புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_c10 
306 Posts - 42%
heezulia
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
manikavi
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாரதர் கதைகள் - எழுத்துச் சித்தர் பாலகுமாரன்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:04 am

First topic message reminder :

நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 F3tDCalRRLCZg0Uw3j11+p14bநாரதர் கதைகள் வெறும் நகைச்சுவைக்காக எழுதப்பட்டவை அல்ல. எதனால், நாடகத்தில் நாரதர் கோமாளியானார் என்பது எனக்குப் புரியவில்லை. நாரதரது சரித்திரத்தைப் படிக்கும்போது அவர் மிகக் கூர்மையானவராக, மிகச் சிறந்த குணவானாக, மிக அமைதியானவராக, மிகுந்த ஒழுக்கச்சீலராக, தத்துவ விசாரம் உள்ளவராக, ஸ்ரீமந் நாராயணனையே சரணடைந்தவராக, சரணாகதிக்கு உதாரணமாகத் திகழ்ந்திருப்பதை உணர முடிகிறது. எதனாலோ மேடைகளில் அவர் கோணங்கியாகிவிட்டார்.

ஒரு விஷயத்தை ஒருவரிடமிருந்து பிடுங்கி இன்னொருவர் முன் வைத்து, இது சரியா என்று பார்க்கச் சொல்லி, 'இல்லை’ என்று அவரைச் சொல்ல வைத்து, இரண்டு பேருக்கும் இடையே கலகத்தை மூட்டுவதால் அவர் கோமாளியாகிவிட்டாரோ என்று தோன்றுகிறது. ஆனால், அது கலகமல்ல. 'இதுதான் சரி’ என்று ஒரு குழுவினரும், 'இல்லை, இதுவே சரி’ என்று இன்னொரு குழுவினரும் வாழ்ந்து வரும்போது, 'எது உண்மையில் சரி?’ என்று கேள்வி எழுப்புவது எப்படிக் கலகமாகும்? அது உண்மையை நோக்கிய பயணம். சத்தியத்தை நோக்கிய சாதனை. எனவே, 'நாராயண... நாராயண...’ என்று சொல்லிக்கொண்டே அவர் மேடையில் நுழைந்தால், அத்தனை பேருக்கும் சிரிப்பாகிவிடுகிறது. அப்படிச் சிரிக்கிறார்கள் என்று தெரிந்ததாலேயே அந்த நடிகர், அந்த 'நாராயண... நாராயண’ என்பதை மிகச் சரியான ஒரு நேரத்தில், மிகக் கேலியான ஒரு குரலில் வெளிப்படுத்துகிறார் என்றும் தோன்றுகிறது. உண்மையில் அந்த 'நாராயண... நாராயண’ என்ற சப்தம் வியப்பின்பால் வருவது என்பதாகவே நான் உணர்கிறேன்.

'அடடே! இதுவா உண்மை! அப்ப, இதுவா உண்மை’ என்று பல திசைகளிலும் தன் பார்வையைச் செலுத்தி, உண்மை எதுவெனக் கண்டுபிடிப்பதே அவருடைய தன்மையாக இருக்கிறது. தான் மட்டும் அறிந்த உண்மையை தனக்குள்ளே பொதித்துக் கொள்ளாது, தன் சரிதமாக அவர் வெளியிடுகிறார். தன் வாழ்க்கை யின் நோக்கமாகவும் அதைக் கொண்டுவிடுகிறார். எனவே, ஓர் உன்னத புருஷனுடைய வாழ்க்கையாகத்தான் நாரதருடைய கதைகளை நான் கவனிக்கிறேன்.

நாடகக் கொட்டகைக்குள் மக்கள் ஆணி அடித்ததுபோல் திகைப்பாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் அவர்களைத் தளரவிடுவது நல்லது என்று ஆலோசித்து, நாடகக்காரர்கள் யாரை அனுப்புவது என்று யோசித்து, நாரதரை அனுப்புவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அந்த உச்சிக் கொண்டையும், காவி உடையும், பூணூலும், மார்பிலே தொங்குகிற வீணையுமாக அவர் உள்ளே நுழைய, கைதட்டல் ஆரவாரம் பொங்குகிறது. 'அப்பாடா, இனி அடுத்த பத்து நிமிடமும் நல்ல நகைச்சுவையாகப் போகும்’ என்று மக்கள் நினைக்கிறார்கள். அதை விரும்பவும் செய்கிறார்கள். நாடகக் காரர்களுக்கும் தங்களுடைய சாதனை பற்றிச் சந்தோஷம். பல நாடகங்களில் நாரதர் தம்பூரா வைத்துக்கொண்டு வருவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், நாரதரிடம் இருப்பது தம்பூரா அல்ல; அது மஹதி என்கிற வீணை. கந்தர்வ லோகத்து சமாசாரம்.

நாரதர் யார்? சப்த ரூபம். எது சப்தம்? உலகத்தில் ஏற்படுகிற எல்லா அசைவுகளும் சப்தத்தை உண்டு பண்ணுகின்றன. அந்த சப்தங்களில் உன்னதமானது எது? இசை. அந்த இசையில் உன்னதமானது எது? வீணை இசையே என்று சொல்லப்பட்டிருக்கிறது. சப்தத்தினுடைய இன்னொரு வடிவம் என்ன என்று யோசித்தால், பேச்சு. பேச்சின் உன்னதம் கவிதை. கவிதையின் இன்னொரு வடிவம் விவாதம். நாரதர் எல்லா இடங்களிலும் விவாதம் பேசி, மக்களுடைய திசையைத் திருப்பி, நல்லது நோக்கிப் பயணிக்கச் செய்கிறார்.

இங்கே எவர் கர்வம் கொண்டு அலைகிறாரோ, எங்கே ஆணவம் தலைவிரித்து ஆடுகிறதோ, இந்தப் பிரபஞ்சத்தில் எங்கே வீராவேசம் பேசப்படுகிறதோ, அங்கெல்லாம் நாரதர் போய் சமனம் செய்கின்ற பணியிலே தாமாக ஈடுபடுகிறார். இதற்கு, நாரதர் பாட்டுப் பாடவில்லை; கவிதை சொல்லவில்லை. மாறாக, பேச்சுகளில் இறங்குகிறார். 'என்ன இது?’ என்ற கேள்விதான் நாரதருடைய அடிப்படையான விஷயம். உண்மையை அறியும்பொருட்டு 'என்ன இது?’ என்று எவர் கேள்வி கேட்டாலும், அவர் நாரதருடைய தன்மையைக் கொள்கிறார். அப்படிக் கேட்கும்போது உள்ளுக்குள்ளே கலவரம் ஏற்படத்தான் செய்கிறது. அந்தக் கலவரம்தான் நல்ல விஷயத்தை வெளிக்கொண்டு வருகிறது. எது குழம்புகிறதோ, அதுவே தெளியும். எது கடையப்படுகிறதோ, அதிலிருந்தே அமிர்தம். எனவே, நாரதர் ஏற்படுத்துகிற கலவரம், அதாவது கடையல், நன்மையைக் கொண்டு வந்து சேர்க்கிறது; அமுதத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறது.

பிரம்மா- படைப்புத் தொழில். ஓர் உயிரின் ஆரம்பம்; ஓர் உருவத்தின் தொடக்கம். சிவன் அழிக்கும் தொழில். ஒரு முடிவின் ஆரம்பம்; ஒரு வாழ்க்கையின் முடிவு! எது வளர்ச்சி? விஷ்ணுவே வளர்ச்சி. வளர்வது என்பது விஷ்ணுவாகவும், படைப்பது என்பது பிரம்மாவாகவும், முடிவது என்பது சிவமாகவும் மூன்று வித சக்திகளுக்கு உருவங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதுதான் சநாதன தர்மத்தின் அடிப்படை விதி.

ஆக, விவகாரங்கள் எல்லாம் வளர் வது பற்றித்தான் இருக்கின்றன. எது வாழ்க்கை என்பதைப் பற்றித்தான் இருக்கின்றன. அதைப் பற்றித் தவறாகக் கூறப்படும்போது, அது பற்றி மோசமாக பிரசாரம் செய்யப்படுகிறபோது, அது பற்றிய ஞானமில்லாமல் பேசப் படுகிறபோது, அவற்றை உடைத்து உண்மையை நிலைநாட்டுவதற்கு நல்லவர்கள் இடைவிடாது முயன்று கொண்டிருக்கிறார்கள். அந்த முயற்சியின் ஒரு வடிவம்தான் நாரதர்.

நாரதர் என்பவர் படைப்புத் தொழிலோடும் சம்பந்தப்படவில்லை; ஒரு வாழ்க்கையின் முடிவோடும் சம்பந்தப்படவில்லை. அவர் வளர்ச்சி மீதே அக்கறை காட்டுகிறார். எது வளர்கிறதோ, அந்த வளர்ச்சியை நோக்கிச் சரணடைந்து, எது வளர்கிறது, எப்படி வளர்கிறது என்று ஆராய்ச்சி செய்கிறார். எனவே, விஷ்ணுவின் பக்தராக, ஸ்ரீமந் நாராயணரைச் சரணாகதி அடைந்தவராக நாரதர் உருக்காட்டப்படுகிறார்.

படைப்புத் தொழிலைப் பற்றி விமர்சனம் இல்லை; முடிவு பற்றிய விமர்சனம் இல்லை. எது வளர்கிறதோ அதைப் பற்றி மட்டுமே விமர்சனம். அந்த விமர்சன சக்திதான், அந்த விமர்சன ரூபம்தான், எழுப்பப்படுகிற கேள்வி என்கிற மகோன்னதமான ஒரு மாறுதல்தான் நாரதர். இந்த விமர்சனம் இல்லாவிட்டால் வளர்ச்சி இல்லை. அல்லது, வளர்ச்சி கோணலாகப் போகும். ஆட்டு மந்தைகள் போல முன்னால் போவதன் பின்னாலேயே போகாமல், 'இது என்ன?’ என்று கேள்வி கேட்கும் நம் விமர்சன சக்தியே, நம்முடைய கேள்வி கேட்கும் திறனே நம்முள் தெளிவை உண்டாக்கும். அப்படித் தெளிந்து நடக்கிற பயணமே வாழ்க்கை. அப்படிப்பட்ட வாழ்க்கையே நாரதர் வகுத்த வழி! இந்தக் கேள்வி கேட்டலே நாரத சக்தி. இந்த விஷயம்தான் விதம் விதமான கதைகளாக்கப்பட்டிருக்கிறது.

நல்லவன், கெட்டவன் என்று பிரித்து, நல்லவனுடைய விளக்கத்தையும் கேட்டு, கெட்டவனுடைய விளக்கத்தையும் கேட்டு, எது சரியான வழி என்று தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது. எனவே, இங்கு கெக்கலித்துச் சிரிப்பதற்கு எதுவும் இல்லை. மாறாக, கூர்த்த புத்தியும், விமர்சன புத்தியும் உள்ளவர்களுக்கே நாரதர் கதை புரியும்.

வழக்கம் போலல்லாது, பாலகுமாரன் மிக வித்தியாசமான ஒரு நகைச்சுவைக் கதையைச் சொல்ல ஆரம்பித்துவிட்டான் என்று நீங்கள் நினைத்துக்கொள்வீராயின் அது மிகப் பெரிய தவறு. முன்னைவிட இந்த நாரதர் கதைகள் மிகக் கூர்மையாகவும் கனமாகவும் இருக்கும்.

இந்தப் பிரபஞ்சம் பூமியை மட்டும் கொண்டதல்ல; வெவ்வேறு வடிவான உருவங்கள் வாழ்கிற பல்வேறு உலகங்கள் இருக்கின்றன என்பது சநாதன தர்மத்தின் கருத்து. மிகச் சமீபமாக, பூமியில் ஒரு பெரிய நட்சத்திரக் கல் வந்து விழுந்தபோது, அதை இடைமறித்து ஒரு விண்கலம் தாக்கிச் சிதறடித்து, பூமிக்கு அப்பால் அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. அதாவது, பல்வேறு உலகக் கதைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

அப்படிப்பட்ட உலகங்களில் ஒன்று கந்தர்வ உலகம். எந்த மாதிரியான ஆன்மாக்கள் கந்தர்வ உலகத்தில் ஜீவிக்கின்றன? இசையை பக்தியின் வெளிப்பாடாக, குழல், யாழ் போன்றவற்றை நன்கு பயின்று மீட்டி, அதன் மூலம் இந்தப் பிரபஞ்ச சக்தியை, இறைவனை வணங்குகிற ஆன்மாக்கள் அங்கு வாழ்கின்றன என்று சொல்லப்படுகிறது. அதாவது, புனிதப்பட்ட ஆன்மாக்கள் பசி, தூக்கமில்லாது, வேறு உடல் உபாதைகள் இல்லாது, சங்கீதமே வாழ்வாகக் கொண்டு கந்தர்வ உலகத்தில் வாழ்கின்றன. ஆனால் மன மயக்கங்கள், மதி சறுக்கல்கள் அங்கேயும் உண்டு.

உபன் என்ற கந்தர்வனுக்கு ஒரு மகன் பிறந்தான். அந்த மகனுக்கு உபவருக்கன் என்று பெயரிட்டார்கள். உபன் இசையையே லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவன். இறைவனை இசையால் வழிபடுவதையே எந்நேரமும் செய்துகொண்டிருந்தவன். தன் மகனை நன்கு பயிற்றுவித்தான். தன்னிலிருந்து பிரிந்த, கிளர்ந்த அந்தச் சக்தியை மிகவும் பாராட்டி வளர்த்தான். அவனுக்கு, தான் வாசிக்கிற மஹதி என்ற யாழை வாசிக்கக் கற்றுக் கொடுத்தான். உபவருக்கன் தந்தையை மிஞ்சிய சீடனாக அந்த வீணையைத் திறம்பட வாசிக்கக் கற்றுக்கொண்டான். எல்லா உலகத்தாரும் உபவருக்கனை அழைத்து, அவனை மஹதி வாசிக்கச் சொல்லிக் கேட்பது வழக்கம். நல்ல விழாக்கள் எதுவும் மஹதி வீணை இல்லாது, அதை வாசிக்கின்ற உபவருக்கன் இல்லாது நடைபெறுவதில்லை.

தேவர் உலகில் ஒருமுறை, பிரம்மசிரேஷ்டர் என்கிற முனிவர் மிகப் பெரிய யாகங்கள் செய்தபோது, அங்கே வீணை வாசிக்க உபவருக்கன் அழைக்கப்பட்டான். உபவருக்கனும் மனம் ஒருமித்து சாம கானம் வாசித்து, அங்குள்ளோரைத் தன் வயப்படுத்தினான்.

அந்த இடத்தில் இசை ஞானமுள்ள அந்தணக் கன்னிகை ஒருத்தியும் இருந்தாள். உபவருக்கனின் வீணை இசையில் சொக்கிப் போனாள். அதன் சுரத்தோடு அவள் மனமும் கலந்தது. தான் அவனுக்கு உரியவளாக வேண்டும் என்றும், அவனை போஷிக்க வேண்டும் என்றும், அவனை இன்னும் சிறப்பானவனாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடும் அவன் மீது காதல் கொண்டாள். அவன் கவனத்தை ஈர்க்கும்படியாக நெகிழ்ந்தும், அசைந்தும், கண்களால் அழைத்தும், பார்க்கும்போது உதடு பிரித்துச் சிரித்தும், வெட்கப்பட்டும், ஆர்வப்பட்டும் பல்வேறு பாவனைகள் காண்பிக்க, உபவருக்கன் மனம் சிதறினான். பாடலில் இருந்த கவனம் நகர்ந்து போயிற்று. சாம கானம் வாசிப்பதில் பிழை ஏற்பட்டது. மிகப் பெரிய சிரேஷ்டர்கள் அமர்ந்திருந்த அந்தச் சபையில், சாம கானத்தை கரதலப் பாடமாகக் கற்ற பெரியவர்கள் கூடியிருந்த அந்த இடத்தில், பிசிறு பிசிறாக சாம கானம் வாசிக்கப்பட்டதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சியுற்றார்கள்.

ஏன் தவறு செய்கிறான், எதனால் பிழை செய்கிறான் என்று கவலைப்பட்டார்கள். அவன் கவனம் ஒரு கன்னிகையிடத்தில் சிதறியிருப்பதைக் கண்டு வருத்தப்பட்டார்கள். கவனம் சிதறாமல் இருந்தால் மிக அற்புதமான ஒரு சாம கானம் வெளிப்பட்டிராதா, என்ன வாசிக்கிறோம் என்றுகூடத் தெரியாது இப்படிக் கவனம் சிதறலாமா, இது நல்லதா, இது பலருக்குத் துன்பம் நேர்விக்குமே என்று கலங்கினார்கள்.

யாகம் செய்த பிரம்மசிரேஷ்டர் கோபம் அடைந்தார். சபை சலசலப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். வாசிப்பு தவறாக இருப்பதால் சபை தனது மௌனத்தை இழந்துவிட்டது என்பதைப் புரிந்து ஆவேசப் பட்டார். ''கந்தர்வனே, போதும் நிறுத்து!'' என்று கட்டளையிட்டார். வீணை இசை நின்றது.

''என்ன செய்கிறோம் என்று தெரியாமல், ஓர் உன்னதமான காரியம் செய்கிறபோது மனம் பிழன்று மிகச் சாதாரணமான ஒரு விஷயத்தில் ஈடுபடுகிறாய் என்றால், நீ இந்த மஹதி வீணையை வாசிக்கத் தகுதி இல்லாதவன். இந்த சாம கானம் இசைக்க யோக்கியதை இல்லாதவன். எனவே, யோக்கியதை இல்லாமல் ஒரு பெரிய சபையில் இந்த வித்தையை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதால், நீ கந்தர்வனாக இனி இருக்க வேண்டாம். அது உனக்குத் தகாது. எனவே, நீ பூமியில் பிற!'' என்று சாபமிட்டார்.

உபவருக்கன் தன் தவற்றை உணர்ந்தான். கந்தர்வன் என்ற இடத்திலிருந்து நகர்ந்து, ஒரு மானுடனாக பூமியில் வந்து பிறந்தான். அவனது வெகு இளம் வயதிலேயே அவனின் தந்தை இறந்தார். தாய் பல்வேறு வீடுகளில் வேலை செய்து மகனை வளர்த்து வந்தாள்.

சாம கானம் என்ற உன்னதத்தை, அதைத் தெரிந்த சபைக்கு நடுவே தவறாக வாசித்து தன்னுடைய தகுதியை இழந்தது மட்டுமல்ல; கந்தர்வனாக இருந்தபோது கிடைத்த ஓர் அற்புதமான தந்தையின் சிநேகமும் பூலோகத்தில் இருக்கும்போது கிடைக்கவில்லை. தந்தையின் அணைப்பும் அந்தச் சாபத்தில் அடித்துக்கொண்டு போயிற்று.

உபவருக்கன் தன் விதவைத் தாயுடன் ஓர் அந்தணர் வீட்டில் வசித்து வந்தான். அவள், அந்த அந்தணர் வீட்டில் வேலை செய்து, தன்னோடே தன்னுடைய பிள்ளையை வைத்துக் கொண்டாள். ஒரு மழைக்காலத்தில் அந்த அந்தணர் வீட்டுக்கு நாராயணனுடைய அடியார்கள் வந்தார்கள். பரத கண்டத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு கோயில்களைத் தரிசிக்கவும், நாராயணனின் புகழ் பாடவும் அவர்கள் ஒரு கூட்டமாக நகர்ந்துகொண்டிருந்தார்கள். அந்த மழைக்காலம் முழுவதும் அவர்கள் அந்த அந்தணர் வீட்டில் தங்கி, நாராயணனைப் பற்றி விதம்விதமான பாடல்களைப் பாடினார்கள். இசை என்ற ஓர் அற்புதமான வித்தை, அவனுக்குக் கந்தர்வ உலகத்தில் கிடைத்திருந்ததால், அந்த இசையால் அவன் பல பேரை மகிழ்வித்திருந்ததால், மானுடனாகப் பிறந்த உபவருக்கனுக்கும் அந்த இசை ஞானம் இருந்தது. அந்த அடியவர்கள் பாடும்போது, அவனும் தன்னுடைய இனிய குரலில் சேர்ந்து பாடினான். அவர்களோடு அமர்ந்து அந்தப் பாடல்களை எழுதிக்கொண்டு, மனனம் செய்தான். அவர்கள் பாட மறந்ததை எடுத்துக் கொடுத்தான்.

ஒரு சிறுவனின் புத்திசாலித்தனத்தையும், இசை மீதுள்ள நாட்டத்தையும், இசையின்பால் அவன் கொண்டிருந்த ஞானத்தையும் அறிந்து அந்த அடியவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். அவனுக்கு நாராயண மந்திரம் உபதேசித்தார்கள்.

''இது மிக உயர்ந்தது. இசையைக் காட்டிலும் உயர்ந்தது. எல்லாவற்றைக் காட்டிலும் உயர்ந்தது. பேச்சைக் காட்டிலும் இந்த நாராயண மந்திரம் உயர்ந்தது. நமக்குப் பேச்சுத் திறன் இருக்கிறதே, அது கவிதை எழுத மட்டுமல்ல, பாட மட்டுமல்ல, ஆட மட்டுமல்ல, நாடகம் போட மட்டுமல்ல, இந்த மாதிரியான மந்திரங்களைச்சொல்ல வேண்டுமென்பதற்காகத்தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். எனவே, இடையறாது, இடையறாது நாராயணன் பெயரைச் சொல். நாராயணன் உனக்கு நேரே வருவார். நீ வேண்டுகின்ற வரங்களைத் தருவார்'' என்று சொன்னார்கள். அந்தச் சிறுவன் மனமகிழ்ந்தான். அவர்களை வணங்கி, வழியனுப்பி வைத்தான்.

அவன் தாயார் இறந்தபோது என்ன செய்வது என்று தெரியாது தவித்தான். இசையா, கவிதையா, எது முக்கியம்? இரண்டும் இல்லை, நாராயண மந்திரமே முக்கியம் என்று தெளிந்தான். வனத்திற்குப் போனான். இடையறாது நாராயண மந்திரம் சொன்னான். தனக்குள்ளே அந்த மந்திரத்தை வைத்துப் பெரிய தீயாக்கி, சதா காலமும் அதனுள்ளேயே மூழ்கிக் கிடந்தான். அவனுடைய கடும் தவத்தைக் கண்டு ஸ்ரீமன் நாராயணர் மனம் மகிழ்ந்தார். அவனுக்குக் காட்சியளித்தார். ''தொடர்ந்து மந்திரம் சொல்லிக் கொண்டிரு. இந்த உலகம் முடியப் போகிறது. பெரிய ஊழிக்காலம் வரப்போகிறது. சிருஷ்டிகள் அழியப் போகின்றன. மறுபடியும் சிருஷ்டி துவங்கும். அப்போது பிரம்மாவே உனக்குத் தந்தையாக இருந்து, உனக்குச் சகலமும் சொல்லிக் கொடுப்பார்'' என்று சொல்லி விடைபெற்றார்.

ஊழிக்காலம் வந்தது. உயிரினங்கள் அழிந்தன. சகலமும் நீர்மயமாயிற்று. நீர்மயத்திலிருந்து பிரம்மா உலகை சிருஷ்டிக்கத் துவங்கினார்.

வரிசி முதலிய முனிவர்களோடு, மஹதி என்ற வீணையோடு உபவருக்கன் மறுபடி பூமியில் பிறந்தான். அவனுக்கு 'நாரதர்’ என்று பெயரிட்டார் பிரம்மா. நாரதர் தன்னுடைய மகன் என்று பெருமையோடு உலகுக்கு அறிவித்தார். இந்த உலகம் மட்டுமல்லாது, எல்லா உலகங்களுக்கும் செல்கிற தகுதியோடு, நாரதர் மஹதி என்ற வீணையோடு பிறந்தார்.

சந்தோஷம் கொடுக்கிற இசை மட்டுமல்ல, துன்பத்தை நீக்கி ஆழ்ந்த மௌனத்தில் ஆழ்த்துகிற இசை மட்டுமல்ல, சத்தியத்தை நோக்கிக் கேள்வி கேட்டுத் தெளிகிற ஞானத்தோடும் நாரதர் பிறந்தார். அவருடைய வாக்கு பிரபஞ்சத்தின் எல்லாத் திசைகளிலும் ஒலித்தது. சாதாரண பிறப்பல்ல அது. மாமுனி என்கிற பிறப்பு. சகலமும் அறிந்து தெளிந்த பிறப்பு. கடும் தவத்தால் அது அவருக்குக் கிடைத்தது.

நாராயண மூல மந்திரம், மறுபிறப்பில் மிகச் சிறப்பான ஓர் அம்சத்தைக் கொண்டு வந்து கொடுத்தது. அந்தச் சிறப்பான அம்சத்திற்குப் பெயர் நாரதர். அவர் எடுத்துரைத்த உண்மைக்குப் பெயர் நாரத புராணம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:32 am


''அதைப் பற்றி உங்களுக்கென்ன கஷ்டம்? நானே ஆசைப்பட்டுத்தானே வருகிறேன்! என் புருஷன் வந்தால்கூட நீங்கள் இதைத் தெளிவாகச் சொல்ல லாமே? 'நான் மறுத்தேன். உங்கள் மனைவிதான் வற்புறுத்தினாள்’ என்று சொல்லலாமே?

உங்கள் மீது பிழை இல்லை எனும்போது அவர் உங்களை எதுவும் செய்யமாட்டாரே! எனவே, நீங்கள் எது குறித்தும் பயப்பட வேண்டாம். வாரும்; வந்து கூடும்'' என்று அவள் அவன் மார்பில் வந்து சாய்ந்தாள்.

ருக்மாங்கதன் அவளை உதறித் தள்ளினான். அவள் தரையில் விழுந்தாள். எழுந்து நின்றாள். கோபமானாள். ''மிகப் பெரிய அழகன், மிகச் சிறந்த அரசன், மக்கள் மீது மிகுந்த பிரியமுள்ளவன், நல்லபடியாக நாட்டை ஆள்பவன் என்கிற எண்ணத்தில்தானே இப்படி என்னிடம் திமிராக நடந்து கொள்கிறாய்? என்ன பெரிய பொல்லாத அழகு உன்னு டைய அழகு! இந்த அழகை என்னால் குலைத்துவிட முடியாதா? உன் அழகு மற்றவருக்குப் பயன்பட வேண்டும் என்றுதானே அழைத்தேன்? உன் அழகு என்னைத் தொந்தரவு செய்கிறது என்றுதானே கூப்பிட்டேன்? அந்த அழகைக் கொண்டு என்னுள் அனலை மூட்டிவிட்டு நீ போய் விடுவாய்; நான் காமத்தில் கிடந்து சாக வேண்டுமா? என்ன கூத்து இது? உடனடியாக வந்து என்னைத் தழுவு!'' என்று அவள் கட்டளை போல் சொல்ல, அவன் ''முடியாது'' என்று மறுத்தான்.

''அப்படியா? போ, விலகிப் போ! வெறுமே போகாதே. என்னிடமிருந்து சாபத்தை வாங்கிக் கொண்டு போ! இந்த அழகுதானே உன்னை கர்வப்பட வைக்கிறது? இந்த அழகுதானே என்னை அலட்சியப்படுத்த வைக்கிறது? சகலரையும்விட மிகச் சிறந்தவன் என்கிற அகம்பாவ நினைப்பைக் கொடுக்கும் உன் அழகு நாசமாகப் போகட்டும். உன்னை குஷ்டரோகம் பீடிக்கட்டும். உனது கை-கால்கள் விளங்காது போகட்டும். உன் பலம் குறையட்டும்'' என்று ஆத்திரத்தோடு வசைமாரி பொழிந்தாள் முகுந்தை.

அந்த க்ஷணமே அவன் உடம்பு மாறிற்று; தோல்கள் வெடித்தன; கைகள் சுருங்கின; விரல்கள் முனை மழுங்கித் தேய்ந்தன; முழங்கால் மடங்கிற்று. நடை தள்ளாடிற்று. அவன் வேலிப்படலைப் பிடித்தபடியே வெளியேறினான். அவன் போவதை அவள் வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

'ஏன் இப்படி ஆயிற்று எனக்கு? நல்லதுதானே செய்தேன். உத்தமமாக நடந்துகொண்டதற்கு யாரேனும் சாபம் தருவார்களா? அப்படியும் நடக்குமா? அது பலிக்கவும் செய்யுமா? என்ன அபத்தம் இது! எதற்காக எனக்கு இது ஏற்பட்டது?’ என்று மனம் குன்றியவனாக, அவன் ஓர் ஆலமரத்தடியில் அமர்ந்தான். அவன் படைகள் அவனைப் பல இடங்களில் தேடிக்கொண்டிருந்தன. இந்த ஆலமரத்துப் பக்கம் அவை வரவில்லை.

நாரதர் வந்து விசாரித்ததும் அவன் தன் கதையைச் சொன்னான். ''அடடே! அதனால்தான் இங்கு உட்கார்ந்து விநாயகரை துதித்துக்கொண்டிருக்கிறாயா? சற்று தூரத்தில் சிந்தாமணி விநாயகர் என்று ஒரு விநாயகர் இருக்கிறார். மிக அழகான கோயிலில் குடியிருக்கிறார். அந்தக் கோயிலுக்கு அருகே ஒரு குளம் இருக்கிறது. நான் அங்கு ஒரு விநோதம் கண்டேன்.

அந்தக் குளத்தில் ஒரு குஷ்டரோகி தன்னுடைய நோய் போக வேண்டும் என்ற எண்ணம்கூட இல்லாது சாதாரணமாக மூழ்கி எழுந்தான். உடனடியாக அவன் நோய் தீர்ந்தது. அந்தக் குளத்தில் மூழ்கி எழுந்ததுமே அவன் வாலிபனாகவும், தேக வலுவுள்ளவனாகவும் அழகனாகவும் மாறினான். நீயும் அந்தச் சிந்தாமணி விநாயகர் கோயில் குளத்தில் மூழ்கி எழு!'' என்று வழிகாட்டினார்.

அவன் நாரதருக்கு நன்றி சொன்னான்.

''நீங்களாகவே வலியவந்து மற்றவருக்கு உதவி செய்கிறீர்கள் நாரத மகரிஷியே! உங்களுக்கு இணையாக யாரேனும் உண்டா? மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவே சஞ்சரித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களைப் போல் பெரும் தெய்வங்களும் செய்வதில்லை.

நாரத மகரிஷியே, உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறேன். தாங்கள் மேலும் சில விவரங்களை எனக்குச் சொல்ல வேண்டும்'' என்றான் ருக்மாங்கதன்.

''என்ன அது?'' - நாரதர் கேட்டார்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:32 am


''சிந்தாமணி விநாயகரை பூஜித்துப் பயனடைந்தோர் வேறு யாரேனும் இருக்கிறார் களா?'' என்று வினவினான்.

''இருக்கிறார்கள்'' என்று நாரதர் சந்தோஷமாகச் சொன்னார்.

''முன்னொரு காலத்தில் கௌதம முனிவரிடத்தில் இந்திரன் பிழைபட்டு மிகப் பெரிய சாபத்துக்கு உள்ளானான். பிறகு, சிந்தாமணி விநாயகரை வணங்கி, அந்த சாபம் நீங்கப் பெற்றான். அதைச் சொல்கிறேன், கேள்!'' என்றார் நாரதர்.

''ருக்மாங்கதா, நீ சாதாரண அரசன். உத்தமமாக வாழ்ந்த உன்னை விதி சதி செய்து இந்தச் சாபம் வாங்கும்படி மாற்றிவிட்டது. ஒழுக்கமற்று நடக்க மாட்டேன் என்று உறுதியாக நின்றதால் உனக்கு சாபம் கிடைத்தது. ஆனால் உன்னைப் போன்று அல்லாமல், திட்டமிட்டு ஒழுக்கம் தவறி அதனால் சாபம் பெற்ற ஒருவரையும் விநாயகர் காப்பாற்றியிருக்கிறார்.

ஒருமுறை, இந்திரனோடு அவன் சபையிலே உட்கார்ந்திருந்தேன். தேவலோகப் பெண்கள் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள்மீது கவனம் செலுத்தாமல் என் மனம் நாராயண ஸ்மரணையிலேயே இருந்தது. நான் வேறு எங்கோ லயித்திருப்பதை இந்திரன் கண்டு, ''இவ்வளவு அழகிய பெண்கள் இத்தனை அற்புதமாக நடனமாட, நீங்கள் அவர்களைக் கவனிக்காமல் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருக்கிறீர்களே... இந்தப் பெண்கள் உங்களைக் கவரவில்லையா?'' என்று கேட்டான்.

''இவர்கள் அப்படி ஒன்றும் அழகாக இல்லையே!'' என்றேன் நான். இந்திரன் திடுக்கிட்டான்.

''என்ன சொல்கிறீர்கள்? ரம்பை, ஊர்வசி போன்ற இந்த தேவலோகப் பெண்களா அழகு இல்லை என்கிறீர்கள்? இவர்களை விட அழகான பெண்கள் வேறு எங்கு இருக்கிறார்கள்?'' என்று இந்திரன் கேட்க, ''பூமியில் இருக்கிறார்கள்'' என்று நான் பதில் சொன்னேன்.

''பூமியில் எங்கு இருக்கிறார்கள்?'' என்று அவன் தொடர்ந்து கேட்டான். ஏனென்றால், எது எல்லாம் அழகோ, அதெல்லாம் தனக்கு வேண்டும் என்ற பேராவல் பிடித்தவன் இந்திரன். இந்தப் பிரபஞ்சத்தில் எவையெல்லாம் உயர்வோ, அவையெல்லாம் தன் அரசவையில் இருக்க வேண்டும்; அதைத் தான் அனுபவிக்க வேண்டும் என்கிற வேகம் கொண்டவன்.

அவன் கேட்ட விதத்தில், மிகப் பெரிய அழகியைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினான். நான் யோசனை செய்தேன். அழகு என்றால் என்ன என்று இவனுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று விரும்பினேன்.

''கௌதம முனிவருடைய மனைவி அகலிகை பேரழகி. அவள் நடந்து வந்தால், பூங்கொடிகள் நாணுகின்றன. மான்கள் மருளுகின்றன. காடு நிசப்தமாகிறது. நீர் திசைமாறி ஓடுகிறது. அவள் இருக்கும் திசைப்பக்கம் வருகிறது. கதிரவன் அவள் மீது நேரடியாய் தன் கதிர்கள் படாது, மேகத்தில் மறைத்துக்கொள்கிறான். அவளைப் பார்க்கும்போதே எல்லோரும் பணிவோடு நமஸ்கரிக்கிறார்கள். திரு மகளும் கலைமகளும் அலைமகளும் ஒன்று சேர்ந்த அழகாக அவள் இருக்கிறாள். ஒரு முனிவருக்கு மனைவியாக இருந்து, அவருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மிகத் துல்லியமாகச் செய்து, மிக ஒடுக்கமான ஒரு வாழ்வை வாழ்வதால், அவள் கற்புநெறியின் வெளிச்சம் அவளைப் பேரழகியாக மாற்றியிருக்கிறது. அழகு என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள, நீ அவளை ஒருமுறை பார்த்தால் போதும்!'' என்று சொல்லிவிட்டு வந்தேன்.

அவன் குழம்பத் துவங்கினான். குழம்பியதே தெளியும். அவன் இன்னும் குழம்பட்டும் என்று விட்டுவிட்டு வந்துவிட்டேன். அவன் பூவுலகம் போய், கௌதம முனிவரது ஆஸ்ரமம் தேடி, தொலைவிலிருந்த அகலிகையைப் பார்த்தான். திகைத்துப் போனான். துவண்டு போனான். காமத்தால் தடுமாறி, ஆஸ்ரமத்துப் படியேறினான். தன்னை கௌதம முனிவராக உருமாற்றிக் கொண்டான். உள்ளுக்குள்ளே சலசலப்பு கேட்டது. சட்டென்று இருட்டில் ஒளிந்து கொண்டான். கௌதம முனிவர் வெளியே வந்தார். வானம் பார்த்தார். 'என்ன நாழிகை இப்போது? ஏன் என் தூக்கம் கலைந்துவிட்டது?’ என்று நட்சத்திரங்களைத் தேடினார். அவன் நழுவி, சற்றுத் தூரம் போய், சேவல் போலக் குரல் கொடுத்தான்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:32 am


'ஹா, முதல் ஜாமம் முடிந்து விட்டதா? நல்லது, குளிக்கப் போவோம்!’ என அவர் ஆற்றங்கரை நோக்கிப் புறப்பட்டார். இந்திரன் வெளிச்சத்துக்கு வந்தான். சேவலாகக் குரல் கொடுத்தவன், முனிவராக உள்ளே நுழைந்தான். படுத்துக்கொண்டிருந்த அகலிகை திடுக்கிட்டு எழுந்தாள்.

''என்ன திடுமென்று திரும்பி விட்டீர்கள்? அதற்குள் குளியல் முடிந்துவிட்டதா?'' என்று கேட்டாள்.

''இல்லை. ஆற்றங்கரையில் ஓர் அழகி குளித்துக் கொண்டிருப் பதைப் பார்த்தேன். எனக்கு மனம் தாங்கவில்லை. எனவே, உன்னைத் தேடி ஓடி வந்து விட்டேன். உன்னோடு கூட வேண்டும் என்கிற ஆவல் வந்துவிட்டது!'' என்று சொல்ல, அவள் குழப்பத்தோடு படுக்கையை நீவியபடி, 'இது என்ன புதுக் கதையாக இருக்கிறதே? இதுவரை இப்படி நடந்ததே இல்லையே?

ஆயினும், புருஷன் கூப்பிடுகிறார். பணியத்தானே வேண்டும்!’ என்று நினைத்தபடி, கணவர் உருவிலிருந்த இந்திரனின் அழைப்புக்குத் தன்னைத் தளர்த்திக் கொண்டாள். அவன் அணைக்க, அவளும் இறுக்கிக் கொண்டாள். வேகமாக இந்திரன் அவளோடு முயங்கினான். பல்வேறுவிதமான காமப் பேச்சுகள் அவனிடமிருந்து வெளிப்பட்டன.

ஆச்சரியத்தோடு செவிமடுத்த அவள் ஒரு கட்டத்தில் சட்டென்று, ''யார் நீ? என் புருஷன் ஒருபோதும் இந்த மாதிரியான வார்த்தை களைச் சொல்லமாட்டார். பெண்ணோடு கூடும் போதுகூட உத்தமமான வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்பது நல்ல மரபு. என் புருஷன் என்னிடம் தவறான வார்த்தைகளைக் கூடல் நேரத்திலும் சொன்னது இல்லை. ஆனால், வந்ததிலிருந்து ஆபாசமான வார்த்தைகளையே பேசிக்கொண்டிருக்கிறாய். உண்மையைச் சொல், யார் நீ? போ, வெளியே போ!'' என்று பிடித்துத் தள்ளினாள்.

இந்திரன் எழுந்து நின்றான். தன்னுடைய நிஜ உருவத்தைக் காட்டினான். அப்படி சுயரூபத் தைக் காட்டினால், தேவர்களின் தலைவன் இந்திரனே நம்மைத் தேடி வந்துவிட்டானா என அகலிகை மனம் மயங்கி, கை விரித்து அழைப்பாள் என்று தப்புக் கணக்குப் போட்டான்.

''நான் இந்திரன். இந்திராணி முதலிய பெண்களையெல்லாம் விட்டுவிட்டு உன்னை நோக்கி ஓடி வந்திருக்கிறேன். அவர்களையெல்லாம்விட பேரழகி நீ. வா!'' என்று அவளை நோக்கி வந்தான். அவள் பதறினாள். அவனை விட்டு விலகி, கதவு திறந்து வெளியே ஓடினாள்.

கௌதம முனிவர் அப்போதுதான் மூங்கில் படலைத் திறந்துகொண்டு, உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். ''கால் அலம்ப தண்ணீர்'' என்று கேட்டார். அவள் உள்ளே போனாள். இந்திரன் நடுநடுங்கி நின்றான். அவள் தண்ணீர் கொண்டு வந்தாள். 'என்ன ஆயிற்று உனக்கு! தடுக்கென்று வெளியே வந்தாய்; சடக்கென்று உள்ளே போனாய். தாமதமாய் தண்ணீர் கொண்டு வருகிறாய். நெற்றியில் மங்கலச் சின்னம் இல்லை. உடம்பில் நல்ல வாசனை வரவில்லை. என்ன ஆயிற்று? ஏன் நிலைகுலைந்து இருக்கிறாய்? ஏன் உன் முகம் வாட்டமாக இருக்கிறது? என்னதான் நடந்தது, சொல்?'' என்றார்.

நடந்ததை நடந்தபடி கௌதமரிடம் அகலிகை விவரித்தாள்.

''என்ன பேதமை இது! வந்தது புருஷன் இல்லை என்றுகூட ஒரு தர்மபத்தினிக்குத் தெரியாதா? உன் புருஷனின் அசைவு என்ன வென்று உனக்குத் தெரியாதா? வாசலில் நின்று என் வருகையைச் சொல்லாது, நான் என்றேனும் உள்ளே நுழைந்திருக்கிறேனா? திருடனைப்போல உள்ளே நுழைந்த இவனை நீ அப்போதே சந்தேகப்பட்டிருக்கவேண்டாமா? உள்ளுக்குள்ளே ஒரு பெண் எப்படியிருப்பாளோ, என்ன நிலையில் இருப்பாளோ என்பது தெரியாமல், கதவு தட்டாது, குரல் கொடுக்காது ஒரு புருஷன் உள்ளே நுழையக்கூடாது. அவள் மனைவியே ஆயினும் அவன் அவ்விதம் செய்யலாகாது. இந்த தர்மத்தைதான் நான் இத்தனை நாள் கடைப்பிடித்து வருகிறேன். அதற்கு மாறாக, படல் திறந்து, கதவு திறந்து, திடுமென்று ஒருவன் உள்ளே நுழைந்து, படுக்கையில் அமர்ந்திருக்கிற உன்னைப் பார்த்தான் என்றால், அப்போதே அந்த க்ஷணமே அவன் தவறானவன் என்று உனக்குத் தெரிந்திருக்க வேண்டுமே? உணர்ச்சியற்றவளா நீ? வெறும் கல்லா நீ? சே, பட்ட மரம்கூடத் துளிர்க்கும். நீ கருங்கல். வெறும் கல். போ. உணர்ச்சி இல்லை அல்லவா? போ. கல்லாகவே போ! கல்லாய்க் கிட!'' என்று சபித்தார்.

அவர் காலில் அகலிகை பணிந்து, அவர் சாபத்தை ஏற்றாள். கண்ணீர் வடித்தாள். கௌதமர், தன் அழகிய மனைவி தன்னை மீறி ஏற்பட்ட தவறுக்காக வருந்தித் துடிப்பதை கண்டு, மனம் இரங்கினார்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:33 am


''ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி தன் தம்பியோடு இந்தப் பக்கம் வரும்போது, அவர்களை விஸ்வாமித்திர மகரிஷி உன் இருப்பிடத்துக்கு அழைத்து வருவார். ஸ்ரீராமனின் கால் பட்டு நீ மறுபடியும் சுய உருவம் பெறுவாய். அதுவரை உணர்ச்சிகளைச் சிதறவிட்ட நீ, கல்லாய் இரு!'' என்று ஆசீர்வதித்தார். அகலிகை கல்லானாள்.

இந்திரன் குடிசைக்குள்ளேயே பயந்து ஒடுங்கி இருந்தான். ஒரு பூனை போல தன்னை மாற்றிக்கொண்டு, கிடைத்த சந்து வழியே வெளியே போக முயற்சித்தான். கௌதமரின் குரல் அவனைத் தடுத்து நிறுத்தியது. ''நீ இந்திரன். தேவர்களுக்குத் தலைவன். நாங்களெல்லாம் தினசரி பூஜையில் உங்களுக்கெல்லாம் அர்க்யம் விட்டுக் கொண்டிருக்கிறோம். யாகத்தில் ஒரு அவிர் பாகத்தை உங்களுக்குத் தருகிறோம். அப்படிப்பட்ட உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டிய நீ ஏன் இவ்வளவு இழிவான செயலைச் செய்தாய்? உன் பதவிக்கும் உன் கௌரவத்துக்கும் இது எவ்வளவு பெரிய இழுக்கு! யோனியின்மீது ஆசை வைத்து அல்லவா இங்கு வந்தாய்? உன் உடம்பு முழுவதும் யோனியாகப் போகட்டும்!'' என்று சபித்தார். இந்திரன் அஞ்சி நடுங்கினான்.

'இதைவிடக் கடுமையான தண்டனை உலகத்தில் உண்டோ!’ என்று கதறினான். யார் முகத்திலும் முழிக்க விரும்பாது, ஒரு தாமரைப் பூவின் தண்டுக்குள் நுழைந்து, அதன் அடிவேரைப் பற்றி நின்றான். இந்திரனைக் காணாது தேவர் உலகம் தவித்தது. பிரம்மா முதற்கொண்டு பலரும் அவனைத் தேடினார்கள். நடந்ததைப் புரிந்துகொண்டார்கள். அவர்கள் எல்லோரும் கௌதம முனிவரின் பாதங்களில் விழுந்து வணங்கி, ''இந்திரன் இல்லாது தேவலோகம் தடுமாறுகிறது. தலைவன் இல்லாது தவிக்கிறது. எனவே, உங்கள் கோபத்தைக் குறைத்து, அவனது தவற்றை மன்னித்தருள வேண்டும். இந்திரனுக்கு சாப விமோசனம் அளிக்க வேண்டும்'' என்று இறைஞ்சினார்கள்.

கௌதமர் மனம் இரங்கினார். விநாயக மந்திரத்தை அவனுக்கு உபதேசிக்குமாறு சொன்னார். வியாழ பகவான், விநாயக மந்திரத்தை இந்திரனுக்கு உபதேசிக்க, இந்திரன் விநாயக மந்திரத் தைச் சொன்னான். இந்தக் கதம்பவனத்துக்கு வந்து, இந்தக் குளத்திலே மூழ்கி எழுந்து, விநாயகரை வேண்டினான். அவன் உடம்பு முழுவதும் யோனிகள் மறைந்து, கண்களாக மாறின. அன்றிலிருந்து, ஆயிரம் கண்களுடைய தேவனாக இந்திரன் இருந்து வருகிறான். கதம்பவனத்து சிந்தாமணி விநாயகர் மிகவும் சிறப்பு உடையவர். எங்கு சிந்தாமணி விநாயகரைப் பார்த்தாலும், அவர் உச்சகட்டமான சக்தி என்பதைப் புரிந்துகொள். அவரை வணங்கி, உன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள். சிந்தாமணி விநாயகர் மிகச் சிறப்பு உடையவர்!'' என்று நாரதர் சொல்லி முடித்தார்.

ருக்மாங்கதன் கதம்ப வனத்துக் குளத்தில் மூழ்கி, விநாயக மந்திரத்தை ஜபித்தான். அவனுடைய உடம்பிலிருந்து குஷ்டரோகம் மறைந்தது. அவன் திடகாத்திரமாய், தெளிவுள்ளவனாய் நகரத்துக்குத் திரும்பி, அரசாட்சியைத் தொடர்ந்து நடத்தி வந்தான். ருக்மாங்கதனை மனமார வாழ்த்திவிட்டு, ''எல்லாச் சிறப்புகளும் பெறுவாய்'' என்று ஆசீர்வதித்துவிட்டு, அந்த இடம் விட்டு அகன்றார் நாரதர்.

சிந்தாமணி விநாயகரின் சிறப்பு நாரதரால் சொல்லப் பட்டது. விநாயகர் மந்திர ஜபம் முக்கியம் என்று அவரால் நிரூபிக்கப்பட்டது. விநாயகர் எல்லா வினைகளையும் வேரறுக்க வல்லவர் என்று பலபேருக்கு அவருடைய கதையால் புரிந்தது.

ஒரு மோசமான அழுகுரல் எங்கிருந்தோ மிக நீண்டதாய், மிக சோகமாய் ஒலித்தது. வானில் சஞ்சரித்துக் கொண்டிருந்த நாரதர் காதில் அது விழுந்தது. எங்கிருந்து வருகிறது என்று ஆவலாகப் பார்த்தார். அது நரகத்திலிருந்து வருகிறது என்று தெரிந்து கொண்டார். நரகத்தின் பக்கம் போனார்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:33 am


கோடிக்கணக்கான மக்கள் உள்ளே பல்வேறு வேதனைகளில் உழன்று கொண்டிருந்தார்கள். அழுதுகொண்டி ருந்தார்கள். தாங்க முடியாமல் அரற்றிக் கொண்டிருந்தார்கள். அந்த இடம் முழுவதும் மீறியபடி ஒரு குரல் அதிக சத்தத்தோடு இருந்தது. யார் என்று பார்த்தார். முற்பிறப்பில் அந்தணராக பிறந்தவனின் ஆன்மா அங்கு வேதனைப்பட்டுக்கொண்டு இருப்பதைக் கவனித்தார். என்ன பாவம் செய்திருக்கிறான். என்ன இடத்தில் இருக்கிறான். இன்னும் எத்தனை நாள் இந்த வேதனை என்று கவனிக்கும்போது, இன்னும் பல நூற்றாண்டுகள் அவன் இந்த வேதனையில் வாழ வேண்டும் என்பது நாரதருக்குத் தெரிந்தது.

அவன் நாரதரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டான். ''என்னால் ஒன்றும் செய்ய முடியாதப்பா, நீ செய்த தீங்குகள் உன்னை அவ்வளவு எளிதில் விட்டுவிடுமா? உன்னால் கடவுள் நாமத்தைக்கூட இங்கு சொல்ல முடியவில்லையே, அவ்வளவு வேதனைப்படுகிறாயே. என்ன செய்வது. நான் உனக்காக பிரார்த்தனை செய்கிறேன்'' என்று கண்மூடி நாராயண ஜபம் செய்தபடி நரகத்தை விட்டு வெளியே வந்தார் நாரதர். அவன், அவர் போன திக்கை நோக்கி வணங்கினான். அவனுக்குப் பெயர் கவுற்சனன்.

அவன் காஞ்சிபுரத்தில் அந்தணனாகப் பிறந்தவன். முற்பிறப்பில் செய்த நல்வினையின் பயனாக, நல்ல குடும்பத்தில் பிறந்து நல்ல வசதியான வாழ்க்கை அவனுக்குக் கிடைத்தது. ஆனால் படிப்பறிவை வளர்த்துக் கொள்ளாமல், நல்லவர்களோடு கூடியிராமல், கொஞ்சம் நஞ்சம் படிப்பையும் மற்றவருக்குக் கெடுதல் செய்வதில் அதிகம் செலவழித்தான். திருடினால் இன்னும் பணக்காரனாக ஆகலாம் என்று தீர்மானித்தான். எப்போது திருடினால் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்கலாம் என்று சிந்தித்து ஜோதிட நூலைக் கற்றான். அதில் நிபுணனானான். அந்த வித்தையை மற்றவர் பொருளை அபகரிப்பதிலேயே உபயோகப்படுத்தினான்.

அப்படிக் களவு செய்து சம்பாதித்த பொருளை விலை மாதர்களோடும் சூதாட்டக்காரர்களோடும் செலவழித்தான். தன்னுடைய விருப்பத்துக்குக் குறுக்கே வருபவர்களை அடித்து உதைத்தான். ஏளனம் செய்தான். தன்னைக் கண்டு எல்லோரும் நடுங்க வேண்டும் என்று ஆர்ப்பரித்தான்.

இத்தகைய கொடிய அந்தணனுக்கு கற்பின் திலகமாக மனைவி அமைந்தாள். அவன் மூலம் அவளுக்கு ஓர் ஆண் மகன் பிறந்தான். குழந்தை பிறந்த சில ஆண்டுகளில் நோயுற்று கவுற்சனன் இறந்துவிட்டான். அவன் இறந்தது கண்டு அக்கம்பக்கத்தார் கோயிலுக்குப் போய் பூஜை செய்தார்கள். கடவுளைக் கும்பிட்டார்கள். 'பாவி ஒழிந்தான்’ என்று சிந்தித்தார்கள். ஒரு ஆத்மாகூட அவனுக்காக வருதப்படவில்லை. அவன் மனைவி மௌனமாக அந்த இழப்பை தாங்கிக்கொண்டாள். அவள் சந்தோஷப்படவும் இல்லை; வருத்தப்படவும் இல்லை. இது விதி என்று மௌனமாக இருந்தாள். வருத்தப்படவேண்டிய யாரும் வருத்தப்படாததால் செய்த பாவங்கள் அதிகமானதால், பலரை தூஷித்ததால், அடித்து உதைத்ததால், பொருள் திருடியதால் நரகத்தின் மிகக் கொடுமையான தண்டனைக்கு ஆட்பட்டான். அவன் செய்த பாவங்களைப் போல பல நூறு மடங்கு வேதனைகள் அவன் மீது பாய்ந்தன. உடம்பு இருக்கிறது என்ற நினைப்பை ஏற்படுத்தி, அந்த உடம்புக்கு தண்டனையும் நரகத்தில் கொடுத்தார்கள். கசையால் அடித்தார்கள். கத்தியால் குத்தினார்கள். உடம்பே இல்லாதபோதும் அவற்றையெல்லாம் அனுபவிப்பதாக பயந்து அரற்றினான். அந்த பயம்தான் அவனைப் பெருங்குரல் எடுத்து அழத் தூண்டியது.

நாரதர் அவனைப் பற்றி மனம் வருந்தியவாறே நடக்க, கீழே அவனுடைய மகன் நதிக்கரை ஒன்றில் நீராடி, தந்தைக்கு தர்ப்பணங்கள் செய்வதைக் கவனித்தார். அவனுக்கு அருகே வந்தார். அவனுக்கு மட்டும் தெரியும்படியாக கரையில் நின்றார். அவன் ஓடோடி வந்து அவர் காலில் விழுந்தான்.

''நாரதரே... நாரதரே...'' என்று வணங்கினான். ஆமென்ற நாரதர், அவனை உற்றுப் பார்த்தார்.

ஒரு கயவனுக்கு மகனாகப் பிறந்தாலும் அவன் மிக உத்தமனாக இருந்தான். நல்ல தாயால் வளர்க்கப்பட்டு, நல்ல விஷயங்கள் போதிக்கப்பட்டு நல்வழியில் வாழ்ந்து வந்தான். பலருக்கும் உதவி செய்யவே பிறவி எடுத்திருப்பதாக நினைத்துக் கொண்டான். அவ்விதமாகவே கேட்டாலும், கேட்காது போனாலும் உதவிகள் செய்தான். அதேசமயம் ஊரார் அவன் தந்தையைப் பற்றி அவனிடம் நினைவுகூர்வார்கள்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:33 am


''உன் தந்தையைப் போல, ஒரு அயோக்கியனை நான் பார்த்ததில்லை. என் சொத்துக்கள் எல்லாம் போயிற்று அய்யா'' என்று பெரிதாய் குறைப்படுவோர் முன்பு கைகூப்பி நின்றான். தந்தையை மன்னித்து விடும்படி வேண்டினான். யாரிடம் தந்தையைப் பற்றி குறை கேட்டாலும் நின்று கவனித்து செவிமடுத்து, 'அய்யோ! என் தந்தை இவ்வளவு கெட்ட பெயர் வாங்கியிருக்கிறாரே’ என்று வேதனையோடு இருப்பது அவன் வழக்கமாகப் போயிற்று,

நதிகளில் நீராடுவதும், கோயிலுக்குப் போவதும், புண்ணிய காரியங்கள் செய்வதும் தன் தந்தைக்கு உதவி செய்யுமா என்ற எண்ணத்தோடே செய்தான்.

நாரதர் அவனை ஆசீர்வதித்தார்.

''உன் தந்தை நரகத்தில் மிகவும் வேதனைப் படுகிறார். சொல்லொண்ணா துயரம். எனக்கே மனம் கலங்கிப் போயிற்று. அந்த அழுகைக் குரலைக் கேட்டுத்தான் நான் அந்தப்பக்கம் போனேன். அது உன் தந்தையின் குரல் என்று தெரிந்தது. அவரை விசாரிக்காமலேயே அவருடைய வாழ்வு நிலைமையை, இப்போது இருக்கிற அவஸ்தையை நான் புரிந்து கொண்டேன்'' என்றார்.

''ஊராரின் பழிச் சொல்லே எனக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தது. இப்போது நீங்கள் வேறு வந்து என் தந்தை வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று சொல்லும்போது மனம் பதைக்கிறது. இதற்கு மாற்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். யார் மூலம் அவருக்கு விடியும் என்ற உபாயத்தை நீங்கள் சொல்ல வேண்டும். அவர் யாராக இருப்பினும் அவர் பாதம் பணிந்து வேண்டி அவருக்கு அடிமையாக வேலை செய்து என் தந்தையை நரகத்திலிருந்து மீட்பேன். தயவுசெய்து எனக்கு உதவுங்கள்'' என்று மண்டியிட்டு கெஞ்சிக் கேட்டுக்கொண்டான்.

நாரதர் மனம் கனிந்தார்.

''இது பெரிய விஷயமில்லை. நல்ல பிள்ளையாக நீ பிறந்திருக்கிறாய், நல்ல தாயால் வளர்க்கப்பட்டிருக்கிறாய். இந்த நல்ல குணமே உன் தந்தையைக் காப்பாற்றும். ஆனால், செய்த பாவங்கள் அதிகம் என்பதால், உடனடியாக நிவாரணம் பெற, திருக்குற்றால மலைக்குப் போய் அங்கே குற்றாலநாதரை சேவித்து உத்தராயன காலத்திலிருந்து ஆறு மாத காலம் வரை அந்தக் குற்றால அருவியில் தினந்தோறும் குளித்து, பூஜை செய்து, சிவனாரை வணங்கி உன் தந்தையின் பாவங்கள் போக வேண்டும் என்று வேண்டிக்கொள். ஆறாவது மாத முடிவில் கையில் நீர் எடுத்து, 'இந்த ஆறு மாதமும் நான் செய்த சிவபூஜை ஆடிய நீராட்டம் எல்லாம் என் தந்தைக்குப் போக வேண்டும்’ என்று மனமார நீர் வார்த்து தர்ப்பணம் செய்து விடு. அந்தப் புண்ணியம் உன் தந்தைக்குப் போனால் அந்த க்ஷணமே உன் தந்தை நரகத்திலிருந்து விடுபடுவார். இதைச் செய்; உனக்கு மேலும் புண்ணியம் கிடைக்கும்'' என்று சொல்ல, அவன் அவ்விதமே செய்து தன் தந்தையை துக்கத்திலிருந்து விடுவித்தான்.

இருக்கும்போது மட்டுமே நல்ல பிள்ளைகள் உதவுவதில்லை; இறந்த பிறகும் ஒருவருடைய ஆன்மா குணமடைய, அது நேர்வழியில் போக, அதற்கு நல்ல பிறப்பு கிடைக்க, நல்ல பிள்ளைகள் பெறவேண்டும். நல்ல பிள்ளைகள்தான் அந்த மாபெரும் உதவியையும் செய்ய முடியும். நல்ல பிள்ளை பெற்றவனுக்கு சூட்சுமமாக வழி சொல்லிக் கொடுத்து, தன் தந்தையை மீட்கிற உபாயத்தை சொல்லி, அந்த நல்ல பிள்ளைக்கு மேலும் பெருமை சேர்த்த நாரதருடைய மகிமை மிகப் பெரியது. பிறருக்கு உதவி செய்வதே வாழ்க்கை என்ற அந்தத் தன்மை மிக அரியது.

பூமியிலுள்ள எல்லோருக்கும் விதம் விதமாக புத்திமதி கூறி, பாடம் எடுத்து, பக்குவப்படுத்தி, அவர்களை நல்வழிப்படுத்தும் நாரதரின் மேன்மை, வைகுந்தவாசனான நாராயணருக்கும் எட்டியது.

தன்னுடைய பக்தன் எல்லா உலகிலும் சஞ்சரித்து நல்ல பெயர் வாங்குகிறான் என்பது சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியதாய் இருந்தது. நாரதரை மனத்தால் நினைக்க, அவர் இன்னமும் சில விஷயங்களில் தெளிவாகவில்லை என்று தெரிந்தது.

நாரதர், பூமியில் ஒரு கிராமத் தின் வழியே நடந்து போய்க் கொண்டிருக்க, அந்த இடத்தில் நாராயணர் தோன்றினார். நாரா யணனைக் கண்டதும், நாரதர் மகிழ்ச்சியில் ஆனந்தப் பரவசம் அடைந்தார். சுற்றிச் சுற்றி வந்தார். பலமுறை விழுந்து வணங்கினார். மனமுருகப் பாடினார். கை கூப்பினார்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:34 am


''நினைக்கிறபோது நேரில் வரும் தெய்வம் என்று உன்னைச் சொல்வார்கள். உன்னை நினைக்காத நேரம் இல்லை. ஆனால், உன்னை நான் இப்போது அழைக்கவில்லையே.,? அழைக்காதபோது வந்திருக்கிறாயே! அது என் பொருட்டா, உன் பொருட்டா?'' என்று பணிவாக வேண்டினார்.

''நன்றாகப் பாடம் நடத்துகிறாய்!''

''எல்லாம் உங்கள் அருள்.''

''விதம் விதமாக நீதிகளை நிலைநாட்டுவதில் உனக்கு ஆர்வம் அதிகம் இருக்கிறது. அதைச் சுத்தமாகச் செய்கிறாய்.''

''உங்கள் பாராட்டுக்கு நன்றி. உங்கள் ஆசி இல்லாது நான் இயங்க முடியுமா?''

''ஆனால், சொல்லிக் கொடுப்பவருக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.''

''அதுதானே பார்த்தேன். வெறுமே கையில் கத்தியை வைத்திருக்கிறீர்களே... இன்னும் என் இடுப்பில் சொருகவில்லையே என்று. சொருகிவிட்டீர்கள். நல்லது. நான் பாடம் நடத்துவது உண்மைதான்; சொல்லிக்கொடுத்ததும் வாஸ்தவம்தான். எனக்கு என்ன தெரியவில்லை என்பதுதான் தெரியவில்லை.''

''அப்படியானால், உனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்று நினைக்கிறாயா?''

''அப்படிச் சொல்லவில்லை. எனக்கு என்ன தெரியாது என்பது தெரியாது என்று

சொல்கிறேன். எனக்கு எல்லாம் தெரியும் என்பதற்கும், எது தெரியாது என்று நிற்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?''

''மிகுந்த அடக்கம் உள்ளவன் நீ!''

''உங்கள் கருணை. தொடர்ந்து ஏதாவது கேள்வி கேட்கவேண்டும் என்றால் தாராளமாகக் கேட்கலாம்'' என்றவர் தொடர்ந்து,

''வந்து வசமாகச் சிக்கிக்கொண்டேன். என்னை வறுத்து எடுப்பதற்கென்றே வந்து விட்டீர்கள். எங்கோ பிழை செய்திருக்கிறேன். அல்லது, எல்லோருக்கும் உதவி செய்கிறேன் என்று கர்வப்பட்டிருக்கிறேன். அந்தக் கர்வத்தை சுத்தமாகத் துடைத்து எடுக்க வேண்டும். நான் தயார்!'' எனப் புலம்ப... நாராயணன் சிரித்தார்.

நாரதர் தொடர்ந்தார்... ''எனக்குள் சில ஐயங்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். கேள்விகள் இருக்கின்றன; பதில்கள் தெரியாது என்ற நிலை எனக்கு இருக்கிறது. உண்மைதான். என்னிடம் உள்ள முதல் கேள்வி இது... கேட்கலாமா?''

''கேள் நாரதா, உனக்கு பதில் சொல்லாமல் யாருக்குச் சொல்லப் போகிறேன்?''

''மாயை என்றால் என்ன? எது மாயை? என் எதிரே நீங்கள் இருக்கிறீர்கள். நினைத்தவுடன் வருகிறீர்கள். உங்கள் எதிரே நான் நிற்கிறேன். எனக்கும் உங்களுக்கும் ஒரு சம்வாதம் நடந்து கொண்டிருக்கிறது. நீங்களும் தெளிவாக இருக்கிறீர்கள்: நானும் தெளிவாக இருக்கிறேன்.

இதோ, நாம் பார்க்கிற ஊரும் தெளிவாக இருக்கிறது. பூமி தெளிவாக இருக்கிறது. வானம் தெளிவாக இருக்கிறது. தேவர்கள் எல்லோரும் அவரவர் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் எல்லோரும் சௌக்கியமாக, நல்லபடி வாழ்கிறார்கள். நல்லபடி வாழாதவர்கள் தண்டனை பெற்றுத் திருந்துகிறார்கள். எல்லாம் ஒரு நியதியாய், அழகாய்த்தானே நடந்துகொண்டிருக்கிறது!

இங்கே மாயை என்பது என்ன? எனக்குப் புரியவில்லையே! இங்கு நடப்பதைத் தாண்டி, வேறு ஒரு மயக்கம், அல்லது ஒரு மாயை ஒருவருக்கு எப்படி ஏற்படும்?''




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:34 am


''நல்ல கேள்வி. இந்தக் கேள்வியின் ஜீவ ரசத்தை யார் புரிந்துகொள்வார்களோ, அவர்கள் மிகுந்த புத்திமான்களாகவும் கல்விமான்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்ட அற்புதமான கேள்வியை என்னிடம் கேட்டிருக்கிறாய். வா, கொஞ்சம் நடப்போம், பதில் சொல்கிறேன்'' என்று நாராயணர் சொல்ல, இருவரும் நடந்தார்கள்.

எதிரே பல பெண்கள் குடத்து நீரை வைத்துக்கொண்டு வந்தார்கள். பெண்கள் கூட்டமாக வந்ததால் நாரதரும் நாராயணரும் சற்று ஒதுக்கமாக நின்றுகொண்டார்கள். இரண்டு ஆண்கள் நிற்பதைப் பார்த்து, அந்தப் பெண்கள் தலைகுனிந்தபடியும் ஓரக் கண்ணால் பார்த்தபடியும் நடந்தார்கள். அவர்களில் கடைசியாக ஒரு பெண், கை வீசி ஒயிலாக நடந்தாள். அவள் நாரதரைப் பார்த்து, 'அட, அழகாக இருக்கிறாரே’ எனச் சற்று நிதானித்து, நடந்தாள்.

அவளது அபரிமிதமான அழகும், அங்க லாவண்யங்களும், பெரிய கண்களும், உதடுகளும், முத்து வரிசைப் பற்களும், தண்ணீரைச் சுமந்து போகிற லாகவமும் நாரதரைக் கிறங்கடித்தன.

''அடேயப்பா, இந்தக் கிராமத் தில் இப்படி ஒரு பெண்ணா! தேவலோகத்துப் பெண்களுக்கு ஈடாக இருக்கிறாளே!'' என்று நாரதர் நினைத்தார். அவளைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டார். திரும்பி நாராயணரைப் பார்த்தார்.

''அடேய், உனக்கில்லாத பெண்ணா? போய்க் கேள்!'' என்று சொல்ல, நாரதர் நாராயணரை மறந்தார். உடனே அவளைப் பின்தொடர்ந்து, அவள் வீட்டுக்கே போய், தான் யார் என்று சொன்னார். அந்த வீட்டார் அவருக்குத் தங்கள் பெண்ணை மகிழ்ச்சியோடு திருமணம் செய்து கொடுக்க முன்வந்தார்கள். அந்தப் பெண்ணும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள்.

அன்று மாலையே அவர்களின் திருமணம் நடந்தது. அவர்களுக்கென்று ஒரு வீடு ஒதுக்கப்பட்டது. அவர் இனிமையாகப் பாடுவதைக் கேட்டு, பலர் அவருக்குப் பரிசளித்தார்கள். நாரதர் நாராயணரைப் பாடி, வீணை மீட்டி நிறையச் சன்மானங்கள் பெற்றார். நிறையப் பொருள்கள் வாங்கி, வீட்டை நிரப்பினார். மனைவிக்கு நல்ல உடைகளும் நகைகளும் வாங்கிக் கொடுத்தார். நன்கு சாப்பிட்டார். இரவும் பகலும் மனைவியோடு கூடிக் களித்தார். குழந்தைகள் பெற்றார்.

அவர்களுக்கு மொத்தம் பதினாறு குழந்தைகள் பிறந்தன. ஒவ்வொன்றும் மணி மணியாய் இருந்தன. அற்புதமாகப் பாடின; பேசின. அவர்கள் குடும்பமாக ஓரிடத்தில் அமர்ந்து நாராயணனை நோக்கிப் பாடுகிறபோது, ஊர் அசந்தது. ''என்ன அற்புதமான குடும்பமடா இது!'' என வியந்தது. தம்பூர் ஸ்ருதியை மனைவி மீட்ட, குரலெடுத்து நாரதர் பாட, மற்ற குழந்தைகளும் கோரஸ் சேர்ந்துகொள்ள, 'கந்தர்வ கானம்... கந்தர்வ கானம்’ என்று ஊரே சிலாகித்தது.

நாரதரின் நாராயண கானம், உலகமெங்கும் பரவியது. பல தேசத்து அரசர்கள் அவரை விரும்பினார்கள். அவரைத் தங்கள் அவையில் வந்து பாடச் சொன்னார்கள். நாரதர் ராஜ்ஜியம் ராஜ்ஜியமாகப் பயணப்பட்டுக்கொண்டே இருந்தார். மனைவியோடும் குழந்தைகளோடும் வந்த அவரை அரசர்கள் வரவேற்றார்கள். கும்ப மரியாதை செய்தார்கள். ரத்தின ஆடை போர்த்தினார்கள். கிரீடம் வைத்தார்கள். பாதங்களுக்குச் சலங்கை போட்டார்கள். கையில் தங்கக் காப்பு கட்டினார்கள். மனைவிக்கு ஆரம் கொடுத்தார்கள். எல்லாக் குழந்தைகளுக்கும் தங்கச் சங்கிலி அணிவித்தார்கள். மிகப் பெரிய பெருமையெல்லாம் நாரதரை வந்து சேர்ந்தது.

ஒருநாள்... இடி இடித்தது. மழை பெய்தது. நாரதர் தன் மாளிகையின் வாசலைத் தாழ் போட்டுக்கொண்டு, எங்கும் வெளியில் போக வேண்டாம் என்று தீர்மானித்தார். மழை அதிகமாயிற்று. தெரு முழுவதையும் மழைநீர் வளைத்துக் கொண்டது. ஊர் முழுவதையும் வளைத்துக் கொண்டது. கடல் பொங்கி உள்ளே நுழைந்துவிட்டது என்று கூக்குரலிட்டார்கள். ஆறு பிரவாகம் கொண்டது. திசை திரும்பியது. மழை அதிகரித்தது. ஆற்று வெள்ளம் நாலாப் பக்கமும் பாய்ந்தது. குடிசைகளை அடித்துக்கொண்டு போயிற்று. வீடுகளை, மாட, மாளிகைகளை வேகமாக முட்டிற்று.

நாரதர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். பெரிய படகு தயார் செய்தார். அதில் குழந்தைகளை ஏற்றிக் கொண்டார். மிக பத்திரமாக கரை ஏற்றுகிறேன் என்று தைரியம் கொடுத்து, குழந்தைகளை அமைதியாக இருக்கச் சொல்லி, மனைவியைத் துடுப்பு போடச் சொல்லி, கோல் கொண்டு மெள்ள ஊன்றி ஊரைக் கடந்தார். மழை இன்னும் வலுத்தது. வெள்ளம் படகைத் தள்ளிக்கொண்டு போய் சமுத்திரத்தில் தள்ளியது. சமுத்திரத்தின் பெரிய அலைகள் தூக்கித் தூக்கிப் போட்டன. பல குழந்தைகள் வெளியே விழுந்தன. நாரதர் கதறினார். ''அய்யோ... என் குழந்தை!'' என்று அலறினார்.

''மிக அழகாகப் பாடுவாளே, அதோ போய்க் கொண்டிருக்கிறாளே! காப்பாற்ற யாரும் இல்லையா?'' என்று கண்ணீர் விட்டார்.அத்தனைக் குழந்தைகளும் தத்தளித்து நீரில் விழுந்து, ஒவ்வொன்றாய் மடிந்தன. ஒரு கட்டத்தில் படகின் பலகை எகிறி மனைவியின் தலையில் அடிக்க, அவள் அதே இடத்தில் பிணமானாள். உருண்டு நீரில் விழுந்தாள். நாரதர் மட்டும் படகில் தவித்துக் கிடந்தார்.

''எல்லாம் போயிற்று! எல்லாம் போயிற்று!'' என்று அழுதார். சட்டென திடுக்கிட்டாற்போல் விழித்துக்கொண்டார்.

''என்ன போயிற்று? அவர்கள் போய் நாழியாயிற்று. என்னவோ போயிற்று போயிற்று என்றீர்களே... எது போயிற்று? தண்ணீர்தானே? வேண்டுமா, மறுபடி வரச் சொல்லவா?'' என்று நாராயணர் கேட்க, நாரதர் தடாலென அவர் காலில் விழுந்தார்.

''வேண்டாம். மறுபடியும் வரச்சொல்ல வேண்டாம். தண்ணீர் எடுத்தவர்கள் நடந்து போன இடத்தின் காலடித் தடம் காய்வதற்குள் நான் ஒரு வாழ்க்கை வாழ்ந்துவிட்டேன்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:34 am


காலம் என்பது நம் மூளைக்குள் இருக்கிறது.

காலம் என்பது விதம் விதமான உயிர்களுக்கு விதம் விதமாக இருக்கிறது. ஒரு புழு, தான் நூறு ஆண்டுகள் வாழ்ந்ததாக நினைத்துக் கொள்ளலாம். ஒரு யானை, தான் ஆயிரம் வருடங்கள் வாழ்வதாக நினைத்துக்கொள்ளலாம். ஒரு மனிதன் தனது ஆயுள் இத்தனை என்று எண்ணிக் கொள்ளலாம். உண்மையில் காலம் என்ன என்பது நமக்குத் தெரியவில்லை.

சில நொடிகளில் நான் பெரிய வயது வரை வாழ்ந்துவிட்டேன். விதம் விதமான அனுபவங் களைப் பெற்றுவிட்டேன். ஒரு பெண்ணை மோகித்த அந்த க்ஷணம், அந்தப் பெண்ணோடு என் வாழ்க்கை நடந்து விட்டது. எதை வேகமாக மோகிக்கிறோமோ அதுவே நம்முடைய வாழ்க்கையாகிறது. அதை அடை வதே நம்முடைய தவிப்பாகிறது. அந்தத் தவிப்பே காலத்தால் கோக்கப்பட்டு நம்முடைய வாழ்க்கையாகிறது.

எதிலும் மோகப்படாமல் இருப்பதல்லவா வாழ்க்கை? எந்தக் காலத்திலும் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதல்லவா வாழ்க்கை? தேவர்களுக்குக் கிடைத்த இந்த லட்சணம் எனக்குக் கிடைத்தது. இருப்பினும், நடுவே விட்டுவிட்டேன். சில கணங்கள் என்னை மறந்துவிட்டேன்.

இதுதான் மாயை. மிகச் சிறந்த புத்திமானை யும், கல்விமானையும், தேவனையும், எல்லாம் தெரிந்தவனையும் கவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிற மிகப் பெரிய விஷயம் இந்த மாயை. இந்த மாயையில் சிக்காதவன், நாராயணா, நீ மட்டும்தான்! உன் காலடியைப் பற்றிக்கொண்டால்தான் மாயையில் சிக்காமல் இருக்கமுடியும். எந்த ஆசையும் எனக்குள் ஏற்படாது, எந்தக் கவலையும் என்னைத் தீண்டாது, எந்த மாயையிலும் நான் சிக்காது இருக்க நாராயணா, நாராயணா..! என்னைக் காப்பாற்றுவாய்'' என்று கதறி, கண்ணீர் விடுத்து, நாராயணரின் பாதங்களைப் பிடித்துக் கொண்டார்.

நாராயணர் நாரதரை நிமிர்த்தினார்.

''நீ சிரஞ்ஜீவி! நீ சொல்கிற அத்தனை வார்த்தைகளும் சிரஞ்ஜீவித்தனம் உடையவை! சொல். எது மாயை என்று யாருக்கு தேவையோ அவர்களுக்குச் சொல். யார் புரிந்துகொள்ள முடியுமோ, புரிந்து கொள்ளட்டும்.

காலம் என்பது என்ன என்று எவர் கேள்வி கேட்டாலும், அவர்களுக்கு இந்தக் கதையைச் சொல். வாழ்க்கை என்பது என்ன என்று எவர் கேட்டாலும், அது நொடி நேரத்தில் முடிவது என்று அவர்களுக்குச் சொல். நமக்குள் இருக்கிற காலம், நாம் போட்டுக் கொள்கின்ற காலம், நம்மை நாமே சிறைப்படுத்திக் கொள்கின்ற காலம் வேறு; உண்மைக் காலம் வேறு என்பதை உலகத்தோர் புரிந்துகொள்ளட்டும்.

நாரதா, சொல்..! சகலருக்கும் சொல், உன்னுடைய பாடம் பூர்த்தியாயிற்று. நீ மகா ஞானி, நீ மகா ஞானி!'' என்று நாராயணர் நாரதரைத் தழுவிக்கொண்டார்.

நாரதரின் இந்த அனுபவம் மிகவும் சூட்சுமமான விஷயம்.

வரம் வேண்டித்தான் உலகில் பல மக்கள் தவம் செய்கிறார்கள். எல்லோருக் கும் ஏதேனும் தேவையாக இருக்கிறது. அந்தத் தேவையை தெய்வத்திடம் இருந்து பெறுவதற்காகக் கடுமையாக நோன்பு இருக்கிறார்கள். இன்னது கொடு என்று கேட்டுப் பெறுகிறார்கள். அப்படித் தவம் செய்பவர்களைக் கண்டு, நோன்பு நோற்கிறவர்களைக் கண்டு, அவற்றைச் செய்ய இயலாத மற்றவர்கள் வியப்போடு பார்க்கிறார்கள்; செய்தவர்களைப் போற்றுகிறார்கள்.

''நீ சம்பாதித்த புண்ணியத்தில் கொஞ்சம் கொடு'' என்று கையேந்துகிறார்கள்.

''உனக்குக் கால் பிடித்துவிட்டால் அந்தப் புண்ணியம் எனக்கு வராதா?'' என்று, தவம் செய்தவனுக்குக் கால் பிடித்து விடுகிறார்கள்; விசிறுகிறார்கள்; நீர் கொடுக்கிறார்கள்; அவருக் காகப் படுக்கை சுமக்கிறார்கள்; உணவு சமைத்து வருகிறார்கள்; அவரைப் போற்றிப் பாதுகாக்கிறார்கள். ''என்னால் தவம் செய்ய இயலாது. என்னால் நோன்பு நோற்க இயலாது. ஆனால், நீங்கள் செய்து ஜெயித்திருக்கிறீர்கள். உங்களுக்கு உதவி செய்வதன் மூலம் ஏதோ கடுகளவு, எறும்பளவு சில துணுக்குகள் எனக்கும் கிடைக்கட் டும்'' என்கிறார்கள்.

ஆனால், எந்த வரமும் வேண்டாது, யாராவது தவம் செய்வார்களா? நாரதருக்கு இப்படி ஒரு நினைப்பு சட்டென்று உள்ளுக்குள் தோன்றியது. இருக்கலாம்; செய்வார்கள் என்ற நினைப்பும்

இருந்தது. யார் செய்கிறார்கள்? அவர் மனத் தால் சகல பக்கமும் பார்க்க, ஓரிடத்தில் ஒளி தோன்றியது.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:35 am


ஒரு மலையின் ஓரத்தில், நதிக்கரையில், பர்ணசாலை அமைத்து, முனிவர் ஒருவர் தவம் செய்து வருவதைத் தெரிந்துகொண்டார். அவர் ஜைகிஷவ்ய முனிவர். அவருடைய தேஜஸ் மிகப் பிரகாசமாக இருந்தது. அருகே போவதற்குத் தீய சக்திகள் பயந்தன. நல்ல சக்திகளும் பணிவுடன் நெருங்கின. அவருடைய தவம் வெகுநாள் அமைதியாக, எந்த ஆரவாரமும் இன்றி வளர்ந்துகொண்டிருந்தது. தேவர்கள் கவலைப்பட்டார்கள். இவ்வளவு உக்கிரமாக, இத்தனை நெடுநாள் அசையாது தவம் செய்ய முடியும் என்றால், அவரால் தேவலோகப் பதவியையும் கேட்டுப் பெற முடியும். 'நான் இந்திரப் பதவிக்கு வரவேண்டும்’ என்று அவர் கேட்டால், நிச்சயம் கிடைக்கும். படைப்புத் தொழிலை பிரம்மா நிறுத்திக் கொள்ளட்டும் என்று ஆணையிட்டால், பிரம்மா நிறுத்திக்கொள்ள வேண்டியதுதான். அவ்வளவு தவ வலிமை பெற்றவராக அவர் விளங்குகிறார். எல்லாம் வல்ல சிவபெருமான் மனம் இரங்கி, அவருக்குச் சகல வரங்களையும் கொடுத்துவிட்டால், அதன்பின் இங்கே உள்ள தேவர்கள் எல்லோரும் எந்தவித அர்த்தமும்

இல்லாத வாழ்க்கையைத்தான் வாழ வேண்டி யிருக்கும். ஒரு மானுடன் வெகு எளிதில் தேவர் களை ஜெயித்துவிட முடியும் என்பதற்கு உதாரணமாக இந்த முனிவர் இருப்பார். என்ன செய்வது என்று கவலைப்பட்டார்கள். அந்தக் கவலையும் நாரதருக்குத் தெரிந்தது.

எதைக் குறித்து இந்த முனிவர் இவ்வளவு கடுமையான தவம் இருக்கிறார் என்று புரியவில்லை. மனம் ஒருமுகப்பட்டு விட்டது. ஒருமுகப்பட்டு ஒரு புள்ளியில் அமர்ந்த மனம், சிவனை முற்றிலுமாக எடுத்துக் கொண்டு விட்டது. சிவனை அசைக்க முடியாதபடி உள்ளே இறுக்கமாக பதிய வைத்து, அந்த சிவனோடே தான் இருக்கும்படியான ஒரு நிலைமை வந்துவிட்டது.

உள்ளே சிவன் வந்த பிறகு, அவரிடம் ஏதேனும் கேட்கலாம் அல்லவா? தவத்தை முடித்துக்கொள்ளலாம் அல்லவா? எதுவும் கேட்காமல், தொடர்ந்து சிவபூஜை செய்து கொண்டிருக்கிறார் இவர். ஏன்?

நாரதர் அங்கு போய் இறங்கினார். ஆஸ்ரமத்தை வலம் வந்தார். இனிய கீதங்கள் பாடினார். உள்ளுக்குள் நுழைந்தார். விழுந்து வணங்கினார். ''உட்காரட்டுமா?'' என்று அனுமதி கேட்டார். முனிவர் ஜாடை காட்ட, எதிரே உள்ள திண்ணையில் அமர்ந்தார். ஒருவரை ஒருவர் தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டார்கள். சிவ முனியின் ஒளி நாரதரை நடுங்க வைத்தது. அவருடைய பார்வையின் கனிமை அவரில் நாராயணரைக் காட்டியது. எத்தனை பாடினாலும், இந்த அழகான ஒரு தெய்வீக நிலை தனக்கு வருமா என்பது சந்தே கமே என்று எண்ணி, நாரதர் மனம் நொந்தார்.

''எவ்வளவு கடுமையாக தவம் செய்கிறீர்கள்! மனத்துக்குள் உறுதியாக சிவனைப் பிடித்த பிறகும் வேறு எதுவும் கேட்காமல், அமைதி யாக சிவனோடேயே இருக்கிறீர்கள். உள்ளுக் குள்ளேயே போற்றிப் பாதுகாத்து வருகிறீர்கள். ஏன் அவரை உங்கள் எதிரே தோன்றச் செய்யாமல், உள்ளுக்குள்ளேயே இரு என்று கட்டளையிட்டிருக்கிறீர்கள்?'' என்று நாரதர் கேட்க, முனிவர் சிரித்தார்.

''உங்களுக்கும் பயம் வந்துவிட்டதா? தேவர்களும் பிரம்மாவும் என்னைப் பற்றிக் கவலை கொள்கிறார்கள் என்று தெரிய வந்ததும் எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. எனக்கு எதற்கு இந்திர பதவி? எனக்கு எதற்கு படைப்புத் தொழில்? எனக்கு எதற்கு வேறு பதவியும் உலகமும்? நான் இருக்கிற இடத்தில், சிவனோடு இருக்கிறேன். இதைவிட உயர்ந்த நிலை உண்டா? நான் எது குறித்தும் தவம் செய்யவில்லை. இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்கவில்லை. என் இயல்பு தவம் செய்தல். என் இயல்பு சிவனோடு இருத்தல். இதை நான் சாதாரணமாகத்தான் செய்கிறேன். வேறு நோக்கம் எதுவும் இல்லை, நாரதரே!'' என்று முனிவர் சொல்ல, நாரதர் நிம்மதியானார். மறுபடியும் பாடல்கள் பாடி அவரை மகிழ்வித்துவிட்டு, ஆஸ்ரமத்தை வலம் வந்து, நீண்ட நெடுஞ்சாண்கிடையாக வணங்கி, சிவன் உறையும் இமயமலைச் சாரலுக்குப் போனார்.

கயிலாசநாதரை வணங்கினார். ''எவ்வளவு அற்புதமான மனிதர்! உங்களை வணங்குவது இயல்பு என்கிறார். உங்களிடம் எதுவும் கேட்காது அமைதியாக உங்களையே மனத்துக்குள் ஸ்வீகரித்துக்கொண்டிருப்பது இயல்பு என்கிறார். இப்படிப்பட்டவருக்கு நீங்கள் ஏதேனும் செய்ய வேண்டாமா?'' என்று சிவபெருமானைக் கேட்க,

''கேட்டால் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். என்ன கேட்பார் என்று அறிய ஆவலாக இருக்கிறோம். ஆனால், அவர் எதுவும் கேட்கவில்லையே? நாமாகப் போய் அவரைத் தொந்தரவு செய்யலாகாது என்பதில் திடமாக இருக்கிறோம்'' என்றார் சிவனார்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக