் சூட்டி இருக்கிறார். தூரத்தில் தன் ஆசைக் காதலன் வருவதைப் பார்த்துவிட்டு காதலி தூங்குவது மாதிரி நடிக்கிறாள். ஆசையோடு வரும் அவனது எண்ணம் என்னவாக இருக்கும் என அறிந்துகொள்ளவே இந்தப் பாவனை. அவன் இப்போது தன்னை நெருங்கி அணைத்து எங்கே முத்தமிடுவான்? கன்னத்திலா... உதட்டிலா... என அவள் குழம்பி ஒருவாறாக ஏதாவது ஒரு இடத்தை முடிவு செய்கிறாள். வரும் காதலன் இவள் நினைத்த மாதிரி, நினைத்த இடத்தில் முத்தம் கொடுக்கிறான். இது ‘பிராதி போதக சும்பணம்.’ நினைத்த மாதிரி முத்தம்!

இரவு வேளை... ஊரில் திருவிழாவோ, நாடகமோ நடக்க, ஊரே கூடியிருக்கிறது. வெளிச்சமான மைதானத்தில் உறவுக்காரர்கள் சூழ்ந்திருக்க ஒருபுறம் காதலி... அவளுக்கு நெருக்கமான தூரத்தில் கண்களில் காதலோடு காத்திருக்கும் காதலன். எல்லோரும் சுவாரஸ்யமாகக் காட்சிகளை ரசிக்கும் தருணத்தில் காதலன் அவளை நெருங்கி குனிந்து கைவிரல்களையோ, கால்விரல்களையோ பிடித்து முத்தமிடுகிறான். இது ‘அங்குலி சும்பணம்.’ விரல் முத்தம்!

ஒரு ஜோடியை எப்படியோ திருமண பந்தத்தில் இணைத்து விட்டார்கள். ஆனால், அந்த ஆண் மீது பெண்ணுக்கு முழு நம்பிக்கையோ, காதலோ வரவில்லை. ஆனால், அவன் உறவுக்கு கட்டாயப்படுத்துகிறான். அவளிடம் முத்தம் கேட்டு தனது உதட்டைக் குவித்து வைக்கிறான். அந்தப் பெண் தன் முகத்தை அவன் முகத்துக்கு அருகில் கொண்டுபோய் எந்த உணர்ச்சியும் இல்லாமல் சும்மா உதட்டால் உதடு தொடுகிறாள். இது ‘நிமிதகம்.’ சும்மா முத்தம்!



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 8:33 am

காதலனும், காதலியும் சந்திக்கவோ அன்பை வெளிப்படுத்திக் கொள்ளவோ முடியவில்லை. காதலி எங்கோ இரவில் பாதுகாப்போடு வரும்போது, சுவரில் படியும் அவளது நிழல் மீது முத்தமிடுகிறான் காதலன். இது ‘சாயா சும்பணம்.’ நிழல் முத்தம்!

இப்படி முத்தத்தைப் பற்றி உலகிலேயே அதிகம் அலசிய நூலாக காமசூத்திரம் இருந்தாலும் இந்தியர்கள் காலப்போக்கில் அதன் நன்மைகளை உணராமல் ஒதுக்கி வைத்து விட்டார்கள். நஷ்டம், வாத்ஸாயனருக்கு இல்லை... நமக்குதான்!

இப்படி முத்தத்தை ஆராய்ந்த வாத்ஸாயனர் தொடுதலில் கிடைக்கும் இன்பத்தைப் பற்றியும் சொல்கிறார்...

இங்கே பல திருமணங்கள் ஜாதகப் பொருத்தம், சாதிப் பொருத்தம் பார்த்துப் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம்தான் நடக்கின்றன. திருமணம் முடிந்த அன்றைக்கே முதலிரவு! முன்பின் அறிமுகம் இல்லாத ஓர் ஆணும், பெண்ணும் அந்த இரவில் பயத்தோடு அறைக்குள் நுழைவார்கள். பெண்ணுக்கு வலி பற்றிய பயம்... தோழிகள் அதைப்பற்றி தப்பாக சொல்லி அனுப்பியிருப்பார்கள். ‘ராத்திரி பூரா வும் பெண்டாட்டியைத் தூங்கவிடக் கூடாது’ என மாப்பிள்ளைக்கு நண்பர்களிடம் தப்பான அட்வைஸ் கிடைத்திருக்கும். இதை வைத்து, ‘என்னால் இது முடியுமா? நான் தாக்குப்பிடிப்பேனா?’ என்று பயம் மாப்பிள் ளையைப் பீடித்திருக்கும்.

இப்படி இரண்டு பேரும் பயத்தோடு அதை ஆரம்பிக்கும்போதுதான் பிரச்னை வருகிறது. பலருக்கு அந்த உறவு இயல்பாக நடக்கா மல் போய்விட... இரண்டு பேருக்குமே, யாரிடம் பிரச்னை என புரியாத குழப்பம் வரும். ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்கிற மாதிரி அடுத்தடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடியும். இதனால் கணவன்மனைவி இடையே கருத்து வேறுபாடு உருவாகி, அது வலுத்து விவாகரத்து வரைகூட சமயத்தில் போய்விடும்.

இன்னும் சில உறவுகளில் வேறு மாதிரி பிரச்னை. படுக்கை யில் கணவன் முரட்டுத்தனம் காட்ட, அந்த முதல் அனுபவமே மனைவிக்கு நரகவேதனை தருகிறது. இதனால் கணவன் மீதும், செக்ஸ் மீதும் வெறுப்பு வருகிறது. வெறுப்போடு இருக்கும் மனைவியை எப்படி ஒரு கணவனால் செக்ஸ் உணர்வோடு அணுகமுடியும்? குடும் பத்தில் நிம்மதி போய் அவர்களும் பிரிய வேண்டிய நிர்ப்பந்தம் வரும்.

அடிப்படை காரணம் என்ன? பரஸ்பரம் புரிதல் இல்லாத இருவரைத் திடீரென ஓர் அறைக்குள் அனுப்பி, ‘இன்று உங்களுக்கு முதலிரவு. செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளுங்கள்’ என்றால் அது கஷ்டம். இப்போதொல்லாம்... ‘முதலிரவைத் தள்ளிப் போடுங்கள்’ என டாக்டர்கள் அட்வைஸ் செய்கிறார்கள். வாத்ஸாயனர் இதை அந்தக் காலத்திலேயே சொன்னார். காமசூத்திரத்தில் ‘கன்யா விஸ்ரம்பனம்’ என்ற பகுதியில் திருமணமான ஆண், புது மனைவியிடம் நெருக்கத்தையும், நம்பிக்கையையும் எப்படி ஏற்படுத்துவது என சொல்லித் தருகிறார்.

‘திருமணம் முடிந்தது... இனி இவள் நமக்கு உரியவள்... அதனால் எதையும் செய்யலாம் என்று அவசரப்படாதே! திருமணம் ஆகி முதல் பத்து நாட்களுக்கு செக்ஸ் கண்டிப்பாக வேண்டாம். அவளைக் கட்டிலில் படுக்கச் சொல்லிவிட்டு, நீ தனியாகத் தரையில் பாய்விரித்துப் படு’ என்கிறார் அவர்.

ஏன் இப்படி? முதலில் அன்பாகப் பழக வேண்டும். பாசத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்த நெருக்கம் வந்தபிறகு உறவு கொண்டால்தான் செக்ஸ் இனிக்கும் என்பது அவர் சொல்லும் அட்வைஸ்.

‘அன்பாகப் பேசி மனைவியோடு ஏதாவது விளையாட் டில் ஈடுபடு. யதேச்சையாகக் கை மேலே படுவதுபோல் தொடு. விளையாட்டின்போது சாதாரணமாகக் கட்டிப் பிடி. செக்ஸ் உறவுக்கான இச்சையோடு இறுக்கமாக பிடிக்காதே. அன்பை உணர்த்தும்விதமான மெல்லிய தழுவலாக இது இருக்கட்டும். அவள் விலகினால் வற்புறுத்தாதே. பழகப் பழகத்தான் பயம், கோபம், பதற்றம், கூச்சம் எல்லாம் குறையும். இந்த சமயத்தில் உறவுக்கு அவளிடம் சம்மதம் கேள். எந்த சந்தர்ப்பத்திலும் வலுக்கட்டாயமாக வீழ்த்த நினைக்காதே! பெண்ணின் விருப்பம் ரொம்ப முக்கியம்.

இதன் பிறகும் அவள் பயம், கோபம் விலகாமல் இருந் தால், தயங்காமல் காலில் விழுந்து விடு. எவ்வளவுதான் செக்ஸ் மீது பயமும், இதற்காகக் கூப்பிடுகிறானே என்ற கோபமும் இருந்தாலும், கணவன் காலில் விழுந்ததும் அவள் பதறி சம்மதித்து விடுவாள்.’

இப்படி ஒரு குருவாக இருந்து பாடம் நடத்துகிறார் வாத்ஸாயனர். காத்திருப்பதால் லாபம் ஆணுக்குதான் கிடைக்கிறது. மனைவிக்கு அவன் மீது பரிபூரண நம்பிக்கை ஏற்படுவதால் உறவில் அதிக இன்பம் கிடைக்கி றது. பல நாட்கள் மனைவியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு தாம்பத்ய உறவில் ஈடுபடாமல் காத்திருந்ததால், உறவின்போது அவருக்குத் துரிதஸ்கலிதம் ஏற்படாது. தாமதமாக உச்சகட்ட பரவசத்தை அடைய முடிகிறது.

அந்தக்கால திருமண சடங்குகள் நீளமாக இருந்ததன் பின்னணி இதுதான். இரண்டு, மூன்று நாட்கள் நடக்கும் திருமணத்தில் நிறைய விளையாட்டுகள் உண்டு. இது கணவனும், மனைவியும் தொட்டுப் பேசி, கட்டிக்கொண்டு நெருக்கமாக உதவியது. முதலிரவும் இந்த சடங்குகளால் தாமதப்பட்டது. இப்படி திட்டமிட்ட நம் முன்னோர்கள், உண்மையிலேயே புத்திசாலிகள்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 8:33 am

அந்தக் காலத்தில் செக்ஸ் உறவு பற்றி தெரியாதவர்களை தாசிகளிடம் போய் கற்றுவரச் சொல்வார்கள். தாசிகள் பல கலைகள் கற்றறிந்தவர்கள்.
‘ஆண், பெண் உறவு இனிக்க இவற்றில் சிலவற்றையாவது ஆண்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியம்’ என்கிறார் வாத்ஸாயனர். இதற்கான காரணம் பிராக்டிக்கலானது... இரண்டு ஆண்கள் சந்தித்துக் கொண்டால் அரசியல், பிஸினஸ், நாட்டு நடப்பு என எதையும் பேசலாம்.

ஆனால், படுக்கை அறையில் கணவன், ‘லஞ்சம் வாங்கிய எம்.பிக்களை இப்படி டிஸ்மிஸ் செய்தது நியாயமா? விளக்கம் தர அவர்களுக்கு ஒரு சான்ஸ் கொடுத் திருக்கலாமே!’ என ஆரம்பித்தால் போச்சு. மனைவி, ‘எனக்கு தூக்கம் வருதுங்க’ என்றபடி குப்புறப் படுத்துக் கொள்வார். படுக்கையில் அரசியலோ, குடும்பப் பிரச்னை களோ பேசினால் அந்த சம்பாஷனை செக்ஸில் போய் முடியாது.

கொஞ்சம் ரொமான்ஸாக எதையாவது ஆண்கள் பேசியாக வேண்டும். ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவான விஷயங்கள் என சில இருக்கின்றன. அவற் றின் அடிப்படையாவது தெரிந்தால்தான் ரொமான்ஸ் சாத்தியம். இதற்குதான் கலைகள் உதவுகின்றன. பாடுவது, இசைக்கருவிகள் பயிற்சி, வாசனைத் திரவியங்கள் தயாரிப்பது, அலங்கரிப்பது, செயற்கைப் பூக்கள் செய்வது, மிமிக்ரி செய்வது, தாயம், செஸ் விளையாடுவது, நடனம், ஒப்பனைக் கலை, சிகை அலங்காரம்... இப்படி பல விஷயங்கள்.

அலங்காரம் பற்றித் தெரிந்தால்தானே, ‘நீ பட்டுப் புடவை கட்டிக்கொண்டு நடந்தால் தேவதை மாதிரி இருக்கிறாய்’ என ரொமான்ஸ் செய்ய முடியும்! அவள் ஸ்ப்ரே செய்திருக்கும் வாசனைத் திரவியம் என்ன என்று தெரிந்தால்தானே, ‘இது உனக்கு மட்டுமே பொருத்தமான வாசனையாக இருக்கிறது’ என சொல்லிக் கிறங்கவைக்க முடியும்!

தாம்பத்ய உறவில் பிரச்னை உள்ள ஜோடிகளுக்கு இப்போது டாக்டர்கள் கொடுப்பது, இதே டைப் அட்வைஸ் தான். கொஞ்சம் வார்த்தைகளை மாற்றி, ‘‘உறவு இனிக்க நான்கு விஷயங்கள் முக்கியம்’’ என்கிறார்கள்.

இதில் முதல் விஷயம் ‘தொடுதல்’. யாரோ ஒரு ஆண் ஏதோ ஒரு பெண்ணைத் தொட்டால் அது சுகமாக இருக்குமா? சான்ஸே இல்லை. தொடுதல் இன்ப மயமாக அமைய இரண்டு பேருக்கும் இடையே ‘நம்பிக்கை’ அவசியம்... இது இரண்டாவது விஷயம். நம்பிக்கை எப்படி வரும்? ‘இவர் என் மீது மனப்பூர்வமாக அன்பு செலுத்துகிறார். என் உணர்வுகளைப் புரிந்து கொள்வார்’ என மனைவிக்குத் தோன்ற வேண்டும். அதேபோல, ‘இவள் என்மீது பாசத்தைக் கொட்டுவாள்’ என கணவனும் உணர வேண்டும். இதன்பிறகே, ‘செக்ஸ் என்பது வலிதரும் அனுபவம் இல்லை. அதில் இருவரும் பகிர்ந்துகொள்வது சுகத்தை மட்டுமே’ என்ற நம்பிக்கை வரும்.

இப்படி நம்பிக்கை ஏற்பட ‘மனம் விட்டுப் பேச’ வேண்டும்... இது மூன்றாவது விஷயம். படுக்கை அறை, செக்ஸ§க்காக மட்டும் இல்லை. ஆரம்பத்தில் புதுமணத் தம்பதிகள், பேசுவதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

இப்படி மனம்விட்டுப் பேசி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளத் தேவை, நான்காவது விஷயமான ‘நேரம்’. இருவருமே இணைந்து பொழுதைக் கழிக்க நேரம் இருக்க வேண்டும். இன்றைய அவசரக் குடும்பங்களில் பிரச்னை இதுதான். வாரம் முழுக்கக் கணவன் ஒருபக்கம், மனைவி ஒருபக்கம் என பறந்துபறந்து வேலைக்குப் போவார்கள். ஞாயிற்றுக் கிழமை வீட்டு வேலைகளே சரியாக இருக்கும். அப்புறம் பேச நேரம் ஏது?

இந்த விஷயத்தில் பிரிட்டிஷ்காரர்கள் விவரமானவர்கள். மாலையில் ஓய்வாகக் குடும்பத்தோடு உட்கார்ந்து டீ சாப்பிடும் பழக்கத்தை அவர்கள் உருவாக்கியதே மனம்விட்டுப் பேசிக் கொள்ளத்தான்! ஆனால், நம்ம ஊரில் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து அரசியல் பேசவே பழகி இருக்கிறோம்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 8:39 am

மனித உடலில் செக்ஸ் உணர்வை அதிகம் தூண்டக்கூடிய பாகம் எது?

இப்படி ஒரு கேள்வி கேட்டால் பலரும் ‘செக்ஸ் உறுப்பு’ என்றுதான் பதில் சொல்வார்கள். ஆனால், செக்ஸ் உணர்வைத் தூண்டக்கூடிய மிகச் சிறந்த உறுப்பு தோல்தான். உச்சி முதல் உள்ளங்கால் வரை எத்தனையோ இடங்களில் கணவன் ஆசையோடு மனைவியைத் தொடும்போது செக்ஸ் உணர்வு கிளர்ந்து எழும்.

வாத்ஸாயனர் இதை அப்போதே புரிந்து வைத்திருந்தார். ஓர் ஆணும் பெண்ணும் செக்ஸில் ஒருமித்து ஈடுபட, இருவருமே உணர்வுக் கிளர்ச்சியோடு இருக்க வேண்டும். அப்போதுதான் உறவு முழுமை பெறும். ஆனால், அன்பான கணவன், மனைவியாக இருந்தாலும்கூட இருவருக்கும் ஒரே சமயத்தில் ‘மூட்’ வருவது இல்லை. கணவனுக்கு மட்டும் ‘மூட்’ இருந்து மனைவியைக் கட்டாயப்படுத்தினால் நன்றாக இருக்காது. மனித இனத்தில் வலுக்கட்டாய உறவு சட்டவிரோதம். மிருகங்கள் மட்டுமே இப்படி கட்டாயப்படுத்திப் புணர்ச்சியில் ஈடுபடும்.

கணவனுக்கு மட்டும் ஆசை இருக்கும்போது மனைவிக்கு ஆசையை வரவழைப்பது எப்படி? ‘ஆலிங்கன விசாரம்’ என்ற தலைப்பில் காதல் விளையாட்டுக்களை சொல்லிக் கொடுக்கிறார் வாத்ஸாயனர். இரண்டு பேரும் ஆடைகளைக் களைந்து முகம் தெரியாத இருட்டில் அவசரமாக இயங்கி, சில நிமிடங்களில் முடித்து விடுவது அல்ல செக்ஸ் உறவு. சின்னச் சின்ன விளையாட்டுகளில் ஆரம்பிக்க வேண்டும். தொடுதல், கட்டித் தழுவுதல், முத்தமிடுதல், வலிக்காமல் கடித்தல், நகத்தால் கீறிவிடுதல் என விளையாடும்போது உடலும் உடலும் இணைகிறது. உதடும் உதடும் இணைகிறது. உணர்வு தூண்டப்படுகிறது. இதன்பிறகு உறவு கொண்டால் அது இனிக்கிறது. காமத்தின் அர்த்தம் புலன்களை நன்கு பயன்படுத்துவதில்தான் இருக் கிறது. ஐம்புலன்களும், கூடவே மனதும் அந்த உணர்வில் கலந்தால்தான் ஒருவரால் முழுமையாக செக்ஸில் ஈடுபட முடியும். பெரும்பாலான செக்ஸ் பிரச்¬ னகளுக்கு அடிப்படைக் காரணம் உணர்வு சிக்கல்தான். அவர்களது உடல் இயந்திரத்தனமாக செக்ஸில் ஈடுபட முயலும்... ஆனால் மனசு வேறு ஏதோ யோசனையில் இருக்கும். மனசும், உடலும் இணையாமல் உறவு சாத்தியமில்லை. ‘என்னால் இதை சாதிக்க முடியவில்லை. எனக்கு உடலில் என்னவோ பிரச்னை’ என நினைத்து அவர்கள் நொறுங்கிப் போவார்கள். மனதில்தான் பிரச்னை என்றால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

செக்ஸில் ஈடுபட முடியாத மனக்குறையோடு என்னைப் போன்ற செக்ஸ்

நிபுணர்களிடம் வரும் நபர்களுக்கு இப்போது தரப்படும் சிகிச்சை மிகவும் மேம்பட்டது. கிட்டத்தட்ட வாத்ஸாயனர் என்ன சொன்னாரோ அதைத்தான் நாங்கள் செய்கிறோம் எனலாம். அந்தத் தம்பதிக்கு நாங்கள் சொல்லும் முதல் அட்வைஸ், ‘‘நாங்கள் சொல்லும் வரை செக்ஸ் வைத்துக் கொள்ளாதீர்கள்!’’ என்பதுதான். ‘அதில்’ பிரச்னை என்று வருகிறவர்களுக்கு, ‘அதைச் செய்யாதே’ என அட்வைஸ் செய்வது எப்படி சரியாகும் என்று நீங்கள் நினைக்கலாம்?

ஆனால், அதுதான் சரி! மலையேறுவது எப்படி எனத் தெரியாமல் சிகரத்தைத் தொடமுடியாது. அதுபோல தொடுதலிலும், உடலுறவுக்கு முந்தைய விளையாட்டுகளிலும் இருக்கும் இன்பத்தை உணராமல் பரவச நிலையை அடைய முடியாது. பரவசப்படாத ஒருவரால் செக்ஸில் உச்சகட்டத்தை அடைய முடியாது.

அதனால் அவர்களுக்கு முதலில் மனித உடலின் அமைப்பைக் காட்டி, பாடம் சொல்லித் தருவோம். உச்சிப் பொட்டில் ஆரம்பித்துப் பாதம் வரை மனித உடலில் எத்தனையோ இடங்கள் உணர்ச்சிப் பெட்டகமாக இருக்கின்றன. இந்த இடங்களில் ஒரு பெண்ணை ஆண் தொட்டா லும், ஆணைப் பெண் தொட்டாலும் விரக தாபம் ஏற்படும். ஆனால், எல்லோருக்கும் எல்லா இடங்களிலும் உணர்ச்சிகள் ஒரே மாதிரி இருக்காது. நிறைய பெண்கள் இடுப்பைப் பிடித்தால் உணர்ச்சிமயமாவார்கள். சிலர் காதுமடலை மிருதுவாக நெருடினாலே முனகுவார்கள். கணவனும், மனைவியும் பரஸ்பரம் இந்த உணர்ச்சிப் பிரதேசங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இதை முதலில் செய்யச் சொல் வோம். ‘‘இப்போது வீட்டுக்குப் போங்கள். சில நாட்கள் சும்மா இப்படி தொட்டுப் பார்த்துக் கொள் ளுங்கள். ஆனால், கட்டாயம் உறவு வேண்டாம். எல்லை மீறாமல் பொறுத்துக் கொள்ளுங்கள்’’ என அட்வைஸ் செய்வோம்.

ஊருக்குப் போனதும் அவர் கள் இதைச் செய்வார்கள். இருட்டு அறையில் இருவரும் ஆடை களைக் களைந்துவிட்டு மாறிமாறித் தொட்டுக்கொள்ள ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அவர்கள் உணர்ச்சி வசப்பட ஆரம்பிப்பார்கள். ஆனால், நான்தான் தடை போட்டுவிட்டேனே. ‘என்னடா, இந்த டாக்டர் இப்படிக் கையைக் கட்டிப் போட்டு விட்டாரே’ என புலம்ப ஆரம்பிப்பார்கள். இப்படியே இரண்டு மூன்று வாரங் கள் ஓடும். ஒவ்வொரு தடவையும் பரவசத்தை அனுபவித்து உச்சகட்டத் துக்குப் போகமுடியாத ஏக்கம் மட்டுமே மனதில் மிஞ்சும்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக