புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10 
293 Posts - 42%
heezulia
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாரதர் கதைகள் - எழுத்துச் சித்தர் பாலகுமாரன்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:04 am

First topic message reminder :

நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 F3tDCalRRLCZg0Uw3j11+p14bநாரதர் கதைகள் வெறும் நகைச்சுவைக்காக எழுதப்பட்டவை அல்ல. எதனால், நாடகத்தில் நாரதர் கோமாளியானார் என்பது எனக்குப் புரியவில்லை. நாரதரது சரித்திரத்தைப் படிக்கும்போது அவர் மிகக் கூர்மையானவராக, மிகச் சிறந்த குணவானாக, மிக அமைதியானவராக, மிகுந்த ஒழுக்கச்சீலராக, தத்துவ விசாரம் உள்ளவராக, ஸ்ரீமந் நாராயணனையே சரணடைந்தவராக, சரணாகதிக்கு உதாரணமாகத் திகழ்ந்திருப்பதை உணர முடிகிறது. எதனாலோ மேடைகளில் அவர் கோணங்கியாகிவிட்டார்.

ஒரு விஷயத்தை ஒருவரிடமிருந்து பிடுங்கி இன்னொருவர் முன் வைத்து, இது சரியா என்று பார்க்கச் சொல்லி, 'இல்லை’ என்று அவரைச் சொல்ல வைத்து, இரண்டு பேருக்கும் இடையே கலகத்தை மூட்டுவதால் அவர் கோமாளியாகிவிட்டாரோ என்று தோன்றுகிறது. ஆனால், அது கலகமல்ல. 'இதுதான் சரி’ என்று ஒரு குழுவினரும், 'இல்லை, இதுவே சரி’ என்று இன்னொரு குழுவினரும் வாழ்ந்து வரும்போது, 'எது உண்மையில் சரி?’ என்று கேள்வி எழுப்புவது எப்படிக் கலகமாகும்? அது உண்மையை நோக்கிய பயணம். சத்தியத்தை நோக்கிய சாதனை. எனவே, 'நாராயண... நாராயண...’ என்று சொல்லிக்கொண்டே அவர் மேடையில் நுழைந்தால், அத்தனை பேருக்கும் சிரிப்பாகிவிடுகிறது. அப்படிச் சிரிக்கிறார்கள் என்று தெரிந்ததாலேயே அந்த நடிகர், அந்த 'நாராயண... நாராயண’ என்பதை மிகச் சரியான ஒரு நேரத்தில், மிகக் கேலியான ஒரு குரலில் வெளிப்படுத்துகிறார் என்றும் தோன்றுகிறது. உண்மையில் அந்த 'நாராயண... நாராயண’ என்ற சப்தம் வியப்பின்பால் வருவது என்பதாகவே நான் உணர்கிறேன்.

'அடடே! இதுவா உண்மை! அப்ப, இதுவா உண்மை’ என்று பல திசைகளிலும் தன் பார்வையைச் செலுத்தி, உண்மை எதுவெனக் கண்டுபிடிப்பதே அவருடைய தன்மையாக இருக்கிறது. தான் மட்டும் அறிந்த உண்மையை தனக்குள்ளே பொதித்துக் கொள்ளாது, தன் சரிதமாக அவர் வெளியிடுகிறார். தன் வாழ்க்கை யின் நோக்கமாகவும் அதைக் கொண்டுவிடுகிறார். எனவே, ஓர் உன்னத புருஷனுடைய வாழ்க்கையாகத்தான் நாரதருடைய கதைகளை நான் கவனிக்கிறேன்.

நாடகக் கொட்டகைக்குள் மக்கள் ஆணி அடித்ததுபோல் திகைப்பாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் அவர்களைத் தளரவிடுவது நல்லது என்று ஆலோசித்து, நாடகக்காரர்கள் யாரை அனுப்புவது என்று யோசித்து, நாரதரை அனுப்புவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அந்த உச்சிக் கொண்டையும், காவி உடையும், பூணூலும், மார்பிலே தொங்குகிற வீணையுமாக அவர் உள்ளே நுழைய, கைதட்டல் ஆரவாரம் பொங்குகிறது. 'அப்பாடா, இனி அடுத்த பத்து நிமிடமும் நல்ல நகைச்சுவையாகப் போகும்’ என்று மக்கள் நினைக்கிறார்கள். அதை விரும்பவும் செய்கிறார்கள். நாடகக் காரர்களுக்கும் தங்களுடைய சாதனை பற்றிச் சந்தோஷம். பல நாடகங்களில் நாரதர் தம்பூரா வைத்துக்கொண்டு வருவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், நாரதரிடம் இருப்பது தம்பூரா அல்ல; அது மஹதி என்கிற வீணை. கந்தர்வ லோகத்து சமாசாரம்.

நாரதர் யார்? சப்த ரூபம். எது சப்தம்? உலகத்தில் ஏற்படுகிற எல்லா அசைவுகளும் சப்தத்தை உண்டு பண்ணுகின்றன. அந்த சப்தங்களில் உன்னதமானது எது? இசை. அந்த இசையில் உன்னதமானது எது? வீணை இசையே என்று சொல்லப்பட்டிருக்கிறது. சப்தத்தினுடைய இன்னொரு வடிவம் என்ன என்று யோசித்தால், பேச்சு. பேச்சின் உன்னதம் கவிதை. கவிதையின் இன்னொரு வடிவம் விவாதம். நாரதர் எல்லா இடங்களிலும் விவாதம் பேசி, மக்களுடைய திசையைத் திருப்பி, நல்லது நோக்கிப் பயணிக்கச் செய்கிறார்.

இங்கே எவர் கர்வம் கொண்டு அலைகிறாரோ, எங்கே ஆணவம் தலைவிரித்து ஆடுகிறதோ, இந்தப் பிரபஞ்சத்தில் எங்கே வீராவேசம் பேசப்படுகிறதோ, அங்கெல்லாம் நாரதர் போய் சமனம் செய்கின்ற பணியிலே தாமாக ஈடுபடுகிறார். இதற்கு, நாரதர் பாட்டுப் பாடவில்லை; கவிதை சொல்லவில்லை. மாறாக, பேச்சுகளில் இறங்குகிறார். 'என்ன இது?’ என்ற கேள்விதான் நாரதருடைய அடிப்படையான விஷயம். உண்மையை அறியும்பொருட்டு 'என்ன இது?’ என்று எவர் கேள்வி கேட்டாலும், அவர் நாரதருடைய தன்மையைக் கொள்கிறார். அப்படிக் கேட்கும்போது உள்ளுக்குள்ளே கலவரம் ஏற்படத்தான் செய்கிறது. அந்தக் கலவரம்தான் நல்ல விஷயத்தை வெளிக்கொண்டு வருகிறது. எது குழம்புகிறதோ, அதுவே தெளியும். எது கடையப்படுகிறதோ, அதிலிருந்தே அமிர்தம். எனவே, நாரதர் ஏற்படுத்துகிற கலவரம், அதாவது கடையல், நன்மையைக் கொண்டு வந்து சேர்க்கிறது; அமுதத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறது.

பிரம்மா- படைப்புத் தொழில். ஓர் உயிரின் ஆரம்பம்; ஓர் உருவத்தின் தொடக்கம். சிவன் அழிக்கும் தொழில். ஒரு முடிவின் ஆரம்பம்; ஒரு வாழ்க்கையின் முடிவு! எது வளர்ச்சி? விஷ்ணுவே வளர்ச்சி. வளர்வது என்பது விஷ்ணுவாகவும், படைப்பது என்பது பிரம்மாவாகவும், முடிவது என்பது சிவமாகவும் மூன்று வித சக்திகளுக்கு உருவங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதுதான் சநாதன தர்மத்தின் அடிப்படை விதி.

ஆக, விவகாரங்கள் எல்லாம் வளர் வது பற்றித்தான் இருக்கின்றன. எது வாழ்க்கை என்பதைப் பற்றித்தான் இருக்கின்றன. அதைப் பற்றித் தவறாகக் கூறப்படும்போது, அது பற்றி மோசமாக பிரசாரம் செய்யப்படுகிறபோது, அது பற்றிய ஞானமில்லாமல் பேசப் படுகிறபோது, அவற்றை உடைத்து உண்மையை நிலைநாட்டுவதற்கு நல்லவர்கள் இடைவிடாது முயன்று கொண்டிருக்கிறார்கள். அந்த முயற்சியின் ஒரு வடிவம்தான் நாரதர்.

நாரதர் என்பவர் படைப்புத் தொழிலோடும் சம்பந்தப்படவில்லை; ஒரு வாழ்க்கையின் முடிவோடும் சம்பந்தப்படவில்லை. அவர் வளர்ச்சி மீதே அக்கறை காட்டுகிறார். எது வளர்கிறதோ, அந்த வளர்ச்சியை நோக்கிச் சரணடைந்து, எது வளர்கிறது, எப்படி வளர்கிறது என்று ஆராய்ச்சி செய்கிறார். எனவே, விஷ்ணுவின் பக்தராக, ஸ்ரீமந் நாராயணரைச் சரணாகதி அடைந்தவராக நாரதர் உருக்காட்டப்படுகிறார்.

படைப்புத் தொழிலைப் பற்றி விமர்சனம் இல்லை; முடிவு பற்றிய விமர்சனம் இல்லை. எது வளர்கிறதோ அதைப் பற்றி மட்டுமே விமர்சனம். அந்த விமர்சன சக்திதான், அந்த விமர்சன ரூபம்தான், எழுப்பப்படுகிற கேள்வி என்கிற மகோன்னதமான ஒரு மாறுதல்தான் நாரதர். இந்த விமர்சனம் இல்லாவிட்டால் வளர்ச்சி இல்லை. அல்லது, வளர்ச்சி கோணலாகப் போகும். ஆட்டு மந்தைகள் போல முன்னால் போவதன் பின்னாலேயே போகாமல், 'இது என்ன?’ என்று கேள்வி கேட்கும் நம் விமர்சன சக்தியே, நம்முடைய கேள்வி கேட்கும் திறனே நம்முள் தெளிவை உண்டாக்கும். அப்படித் தெளிந்து நடக்கிற பயணமே வாழ்க்கை. அப்படிப்பட்ட வாழ்க்கையே நாரதர் வகுத்த வழி! இந்தக் கேள்வி கேட்டலே நாரத சக்தி. இந்த விஷயம்தான் விதம் விதமான கதைகளாக்கப்பட்டிருக்கிறது.

நல்லவன், கெட்டவன் என்று பிரித்து, நல்லவனுடைய விளக்கத்தையும் கேட்டு, கெட்டவனுடைய விளக்கத்தையும் கேட்டு, எது சரியான வழி என்று தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது. எனவே, இங்கு கெக்கலித்துச் சிரிப்பதற்கு எதுவும் இல்லை. மாறாக, கூர்த்த புத்தியும், விமர்சன புத்தியும் உள்ளவர்களுக்கே நாரதர் கதை புரியும்.

வழக்கம் போலல்லாது, பாலகுமாரன் மிக வித்தியாசமான ஒரு நகைச்சுவைக் கதையைச் சொல்ல ஆரம்பித்துவிட்டான் என்று நீங்கள் நினைத்துக்கொள்வீராயின் அது மிகப் பெரிய தவறு. முன்னைவிட இந்த நாரதர் கதைகள் மிகக் கூர்மையாகவும் கனமாகவும் இருக்கும்.

இந்தப் பிரபஞ்சம் பூமியை மட்டும் கொண்டதல்ல; வெவ்வேறு வடிவான உருவங்கள் வாழ்கிற பல்வேறு உலகங்கள் இருக்கின்றன என்பது சநாதன தர்மத்தின் கருத்து. மிகச் சமீபமாக, பூமியில் ஒரு பெரிய நட்சத்திரக் கல் வந்து விழுந்தபோது, அதை இடைமறித்து ஒரு விண்கலம் தாக்கிச் சிதறடித்து, பூமிக்கு அப்பால் அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. அதாவது, பல்வேறு உலகக் கதைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

அப்படிப்பட்ட உலகங்களில் ஒன்று கந்தர்வ உலகம். எந்த மாதிரியான ஆன்மாக்கள் கந்தர்வ உலகத்தில் ஜீவிக்கின்றன? இசையை பக்தியின் வெளிப்பாடாக, குழல், யாழ் போன்றவற்றை நன்கு பயின்று மீட்டி, அதன் மூலம் இந்தப் பிரபஞ்ச சக்தியை, இறைவனை வணங்குகிற ஆன்மாக்கள் அங்கு வாழ்கின்றன என்று சொல்லப்படுகிறது. அதாவது, புனிதப்பட்ட ஆன்மாக்கள் பசி, தூக்கமில்லாது, வேறு உடல் உபாதைகள் இல்லாது, சங்கீதமே வாழ்வாகக் கொண்டு கந்தர்வ உலகத்தில் வாழ்கின்றன. ஆனால் மன மயக்கங்கள், மதி சறுக்கல்கள் அங்கேயும் உண்டு.

உபன் என்ற கந்தர்வனுக்கு ஒரு மகன் பிறந்தான். அந்த மகனுக்கு உபவருக்கன் என்று பெயரிட்டார்கள். உபன் இசையையே லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவன். இறைவனை இசையால் வழிபடுவதையே எந்நேரமும் செய்துகொண்டிருந்தவன். தன் மகனை நன்கு பயிற்றுவித்தான். தன்னிலிருந்து பிரிந்த, கிளர்ந்த அந்தச் சக்தியை மிகவும் பாராட்டி வளர்த்தான். அவனுக்கு, தான் வாசிக்கிற மஹதி என்ற யாழை வாசிக்கக் கற்றுக் கொடுத்தான். உபவருக்கன் தந்தையை மிஞ்சிய சீடனாக அந்த வீணையைத் திறம்பட வாசிக்கக் கற்றுக்கொண்டான். எல்லா உலகத்தாரும் உபவருக்கனை அழைத்து, அவனை மஹதி வாசிக்கச் சொல்லிக் கேட்பது வழக்கம். நல்ல விழாக்கள் எதுவும் மஹதி வீணை இல்லாது, அதை வாசிக்கின்ற உபவருக்கன் இல்லாது நடைபெறுவதில்லை.

தேவர் உலகில் ஒருமுறை, பிரம்மசிரேஷ்டர் என்கிற முனிவர் மிகப் பெரிய யாகங்கள் செய்தபோது, அங்கே வீணை வாசிக்க உபவருக்கன் அழைக்கப்பட்டான். உபவருக்கனும் மனம் ஒருமித்து சாம கானம் வாசித்து, அங்குள்ளோரைத் தன் வயப்படுத்தினான்.

அந்த இடத்தில் இசை ஞானமுள்ள அந்தணக் கன்னிகை ஒருத்தியும் இருந்தாள். உபவருக்கனின் வீணை இசையில் சொக்கிப் போனாள். அதன் சுரத்தோடு அவள் மனமும் கலந்தது. தான் அவனுக்கு உரியவளாக வேண்டும் என்றும், அவனை போஷிக்க வேண்டும் என்றும், அவனை இன்னும் சிறப்பானவனாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடும் அவன் மீது காதல் கொண்டாள். அவன் கவனத்தை ஈர்க்கும்படியாக நெகிழ்ந்தும், அசைந்தும், கண்களால் அழைத்தும், பார்க்கும்போது உதடு பிரித்துச் சிரித்தும், வெட்கப்பட்டும், ஆர்வப்பட்டும் பல்வேறு பாவனைகள் காண்பிக்க, உபவருக்கன் மனம் சிதறினான். பாடலில் இருந்த கவனம் நகர்ந்து போயிற்று. சாம கானம் வாசிப்பதில் பிழை ஏற்பட்டது. மிகப் பெரிய சிரேஷ்டர்கள் அமர்ந்திருந்த அந்தச் சபையில், சாம கானத்தை கரதலப் பாடமாகக் கற்ற பெரியவர்கள் கூடியிருந்த அந்த இடத்தில், பிசிறு பிசிறாக சாம கானம் வாசிக்கப்பட்டதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சியுற்றார்கள்.

ஏன் தவறு செய்கிறான், எதனால் பிழை செய்கிறான் என்று கவலைப்பட்டார்கள். அவன் கவனம் ஒரு கன்னிகையிடத்தில் சிதறியிருப்பதைக் கண்டு வருத்தப்பட்டார்கள். கவனம் சிதறாமல் இருந்தால் மிக அற்புதமான ஒரு சாம கானம் வெளிப்பட்டிராதா, என்ன வாசிக்கிறோம் என்றுகூடத் தெரியாது இப்படிக் கவனம் சிதறலாமா, இது நல்லதா, இது பலருக்குத் துன்பம் நேர்விக்குமே என்று கலங்கினார்கள்.

யாகம் செய்த பிரம்மசிரேஷ்டர் கோபம் அடைந்தார். சபை சலசலப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். வாசிப்பு தவறாக இருப்பதால் சபை தனது மௌனத்தை இழந்துவிட்டது என்பதைப் புரிந்து ஆவேசப் பட்டார். ''கந்தர்வனே, போதும் நிறுத்து!'' என்று கட்டளையிட்டார். வீணை இசை நின்றது.

''என்ன செய்கிறோம் என்று தெரியாமல், ஓர் உன்னதமான காரியம் செய்கிறபோது மனம் பிழன்று மிகச் சாதாரணமான ஒரு விஷயத்தில் ஈடுபடுகிறாய் என்றால், நீ இந்த மஹதி வீணையை வாசிக்கத் தகுதி இல்லாதவன். இந்த சாம கானம் இசைக்க யோக்கியதை இல்லாதவன். எனவே, யோக்கியதை இல்லாமல் ஒரு பெரிய சபையில் இந்த வித்தையை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதால், நீ கந்தர்வனாக இனி இருக்க வேண்டாம். அது உனக்குத் தகாது. எனவே, நீ பூமியில் பிற!'' என்று சாபமிட்டார்.

உபவருக்கன் தன் தவற்றை உணர்ந்தான். கந்தர்வன் என்ற இடத்திலிருந்து நகர்ந்து, ஒரு மானுடனாக பூமியில் வந்து பிறந்தான். அவனது வெகு இளம் வயதிலேயே அவனின் தந்தை இறந்தார். தாய் பல்வேறு வீடுகளில் வேலை செய்து மகனை வளர்த்து வந்தாள்.

சாம கானம் என்ற உன்னதத்தை, அதைத் தெரிந்த சபைக்கு நடுவே தவறாக வாசித்து தன்னுடைய தகுதியை இழந்தது மட்டுமல்ல; கந்தர்வனாக இருந்தபோது கிடைத்த ஓர் அற்புதமான தந்தையின் சிநேகமும் பூலோகத்தில் இருக்கும்போது கிடைக்கவில்லை. தந்தையின் அணைப்பும் அந்தச் சாபத்தில் அடித்துக்கொண்டு போயிற்று.

உபவருக்கன் தன் விதவைத் தாயுடன் ஓர் அந்தணர் வீட்டில் வசித்து வந்தான். அவள், அந்த அந்தணர் வீட்டில் வேலை செய்து, தன்னோடே தன்னுடைய பிள்ளையை வைத்துக் கொண்டாள். ஒரு மழைக்காலத்தில் அந்த அந்தணர் வீட்டுக்கு நாராயணனுடைய அடியார்கள் வந்தார்கள். பரத கண்டத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு கோயில்களைத் தரிசிக்கவும், நாராயணனின் புகழ் பாடவும் அவர்கள் ஒரு கூட்டமாக நகர்ந்துகொண்டிருந்தார்கள். அந்த மழைக்காலம் முழுவதும் அவர்கள் அந்த அந்தணர் வீட்டில் தங்கி, நாராயணனைப் பற்றி விதம்விதமான பாடல்களைப் பாடினார்கள். இசை என்ற ஓர் அற்புதமான வித்தை, அவனுக்குக் கந்தர்வ உலகத்தில் கிடைத்திருந்ததால், அந்த இசையால் அவன் பல பேரை மகிழ்வித்திருந்ததால், மானுடனாகப் பிறந்த உபவருக்கனுக்கும் அந்த இசை ஞானம் இருந்தது. அந்த அடியவர்கள் பாடும்போது, அவனும் தன்னுடைய இனிய குரலில் சேர்ந்து பாடினான். அவர்களோடு அமர்ந்து அந்தப் பாடல்களை எழுதிக்கொண்டு, மனனம் செய்தான். அவர்கள் பாட மறந்ததை எடுத்துக் கொடுத்தான்.

ஒரு சிறுவனின் புத்திசாலித்தனத்தையும், இசை மீதுள்ள நாட்டத்தையும், இசையின்பால் அவன் கொண்டிருந்த ஞானத்தையும் அறிந்து அந்த அடியவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். அவனுக்கு நாராயண மந்திரம் உபதேசித்தார்கள்.

''இது மிக உயர்ந்தது. இசையைக் காட்டிலும் உயர்ந்தது. எல்லாவற்றைக் காட்டிலும் உயர்ந்தது. பேச்சைக் காட்டிலும் இந்த நாராயண மந்திரம் உயர்ந்தது. நமக்குப் பேச்சுத் திறன் இருக்கிறதே, அது கவிதை எழுத மட்டுமல்ல, பாட மட்டுமல்ல, ஆட மட்டுமல்ல, நாடகம் போட மட்டுமல்ல, இந்த மாதிரியான மந்திரங்களைச்சொல்ல வேண்டுமென்பதற்காகத்தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். எனவே, இடையறாது, இடையறாது நாராயணன் பெயரைச் சொல். நாராயணன் உனக்கு நேரே வருவார். நீ வேண்டுகின்ற வரங்களைத் தருவார்'' என்று சொன்னார்கள். அந்தச் சிறுவன் மனமகிழ்ந்தான். அவர்களை வணங்கி, வழியனுப்பி வைத்தான்.

அவன் தாயார் இறந்தபோது என்ன செய்வது என்று தெரியாது தவித்தான். இசையா, கவிதையா, எது முக்கியம்? இரண்டும் இல்லை, நாராயண மந்திரமே முக்கியம் என்று தெளிந்தான். வனத்திற்குப் போனான். இடையறாது நாராயண மந்திரம் சொன்னான். தனக்குள்ளே அந்த மந்திரத்தை வைத்துப் பெரிய தீயாக்கி, சதா காலமும் அதனுள்ளேயே மூழ்கிக் கிடந்தான். அவனுடைய கடும் தவத்தைக் கண்டு ஸ்ரீமன் நாராயணர் மனம் மகிழ்ந்தார். அவனுக்குக் காட்சியளித்தார். ''தொடர்ந்து மந்திரம் சொல்லிக் கொண்டிரு. இந்த உலகம் முடியப் போகிறது. பெரிய ஊழிக்காலம் வரப்போகிறது. சிருஷ்டிகள் அழியப் போகின்றன. மறுபடியும் சிருஷ்டி துவங்கும். அப்போது பிரம்மாவே உனக்குத் தந்தையாக இருந்து, உனக்குச் சகலமும் சொல்லிக் கொடுப்பார்'' என்று சொல்லி விடைபெற்றார்.

ஊழிக்காலம் வந்தது. உயிரினங்கள் அழிந்தன. சகலமும் நீர்மயமாயிற்று. நீர்மயத்திலிருந்து பிரம்மா உலகை சிருஷ்டிக்கத் துவங்கினார்.

வரிசி முதலிய முனிவர்களோடு, மஹதி என்ற வீணையோடு உபவருக்கன் மறுபடி பூமியில் பிறந்தான். அவனுக்கு 'நாரதர்’ என்று பெயரிட்டார் பிரம்மா. நாரதர் தன்னுடைய மகன் என்று பெருமையோடு உலகுக்கு அறிவித்தார். இந்த உலகம் மட்டுமல்லாது, எல்லா உலகங்களுக்கும் செல்கிற தகுதியோடு, நாரதர் மஹதி என்ற வீணையோடு பிறந்தார்.

சந்தோஷம் கொடுக்கிற இசை மட்டுமல்ல, துன்பத்தை நீக்கி ஆழ்ந்த மௌனத்தில் ஆழ்த்துகிற இசை மட்டுமல்ல, சத்தியத்தை நோக்கிக் கேள்வி கேட்டுத் தெளிகிற ஞானத்தோடும் நாரதர் பிறந்தார். அவருடைய வாக்கு பிரபஞ்சத்தின் எல்லாத் திசைகளிலும் ஒலித்தது. சாதாரண பிறப்பல்ல அது. மாமுனி என்கிற பிறப்பு. சகலமும் அறிந்து தெளிந்த பிறப்பு. கடும் தவத்தால் அது அவருக்குக் கிடைத்தது.

நாராயண மூல மந்திரம், மறுபிறப்பில் மிகச் சிறப்பான ஓர் அம்சத்தைக் கொண்டு வந்து கொடுத்தது. அந்தச் சிறப்பான அம்சத்திற்குப் பெயர் நாரதர். அவர் எடுத்துரைத்த உண்மைக்குப் பெயர் நாரத புராணம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:28 am



ஆனால், அவரோ ராமாயணத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே இல்லை. நாரத அவதாரத்தை உற்றுக் கவனிக்கிறபோது, எங்கெல்லாம் கர்வம் கிளைவிட்டுப் பரவுகிறதோ அதை பங்கம் செய்வதே நாரதரின் வேலையாக இருந்திருக்கிறது. எங்கெல்லாம் அரக்கத்தனமான வேலைகள் நடைபெறுகிறதோ, அதைத் தடுத்து நிறுத்த, இருந்து மடக்க நாரதருடைய திட்டமே காரணமாக இருந்திருக்கிறது. நாரதர் வில்லும் வாளும் ஏந்திப் போர் செய்யப் புறப்பட்டவர் அல்ல. நீட்டி முழக்கி கர்ஜனை செய்பவர் அல்ல. அவர் குரல் வீணையின் குரலை ஒத்திருக்கும். மஹதி என்ற யாழை மீட்டியபடியே அவர் உள்ளுக்குள் நுழையும்போது, அவர் மிகவும் வேண்டப்பட்டவராகத் தெரிவார். மிக இதமுள்ளவராகக் காட்சியளிப்பார். இசையின் ஓசையோடு அவர் பேச்சு சுகமும் கேட்பவரைக் கிறங்கடிக்கும். செவிமடுக்கத் தோன்றும். எங்கெல்லாம் கர்வம் கிளறுகிறதோ அங்கெல்லாம் போய்ப் பேசுவது நாரதர் வேலை. பரத கண்டத்தின் மூலம் இந்தப் பூவுலகுக்கு இந்த நாரதர் கொடுத்த கொடை வால்மீகி ராமாயணம். அவர் இல்லையெனில் இந்தக் காவியம் இல்லை.

பச்சிலைகள் வாசத்தை அதிகரித்தது. மேகங்கள் கீழே தவழ்ந்து ஓட, விந்திய மலையின் அரசன் கை கூப்பி வணங்கினான்.

''எனக்கு ஒப்பாக வேறு ஏதேனும் மலைகள் இருக்கின்றனவா? தெற்கே பல மலைத் தொடர்களைப் பார்க்கிறேன். அவை யாவும் எனக்கு இணையானவையா? என்னைவிட என் முழங்கால் உயரத்துக்கு உண்டான மலைகளெல்லாம் மேகத்தைத் தலையில் சூடிக்கொண்டு ஆடுவதைப் பார்த்து ஆச்சரியமாக இருக்கிறது. நான் மேகங்களைத் தலையில் சூடுவதே இல்லை. கால்களில் கழல்களாக அணிந்து கொள்கிறேன்; இடுப்பில் பட்டாடையாகத் தரித்துக்கொள்கிறேன். அதற்கு மேல் தொட மேகங்களுக்கும் வலு இல்லை; நானும் அனுமதிப்பதில்லை. இவ்வளவு சிறப்புகள் கொண்ட என்னைப் பற்றி இந்த மலைகள் என்ன பேசிக் கொள்கின்றன?'' என்று கேட்டான்.

விந்திய மலையின் இந்தக் கேள்விக்கு விடையாக நாரதர் சிரித்தார். 'அடேங்கப்பா! மேகங்களைக் காலில் போடுவதா, இடுப்பில் அணிந்துகொள்வதா? மற்ற மலைகளெல்லாம் தலையில் சூடிக் கொள்வது, எனக்கு இடுப்பில் இருக்கிறது என்று சொல்லிக் காண்பிப்பதா? நன்றாக இருக்கிறது இந்த கர்வம்! தன்னைத்தானே புகழ்ந்துகொள்வதில் என்ன லாபம்? ஏன் உலகம் இப்படி சுய கர்வத்தில் சிக்கித் தவிக்கிறது? வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருந்திருக்கலாம் அல்லவா? வணங்கி வழிவிடலாம் அல்லவா? எதற்கு இந்த ஆட்டம்?’ என்று அவர் மனம் நொந்தார்.

''உண்மை! உன் கால் தூசுக்கு எந்த மலையும் தெற்கே ஈடாகாது. ஆனால், வடக்கே மேரு மலை என்று ஒன்று இருக்கிறது. இமய பர்வதம். அடுக்கடுக்கான உயரம் கொண்டது. உன்னைவிட உயர்ந்தது. உன்னை விடச் சிறந்தது. பல மைல் நீளங்களுக்கு அகலம் உள்ளது. முழுவதும் பனியால் நிரம்பியது. மேகங்கள் கீழிருந்து மேலாக எல்லா இடங்களிலும் தவழ்கின்றன. காலின் கீழும் மேகங்கள், இடுப்பின் மீதும் மேகங்கள், மார்பின் மீதும் மேகங்கள், உச்சிக் கொண்டையின் மீதும் மேகங்கள்... மேகங்களால்தான் அந்தப் பர்வதம் மூடப்பட்டிருக்கிறது. அதனுடைய சிரசு சில நேரம் தென்படுவதே இல்லை. எந்நேரமும் மூடப்பட்டிருக்கிறது. நிச்சயம் அது உன்னைவிட உயரம்தான் என்று நினைக்கிறேன். உன்னைவிட உயரமான ஒரு மலை இருக்கிறபோது, நீ அதிகமாகப் பேசுகிறாயோ என்றும் தோன்றுகிறது!'' என்றார்.

''அப்படியா! என்னைவிட மேரு உயரமா? உடம்பெல்லாம் மேகமா? அப்படியானால் நானும் வளர்வேன். என்னாலும் வளர முடியும். என்னாலும் மேருவுக்கு இணையாக நிற்க முடியும். ஏன், மேருவைவிட உயரமாகவும் வளர முடியும்'' என்று சொல்லித் தன் பலத்தை அதிகரித்தது விந்திய மலை. மேலும் உயரமாக வளர்ந்தது. நாரதர் நகர்ந்தார். இது தண்டிக்கப்பட வேண்டிய விஷயம் என்று நினைத்தார். ஆனால், நாரதரின் முயற்சி இல்லாமலே அந்தக் காரியம் நடைபெற்றது.

காசியில் உள்ள அகத்தியர் தன் மனைவியோடு தெற்கே போக விரும்பினார். அப்படிப் போகும்போது, எந்த வழியில் போகலாம் என யோசித்தார். விந்திய மலையைக் கடந்தால் தெற்குப் பக்கம் எளிதாகப் போய்விடலாம் என்று எண்ணி, மனைவியை அழைத்து, ''நாம் தெற்கே நகரப் போகிறோம். நீ பயணத்துக்குத் தயாராக இரு. உலகத்தில் சிறந்த பத்தினிகளில் உலோபமுத்திரையாகிய நீயும் ஒருத்தி. உன் சக்தி மிகப் பெரியது. உன்னுடைய அன்பினாலும் அரவணைப்பினாலும்தான் நான் உத்தமமான ஒரு புருஷனாக இருக்கிறேன். என் வலிவு அதிகரித்திருப்பதற்கு உன்னைப் போன்ற பத்தினி மனைவியே காரணம். நான் விந்திய மலையைக் கடக்கப் போகிறேன். என்னோடு வா!'' என்று சொல்லி, தெற்கு நோக்கிப் பயணப்பட, வழியில் மிகப் பிரமாண்டமான முறையில் விந்திய மலை இருப்பதைக் கண்டு திகைத்தார்.

'என்ன இது, நான் வரும்போது இப்படி இல்லையே! உன்னைப் பலமுறை கடந்திருக்கிறேனே, எந்த நேரத்திலும் நீ இத்தனை உயரத்தில் இல்லையே! இப்போது என்ன ஆயிற்று?’ என உலோபமுத்திரை வியந்தாள். தன்னால் இந்த மலையில் ஏறி இறங்க முடியுமா என்று திகைத்தாள். மனைவியின் தயக்கம் அகத்தியருக்குக் கோபத்தைக் கொடுத்தது. மனைவியின் மீது அல்ல! 'மிகச் சிறந்த அரசனுக்கு மகளாகப் பிறந்து, தனக்காகச் சகலத்தையும் தத்தம் செய்து, எந்தச் சுணக்கமும் இன்றித் தன்னையே தெய்வமாகக் கருதி வரும் இந்தப் பெண்மணிக்கு மனக்கிலேசம் ஏற்படும்படி இந்த விந்தியமலை நடந்துகொண்டதே’ என்று அதன் மீதே கோபப்பட்டார்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:29 am


''விந்திய மலையே! தெற்கும் வடக்கும் ஒரே தேசமாக இணைய வேண்டும். ஒரே நாகரிகமாகப் பரவ வேண்டும். ஒரேவித மக்கள் குழுவாக இருக்க வேண்டும். தெற்கும் வடக்கும் பிரியும்படி இத்தனை உயரமாக வளருவது இந்தப் பரத கண்டத்துக்கு நீ செய்யும் தீங்கு. இந்த நாகரிகத்துக்கு நீ செய்யும் இழுக்கு. இந்த மக்களுக்கு நீ செய்யும் துரோகம். எனவே, நீ தணிந்து முன்னிருந்த உயரத்தைவிட இன்னும் கீழாக இரு!'' என்று சொல்லி, அதன் உச்சியில் தன் கையை வைத்து ஓங்கி அழுத்தினார். விந்திய மலை அதல பாதாளம் போயிற்று. முன்னிருந்ததைவிடச் சுருங்கி, சாதாரண மலையாக இருந்தது. அகத்தியர் தம்பதி அதைக் கடந்தனர்.

விந்திய மலை விழித்துக்கொண்டது. தன் தவற்றை உணர்ந்தது. ''மன்னிக்க வேண்டும்! நாரதர் பேச்சால் நான் அதிகம் கலவரப்பட்டுவிட்டேன். கர்வப்பட்டுவிட்டேன். என்னை மன்னிக்க வேண்டும். என்னைப் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும். நான் மேருவுக்கு இணையானவன் அல்ல என்பதைப் புரிந்துகொண்டேன்'' என்றது.

''இரு, இப்படியே இரு. நான் தெற்கே போய் திரும்பும் வரை இவ்விதமாகவே இரு. நான் தெற்கு தாண்டி வடக்கே போகும்போது, உன்னை உயர்த்திவிட்டுப் போகிறேன். அதுவரை இந்தத் தண்டனையை அனுபவி!'' என்று சொல்லிவிட்டுச் சென்றார் அகத்தியர்.

நாரதரின் சிரிப்பொலி விந்திய மலையின் காதுகளில் விழுந்தது. அது மௌனமாகத் தலைகுனிந்து வெட்கத்தோடு நின்றது.

''விந்திய மலையே! வலிவு என்பது நீளம், அகலம், பருமன், உயரம், திடம் போன்றவற்றில் இல்லை. அது ஒருவருடைய மனத்திண்மையில் இருக்கிறது. குறுமுனிவரான அகத்தியரால் நீ குட்டுப்பட்டுத் தாழ்த்தப்பட்டிருக்கிறாய். அப்படியானால், அகத்தியரைவிட நீ உருவத்தில் குள்ளம்தானே? அகத்தியரைவிட நீ சிறியவன்தானே? அகத்தியரைவிட நீ வலுவில்லாத சாதாரணன்தானே? உனக்கு எப்படி மேருமலைக்கு இணையாக வரவேண்டும் என்று கர்வம் தோன்றியது?'' என்று நாரதர் வினவ, விந்திய மலை தன் தவற்றை உணர்ந்து, கை கூப்பி மன்னிப்புக் கேட்டது.

குமரியிலிருந்து இமயம் வரை ஒரே விதமான நாகரிகம், ஒரே விதமான மக்கள் குழு, ஒரே விதமான வாழ்க்கை முறை என்பதை மேன்மை மிக்க அகத்தியரால் வாயாரச் சொல்ல வைத்து, அதைப் பிரபஞ்சம் முழுவதும் கேட்க வைத்து, விந்திய மலைக்கும் விளக்கம் சொல்லி, தெற்கும் வடக்கும் இணைக்கும் விதமாக அதை இருக்கவும் வைத்தது நாரதருடைய செயல்.

ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் கர்வம் அடக்குவது மட்டுமல்ல; அதையும் தாண்டி ஏதோ ஒன்று இந்த பூமியில் அறிவிக்கப்பட வேண்டும், நிகழ்த்தப்பட வேண்டும் என்று விரும்பி, அதை அவ்வண்ணமே நிகழ்த்திக் காட்டியவர் நாரதர். நிகழ்த்தியவர்கள் யாராக இருப்பினும், நாரதருடைய தூண்டுதலே காரணமாக இருந்திருக்கிறது. நாரதர் முன்னணியில் இருப்பவர் அல்ல; பின்னணியில் நின்று, அந்தந்த விஷயத்தை அந்தந்த விதமாக, எது எப்படி நடக்கவேண்டுமோ அப்படியே நடக்கும்படியாகப் பிரயத்தனப்படுகிறவர். அதுவே நாராயணன் சேவை என்று நினைக்கிறவர்.

நாரதர் காலத்துக்குக் கட்டுப்பட்டவர் அல்ல. படைப்புத் தொழிலுக்கு மூத்தோனாகிய பிரம்மனுக்குக் குமாரனாகப் பிறந்ததால் தேவ கணங்களில் ஒருவராக, மகரிஷியாக, என்றும் இளமை மிக்கவராக, நிரந்தரமானவராக, எல்லா உலகமும் செல்லக் கூடியவராக, எல்லாக் காலத்திலும் சாட்சியாக இருப்பவராக, அந்தக் காலம் குறித்து பரதகண்டத்தில் உள்ள மக்களுக்கு இடையறாது எடுத்துச் சொல்பவராக இருக்கிறார்.



நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:29 am



ராவணன் கர்வம் பங்கம் அழியக் காரணமாக இருந்த நாரத முனி, ராவணனை முடிவுக்குக் கொண்டு வர வைகுந்தவாசனை- ஸ்ரீமந் நாராயணனை தேவர்களோடு ஒன்றுகூடி வேண்ட, ராமன் பிறந்து ராவணனை காரண- காரியங்களோடு வதம் செய்தார். ராவணன் அழிந்தான். ஸ்ரீராமன் ஆட்சி இனிதே தொடர்ந்து, அதுவும் முடிந்தது. நாரதர் சகலமும் யோசித்தவாறே சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, வால்மீகி என்ற முனிவர் மிகுந்த அயர்ச்சியோடு, ஏதேதோ சிந்தனையோடு, எதுவும் மனத்தில் சரியாகத் தைக்காது, எந்தத் தொழிலிலும் ஈடுபடாது வெறுமே கிடக்கிறவராக அயர்ந்தபடி இருந்தார். நாரதர் மனத்தில் வால்மீகியின் வேதனை சுடர்விட்டது. அடுத்த கணம் அங்கு நின்றார்.

''என்ன ஆயிற்று உங்களுக்கு? ஏன் அயர்ச்சியாக இருக்கிறீர்கள்? என்னிடம் சொல்லக்கூடுமானால் சொல்லுங்கள். உம்முடைய கவலை என்ன? சொத்து சுகம் பற்றியோ, மனைவி- மக்கள் பற்றியோ கவலைப்படுகிற பிறவி அல்லவே நீங்கள்! செயற்கரிய செயலை செய்யப் பிறந்தவர் நீங்கள். கடும் தவம் இயற்றி வால்மீகி என்ற பெயர் பெற்றவர். புற்றிலிருந்து தோன்றியவர். அதனாலேயே உங்களுக்கு இந்தப் பெயர்! வால்மீகியே, என்ன துக்கம்? என்ன கவலை? உங்கள் கவலை உங்கள் கவலை மட்டுமல்ல; அது, ஊரின் கவலை, இந்த உலகத்தின் கவலை, இந்த பிரபஞ்சத்தின் கவலை என்பதை நான் அறிவேன். எனக்குச் சொல்லுங்கள்... ஏதேனும் வழி தெரிந்தால், நானும் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்'' என்று சொல்ல, வால்மீகி மெள்ள மௌனம் கலைத்தார்.

''என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது. மனிதர்கள் தோன்றுகிறார்கள். அந்த மனிதர்களில் சிறப்பானவர்களும் தோன்றுகிறார்கள். அவர்களும் இறக்கிறார்கள். நல்லவர்களாக இருக்கிறார்கள். பாதி நல்லவர்களாக இருக்கிறார்கள். முக்கால் திட்டத்துக்கு நல்லவராக இருக்கிறார்கள். சிலர், முழுவதுமே நல்லவராக இருக்கிறார்கள். ஆனால், மனிதரில் உத்தம புருஷன் யார் நாரதரே, உமக்குத் தெரியுமா?''

வால்மீகி கேட்டதும், யார் உத்தம புருஷர் என்ற எண்ணம் தெள்ளத் தெளிவாக நாரதருக்குள் வந்தது. ஆனாலும், வால்மீகியின் சிந்தனையைக் கிளறும்பொருட்டு, ''உத்தம புருஷனா? கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கள்'' என்று நாரதர் தூண்டிவிட்டார்.

''அவர் தேவர்களும் நடுங்கும் வீரனாக இருக்க வேண்டும்; அதே நேரம், தயை மிக்கவனாக இருக்க வேண்டும். அவன் தர்மம் தெரிந்தவனாக இருக்க வேண்டும்; அதே நேரம், காரியம் சிந்திக்கிறவனாக இருக்க வேண்டும். அவன் மூத்தோர் சொல் மதிப்பவனாக இருக்க வேண்டும்; அதே நேரம், தன்னுடைய செயல்கள் பற்றித் திடமுள்ளவனாக இருக்க வேண்டும். அவனிடம் அரசனுக்குரிய லட்சணங்கள் இருக்க வேண்டும்; அதே நேரம், ஆண்டியைப் போல் உடனே துறந்துவிட்டுப் போகக்கூடிய தன்மை உடையவனாக இருக்க வேண்டும். அவன் சாதாரண மனிதரைப் போல் சாதாரண மனிதர்களோடு பேசுபவனாக இருக்க வேண்டும்; அதே நேரம், செயற்கரிய செயல்களைச் செய்பவனாக இருக்க வேண்டும். அவன் குருவிடம் பணிவு மிக்கவனாக, பெற்றோர்களிடம் மதிப்பு மிக்கவனாக, சகலராலும் நேசிக்கப்படுபவனாக, சகலரையும் நேசிப்பவனாக, ஆளுமை உள்ளவனாக, அன்பு உள்ளவனாக இருக்க வேண்டும். இப்படி, யாரையேனும் எந்த உலகத்திலாவது பார்த்திருக்கிறீர்களா?'' என்று ஆவல் பொங்கக் கேட்டார் வால்மீகி.

நாரதர் கண்களில் நீர் கோத்தது. கன்னத்தில் வழிந்தது. 'ஸ்ரீமந் நாராயணரைத் தவிர, வேறு எவருக்கு இந்த லட்சணங்கள் உண்டு; தகுதி உண்டு? அவர் எடுத்த ராம அவதாரத்தைத் தவிர, வேறு யார் இதற்குப் பொருத்தமானவர்கள்?’ என நினைத்தபடி, இரண்டு கைகளையும் கூப்பி, தனக்குள் உறைகின்ற ஸ்ரீமந் நாராயணரை பக்திபூர்வமாக நாரதர் வணங்கினார். இடையறாது நாராயண மந்திரம் சொன்னார். மெள்ளக் கண் திறந்தார்.



நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:29 am



''உண்டு வால்மீகி அவர்களே, நிச்சயமாக இந்தப் பூவுலகில் நீர் சொல்கின்ற வண்ணமாக ஒருவர் அரசாட்சி செய்து வருகிறார். இன்னமும் இருக்கிறார். அவருக்குப் பெயர் ராமச்சந்திர மூர்த்தி. அவருடைய வயதான காலத்தில் திறமையாக நிர்வாகம் செய்துகொண்டிருந்தாலும், அவருடைய வாழ்க்கைச் சரிதம் கேட்பதற்கு மிக சுவாரஸ்யமானது...'' என்று விவரிக்க ஆரம்பித்தார்.

அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு மூன்று மனைவியர். அவனுக்குப் புத்திரப் பேறு இல்லை. எனவே, பெரிய முனிவர்களை வரவழைத்து அசுவமேத யாகம் செய்து, அந்த யாகத்தினுள் புத்திர காமேஷ்டி யாகமும் செய்து, அந்த புத்திர காமேஷ்டி யாகத்தால் ஒரு பூதம் தோன்றி சக்தி மிகுந்த பாயஸம் கொடுக்க, அதைத் தன் மூன்று மனைவியருக்கும் நான்காகப் பகிர்ந்து கொடுத்தான். ஸ்ரீராமன், பரதன், லட்சுமணன், சத்ருக்னன் என நான்கு புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்கள் அற்புதமான அரசிளங் குமாரர்களாக வளர்க்கப்பட்டார்கள்.

விஸ்வாமித்திர முனிவர், தன் தவத்தை கலைக்கின்ற அரக்கர்களைக் கொல்வதற்காக, தசரதரிடம் ராமரையும் லட்சுமணரையும் யாசிக்க, தசரதர் பயப்பட, மற்ற முனிவர்கள் விஸ்வாமித்திரரின் பெருமையை எடுத்துரைக்க, விஸ்வாமித்திரருடன் ஸ்ரீராமரும் லட்சுமணரும் பயணப்பட்டார்கள். யாகத்திற்கு இடைஞ்சல் செய்த தாடகையையும், அவள் மகன்களில் ஒருவனையும் வதம் செய்தார்கள். தாடகையின் மற்றொரு மகன், கடலில் விழுந்து உயிர் தப்பி இலங்கையை நோக்கிச் சரணடைந்தான். பிறகு, ராம- லட்சுமணர்களை மிதிலை நோக்கி அழைத்துப் போனார் விஸ்வாமித்திர முனிவர். ராமர் அங்கு வில் ஒடித்துக் காட்ட, மிதிலை மகள் சீதாதேவி ராமரை மணந்தாள். ராம சகோதரர் களுக்கும் அங்கேயே திருமணங்கள் நடந்தன.

ஊழ்வினை தூண்டுதலால், தசரதன் மனைவி கைகேயி தன் மகன் பரதனே பட்டாபிஷேகத்துக்கு உரியவன் என்றும், அவனே அரசாள வேண்டும் என்றும், அவனுக்கு இடைஞ்சல் செய்யாது ஸ்ரீராமன் காட்டுக்குப் போக வேண்டும் என்றும் கட்டளையிட, முன்பு கொடுத்த வாக்கின்படி அதற்கு விருப்பமே இல்லாமல் தசரதன் சம்மதம் தெரிவிக்க, தந்தை விரும்புகிறார் என்று தாய் சொல்லைக் கேட்டு, 'இது தந்தை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் சொன்னாலே போதும்!’ என்று சொல்லி, ஸ்ரீராமர் உடனடியாக மரவுரி தரித்து, தான் வனத்துக்குப் போவதற்குத் தயாராக இருப்பதாகச் சொல்ல, அவன் மனைவி சீதையும் உடன் வருவதாகச் சொல்ல, அவர்களுடன் லட்சுமணனும் வர, ராமரின் பிரிவு கேட்டு தசரதர் உயிர் துறக்க, செய்தி அறிந்து பரதன் ஓடோடி வர, ஸ்ரீராமரைப் பின்தொடர்ந்து வந்து அரசாள அழைக்க, தன்னுடைய பாதுகையைக் கொடுத்துவிட்டு, 'பதினான்கு வருடங்கள் கழிந்த பிறகு நிச்சயம் வருவேன்’ என்று ஸ்ரீராமர் வாக்குக் கொடுக்க, பரதன் அயோத்தியின் எல்லையிலேயே பர்ணசாலை அமைத்து, ஸ்ரீராமரின் பாதுகையையே மன்னனாக நினைத்து வாழ, தண்டகாரண்யம் போன்ற பல முனிவர்கள் வசிக்கும் இடம் தேடிப் போய், அவர்களுக்கு இடைஞ்சல் தந்த பல அரக்கர்களைக் கொன்று ஸ்ரீராமர் நகர, சூர்ப்பணகை என்ற அரக்கி ராமருடைய அழகால் கவரப்பட்டு வர, லட்சுமணன் அவளை அங்கஹீனம் செய்ய, தன்னுடைய அண்ணனான ராவணனிடம் போய் அவள் அழ, சீதையின் அழகை விவரிக்க, அந்த சீதை தனக்கு வேண்டும் என்று ராவணன் தீர்மானித்து அவளை அந்த இடத்தில் இருந்து மொத்தமாக பெயர்த்து எடுத்துக்கொண்டு இலங்கைக்குப் போய் சிறை வைக்க, ஸ்ரீராமன் அலறி நாலாப்புறமும் தேட, அனுமனைச் சந்திக்க, அனுமனின் மூலம் சுக்ரீவனின் கதை கேட்டு, வாலியை வதம் செய்து, சுக்ரீவனின் துணையோடும் அங்கதனின் துணையோடும் அனுமனின் ஆலோசனை கேட்டுத் தெற்குப் பக்கம் போக, அங்கு சீதை இருப்பதை அனுமர் தெரிந்துகொண்டு வர, வானரப் படைகளோடு ஸ்ரீராமர் இலங்கைக்குச் சென்று ராவணனையும் அவனைச் சேர்ந்துள்ளவரையும் அடித்து துவம்சம் செய்ய, ராவணன் தோற்று நிற்க, நிராயுதபாணியாக நின்றவனை 'இன்று போய் நாளை வா’ என்று ராமர் சொல்ல, மறுபடியும் போருக்கு வந்த ராவணனைச் சிரம் கொய்து வீழ்த்தி, சீதையை மீட்டு, அயோத்திக்கு அழைத்து வந்து பட்டாபிஷே கம் செய்துகொண்டு சுகமாக அரசாட்சி நடத்தி வந்த கதையை வால்மீகி முனிவருக்கு தெளிவாகக் கூறினார் நாரதர்.

''நான் சொன்ன இந்தக் கதையை நீங்கள் கவிதையாக எழுதுங்கள். பாடலாக வரிசைப்படுத்துங்கள். வால்மீகி முனிவரே! நீரும் நானும் வெறுமே கதை பேசுவதற்காக இங்கு பிறக்கவில்லை. நம் நோக்கங்கள் ஓர் உன்னதமான இடத்துக்குப் போக வேண்டும். என்னால் சொல்லப்பட்ட இந்தக் கதை உங்களால் எழுதப்பட வேண்டும்.

எது எது ராமாயணத்தின் மைய மான விஷயம் என்று யோசித்துத் திறம்பட எழுதுங்கள். என்னுடைய வாழ்த்துக்கள். இந்தக் கதை உங்களுக்குத் தெள்ளத் தெளிவாக, அங்குலம் அங்குல மாக நேரே நின்று பார்ப்பதுபோல, அருகே நின்று பார்ப்பதுபோல, எல்லா இடங்களி லும் உங்கள் கண்ணெதிரே இவை நடப்பது போல ஸ்ரீமந் நாராயணன் ஆசியால் உங்களுக்குத் தெரிய வரும். நானும் உங்களுக்குத் தெரியும்படி பிரார்த்தனை செய்கிறேன்'' என்று பணிவோடு கை கூப்பினார் நாரதர்.



நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:30 am



கதை வால்மீகியை வசப்படுத்தியது. கண்மூடி பல மணி நேரம் கிடந்தார். மெள்ள எழுந்து தமஸா நதி நோக்கிப் போக, வழியில் நீரில் விளையாடும் கிரௌஞ்ச பட்சிகள் ஒரு பெரிய மரத்தின் கிளையில் ஒன்றை ஒன்று தழுவி முத்தமிட்டும், கூடியும், கொஞ்சியும், குலாவியும், பறந்தும், இருந்தும் பல கோணங்களில் தங்கள் அன்பைப் பகிர்ந்துகொள்வதை பார்த்து ஆச்சரியப்பட்டார்.

அப்போது மரத்தின் வேறு பக்கத்தி லிருந்து ஒரு வேடன் மண்டியிட்டு, அந்தப் பறவைகளை குறி பார்ப்பதை அறிந்தார். ஓடிப் போய் 'வேண்டாம்’ என்று தடுத்தார். ஆனால் 'எனக்கு இது தொழில், இது உணவு’ என்று சொல்லி, அவன் வில்லிருந்த அம்பை எய்தான். அம்பு ஆண் பறவையைக் குத்திக் கிழித்தது. கீழே வீழ்த்தியது. பெண் பறவை அலறித் தவித்தது. சுற்றிச் சுற்றி வந்தது. இறந்துபோன பறவையின்மீது முட்டி மோதி 'என் உயிரே... என் உயிரே’ என்று அலறியது.

தன் சொல்லை மீறி இத்தகைய கொடும் செயலைச் செய்த அந்த வேடனைச் சபிக்கும் வண்ணம், ஒரு வாக்கியத்தை வால்மீகி சொன்னார். அந்த வாக்கியம் கவிதை போலும் இருந்தது. அந்த ஒரே வாக்கியத்துக்கு இரண்டு அர்த்தம் கிடைத்தது. ஒன்று சாபமாகவும், ஒன்று ஒரு கவிதை நூலில் தலையங்கச் செய்தியாகவும் இருந்தது.

வால்மீகி திகைத்தார். 'என்ன இது, நானா சொன்னேன் இந்த வாக்கி யத்தை? என்னிடமிருந்தா வந்தது இந்த வாக்கியம்?’ என்று சொல்ல, பிரம்மா தோன்றி, 'இல்லை. இந்த வாக்கியத்தை உருவாக்கியது நான். என் மகன் சொன்ன கதையை நீர் கவிதை யாக எழுதும்போது உமக்கு துணையாக வாக்குகள் வர வேண்டும் என்று நான் இதை வகைப்படுத்தினேன். உம்முள் விதைத்தேன். இதையே தொடர்ந்து, இந்த அளவையே தொடர்ந்து கவிதை அளவாக வைத்து நீங்கள் இந்தக் காவியத்தை எழுதி முடியுங்கள். இதற்கு ராமாயணம் என்று பெயர் சூட்டுங்கள்’ என்று சொன்னார்.

பிரிவு. பிரிவுதான் இந்த வாழ்க்கையின் மிகப் பெரிய வேதனை. ஒன்றாக இருக்கிற அன்பு, ஒன்றாக இருக்கிற ஒரு வாழ்க்கை சட்டென்று காணாமல் போகிறதே... இதுதான் இந்த உலகத்தின் விதி! இதுதான் இந்த உலகத்தின் நியதி. கூடியதெல்லாம் பிரிந்துகொண்டுதான் இருக்கின்றன. பிரிவுதான் இந்த பூமியை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இது வரமா சாபமா, இரண்டும்தானா என்று வால்மீகி யோசித்தார். தொடர்ந்து தன்னுடைய கவிதை நயத்தை வெளிப்படுத்தினார். ராமாயண மகா காவியம் பிறந்தது.

இன்றைக்கு வால்மீகியால் சொல்லப்பட்டுப் பல நூறு கவிஞர்களால் விதம் விதமாக எழுதப் பட்ட ராமாயண மகா காவியம், நாரதரால் முதன்முதலில் வரிசைக்கிரமமாக வால்மீகிக்குச் சொல்லப்பட்டது.

தன்னுடைய கடவுளாகிய வைகுந்தனுடைய அற்புதமான ஓர் அவதாரத்தைக் கதையாக ஒரு கவிஞரிடம் நாரதர் சொல்ல, அந்தக் கவிஞர் வால்மீகி, அதைப் பேரெழில்மிக்க காவியமாகச் செய்தார். நல்ல ஒரு காவியத்துக்கு அடிப்படைச் சக்தி, நாரதருடைய பேச்சு. அடிப்படை வித்து அவருடைய புத்தி. நாரதர் இந்த பரத கண்டத்தின் மகரிஷி. இந்த பரத கண்டத்தை இன்றளவும் வாழ வைத்துக்கொண்டிருப்பவர் நாரத மகரிஷி.

எங்கு கெடுதல் நடந்தாலும் அதைத் தகர்ப்ப தும், எங்கு நல்லது நடக்க வேண்டுமோ அதை நிறைவேற்றுவதும் நாரதருடைய அற்புதமான செயல்களாக இருக்கின்றன.

பிரிவு. பிரிவுதான் இந்த பூமியை ஆளுகின்ற சக்தி. பிரிவுதான் இங்கு நிரந்தரம். ஒருபோதும் உலகைவிட்டுப் பிரியாத விசித்திரம்.



நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:30 am



பரத கண்டத்தின் மூலம் இந்த பூவுலகிற்கு நாரதர் கொடுத்த கொடை ராமாயணம். ஓர் ஆலமரத்தின் சிறிய விதை போல அமைதியாக இருந்து, அவருள் தோன்றிய சிந்தனை செடியாக வளர்ந்து, பிறகு எவரெவரோ தண்ணீர் ஊற்ற, பெருமரமாய் ஆலம் வளர்வது போல அவரின் சிறிய அசைவு, சிறிய செய்கை

மிகப் பெரிய விளைவுகளை இந்தப் பூவுலகில் தோற்றுவித்திருக்கின்றன. இது நாரத மகரிஷியின் விசேஷமான அம்சம்!

உலக வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் எப்படி வாழ்வது, எப்போது இணைவது, எப்படி சந்ததி பெருக்குவது என்பது பற்றி வேதங்கள் தெளிவாகச் சொல்லியிருக்கின்றன. எழுதப்படாத நியதிகளும் நடைமுறைகளும் இருக்கின்றன. ஆனாலும், எழுதி வைத்ததைவிட, எழுதப்படாததைவிட, கடவுளர் காட்டும் வழியையே மக்கள் எளிதில் பின்பற்றுவார்கள் என்று கருதி, புராண விஷயமாக ஒரு வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பது குறித்த சந்தேகத்தை விளக்கும் வகையில் திருமணங்கள் தேவலோகத்தில் நடந்தால் நன்றாக இருக்குமே என்று நாரதர் விரும்பினார்.

உதாரணத்துக்கு, தாய் தந்தையர் பார்த்து வைக்கும் திருமணம், அதாவது கற்பியல் நல்லதா அல்லது ஒரு பெண்ணோ ஆணோ தானே தேர்ந்தெடுத்து பரஸ்பரம் பேசிப் பழகி, கூடிக் குலவி பிறகு திருமணம் செய்துகொள்வது நல்லதா என்ற கேள்வி பூமியில் இருந்தது. இரண்டுமே சரிதான் என்பது வேத வாக்கியம். ஆனால், வெறும் வாக்கியமாக இல்லாமல் இப்படி நடந்தது என்று உதாரணம் இருந்தால், ஜனங்களுக்கு அந்த வழியில் நம்பிக்கை பிறக்கும் என்றும் நாரதர் எண்ணினார். தேவர்களை நோக்கிப் பிரார்த்தித்துக் கொண்டார். பூமிக்கு நல்ல வழி காட்டுங்கள் என்று வேண்டிக்கொண்டார். நாரதர், வாழ்வின் மீது காதலுள்ளவர்.

திருமாலின் பெண்கள் இருவர். அவர்களுக்குச் சுந்தரி (சுந்தரவல்லி என்றும் கூறுவர்), அமிர்தவல்லி என்று பெயர். அவர்கள் இரண்டு பேரும் நல்ல புருஷனை அடைய வேண்டும். அந்தப் புருஷன், முருகனைப் போல மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணி, தங்களுடைய நோன்பை சரவணப் பொய்கையில் அமர்ந்து நோற்றார்கள். இடையறாது முருக பூஜையில் ஈடுபட்டார்கள். முருகர் அவர்களைத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். 'திருமால், அம்மாவின் சகோதரன்தானே? எனக்கு மாமன்தானே? என் மாமன் மகள்கள் என் மீது ஆசை கொண்டு, திருமணம் செய்துகொள்ள விரும்புகிறபடி யால் அவ்விதமே செய்துகொள்ள நானும் விரும்புகிறேன்’ என்றார். இந்த முறை சரியானது என்று உலகுக்கு எடுத்துச் சொல்ல, தேவலோகத்தில் இந்திரனுக்கு மகளாக வளரும்படி அமிர்தவல்லியையும் குற்றமற்ற முனிவரான சிவமுனிக்குப் பிறக்கும்படி சுந்தரியையும் பணித்தார். அமிர்தவல்லி, தேவலோகத்தில் இந்திரனுக்கு மகளாக ஐராவதத்தால் கண்ணும் கருத்துமாக வளர்க்கப்பட்டாள். தன்னுடைய பரு உடலை விடுவித்துச் சூட்சுமமாக அலைந்து கொண்டிருந்த சுந்தரி நல்ல பிறப்புக்காகக் காத்திருந்தாள்.

சிவமுனி தனக்கு எதிரே விளையாடிக் கொண்டிருந்த அழகிய பெண் மானைப் பார்த்துக் காமுற்றார். அந்த எண்ணமே அந்த மானின் வயிற்றுக்குள் சென்று சூல் கொண்டது. சூல் கொண்ட அந்த இடத்தை நோக்கி, சூட்சுமமாக இருந்த சுந்தரவல்லி போய் அமர்ந்துகொண்டாள். அவளைத் தாங்கமுடியாத அந்த பெண் மான்,
சிறிது காலம் அவளைச் சுமந்துவிட்டு, வேடர்கள் பறித்து வைத்திருந்த வள்ளிக்கிழங்கு பள்ளத்தில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றுவிட்டுப் போயிற்று. மறுநாள், குழந்தை யின் சப்தம் கேட்டு வந்து பார்த்தார்கள் வேடர்கள். வாரியெடுத்து அணைத்துக் கொண்டார்கள். வள்ளிக்கிழங்கு பறித்த பள்ளத்தில் பிறந்ததால், அந்தக் குழந்தைக்கு வள்ளி என்று பெயரிட்டார்கள். இரண்டு குழந்தைகளும் அற்புதமாக வளர்ந்தன.

இந்திரலோகம் சென்று தெய்வயானையைப் பெண் கேட்டு, இந்திரன் தாரை வார்த்துத் தர, அவளை முருகன் மணந்தார். தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள்.



நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:30 am



வள்ளி இடைவிடாது முருகப் பெருமானையே நினைத்துக் கொண்டிருந்தாள். தக்க சமயத்தில் முருகன் அவள் எதிரே போய், கிழ வேடத்தில் நின்றார். கிழவர் யார் என்று வள்ளிக்குத் தெரியவில்லை. பணிந்து வரவேற்றாள். ''தள்ளாத வயதில் இந்த வெயிலில் நடந்து வந்திருக்கிறீரே, என்ன வேண்டும்?'' என்று கேட்டாள்.

''தாகம், தண்ணீர், கொஞ்சம் விசிறு, வெப்பம்'' என்று குழறலாய் முருகன் நடித்தார். வள்ளி அருகே வந்து குவளையில் இருந்த நீரை கிழவரின் வாயில் ஊற்றினாள். முந்தானையால் விசிறிவிட்டாள்.

''இன்னும் அருகே வந்து விசிறு. காற்று போதவில்லை'' என்றார் முருகன். வள்ளி இன்னும் நெருக்கமாக நின்றுகொண்டாள். அவள் வாசனை முருகனின் மூக்கைத் துளைத்தது. முருகன் போடும் நாடகத்தை நாரதர் விலகி நின்று ரசித்தார்.

அருகில் நின்ற வள்ளியின்மீது தெரியாது கைபடுவதுபோல் நடித்து, பிறகு மெள்ள அவளை அணைத்துக்கொண்டு எழும்போது அவளின் தோள்பட்டையில் கை ஊன்றி எழுந்து, தடுமாறி, விழுந்துவிடாமல் இருக்க மீண்டும் மெள்ள அணைத்துக்கொண்டு, பல்வேறு விதமாக முருகன் அந்தப் பெண்ணைத் தொட்டுச் சீண்டினார். ஒருகட்டத்தில் வள்ளி புரிந்துகொண்டாள்.

''பெரியவரே, நீங்கள் என்னிடம் தவறாக நடந்துகொள்கிறீர்கள். உங்கள் தாகத்திற்கு உதவி செய்தேன். களைப்பைப் போக்கினேன். அதற்கு நீங்கள் என்னிடம் நடந்துகொள்ளும் முறை இதுதானா?'' என்று கோபப்பட்டாள்.

''இல்லையம்மா! தாகத்திற்கு உதவியதும், களைப்பைப் போக்கியதும் மிக உத்தமமான காரியம். ஆனாலும், உன்னை இவ்வளவு நெருக்கத்தில் பார்த்தபோது, எனக்குப் பழைய நினைவுகள் கிளறிவிட்டன. உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். தவறாக எண்ணாதே! உன்னை எப்போதும் தொட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது'' என்று கிழவனார் அத்துமீற, சினந்து விலகினாள் வள்ளி.

''எனக்குத் திருமணம் என் மனதளவில் நிச்சயமாகிவிட்டது!''

''அப்படியா, யாரது?''

''முருகன். சிவனின் இரண்டாவது குமாரர். அவருடைய தீண்டுதலுக்காகவே நான் காத்திருக்கிறேன். அவரைத் திருமணம் புரிந்துகொள்வதற்காகவே வளர்ந்து நிற்கிறேன். அவரைத் தவிர, வேறு எவரையும் மனத்தாலும் தீண்டேன். உம்மை நல்லவர் என்று நினைத்தேன். ஆனால், காட்டுக்குள் தனிமையில் இருக்கிற இளம்பெண்ணிடம் அருவருப்பாகப் பேசுகிறீர்கள். அத்துமீறி நடந்து கொள்கிறீர்கள். உங்களை எச்சரிக்கிறேன். விலகியே இருங்கள். இல்லாவிட்டால் நான் பொல்லாதவளாகிவிடுவேன்!'' என்று தடியை எடுத்துக்கொண்டு அவரை அடிப்பது போல் மிரட்டினாள்.

கிழவர் பயப்படுவதுபோல் நடித்தார். மயங்கிச் சரிவதுபோல் மரத்தைப் பிடித்துக்கொண்டார். மனத்துக்குள் தன் தமையனை தியானித்தார்.

''எல்லாம் வல்ல என் அண்ணனே! எனக்கு ஓர் உதவி தேவைப்படுகிறது. ஜென்ம ஜென்மமாய் எனக்காகக் காத்திருக்கும் இந்தப் பெண்ணை நான் அடைய, நீதான் உதவி செய்ய வேண்டும். இவள் என் அருகே வரும்படி தந்திரம் செய்ய வேண்டும். இவளை என்னோடு சேர்த்து வைக்க வேண்டும்!'' என்று தலைவணங்கி வேண்டினார்.



நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:31 am



சட்டென்று விநாயகப் பெருமான் அங்கே ஒரு பெரிய காட்டு யானையாகத் தோன்றினார். ஏதோ சலசலப்பு கேட்கவும், வள்ளி திரும்பிப் பார்த்தாள். பின்னால் மரங்கள் அசைவது தெரிந்தது.

'இதென்ன மரங்கள் இந்த ஆட்டம் ஆடுகின் றனவே, அப்படி என்ன வருகிறது!’ என்று பயந்து நாலாப்புறமும் பார்த்தாள். புதர்களை விலக்கி, மரங்களை ஒடித்து, ஒரு பெரிய காட்டு யானை அங்கு நுழைந்தது. பிளிறியது.. வள்ளி பயந்தாள். ஓடிப்போய் அந்தக் கிழவரை அணைத்துக்கொண்டாள்.

''சற்று முன்புதானே சொன்னாய்... முருகனைத் தவிர வேறு யாரையும் மனத்தாலும் தீண்டேன் என்று?''

''ஆமாம் அய்யா! நான் பயத்தில் உங்களிடம் வந்து ஒட்டிக்கொண்டேனே தவிர, இப்போதும் என் மனத்துக்குள் முருகன்தான் இருக்கிறார். உங்கள் ரூபத்தில் அந்த முருகனைத்தான் நான் காண்கிறேன். முருகனை என்னிடமிருந்து எவராலும் பிரிக்க முடியாது!'' என்று அந்த நேரத்திலும் உரத்த குரலில் வாதிட்டாள் வள்ளி.

முருகனுக்கு அந்தப் பெண்ணின் மன உறுதி பிடித்திருந்தது. தன் தமையனாரை நோக்கிக் கை கூப்பினார். யானை மறைந்து, அங்கே விநாயகர் உருவம் தோன்றியது.

''நீ யாரைத் தழுவிக் கொண்டிருக்கிறாயோ அவன் கிழவனல்ல; குமரன். எனக்கு இளையவன். அழகன். முருகன். திரும்பிப் பார்!'' என்று விநாயகர் சொல்ல, வள்ளி திரும்பிப் பார்த்தாள்.

கையில் வேலோடு, அழகிய புன்முறுவலோடு, திருநீறோடு, அகன்ற மார்போடு, சிவந்த மேனியோடு, தங்கக் கிரீடத்தோடு முருகப் பெருமான் அங்கே நின்றிருந்தார். வள்ளிக்கு நாணமும் சந்தோஷமும் போட்டி போட்டுக் கொண்டு உள்ளே பொங்கின. அவள் விநாயகரை வணங்கினாள். ஆசீர்வதிக்கும்படி கேட்டாள். மறுபடி எழுந்து தன் கணவனை வணங்கினாள். அவனுக்கு அருகே பெருமையோடு இடுப்பில் கை கோத்து நின்றுகொண்டாள்.

''உலகிலேயே மிக அற்புதமான ஜோடி என்பது பார்த்தாலே தெரிகிறது'' என்று விநாயகர் ஆசீர்வதித்தார்.

''கற்பியல் திருமணம் எப்படி உத்தமமோ, அதே போல உங்கள் காதல் திருமணமும் உத்தமம்'' என்று அந்தத் திருமணத்தை ஆதரித்தார். விநாயகர் சொல்லை வேதமந்திரமாக எடுத்துக்கொண்டு, முருகனின் கை கோத்துக் கொண்டாள் வள்ளி. அந்த வனம் முழுவதும் அவர்கள் சுற்றித் திரிந்தார்கள். கூடிக் குலவினார்கள்.

வள்ளியைக் காணாது வேடுவர் தலைவனும் மற்ற வேடுவர்களும் எல்லா இடங்களிலும் தேட, வேடுவர் தலைவன் தன்னுடைய ஒற்றர்கள் மூலம் அவர்கள் இருப்பிடம் அறிந்தான். தன் பெண்ணோடு ஒரு பலம் மிகுந்த ஆண் மகன் இருக்கிறான் என்று தெரிந்து, தன் படைகளோடு அந்த இடத்துக்குப் போனான். தொலைவில் தன் மகள் ஒரு ஆணோடு இருப்பது தெரிந்து, வேகமாக மூச்சிரைத்து ஓடிப் போக, அந்த இடத்தில் ஒரு கொன்றை மரம் இருந்தது. மகள் மட்டும் நின்றுகொண்டிருந்தாள்.

''எங்கே அவன்?'' என்று வள்ளியை மிரட்ட, முருகன் மரமாகி நிற்பதை வள்ளி சொல்ல, வேடர்கள் அதைப் பிடுங்க முயற்சித்தபோது, முருகப் பெருமான் தன் சேவலை அழைக்க, அது மிக உரத்த குரலில் ஒலி எழுப்பியது. அந்த ஒலியின் வேகமும் அதிர்வும் தாங்காது அந்த வேடர்கள் மடிந்தார்கள். வள்ளி துயருற்றாள்.

''கவலைப்படாதே! என்னை சீறிச் சினந்தவர்கள் மீது நாம் நம்முடைய பலத்தைக் காட்டினோம். திருத்தணிகை போவோம், வா!'' என்று அவளை அழைத்துக்கொண்டு திருத்தணிகை சென்று, அங்கே அவளைத் திருமணம் செய்துகொண்டார் முருகன். நாரதர் முன்வந்து வாழ்த்தினார்.

தன்னுடைய வேடுவர்கள் மடிந்தது கண்டு வள்ளி உள்ளுக்குள் துயரடைந்திருப்பது தெரிந்து, நாரதர் வேடுவர்களை எழுப்புமாறு முருகனை வேண்டினார். அவ்விதமே முருகனின் அருள்பெற்று வேடுவர்கள் எழுந்தார்கள். தங்கள் முறைப்படி வள்ளியை அவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள்.

எந்தத் திருமணம் சரி? தகப்பனின் சம்மதத்துடன் நடக்கும் திருமணம் சரியா, தானே முன் வந்து தன் புருஷனைத் தேடிக்கொண்டு, அவனோடு கலந்து பழகியபின், பெற்றோரின் விருப்பத்தோடு அவனை மணந்துகொள்வது சரியா என்ற கேள்வி வருகிறபோது, இரண்டுமே சரி என்ற விஷயம் உறுதியாகிறது.

திருமணம் என்பது சடங்கு அல்ல. அது ஒரு தவத்தின் பயன். திருமணம் என்பது வெறும் வழிமுறை அல்ல. அது ஒரு வாழ்க்கையின் திருப்பம். மரம் பூத்துக் குலுங்கி பிறகு கனிகள் கொடுக்கும் பருவமே, திருமணம்! வீட்டில் வைத்த மரமாக இருந்தால் என்ன, காட்டில் வளர்ந்த மரமாக இருந்தால் என்ன... சரியான நேரத்தில் மலர வேண்டும்; கனி கொடுக்க வேண்டும்; பயனுற வேண்டும்; பயன் தர வேண்டும். இதுவே முக்கியம்! மனம் ஒருமித்த காதலே முக்கியம். தவம் செய்து புருஷனை அடைய வேண்டியதே குறிக்கோள். தனக்கு நல்ல புருஷன் வேண்டும் என்று பெண்கள் நோன்பு நோற்பதே முக்கிய வேலை.



நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:31 am



தன்னை நேசிக்கிற பெண்ணைக் கைவிடாது, அவளை முறைப்படி திருமணம் செய்துகொள்வதே ஆண் மகனின் கடமை. என்ன எதிர்ப்பு வந்தாலும் அதைத் துச்சமென நினைத்து, தன்னை நேசித்த பெண்ணின் கரம் பற்றுதலே ஆண்மை. பெற்றவர்கள் புறக்கணித்துவிட்டார்களே, அவர்கள் துன்பப்பட்டுவிட்டார்களே என்று மனம் மயங்கி, மதி மயங்கி நிற்காமல், புருஷனின் கைப்பிடித்து, பின்பு தன்னுடைய பெற்றோரைப் பற்றி எடுத்துச் சொல்லுதல் பெண்டிர்க்கு அழகு! அதன் மூலம் மறுபடியும் நல்லுறவு பெருகுவது சிறப்பு.

உற்றுப் பார்க்கும்போது, நாரதருடைய இந்தக் கணிப்பு நல்ல கதையாய், உலகத்திற்கு நீதியாய் விளங்குவது தெரியவரும்.

நாரதர் காட்டிய திருமண முறைகளை உலகம் இன்றளவும் கைப்பற்றி வருகிறது.

இறைவன் பெயரை யார் சொன்னாலும், எங்கு சொன்னாலும் நாரத மகரிஷிக்குத் தெரிந்துவிடும். உண்மையாய், ஆழமாய், அடர்த்தியாய் ஒருவர் தன் மனதுக்குள்ளேயே இறைவழிபாடு செய்கிறபோது, அந்த அதிர்வலைகளை அவர் எளிதில் உணர்ந்து கொள்வார். யார், எதற்கு இப்படி ஆழ்ந்து தியானிக்கிறார்கள், எதற்கு இப்படி இறைவனை அழைக்கிறார்கள் என்று ஆவல் கொள்வார். அங்கே போய், யார் என்னவென்று கேட்டு தீர விசாரித்து, தேவையெனில் அவருக்கு உதவி செய்வது நாரத மகரிஷிக்குச் சந்தோஷமான விஷயம்.

நாரதர் அப்படி ஒரு நினைவில் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது, மிகச் சமீபத்தில் விநாயகப் பெருமானை வேண்டியபடி யாரோ உட்கார்ந் திருப்பதைக் கண்டார். அந்த மனிதர் உள்ளத்தில் இருந்து மிக கனமாய் கணபதி ஸ்தோத்திரங்கள் எழுந்தன. மிகப் பெரிய இறைஞ்சல் தென்பட்டது. ஆனால், அந்த இறைஞ்சல் அமைதியாக இருந்தது; அந்த இறைஞ்சல் நம்பிக்கையோடு இருந்தது; அந்த இறைஞ்சல் ஆர்வமாக இருந்தது. அது அந்தச் சுற்றுச்சூழலை மாற்றியது; மணக்க வைத்தது; தாவரங்களைச் செழிக்க வைத்தது; காற்றை அமைதிப்படுத்தியது.

அட, இந்த இடத்தின் சூழ்நிலையே மாறும் வண்ணம் யாரோ மந்திரம் ஜபிக்கிறார்களே, என்ன, எதற்கு என்று அந்த இடம் வந்தார். ஒரு பெரிய ஆலமரத்தடியில் இடுப்பில் வேட்டியுடன் தோளில் போர்வையுடன், தரையில் துண்டு விரித்து

மரத்தின் மீது சாய்ந்து யாரோ ஒருவன் விநாயகரை வேண்டிக் கொண்டிருந்தான். மிகுந்த துன்பத்தில் இருந்ததுபோல அவன் உடலமைப்பு காட்டிக் கொடுத்தது. அவனுள் ஒரு மெல்லிய முனகல் இருந்தது. வேதனை இருந்தது. ஏன் தனக்கு இப்படி ஆயிற்று என்ற நொய்மை இருந்தது. நாரதர் அவன் முன்பு தோன்றினார்.

''யாரப்பா நீ? என்ன வேண்டுமென்று இப்படி விநாயகரைத் துதித்துக் கொண்டிருக்கிறாய்? உன் அங்க லட்சணங்கள் அழகாக இருக்கின்றன. ஆனால், உடம்பில் ஏதோ ஒரு கெடுதல் இருப்பது போல் தெரிகிறதே, என்ன ஆயிற்று? எழுந்து நில்! வெளிச்சத்துக்கு வா!'' என்று கட்டளை இட்டார்.

அவன் எழுந்து நின்றான். வெகுநாள் ஒரே இடத்தில் இருந்ததுபோலத் தள்ளாடினான். விழுது களைப் பிடித்துக்கொண்டு வெளிச்சத்துக்கு வந்து நின்றான்.

''யாரப்பா நீ?'' - நாரதர் கனிவோடு அவனை விசாரித்தார்.

''அழகனாகவும், அரசனாகவும் இருக்கக்கூடிய லட்சணங்கள் உன்னிடம் இருக்கின்றன. ஆனால், உன் மனமோ மென்மையாய், மிக நொய்மையாய் ஏதோ வேண்டுவதற்கு இறைஞ்சுவதாய் இருக்கிறது. ஏன் இங்கு தனியே இருக்கிறாய்? எனக்கு உன்னைப் பற்றிய விவரம் சொல்'' என்று கேட்டார்.

''என் பெயர் ருக்மாங்கதன். வீமன் என்பவருடைய மகன். நான் விதர்ப்ப தேசத்தின் அரசன். என் மக்கள் என் மீது பிரியம் உள்ளவர்கள். நானும் அவர்களை மிகவும் நேசிக்கிறேன். ஒரு நல்ல அரசனாக நான் அவர்களை ஆண்டு வந்தேன். என் குடிபடையினரும் எனக்கு அடங்கி என்மீது உயிரையே வைத்திருந்தார்கள்.

ஒருநாள், என் தேசத்து விவசாயிகள் ஒன்று கூடி, தங்களுடைய பயிர்களை மிருகங்கள் அழிக்கின்றன என்றும், யானைகள் கரும்புத் தோட்டத்துக்குள் புகுந்துவிடுகின்றன என்றும், வாழைக்குலையைக் கரடிகள் சாப்பிட்டு விடுகின்றன என்றும், நெற்பயிர் களூடே காட்டெருமைகள் புகுந்து மேய்ந்து, நாசம் செய்துவிடுகின்றன என்றும், இவற்றைத் துரத்திக்கொண்டு சிங்கம், புலி போன்ற கொடிய மிருகங்கள் வருகின்றன என்றும், அந்த எருமைகளை எதிர்க்க முடியாமல் திசை திரும்பி ஊருக்குள் நுழைந்து மக்களைக் கொல்வதும், ரணப்படுத்துவதுமாக அட்டகாசம் செய்கின்றன என்றும் சொன்னார்கள்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:31 am


அவர்கள் கண்களில் நீர் காணப் பொறுக்காது நான் உடனடியாக படை திரட்டிக்கொண்டு, அவர்களைச் சுற்றியுள்ள காடுகளுக்குப் போனேன். யானைகளை அடித்துத் துரத்தினேன்; காட்டெருமைகளைக் கொன்றேன்; கரடிகளையும் குரங்குகளையும் வனம் விட்டு ஓடுமாறு செய்தேன். இவற்றைத் துரத்தி வரும் சிங்கம், சிறுத்தை, புலி போன்ற மிருகங்களை அம்பெய்தும், வேல் எறிந்தும் கொன்றேன். மக்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்கள். தொடர்ந்து காவல் இருக்க வேண்டும் என்றார்கள். வேறு பக்கம் உள்ள காட்டைக் காட்டினார்கள். நான் அந்தப் பக்கமும் இதே விதமாக மிருகங்களைத் துரத்திக் கொண்டு போனேன். நல்ல வெயில்; கடும் தாகம். என்னிடமிருந்த பைகளில் நீர் தீர்ந்துவிட்டது. ஒரு புலியைத் துரத்திக்கொண்டு சென்றதில் நான் வெகுதூரம் வந்துவிட்டேன். என் படைகள் பின் தங்கிவிட்டன...''

அவன் தொடர்ந்து பேசினான்... ''சற்றுத் தொலைவில் ஓர் ஆஸ்ரமம் இருந்தது. அழகியதாய், உறுதியானதாய், பெரியதாய் இருந்தது அந்த ஆஸ்ரமம். அது மிகச் சிறந்த முனிவருடைய ஆஸ்ரமம் என்பதை அதன் வாயிலில் நிற்கும்போதே புரிந்துகொண்டேன். கை தட்டி உள்ளே இருப்பவர்களை வெளியே அழைத்தேன். நல்ல உயரமும், கட்டுக்கோப்பான உடம்பும், அழகிய முகமும் கொண்டவளாக ஒரு பெண் வெளியே வந்தாள். கதவு திறந்து என்னை வரவேற்றாள்.

'தொந்தரவுக்கு மன்னிக்க வேண்டும். நான் காட்டுக்கு வேட்டையாட வந்தவன். என் பெயர் ருக்மாங்கதன். விதர்ப்ப தேசத்து அரசன். என்னுடைய தோல் பையில் தண்ணீர் தீர்ந்துவிட்டது. மிகுந்த தாகமாக இருக்கிறது. தயவுசெய்து குடிக்க நீர் தர வேண்டும். தோற் பையிலும் நிரப்பித் தரவேண்டும்’ என்று பணிவாகக் கேட்டேன்...''

ஆள் அரவமில்லாத காட்டில் தண்ணீர் கேட்டு வந்திருக்கும் அழகனான ருக்மாங்கதனை அந்தப் பெண் வியப்போடு பார்த்தாள். அவள் மனத்துள் காமம் கிளர்ந்தது.

''உங்கள் வரவு நல்வரவாக வேண் டும். என் பெயர் முகுந்தை. இந்த ஆஸ்ரமத்து முனிவரின் மனைவி. உங்களைப் பார்க்கும்போது மிகுந்த சந்தோஷம் ஏற்படுகிறது. இவ்வளவு அழகா என்று வியப்பு ஏற்படுகிறது. ஆண்களில் இவ்வளவு லட்சணம் பொருந்தியவர்களை நான் இதுவரை சந்தித்ததே இல்லை. மிகச் சிறப்பான அங்க அழகுகளோடு இருக்கிறீர்கள். கம்பீரமாகப் பேசுகிறீர்கள். உங்கள் மொழி வளமிக்கதாக இருக்கிறது.

உங்களுடைய அசைவுகள் கம்பீரமானதாக இருக்கின்றன. கவிதை மொழியும், கம்பீரமான தோற்றமும், கட்டுடலும், அழகிய கண்களும், மிருதுவான பேச் சும் கொண்ட உங்களைக் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்திருக்கிறது.

உங்களோடு கை கோத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. என்னோடு கூடுதற்காகத் தாங்கள் வரவேண்டும். நான் முனிவரின் மனைவி என்று தயங்காதீர்கள். ஒரு பெண் விருப்பப்பட்டால், அவளுடைய காமத்தைத் தீர்ப்பது ஓர் ஆடவனின் கடமை. மேலும், நீங்களாக முன்னேறி வந்து என் கற்பைக் கெடுப்பதுதான் தவறே தவிர, நான் அழைத்து நீங்கள் வந்தால் அது தவறாகாது.

தாகத்தைத் தணிக்க உமக்கு எப்படித் தண்ணீர் வேண் டுமோ அதே போல, காமத்தில் தவிக்கிற எனக்கு உங்களுடைய அணைப்பு தேவை யாக இருக்கிறது. வாருங்கள்... என் அருகே வாருங்கள்!'' என்று கை நீட்டி வரவேற்றாள்.

ருக்மாங்கதன் விலகி நின்றான். ''அன்னையே! நீங்கள் முனிவரின் மனைவி. நான் நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்து வருகிற ஓர் அரசன். பழி பாவங்களுக்கு அஞ்சுபவன். என் மக்களின் கோரிக்கைகளுக்கு இணங்கி வேட்டையாட வந்திருக்கிறேன். வந்த இடத்தில் எனக்கு இந்தத் துன்பம் நேர்ந்தது, தயவுசெய்து தாகத்துக்கு தண்ணீர் கொடுத்து, என்னை ஆசீர்வதித்து அனுப்புங்கள். மற்றபடி, தகாத வார்த்தைகள் எதுவும் பேச வேண் டாம். தகாத செயல்கள் எதுவும் செய்ய நான் தயாராக இல்லை. என்னை மன்னியுங்கள்!'' என்று பணிவாக மறுத்தான்.

''என்ன இது... ஒரு பெண் விரும்பி அழைத்தும் கூட அவளை விட்டு விலகிப் போகிறீர்களே, ஏன்?

நான் அழகாக இல்லையா? என் கட்டழகு உங் களைத் தூண்டவில்லையா? என் பேச்சில் கனிவு இல்லையா? நான் ஒயிலாக இல்லையா? படிப்பறிவு இல்லாதவளாகத் தென்படுகிறேனா? என்னை வெறுப்பதற்கு உண்டான காரணம் என்ன, சொல் லுங்கள்'' என்று முகுந்தை கேட்க,

''நீங்கள் பிறர் மனைவி'' என்றான் அவன் பணிவோடு.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக