புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_c10 
306 Posts - 42%
heezulia
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_c10 
6 Posts - 1%
prajai
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_c10 
4 Posts - 1%
manikavi
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாரதர் கதைகள் - எழுத்துச் சித்தர் பாலகுமாரன்


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:04 am

First topic message reminder :

நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 F3tDCalRRLCZg0Uw3j11+p14bநாரதர் கதைகள் வெறும் நகைச்சுவைக்காக எழுதப்பட்டவை அல்ல. எதனால், நாடகத்தில் நாரதர் கோமாளியானார் என்பது எனக்குப் புரியவில்லை. நாரதரது சரித்திரத்தைப் படிக்கும்போது அவர் மிகக் கூர்மையானவராக, மிகச் சிறந்த குணவானாக, மிக அமைதியானவராக, மிகுந்த ஒழுக்கச்சீலராக, தத்துவ விசாரம் உள்ளவராக, ஸ்ரீமந் நாராயணனையே சரணடைந்தவராக, சரணாகதிக்கு உதாரணமாகத் திகழ்ந்திருப்பதை உணர முடிகிறது. எதனாலோ மேடைகளில் அவர் கோணங்கியாகிவிட்டார்.

ஒரு விஷயத்தை ஒருவரிடமிருந்து பிடுங்கி இன்னொருவர் முன் வைத்து, இது சரியா என்று பார்க்கச் சொல்லி, 'இல்லை’ என்று அவரைச் சொல்ல வைத்து, இரண்டு பேருக்கும் இடையே கலகத்தை மூட்டுவதால் அவர் கோமாளியாகிவிட்டாரோ என்று தோன்றுகிறது. ஆனால், அது கலகமல்ல. 'இதுதான் சரி’ என்று ஒரு குழுவினரும், 'இல்லை, இதுவே சரி’ என்று இன்னொரு குழுவினரும் வாழ்ந்து வரும்போது, 'எது உண்மையில் சரி?’ என்று கேள்வி எழுப்புவது எப்படிக் கலகமாகும்? அது உண்மையை நோக்கிய பயணம். சத்தியத்தை நோக்கிய சாதனை. எனவே, 'நாராயண... நாராயண...’ என்று சொல்லிக்கொண்டே அவர் மேடையில் நுழைந்தால், அத்தனை பேருக்கும் சிரிப்பாகிவிடுகிறது. அப்படிச் சிரிக்கிறார்கள் என்று தெரிந்ததாலேயே அந்த நடிகர், அந்த 'நாராயண... நாராயண’ என்பதை மிகச் சரியான ஒரு நேரத்தில், மிகக் கேலியான ஒரு குரலில் வெளிப்படுத்துகிறார் என்றும் தோன்றுகிறது. உண்மையில் அந்த 'நாராயண... நாராயண’ என்ற சப்தம் வியப்பின்பால் வருவது என்பதாகவே நான் உணர்கிறேன்.

'அடடே! இதுவா உண்மை! அப்ப, இதுவா உண்மை’ என்று பல திசைகளிலும் தன் பார்வையைச் செலுத்தி, உண்மை எதுவெனக் கண்டுபிடிப்பதே அவருடைய தன்மையாக இருக்கிறது. தான் மட்டும் அறிந்த உண்மையை தனக்குள்ளே பொதித்துக் கொள்ளாது, தன் சரிதமாக அவர் வெளியிடுகிறார். தன் வாழ்க்கை யின் நோக்கமாகவும் அதைக் கொண்டுவிடுகிறார். எனவே, ஓர் உன்னத புருஷனுடைய வாழ்க்கையாகத்தான் நாரதருடைய கதைகளை நான் கவனிக்கிறேன்.

நாடகக் கொட்டகைக்குள் மக்கள் ஆணி அடித்ததுபோல் திகைப்பாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் அவர்களைத் தளரவிடுவது நல்லது என்று ஆலோசித்து, நாடகக்காரர்கள் யாரை அனுப்புவது என்று யோசித்து, நாரதரை அனுப்புவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அந்த உச்சிக் கொண்டையும், காவி உடையும், பூணூலும், மார்பிலே தொங்குகிற வீணையுமாக அவர் உள்ளே நுழைய, கைதட்டல் ஆரவாரம் பொங்குகிறது. 'அப்பாடா, இனி அடுத்த பத்து நிமிடமும் நல்ல நகைச்சுவையாகப் போகும்’ என்று மக்கள் நினைக்கிறார்கள். அதை விரும்பவும் செய்கிறார்கள். நாடகக் காரர்களுக்கும் தங்களுடைய சாதனை பற்றிச் சந்தோஷம். பல நாடகங்களில் நாரதர் தம்பூரா வைத்துக்கொண்டு வருவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், நாரதரிடம் இருப்பது தம்பூரா அல்ல; அது மஹதி என்கிற வீணை. கந்தர்வ லோகத்து சமாசாரம்.

நாரதர் யார்? சப்த ரூபம். எது சப்தம்? உலகத்தில் ஏற்படுகிற எல்லா அசைவுகளும் சப்தத்தை உண்டு பண்ணுகின்றன. அந்த சப்தங்களில் உன்னதமானது எது? இசை. அந்த இசையில் உன்னதமானது எது? வீணை இசையே என்று சொல்லப்பட்டிருக்கிறது. சப்தத்தினுடைய இன்னொரு வடிவம் என்ன என்று யோசித்தால், பேச்சு. பேச்சின் உன்னதம் கவிதை. கவிதையின் இன்னொரு வடிவம் விவாதம். நாரதர் எல்லா இடங்களிலும் விவாதம் பேசி, மக்களுடைய திசையைத் திருப்பி, நல்லது நோக்கிப் பயணிக்கச் செய்கிறார்.

இங்கே எவர் கர்வம் கொண்டு அலைகிறாரோ, எங்கே ஆணவம் தலைவிரித்து ஆடுகிறதோ, இந்தப் பிரபஞ்சத்தில் எங்கே வீராவேசம் பேசப்படுகிறதோ, அங்கெல்லாம் நாரதர் போய் சமனம் செய்கின்ற பணியிலே தாமாக ஈடுபடுகிறார். இதற்கு, நாரதர் பாட்டுப் பாடவில்லை; கவிதை சொல்லவில்லை. மாறாக, பேச்சுகளில் இறங்குகிறார். 'என்ன இது?’ என்ற கேள்விதான் நாரதருடைய அடிப்படையான விஷயம். உண்மையை அறியும்பொருட்டு 'என்ன இது?’ என்று எவர் கேள்வி கேட்டாலும், அவர் நாரதருடைய தன்மையைக் கொள்கிறார். அப்படிக் கேட்கும்போது உள்ளுக்குள்ளே கலவரம் ஏற்படத்தான் செய்கிறது. அந்தக் கலவரம்தான் நல்ல விஷயத்தை வெளிக்கொண்டு வருகிறது. எது குழம்புகிறதோ, அதுவே தெளியும். எது கடையப்படுகிறதோ, அதிலிருந்தே அமிர்தம். எனவே, நாரதர் ஏற்படுத்துகிற கலவரம், அதாவது கடையல், நன்மையைக் கொண்டு வந்து சேர்க்கிறது; அமுதத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறது.

பிரம்மா- படைப்புத் தொழில். ஓர் உயிரின் ஆரம்பம்; ஓர் உருவத்தின் தொடக்கம். சிவன் அழிக்கும் தொழில். ஒரு முடிவின் ஆரம்பம்; ஒரு வாழ்க்கையின் முடிவு! எது வளர்ச்சி? விஷ்ணுவே வளர்ச்சி. வளர்வது என்பது விஷ்ணுவாகவும், படைப்பது என்பது பிரம்மாவாகவும், முடிவது என்பது சிவமாகவும் மூன்று வித சக்திகளுக்கு உருவங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதுதான் சநாதன தர்மத்தின் அடிப்படை விதி.

ஆக, விவகாரங்கள் எல்லாம் வளர் வது பற்றித்தான் இருக்கின்றன. எது வாழ்க்கை என்பதைப் பற்றித்தான் இருக்கின்றன. அதைப் பற்றித் தவறாகக் கூறப்படும்போது, அது பற்றி மோசமாக பிரசாரம் செய்யப்படுகிறபோது, அது பற்றிய ஞானமில்லாமல் பேசப் படுகிறபோது, அவற்றை உடைத்து உண்மையை நிலைநாட்டுவதற்கு நல்லவர்கள் இடைவிடாது முயன்று கொண்டிருக்கிறார்கள். அந்த முயற்சியின் ஒரு வடிவம்தான் நாரதர்.

நாரதர் என்பவர் படைப்புத் தொழிலோடும் சம்பந்தப்படவில்லை; ஒரு வாழ்க்கையின் முடிவோடும் சம்பந்தப்படவில்லை. அவர் வளர்ச்சி மீதே அக்கறை காட்டுகிறார். எது வளர்கிறதோ, அந்த வளர்ச்சியை நோக்கிச் சரணடைந்து, எது வளர்கிறது, எப்படி வளர்கிறது என்று ஆராய்ச்சி செய்கிறார். எனவே, விஷ்ணுவின் பக்தராக, ஸ்ரீமந் நாராயணரைச் சரணாகதி அடைந்தவராக நாரதர் உருக்காட்டப்படுகிறார்.

படைப்புத் தொழிலைப் பற்றி விமர்சனம் இல்லை; முடிவு பற்றிய விமர்சனம் இல்லை. எது வளர்கிறதோ அதைப் பற்றி மட்டுமே விமர்சனம். அந்த விமர்சன சக்திதான், அந்த விமர்சன ரூபம்தான், எழுப்பப்படுகிற கேள்வி என்கிற மகோன்னதமான ஒரு மாறுதல்தான் நாரதர். இந்த விமர்சனம் இல்லாவிட்டால் வளர்ச்சி இல்லை. அல்லது, வளர்ச்சி கோணலாகப் போகும். ஆட்டு மந்தைகள் போல முன்னால் போவதன் பின்னாலேயே போகாமல், 'இது என்ன?’ என்று கேள்வி கேட்கும் நம் விமர்சன சக்தியே, நம்முடைய கேள்வி கேட்கும் திறனே நம்முள் தெளிவை உண்டாக்கும். அப்படித் தெளிந்து நடக்கிற பயணமே வாழ்க்கை. அப்படிப்பட்ட வாழ்க்கையே நாரதர் வகுத்த வழி! இந்தக் கேள்வி கேட்டலே நாரத சக்தி. இந்த விஷயம்தான் விதம் விதமான கதைகளாக்கப்பட்டிருக்கிறது.

நல்லவன், கெட்டவன் என்று பிரித்து, நல்லவனுடைய விளக்கத்தையும் கேட்டு, கெட்டவனுடைய விளக்கத்தையும் கேட்டு, எது சரியான வழி என்று தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது. எனவே, இங்கு கெக்கலித்துச் சிரிப்பதற்கு எதுவும் இல்லை. மாறாக, கூர்த்த புத்தியும், விமர்சன புத்தியும் உள்ளவர்களுக்கே நாரதர் கதை புரியும்.

வழக்கம் போலல்லாது, பாலகுமாரன் மிக வித்தியாசமான ஒரு நகைச்சுவைக் கதையைச் சொல்ல ஆரம்பித்துவிட்டான் என்று நீங்கள் நினைத்துக்கொள்வீராயின் அது மிகப் பெரிய தவறு. முன்னைவிட இந்த நாரதர் கதைகள் மிகக் கூர்மையாகவும் கனமாகவும் இருக்கும்.

இந்தப் பிரபஞ்சம் பூமியை மட்டும் கொண்டதல்ல; வெவ்வேறு வடிவான உருவங்கள் வாழ்கிற பல்வேறு உலகங்கள் இருக்கின்றன என்பது சநாதன தர்மத்தின் கருத்து. மிகச் சமீபமாக, பூமியில் ஒரு பெரிய நட்சத்திரக் கல் வந்து விழுந்தபோது, அதை இடைமறித்து ஒரு விண்கலம் தாக்கிச் சிதறடித்து, பூமிக்கு அப்பால் அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. அதாவது, பல்வேறு உலகக் கதைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

அப்படிப்பட்ட உலகங்களில் ஒன்று கந்தர்வ உலகம். எந்த மாதிரியான ஆன்மாக்கள் கந்தர்வ உலகத்தில் ஜீவிக்கின்றன? இசையை பக்தியின் வெளிப்பாடாக, குழல், யாழ் போன்றவற்றை நன்கு பயின்று மீட்டி, அதன் மூலம் இந்தப் பிரபஞ்ச சக்தியை, இறைவனை வணங்குகிற ஆன்மாக்கள் அங்கு வாழ்கின்றன என்று சொல்லப்படுகிறது. அதாவது, புனிதப்பட்ட ஆன்மாக்கள் பசி, தூக்கமில்லாது, வேறு உடல் உபாதைகள் இல்லாது, சங்கீதமே வாழ்வாகக் கொண்டு கந்தர்வ உலகத்தில் வாழ்கின்றன. ஆனால் மன மயக்கங்கள், மதி சறுக்கல்கள் அங்கேயும் உண்டு.

உபன் என்ற கந்தர்வனுக்கு ஒரு மகன் பிறந்தான். அந்த மகனுக்கு உபவருக்கன் என்று பெயரிட்டார்கள். உபன் இசையையே லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவன். இறைவனை இசையால் வழிபடுவதையே எந்நேரமும் செய்துகொண்டிருந்தவன். தன் மகனை நன்கு பயிற்றுவித்தான். தன்னிலிருந்து பிரிந்த, கிளர்ந்த அந்தச் சக்தியை மிகவும் பாராட்டி வளர்த்தான். அவனுக்கு, தான் வாசிக்கிற மஹதி என்ற யாழை வாசிக்கக் கற்றுக் கொடுத்தான். உபவருக்கன் தந்தையை மிஞ்சிய சீடனாக அந்த வீணையைத் திறம்பட வாசிக்கக் கற்றுக்கொண்டான். எல்லா உலகத்தாரும் உபவருக்கனை அழைத்து, அவனை மஹதி வாசிக்கச் சொல்லிக் கேட்பது வழக்கம். நல்ல விழாக்கள் எதுவும் மஹதி வீணை இல்லாது, அதை வாசிக்கின்ற உபவருக்கன் இல்லாது நடைபெறுவதில்லை.

தேவர் உலகில் ஒருமுறை, பிரம்மசிரேஷ்டர் என்கிற முனிவர் மிகப் பெரிய யாகங்கள் செய்தபோது, அங்கே வீணை வாசிக்க உபவருக்கன் அழைக்கப்பட்டான். உபவருக்கனும் மனம் ஒருமித்து சாம கானம் வாசித்து, அங்குள்ளோரைத் தன் வயப்படுத்தினான்.

அந்த இடத்தில் இசை ஞானமுள்ள அந்தணக் கன்னிகை ஒருத்தியும் இருந்தாள். உபவருக்கனின் வீணை இசையில் சொக்கிப் போனாள். அதன் சுரத்தோடு அவள் மனமும் கலந்தது. தான் அவனுக்கு உரியவளாக வேண்டும் என்றும், அவனை போஷிக்க வேண்டும் என்றும், அவனை இன்னும் சிறப்பானவனாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடும் அவன் மீது காதல் கொண்டாள். அவன் கவனத்தை ஈர்க்கும்படியாக நெகிழ்ந்தும், அசைந்தும், கண்களால் அழைத்தும், பார்க்கும்போது உதடு பிரித்துச் சிரித்தும், வெட்கப்பட்டும், ஆர்வப்பட்டும் பல்வேறு பாவனைகள் காண்பிக்க, உபவருக்கன் மனம் சிதறினான். பாடலில் இருந்த கவனம் நகர்ந்து போயிற்று. சாம கானம் வாசிப்பதில் பிழை ஏற்பட்டது. மிகப் பெரிய சிரேஷ்டர்கள் அமர்ந்திருந்த அந்தச் சபையில், சாம கானத்தை கரதலப் பாடமாகக் கற்ற பெரியவர்கள் கூடியிருந்த அந்த இடத்தில், பிசிறு பிசிறாக சாம கானம் வாசிக்கப்பட்டதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சியுற்றார்கள்.

ஏன் தவறு செய்கிறான், எதனால் பிழை செய்கிறான் என்று கவலைப்பட்டார்கள். அவன் கவனம் ஒரு கன்னிகையிடத்தில் சிதறியிருப்பதைக் கண்டு வருத்தப்பட்டார்கள். கவனம் சிதறாமல் இருந்தால் மிக அற்புதமான ஒரு சாம கானம் வெளிப்பட்டிராதா, என்ன வாசிக்கிறோம் என்றுகூடத் தெரியாது இப்படிக் கவனம் சிதறலாமா, இது நல்லதா, இது பலருக்குத் துன்பம் நேர்விக்குமே என்று கலங்கினார்கள்.

யாகம் செய்த பிரம்மசிரேஷ்டர் கோபம் அடைந்தார். சபை சலசலப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். வாசிப்பு தவறாக இருப்பதால் சபை தனது மௌனத்தை இழந்துவிட்டது என்பதைப் புரிந்து ஆவேசப் பட்டார். ''கந்தர்வனே, போதும் நிறுத்து!'' என்று கட்டளையிட்டார். வீணை இசை நின்றது.

''என்ன செய்கிறோம் என்று தெரியாமல், ஓர் உன்னதமான காரியம் செய்கிறபோது மனம் பிழன்று மிகச் சாதாரணமான ஒரு விஷயத்தில் ஈடுபடுகிறாய் என்றால், நீ இந்த மஹதி வீணையை வாசிக்கத் தகுதி இல்லாதவன். இந்த சாம கானம் இசைக்க யோக்கியதை இல்லாதவன். எனவே, யோக்கியதை இல்லாமல் ஒரு பெரிய சபையில் இந்த வித்தையை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதால், நீ கந்தர்வனாக இனி இருக்க வேண்டாம். அது உனக்குத் தகாது. எனவே, நீ பூமியில் பிற!'' என்று சாபமிட்டார்.

உபவருக்கன் தன் தவற்றை உணர்ந்தான். கந்தர்வன் என்ற இடத்திலிருந்து நகர்ந்து, ஒரு மானுடனாக பூமியில் வந்து பிறந்தான். அவனது வெகு இளம் வயதிலேயே அவனின் தந்தை இறந்தார். தாய் பல்வேறு வீடுகளில் வேலை செய்து மகனை வளர்த்து வந்தாள்.

சாம கானம் என்ற உன்னதத்தை, அதைத் தெரிந்த சபைக்கு நடுவே தவறாக வாசித்து தன்னுடைய தகுதியை இழந்தது மட்டுமல்ல; கந்தர்வனாக இருந்தபோது கிடைத்த ஓர் அற்புதமான தந்தையின் சிநேகமும் பூலோகத்தில் இருக்கும்போது கிடைக்கவில்லை. தந்தையின் அணைப்பும் அந்தச் சாபத்தில் அடித்துக்கொண்டு போயிற்று.

உபவருக்கன் தன் விதவைத் தாயுடன் ஓர் அந்தணர் வீட்டில் வசித்து வந்தான். அவள், அந்த அந்தணர் வீட்டில் வேலை செய்து, தன்னோடே தன்னுடைய பிள்ளையை வைத்துக் கொண்டாள். ஒரு மழைக்காலத்தில் அந்த அந்தணர் வீட்டுக்கு நாராயணனுடைய அடியார்கள் வந்தார்கள். பரத கண்டத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு கோயில்களைத் தரிசிக்கவும், நாராயணனின் புகழ் பாடவும் அவர்கள் ஒரு கூட்டமாக நகர்ந்துகொண்டிருந்தார்கள். அந்த மழைக்காலம் முழுவதும் அவர்கள் அந்த அந்தணர் வீட்டில் தங்கி, நாராயணனைப் பற்றி விதம்விதமான பாடல்களைப் பாடினார்கள். இசை என்ற ஓர் அற்புதமான வித்தை, அவனுக்குக் கந்தர்வ உலகத்தில் கிடைத்திருந்ததால், அந்த இசையால் அவன் பல பேரை மகிழ்வித்திருந்ததால், மானுடனாகப் பிறந்த உபவருக்கனுக்கும் அந்த இசை ஞானம் இருந்தது. அந்த அடியவர்கள் பாடும்போது, அவனும் தன்னுடைய இனிய குரலில் சேர்ந்து பாடினான். அவர்களோடு அமர்ந்து அந்தப் பாடல்களை எழுதிக்கொண்டு, மனனம் செய்தான். அவர்கள் பாட மறந்ததை எடுத்துக் கொடுத்தான்.

ஒரு சிறுவனின் புத்திசாலித்தனத்தையும், இசை மீதுள்ள நாட்டத்தையும், இசையின்பால் அவன் கொண்டிருந்த ஞானத்தையும் அறிந்து அந்த அடியவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். அவனுக்கு நாராயண மந்திரம் உபதேசித்தார்கள்.

''இது மிக உயர்ந்தது. இசையைக் காட்டிலும் உயர்ந்தது. எல்லாவற்றைக் காட்டிலும் உயர்ந்தது. பேச்சைக் காட்டிலும் இந்த நாராயண மந்திரம் உயர்ந்தது. நமக்குப் பேச்சுத் திறன் இருக்கிறதே, அது கவிதை எழுத மட்டுமல்ல, பாட மட்டுமல்ல, ஆட மட்டுமல்ல, நாடகம் போட மட்டுமல்ல, இந்த மாதிரியான மந்திரங்களைச்சொல்ல வேண்டுமென்பதற்காகத்தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். எனவே, இடையறாது, இடையறாது நாராயணன் பெயரைச் சொல். நாராயணன் உனக்கு நேரே வருவார். நீ வேண்டுகின்ற வரங்களைத் தருவார்'' என்று சொன்னார்கள். அந்தச் சிறுவன் மனமகிழ்ந்தான். அவர்களை வணங்கி, வழியனுப்பி வைத்தான்.

அவன் தாயார் இறந்தபோது என்ன செய்வது என்று தெரியாது தவித்தான். இசையா, கவிதையா, எது முக்கியம்? இரண்டும் இல்லை, நாராயண மந்திரமே முக்கியம் என்று தெளிந்தான். வனத்திற்குப் போனான். இடையறாது நாராயண மந்திரம் சொன்னான். தனக்குள்ளே அந்த மந்திரத்தை வைத்துப் பெரிய தீயாக்கி, சதா காலமும் அதனுள்ளேயே மூழ்கிக் கிடந்தான். அவனுடைய கடும் தவத்தைக் கண்டு ஸ்ரீமன் நாராயணர் மனம் மகிழ்ந்தார். அவனுக்குக் காட்சியளித்தார். ''தொடர்ந்து மந்திரம் சொல்லிக் கொண்டிரு. இந்த உலகம் முடியப் போகிறது. பெரிய ஊழிக்காலம் வரப்போகிறது. சிருஷ்டிகள் அழியப் போகின்றன. மறுபடியும் சிருஷ்டி துவங்கும். அப்போது பிரம்மாவே உனக்குத் தந்தையாக இருந்து, உனக்குச் சகலமும் சொல்லிக் கொடுப்பார்'' என்று சொல்லி விடைபெற்றார்.

ஊழிக்காலம் வந்தது. உயிரினங்கள் அழிந்தன. சகலமும் நீர்மயமாயிற்று. நீர்மயத்திலிருந்து பிரம்மா உலகை சிருஷ்டிக்கத் துவங்கினார்.

வரிசி முதலிய முனிவர்களோடு, மஹதி என்ற வீணையோடு உபவருக்கன் மறுபடி பூமியில் பிறந்தான். அவனுக்கு 'நாரதர்’ என்று பெயரிட்டார் பிரம்மா. நாரதர் தன்னுடைய மகன் என்று பெருமையோடு உலகுக்கு அறிவித்தார். இந்த உலகம் மட்டுமல்லாது, எல்லா உலகங்களுக்கும் செல்கிற தகுதியோடு, நாரதர் மஹதி என்ற வீணையோடு பிறந்தார்.

சந்தோஷம் கொடுக்கிற இசை மட்டுமல்ல, துன்பத்தை நீக்கி ஆழ்ந்த மௌனத்தில் ஆழ்த்துகிற இசை மட்டுமல்ல, சத்தியத்தை நோக்கிக் கேள்வி கேட்டுத் தெளிகிற ஞானத்தோடும் நாரதர் பிறந்தார். அவருடைய வாக்கு பிரபஞ்சத்தின் எல்லாத் திசைகளிலும் ஒலித்தது. சாதாரண பிறப்பல்ல அது. மாமுனி என்கிற பிறப்பு. சகலமும் அறிந்து தெளிந்த பிறப்பு. கடும் தவத்தால் அது அவருக்குக் கிடைத்தது.

நாராயண மூல மந்திரம், மறுபிறப்பில் மிகச் சிறப்பான ஓர் அம்சத்தைக் கொண்டு வந்து கொடுத்தது. அந்தச் சிறப்பான அம்சத்திற்குப் பெயர் நாரதர். அவர் எடுத்துரைத்த உண்மைக்குப் பெயர் நாரத புராணம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:38 am


''ஓர் ஊரில் ஏழை ஒருவன் இருந்தான். அவனுக்கென்று சொந்தமாக நிலம் கிடையாது. காடுகளில் கிடைக்கின்ற காய்- கனிகளையும், கீரைகளையும் பறித்து வந்து உணவாக்கி உண்ணுவான். சிதறிய தானியங்களை எடுத்து வந்து சுத்தம் செய்து, மனைவியிடம் கொடுத்துச் சமைக்கச் சொல்லுவான். மற்றபடி, அவன் யாரிடமும் கொடு என்று யாசகம் கேட்டதில்லை. 'நாம் வறுமையில் வாடுகிறோமே, ஏழையாக இருக்கிறோமே’ என்ற எண்ணமும் அவனுக்கு வரவில்லை. எந்நேரமும் மகிழ்ச்சியாக இருந்தான்; மலர்ச்சியாக இருந்தான். நகரங் களுக்குப் போய், அங்குள்ள மக்கள் சொல்லும் வேலைகளைக் கடுமையாக உழைத்துச் செய்வான். அவர்கள் கொடுக்கும் காசுக்கு உடைகளும் பண்டங்களும் வாங்கி வந்து, மனைவியிடம் கொடுப்பான். 'இப்படி காசு பற்றிய சிந்தனையே இல்லாமல், சொத்து சுகம் பற்றிய எண்ணமே இல்லாமல் இருக் கிறீர்களே’ என்று அவன் மனைவி அடிக்கடி வருத்தப்படுவாள்.

'காடு நிறைய கனிகள் இருக்கின்றன. பல்வேறு விதைகள் இருக்கின்றன. தானியங்கள் இருக்கின்றன. பின்பு, எதற்காக இயற்கை கொடுத்த வரத்தைப் புறக்கணித்துவிட்டு, இன் னும் அதிகம் வேண்டும் என்று சம்பாதிக்க வேண்டும்? உடம்பை மறைக்க நமக்குப் போதுமான துணிகள் இருக்கின்றன. இவை போதுமானவை. இதைத் தாண்டி அதிகம் துணிகள் வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறோம்? நம் வீடு திறந்தே இருக்கிறது. காற்று எப்போதும் சுகமாக வீசுகிறது. அருவியில் நீர் கொட்டுகிறது. ஆற்றில் வழிந்து ஓடுகிறது. அந்த ஆறும் அருகில்தான் இருக்கிறது. இப்படி எல்லாவித வசதிகளும் இருக்கிறபொழுது, எதற்குச் சொத்து சேர்க்க வேண்டும்? எதுவுமே இல்லாத இந்த வீட்டுக்குக் கள்வர் பயம் இல்லை. யாரேனும் விருந்தினர் வந்தால் உபசரிக்க, காடுகளில் பொருட்கள் உண்டு. குடிப்பதற்கு நீர் உண்டு. இதைத் தாண்டி, நமக்கு என்ன வேண்டும் என்று நினைக்கிறாய்? எனக்கு இது போதும்!’ என்று தீர்மானமாக மறுத்துவிட்டான்.

அவனுக்குக் காசு ஆசை வரவேண்டும் என்று இறைவனிடம் வேண்டினாள் அவன் மனைவி. அவன் மனத்தை மாற்ற வேண்டும் என்று கெஞ்சினாள். இறைவன் அவளுக்கு உதவி செய்யத் தீர்மானித்தான்.

ஒருநாள், அந்த ஏழை பழம் பறிக்கப் போனபோது ஒரு தங்கக் கட்டியை அங்கே இருக்கும்படி வைத்தான். பழங்களைப் பறித்தவன், அந்தத் தங்கக்கட்டியை எடுத்துப் பார்த்தான்.

'அடடே! எவ்வளவு பெரிய தங்கக் கட்டி! இதைக்கொண்டு மனைவி கேட்பது அத்தனை யும் வாங்கிவிட முடியுமே! இதை ஏன் நான் எடுத்துக்கொள்ளக் கூடாது?’ என்று எண்ணினான். அவன் மனம் தடுமாறிற்று.

கடவுள் அவன் என்ன செய்கிறான் என்று கவனித்தார். 'காட்டில் கிடைக்கும் பழங்களை நான் பொறுக்கி எடுத்துக்கொள்கிறேன். அதை உண்கிறேன். அதேபோல, காட்டில் ஒரு தங்கக் கட்டி கிடைக்கிறது. இதை எடுத்துக் கொண்டால் என்ன தவறு? நான் யாசகம் கேட்கவில்லை; கொள்ளை அடிக்கவில்லை; பிறரைத் துன்புறுத்தி இந்தத் தங்கக்கட்டியை அடையவில்லை. இதை கூலியாகக்கூடப் பெறவில்லை. வெறுமே துணிமணிகளை, உண்ணும் பண்டங்களை நான் காசு கொடுத்து வாங்குவது வழக்கம். இப்படித் தங்கக்கட்டி கிடைத்திருக்கும்போது, அதை விற்றுக் காசாக்கி, அவற்றை ஏன் நான் வாங்கிக்கொள்ளக் கூடாது? கடவுள் பழம் கொடுப்பதுபோல தங்கக் கட்டி கொடுத்திருக்கிறார். அவ்வளவுதானே? இதை எடுத்துக்கொள்வதில் தவறில்லை!’ என்று யோசித்தான்.

தங்கக் கட்டியை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டான். உடனே இன்னொரு யோசனை. 'கூடாது! கூடுதலாக ஒரு பொருளை நான் சேமித்துக் கொள்ளக் கூடாது. எனக்கு இந்தத் தங்கக் கட்டி வேண்டாம். பசிக்குப் பழம் இருக்கிறது. காய் இருக்கிறது. கீரை இருக்கிறது. மரத்தண்டுகள் இருக்கின்றன. குடிக்க நீர் இருக்கிறது. எனக்கு அவை போதும். வேறு எதுவும் வேண்டாம்’ என்று தங்கத்தைக் கீழே போட்டான். வீடு நோக்கி நடந்தான்.

நாராயணர் சட்டென்று ஒரு ஜோதிடர் உருவம் எடுத்தார். நேரே அவன் மனைவியிடம் போனார். ''உன் கணவனின் ஜாதகப்படி இந்த நேரம் அவனுக்கு ஒரு தங்கக் கட்டி கிடைத் திருக்க வேண்டும். ஆனால், கிடைத்த பிறகும் அந்தத் தங்கத்தை உன் புருஷன் உதறிவிட்டு வருகிறான். இது தவறு. பின்னால் பெருத்த வறுமை வந்து சேரும். தங்கக் கட்டியை எடுத்து வரச் சொல்'' என்று தூண்டினார்.

அந்த ஏழை வீட்டுக்கு வந்தவுடன் மனைவி விசாரித்தாள். ஜோதிடர் சொன்னதைச் சொன்னாள். ஜோதிடரும் அதை விவரித்தார்.

''ஆமாம். தங்கக்கட்டி இருந்தது. அங்கேயே விட்டு விட்டு வந்துவிட்டேன். எனக்கு எதற்கு தங்கக் கட்டி?'' என்று கேட்டான் ஏழை.

''உடனே போய் அதை எடுத்து வாருங்கள். அல்லது, எங்கிருக்கிறது என்று சொல்லுங்கள். நான் போய் எடுத்து வருகிறேன்'' என்று மனைவி தவித்தாள். ஜோதிடரின் காலில் விழுந்து, கணவனின் மனத்தை மாற்றும் விதமாக அவனிடம் பேசச் சொன்னாள். ஜோதிடரும், ''தானாக வரும் ஸ்ரீதேவியை ஏன் வேண்டாமென்று தள்ளுகிறாய்? போய் எடுத்துக் கொண்டு வா!'' என்றார்.

'தங்கம் வீட்டுக்கு வந்து சேர்ந்தால், அதைப் பாதுகாக்கின்ற பயம் வந்து சேரும். என்னிடம் தங்கம் இருப்பது தெரிந்தால், உற்றார் உறவினர் நாடி வருவார்கள். தங்களுக்கும் பங்கு கேட்பார்கள். பங்கு பிரிப்பதில் தகராறு வரும். வம்புகள் வரும். ஊர் இரண்டு படும். உறவுகள் இரண்டு படும். கள்வர்கள் இந்த இடத்தை நாடி வருவார்கள். சண்டை வரும். எங்களைச் சிலர் நையப் புடைப்பார்கள். தங்கத்தை கொண்டு வருவானேன்; சிலரின் பகையைச் சம்பாதித்துக் கொள்வானேன். இப்போது மிகுந்த நிம்மதியாக இருக்கிறேன். எனக்கு அது போதும். தங்கம் வேண்டாம்!'' என்று தீர்மானமாக மறுத்து வீட்டுக்குள் வந்து அமர்ந்தான். அவன் மனைவி திகைத்தபடி பார்க்க, ஜோதிடராக வந்த ஸ்ரீநாராயணர் தன் திவ்ய ரூபத்தை அவர்களுக்குக் காட்டினார். அவள் மயக்கத்திலிருந்து மீண்டு, தெளிவான சிந்தனை உடையவள் ஆனாள்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:43 am


''நாரதா, இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆசை இல்லாமல் வாழ்வதே பெரிய தர்மம். கோபத்தை ஜெயிப்பதே மிகப்பெரிய புண்ணிய ஸ்நானம். தயவுகொள்ளும் நெஞ்சத்தைக் கொள்வதே பெரிய ஜபம். திருப்தியே தனம். காய்கறி வகை ஆகாரமே அமிர்தம். உபவாசமே தவம். இவற்றைப் பெற்றவனே புனிதன். இகத்திலும் பரத்திலும் அவன் சுகமாக வாழ்வான்'' என்றார் பிரம்மன்.

நாரதர் தெளிவு பெற்றார். தந்தையை வணங்கினார். இதை மற்றவருக்குச் சொல்ல, அங்கிருந்து கிளம்பினார்.

பாற்கடலைக் கடைந்தார்கள். வெள்ளை நுரை கறுப்பாயிற்று. ஆலகால விஷம் பொங்கி வந்தது. மூச்சு திணறிற்று. தேவர்களும் அசுரர்களும் பிடியை உதறிவிட்டு ஓடினார்கள். சிவன் நின்றார். பிரபஞ்சத்தையே அழித்துவிடுமே எனக் கவலைகொண்டார். விஷத்தைக் கையில் ஏந்தினார். தான் அழிந்தாலும் பரவாயில்லை என்று உள்ளே விழுங்கினார். விஷம் பார்வதியால் தொண்டையில் நிறுத்தப்பட்டது. ஓடியவர்கள் திரும்பினார்கள். மறுபடியும் கடைந்தார்கள். காமதேனு உட்பட பல்வேறு விஷயங்களும் தோன்றின. அதில் அகலிகையும் எழுந்து வந்தாள்.

பேரழகு, ஆனால் பெரும் அமைதி. மந்தகாச புன்னகை. நடையில் நிதானம். கண்ணில் கனிவு. அகலிகை வணங்கினாள். எல்லோருக்கும் பதிலுக்கு வணங்கத் தோன்றிற்று. அகலிகை நிமிர்ந்தாள். எல்லோரும் ஏக்கப் பெருமூச்சுவிட்டார்கள். அகலிகை புன்னகை செய்தாள். எல்லோரும் புன்னகை செய்தார்கள்.

இதுதான் பாற்கடலின் உன்னதமோ. இவள்தான் மகாலட்சுமியோ, கடைந்தது போதுமோ என எல்லோரும் மயங்கினார்கள்.

''இல்லை. இல்லை, அமிர்தம் வரும் வரை கடையுங்கள்.''

சகலரும் ஆவேசமாய் வேலையில் இறங்கினார்கள். இந்திரனும், கௌதம முனிவரும் வேலையிலிருந்து விலகி அகலிகையை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

'ஆஹா... என்ன அழகு! இவள் எனக்கு வேண்டுமே’ என்று இந்திரன் ஆசைப்பட்டான். 'போய் கேட்கலாமா? அல்லது எடுத்துக் கொண்டு ஓடிவிடலாமா? என்ன செய்தால் இவள் எனக்குச் சொந்தமாவாள். சுற்றி சுற்றி வந்தான். உள்ளுக்குள் வேகமாக திட்டங்கள் தீட்டினான். மனம் படபடத்தது.

கௌதமர் மிக வியப்போடு பார்த்தார்.

'இவள் ஓர் அற்புதம்! மனத்தை ஒருமுகப்படுத்த இவள் உதவுவாள். இல்லறத்தோடு கூடிய தவம்தான் சிறந்தது. எனவே, என் இல்லறத்துக்கு இவள் உறுதுணையாக இருப்பாள். என் தவத்தை இவள் காப்பாள். என் உயர்வுக்கு வழிகாட்டுவாள். என் வீட்டுக்குள் ஒளி விளக்காக இருப்பாள். நல்லதைக் கண்டபின் ஏன் மறுதலிக்க வேண்டும்? நன்மை தரும் என்றால் ஏன் புறக்கணிக்க வேண்டும்?

தவ வாழ்க்கையில் ஒருவனாய் பயணப் படுவதைவிட, இவள் அருகே வர நடப்பது எளிதல்லவா? தவ வாழ்க்கையிலும் மன வேதனைகள் உண்டே! உடல் கொதிக்கக் கூடுமே, அப்போது இந்த உத்தமி தொட்டுத் தடவினால் சூடு அடங்கும் அல்லவா? தொடர்ந்து நடக்கலாம் அல்லவா’ என ஏங்கினார்.

நேரே போய் 'நான் கௌதமன். எனக்கு மனைவியாகிறாயா?’ என்று கேட்பதா? மறுதலித்து விட்டால், மறுபடி கேட்க முடியுமா?

மருகத்தானே முடியும். இது என் வாழ்க்கையை திசை திருப்பிவிடாதா? என்ன செய்வது. எனக்கு அகலிகை வேண்டுமே. உள்ளுக்குள் அரற்றினார்.

'எதைக் கேட்டாலும் கொடுப்பவர் சிவன், கயிலையில் அமர்ந்திருக்கும் சிவபெருமான், அவரிடம் மன்றாடுவோம். அவரை நோக்கிப் பிரார்த்தனை செய்வோம். எனக்கு இவள் வேண்டும். வாங்கிக் கொடுங்கள்’ என்று சிறு குழந்தை போல் கேட்போம்.

சிவனே என் சிவனே, நான் உனை பாடுவேன். அவர் உள்ளே பாடினார். மந்திரம் ஜபித்தார். ஆழ்ந்து மூழ்கினார். சிவ சிந்தனையையே தன் சிந்தனையாகக் கொண்டார். தன் சிந்தனை முழுவதும் சிவனை நிறைத்தார். உள்ளே கனம் தளும்பியது. சட்டென்று வெளிச்சம் மேலே அடித்தது. கண் திறந்தார்.

''என்ன வேண்டும் கௌதமரே?'' இனிமையான குரல் அவரைத் தழுவிக்கொண்டது. தலை தடவியது. எழுந்து நிற்க வைத்தது. கை கூப்ப வைத்தது. கண்ணீல் நீர் மல்கியது. வழிந்தது.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:44 am


''சிவனே, எனக்கு அகலிகை வேண்டும். பாற்கடலில் உதித்த அந்த உத்தமி வேண்டும். இடையறாது சத்தியத்தில் நடந்து, அதை இந்த புவியில் ஸ்தாபிக்க எனக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும். அந்த உதவிக்கு அகலிகை இருப்பாள் என்ற நம்பிக்கை. எனவே, உங்களை யாசித்தேன், எனக்கு அகலிகை வேண்டும்.''

''அப்படியா. சரி, அதற்கு நீ ஒரு சிறு முயற்சி செய்ய வேண்டுமே.''

''நிச்சயம் செய்கிறேன். பெரும் முயற்சியை கூட செய்கிறேன்.'' அவர் ஆவேசமானார்.

சிவனுக்கு சிரிப்பு வந்தது. புன்னகை பெரிதாயிற்று.

''இரண்டு முகம் உடைய பசுக்களைப் பார்த் தால் உனக்கு அகலிகை கிடைப்பாள்.'' சிவன் சொல்லி மறைந்தார். கௌதமர் திடுக்கிட்டார்.

இரண்டு முகம் உடைய பசுவா? எங்கிருக் கிறது அது? காமதேனுகூட அந்த லட்சணத்தில் இல்லையே! அவர் தவித்தார். அவர் தவிப்புக்கு ஏற்ப நாரதர் அங்கு வந்தார்.

''என்ன கௌதமரே. ஏன் தவித்துக் கொண்டிருக்கிறீர்கள். முகத்தில் ஒரு அவஸ்தை தெரிகிறதே, எதனால்?''.

''சிவனாரின் தரிசனம் ஏற்பட்டது.''

''அடடா, நீர் புண்ணியவான், ஞானவான். உத்தமன்.''

''அவரிடம் அகலிகையை யாசித்தேன்.''

''அட, அது அற்புதம். மிகச்சிறந்த விஷயம். நல்லதல்லவா கேட்டிருக்கிறீர். கிடைத்து விட்டதா?''

''இல்லை.''

''ஏன்?''

''ஒரு சின்ன சோதனை வைத்திருக்கிறார்.''

''உமக்கு போய் ஏது சோதனை? நீர், சகலமும் அறிந்தவர் அல்லவா.''

''இல்லை. சோதனை பெரிதாக இருக்கிறது.''

''என்ன சோதனை என்று சொல்லும்.''

''இரண்டு முகம் உள்ள பசுவைப் பார்க்க வேண்டுமாம். அப்படி எங்கு இருக்கிறதய்யா. காமதேனுகூட அப்படி காட்சி தர முடியாதே.''

''அட, இதென்ன பெரிய கஷ்டம். இரண்டு முகம் உள்ள பசு பூமியில் பல இடங்களில் இருக்கும்.''

''விளையாடாதீர்கள் நாரதரே, நான் வேதனையில் இருக்கிறேன்.''

''இல்லவே இல்லை. இதோ இங்குள்ள பசுக் கூட்டத்தில் ஆயிரம் பசுக்கள் இருக்கின்றன. பலது சூல் கொண்டவையாக இருக்கின்றன. இதில் ஏதேனும் ஒன்று உமக்கு இரண்டு முகம் காட்டும்.''

''அப்படியா. அது எப்படி?''

''தேடுங்களேன்!''




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:44 am


நாரதர் அருகே இருக்க, அவர் ஒவ்வொரு பசுவாக தேடினார். ஒரு பசு கால் மாற்றித் தவித்தது. முனகியது. கொம்பால் மண்ணைக் கிளறியது. முன்னும் பின்னும் அலைந்தது. 'அம்மா’ என்று வேதனைக் குரல் கொடுத்தது. இருவரும் நின்றார்கள்.

பசுவின் யோனி திறந்தது. நீர்க் குடம் பெருகியது. கருப்பையிலிருந்து வெளியேறி யோனியின் வழியே இன்னொரு முகம் தோன்றியது.

''அடடே, பாரும் பாரும்!'' நாரதர் சுட்டிக் காட்டினார். முன்னே ஒரு முகம் தவித்திருக்க, பின்னே ஒரு முகம் மூச்சுக்கு ஏங்க, இரண்டு முகம் உள்ள பசுவை கௌதமர் கண்டார். பசு கன்றை ஈன்றது. அதைத் தடவிக் கொடுத்தார்.

''நன்றி, நன்றி, நன்றி'' என்று பசுவுக்கு வணக்கம் சொன்னார். அவருக்கு அகலிகை கிடைத்தாள். அகலிகையும், கௌதமரும் நாரதரை வணங்கினார்கள்.

''ஐயா, உம்முடைய சூட்சுமம் இங்கு எவருக்கும் வராது. மாபெரும் தபஸ்விகளும், ஞானிகளும் உங்களுடைய துணையால்தான் சிறக்கிறார்கள். நாரதரே, என்னை ஆசீர்வதியும்''

நாரதர் சிரித்தபடி அவரை ஆசீர்வதித்தார்.

இது பூமியின் சூட்சுமம். ஒரு உடம்பிலிருந்து ஒரு உடம்பு வருகிறது. எனவே, உடம்பு என்பது கூடலுக்கு மட்டுமல்ல. கூடல் இன்னொரு உடம்பை தோற்றுவிக்கிறது. அழகு, அறிவு, பண்பு எல்லாமே இன்னொன்றை தோற்றுவிப்பதற்காகத்தான் இருக்கிறது.

இதற்குப் பிறகும் ஒரு நீண்ட கதை இருக்கிறது என்று நாரதருக்குத் தெரியும். அவர் முக்காலமும் அறிந்தவர். எவர் அழைத்தாலும் உதவிக்கு வருபவர். நாரணனை அழைப்பது கடினம். நாரதரை அழைப்பது எளிது. அழைத்தால் நாரதர் வருவார்.

ராஜாதிராஜன் என்று மக்களால் பிரியமாக அழைக்கப்பட்ட மன்னனின் பெயர் சித்ரகேது. மிகச் சிறப்பாக தன் தேசத்தை ஆண்டு வந்த சித்ரகேதுவுக்குக் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தது. ஒரு பிள்ளை வேண்டும் என்று அவன் கடவுளை வேண்டிய படியே இருந்தான். பல பெண்களை மணந்தான். ஆனாலும், அவனுக்குக் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை.

பல காலம் கழித்து, கடவுள் அருளால், அவனுடைய முதல் மனைவியான கிருதத்துதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையினால் கிருத்தத்துதிக்கு மதிப்பு அதிகமானது. இதனால், அரசன் தங்களைப் புறக்கணித்து, சதா காலமும் அவளோடேயே இருப்பதும், குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருப்பதும் கண்டு எரிச்சலுற்ற அரசனின் மற்ற மனைவிகள் அந்தக் குழந்தைக்கு நஞ்சு கொடுத்துக் கொன்றுவிட்டார்கள். அரசன் கதறித் தவித்தான். குழந்தையின் தாய் கண்ணீர் விட்டுக் கதறி அழுதாள்.

''எங்கள் வாழ்க்கை இத்தனை கேவலமாகப் போயிற்றே! எங்களைக் காப்பாற்றுபவர் இல்லையா? எங்களைத் தேற்றுவார் இல்லையா? அப்பேர்ப்பட்ட பாவம் என்ன நாங்கள் செய்துவிட்டோம்?'' என்றெல்லாம் அலறினார்கள்.

நாரதரும் ஆங்கீரச மகரிஷியும் அங்கே வந்தார்கள். முனிவர் அவர்கள் இருவரிடமும் மிகப் பிரியமாகவும் ஆறுதலாகவும் பேசினார்.

''உலகில் பிறந்தவர் இறப்பது இயற்கை. குழந்தை, வாலிபன், வயதானவன் என்ற தகுதி இல்லாமல் எப்போது வேண்டுமானா லும் மரணம் வரும் என்பதே இந்த வாழ்வின் சிறப்பு. எதுவும் நிலையில்லை என்பதைக் காண்பிப்பதற்கே இந்த உலகத்தில் இப்படிப் பல்வேறு பருவங்களில் மரணம் நேரிடுகிறது. நிரந்தரமான ஒன்றைப் பிடித்துக் கொள்ளச் சொல்லி, நிரந்தரம் இல்லாத இந்த உலகத் தைக் காண்பிப்பதற்காக இந்த மரணம் நேரிடுகிறது. இந்த மரணத்தில் இருந்து புத்தி தெளிவுபட்டு, எது நிரந்தரம் என்ற கேள்வி எழுப்பி, கடவுளுடைய அருளைப் பெறுவாயாக! நிரந்தரமானவன் திருமாலே என்று தெளிவாயாக!'' என்று சொன்னார்.

ஆனால், அரசனுக்கும், அரசிக்கும் சமாதானம் ஆகவில்லை. அவர்கள் தொடர்ந்து வாய்விட்டு அழுதபடி இருந்தார்கள். அவர்களின் அழுகையைத் தாங்கமாட்டாத நாரதர், ஒரு தந்திரம் செய்தார். எதன் மீது பிரியமோ, எது இந்த அழுகைக்கெல்லாம் காரணமோ, எதன் பிரிவை இவர்களால் தாங்க முடிய வில்லையோ அந்தக் குழந்தையைச் சட்டென்று உயிர்ப்பித்தார். அவர்களோடு பேசச் சொன்னார்.

''எதற்காக எனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தீர்கள்? இன்னும் நான் பல பிறவிகள் எடுக்கவேண்டியிருக்கிறது. அதில் ஒரு பிறவி சீக்கிரமே முடிந்தது என்று நிம்மதியாக இருந்தேன். எதற்காக மறுபடியும் நான் இந்த மண்ணுக்கு வர வேண்டும்? இந்தப் பிறவியில் இவர்கள் எனக்குத் தாய்- தந்தை. எனக்கு ஏகப்பட்ட தாயார்களும், தந்தையர்களும் உண்டே! எதற்காக இவர்களிடம் மட்டுமே நான் இருக்க வேண்டும்? இன்னும் பல பிறவிகள்




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:44 am


எடுக்கவேண்டியிருக்கும்போது, நான் மீண்டும் இந்தப் பிறவியிலேயே உழல வேண்டிய அவசியம் என்ன? எனக்கு இவர்கள் முக்கியம் இல்லை. இறந்த பிறகு எனக்கு அடுத்த பிறவியைப் பற்றித்தான் சிந்தனையே தவிர, முடிந்த பிறவியைப் பற்றியோ, அந்தப் பிறவியின் தாய், தந்தை பற்றியோ எனக்கு நெல்முனையளவும் அக்கறை இல்லை. தயவுசெய்து என்னை விட்டு விடுங்கள். நான் போகிறேன்'' என்று அந்தக் குழந்தை மன்றாடியது. பின்பு, மெள்ள மரணமடைந்தது.

சித்ரகேதுவும் அவன் மனைவியும் தெளிவுற்றனர். தங்களுடைய குழந்தையே தங்களை நேசிக்கவில்லை; பிறவியின் பயன் முடிந்துவிட்டது என்று சொல்லி, அடுத்த பிறவிக்குத் தயாராகின்ற புத்தியைக் கொண்டுவிட்டதைப் பார்த்து அவர்கள் வருத்தம் தீர்ந்தார்கள். நாரதருக்கு நன்றி சொன்னார்கள். உலக வாழ்க்கை நிரந்தரமானது அல்ல என்று புரிந்துகொண்டு, தொடர்ந்து வாழ்ந்தார்கள்.

நடுக் காட்டுக்குள் அந்தக் குழந்தை பாதரட்சை அணியாத கால்களோடும், கோமணத்தோடும் நடந்து வந்துகொண்டி ருந்தான். அங்க லட்சணங்கள் அவனை ஒரு அரசகுமாரன் என்று சொல்லின. ஆனால், அவன் முகம் வாடி இருந்தது. இருப்பினும், நடையில் ஓர் உறுதி தெரிந்தது. மிக வேகமாக காட்டின் அடர்ந்த இடத்துக்குப் போக வேண்டும் என்ற தீர்மானத்தோடு அவன் நடப்பதாக நாரதருக்குப் பட்டது. அவன் அருகில் வந்ததும், தன் சொரூபத்தை வெளிப்படுத்தினார். அவன் நிமிர்ந்து பார்த்தான்.

கருணை பொங்கும் விழிகளும், சிரிப்பும், கையில் மஹதி என்ற யாழும், உச்சிக் கொண்டையும் மெல்லிய காவி உடையும், நெற்றியில் திருமண்ணும் அணிந்து, ஒரு சங்கீத ரீங்காரத்துடன் அவர் நின்றிருப்பது தெரிந்தது. அவரைப் பார்த்துக் கை கூப்பினான். விழுந்து வணங்கி எழுந்து நின்றான். நாரதர் அவன் காது குளிர திருமாலைப் புகழ்ந்து பாடினார். அவன் தாளம் போட்டான். சிரித்தான். முகத்திலுள்ள கவலைகள் மெள்ள அகன்றன. ''மிக அருமையாகப் பாடுகிறீர்கள்'' என்று பாராட்டினான்.

''நீ யார் குழந்தாய்? இவ்வளவு அடர்ந்த கானகத்தில் தனியாக ஏன் வருகிறாய்? உன் முகம் கவலையாக இருக்கிறதே. என்ன காரணம்? உன்னைப் பற்றிச் சொல்'' என்று கேட்டார். ஆனால், நாரதருக்கு அவனைப் பற்றி ஏற்கெனவே தெரிந்திருந்தது. அவன் சாதாரணன் இல்லை என்று புரிந்திருந்தது.

அந்தக் குழந்தை அவரை நோக்கி பேசத் துவங்கினான்... ''என் பெயர் துருவன். என் தகப்பன் உத்தானபாதன். அவர் இந்தத் தேசத்தின் அரசர். என் தந்தைக்கு இரண்டு மனைவியர். என் தாயின் பெயர் சுனீதி. என் சிற்றன்னையின் பெயர் சுருசி. என் தாய் அமைதியானவள். ஈஸ்வரனை எந்நேரமும் நினைத்துக் கொண்டிருப்பவள். அரசனுக்கு அடங்கி, மிகுந்த பிரியத்துடன் நடப்பவள்.

ஆனால், என் சிற்றன்னையோ கொஞ்சம் ஆரவாரமானவள். என் தந்தையைத் தன்னை விட்டு அகலாதிருக்கும்படி இறுக்கமாக வைத்துக் கொண்டிருப்பவள். என் தாய் அவளைக் குறித்து வருத்தப்படுவதை நான் காதாரக் கேட்டிருக்கிறேன். 'எதற்கு இப்படிப் புருஷனைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறாள்? என்னுடைய இடத்துக்கு வரவிடாமல் அவரை ஏன் தடுத்து வைத்திருக்கிறாள்?’ என்று கவலைப்படுவாளே தவிர, சிற்றன்னையை ஒருநாளும் அவள் கடிந்துகொண்டதில்லை. 'ஏதோ தெரியாமல் செய்கிறாள். ஒரு நாள் அவளுக்கே தெரிய வரும்’ என்று அமைதியாகச் சொல்லுவாள்.

ஆனால், என் சிற்றன்னையோ என் தாயைப் பற்றிப் பேசும்போது, ''அவளுக்கு ஒன்றும் சாமர்த்தியம் இல்லை. செயல்திறன் போதாது!’ என்றெல்லாம் இழித்துரைப்பாள். அரசரும் தலையாட்டுவார். நான் அதையும் கேட்டிருக்கிறேன். எனக்கு வேதனையாக இருக்கும். என் தாய்க்கு நான் எப்படி மகனோ, அதேபோல என் சிற்றன்னைக்கு உத்தமன் என்று ஒரு மகன் இருந்தான். நல்ல தம்பி. அழகானவன். நல்ல சுறுசுறுப்பு! ஒருநாள், பொன்னூஞ்சலில் அவன் தாயும் என் தந்தையும் அமர்ந்து ஊஞ்சலாடிக்கொண்டிருந்தபோது, நான் அருகே போனேன். தந்தையின் மடியில் உத்தமன் உட்கார்ந்திருந் தான். என்னைப் பார்த்துச் சிரித்தான். எனக்கும் உத்தமனைப்போல என் தந்தையின் மடியில் உட்கார வேண்டும் என்று ஆசை எழுந்தது. நான் அருகே போனதும், என் தந்தை ஊஞ்சலை நிறுத்தினார்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:44 am


ஆனால், சிற்றன்னையோ ஊஞ்சலை ஆட்டுவதில் குறியாக இருந்தாள். என்னை அருகே வரவிடாமல் வேகமாக ஊஞ்சல் ஆடினாள். நான் என் தந்தையின் மடியில் உட்கார வேண்டும் என்ற என் விருப்பத்தை சிற்றன்னையிடம் தெரிவித்தேன்.

''உனக்கு அந்த பாக்கியம் இல்லை! என் வயிற்றில் பிறந்ததால், உத்தமன் தன் தந்தையின் மடியில் உட்கார்ந்திருக்கிறான். நீ வேறு யார் வயிற்றிலோ பிறந்ததால், தந்தையின் மடியில் உட்காரும் பாக்கியம் உனக்கு இல்லை. நீ உன் தந்தையின் மடியில் உட்கார வேண்டுமென்றால், என் வயிற்றில் பிறக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு வா! போய் தவம் செய்’ என்று சொன்னாள்.

அவள் பேச்சு எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது. நான் மெள்ள நகர்ந்து, மீண்டும் தந்தையிடம் போக, அவள் என்னைத் தடுத்து நிறுத்தினாள். கையால் என்னைப் புறம் தள்ளினாள். 'போ! போய் என் வயிற்றில் பிறக்கவேண்டும் என்று தவம் செய்’ என்று மறுபடியும் சொன்னாள். நான் கீழே விழுந்தேன். எழுந்து நின்றேன். என் தகப்பனோ நான் கீழே விழுந்ததைப் பார்த்துச் சிரித்தபடி நின்றார். ஆனாலும், அவர் மனத்தில் கவலை இருப்பது முகத்தில் தெரிந்தது. அதை மறைக்க இன்னும் பெரிதாய்ச் சிரித்தார்.

எனக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. நான் அழுதபடியே வீட்டுக்கு வந்தேன். என் தாயைப் பார்த்தவுடன் அழுகை பீறிட்டு வந்தது. எவ்வளவு நல்லவள் என் தாய்! இவளை என் தகப்பன் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையே என்று எண்ணினேன். அழுதேன். என் தாய் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்டாள். என்ன வேண்டும் என்று கேட்டாள். நடந்ததைச் சொன்னேன். என் தாய் துக்கப்பட்டாள்.

''உன் சிற்றன்னை சொல்வது சரிதான். நீ என் வயிற்றில் பிறந்ததால்தான் உனக்குக் கிடைக்கவேண்டிய மரியாதைகளும் அரவணைப்புகளும் கிடைக்காமல் போய் விட்டன. அடுத்த ஜென்மத்திலாவது நல்லவர் வயிற்றில் பிறக்கவேண்டும் என்று, உன் சிற்றன்னை சொன்னபடி திருமாலை நோக்கித் தவம் செய்'' என்று சொன்னாள். 'திருமால் எப்படி இருப்பார்?’ என்று கேட்டேன். அழகாக விவரித்தாள். 'எங்கு போய் தவம் செய்ய வேண்டும்?’ என்று கேட்டதற்கு, 'வனத்துக்குப் போய் தவம் செய்’ என்றாள். 'ஏன் வனம் போக வேண்டும்?’ என்று நான் கேட்டபோது, அதற்கும் அவள் தெளிவான காரணங்களைச் சொன்னாள்.

''மனிதக் குரலும், மனித நடமாட்டமும், மனிதர்களால் ஏற்படுத்திய சாமான்கள் செய்யும் சத்தமும் உன்னை மிகவும் கலைக்கும். வனத்தில் இத்தனைச் சத்தம் இருக்காது. விலங்குகளின் சத்தமும் மரங்களின் அசைவும் பெரிய தொந்தரவைத் தந்துவிடாது. எந்த மிருகமும் வராத ஓர் இடத்துக்குப் போய் அமைதியாக உட்கார்ந்துகொண்டு, உள்ளுக் குள்ளே எது நீ என்று தேடிப் பார்த்து, எந்த இடத்தில் நீ இருக்கிறாயோ அந்த இடத்தையே கவனித்துக்கொண்டிருக்க, அந்த இடம் முழுவ தும் இறையருள் நிரம்பும். இறை தரிசனம் கிடைக்கும்’ என்றாள். அவள் சொன்னது எனக்குப் புரிந்தது. அப்படி ஒரு நல்ல இடம் தேடித்தான் போய்க் கொண்டிருக்கிறேன்'' என்றான் அவன்.

நாரதர் துயருற்றார். ஒரு சிறு குழந்தைக்கு ஏன் இத்தனை வேதனை என்று மனம் நொந்தார். ''உன் தாய் உன்னைச் சரியான வழியில்தான் அனுப்பியிருக்கிறாள். வனாந்தரமே தவத்துக்கு ஏற்ற இடம். நீ சரியான வனத்துக்கு, சரியான தூரத்துக்கு வந்துவிட்டாய். நானே உனக்கு இங்கு நல்ல இடம் தேர்ந்தெடுத்துத் தருகிறேன்.'' என்று ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துச் சுத்தப் படுத்திக் கொடுத்தார் நாரதர். துருவன் அங்கே உட்கார்ந்தான்.

''உன் தாய் சொன்னபடி, இருதயத்தின் நடுவே எங்கு நீ என்று சப்தம் இருக்கிறதோ, எங்கு நான் என்கிற ஒரு விஷயத்தை உணர்கிறாயோ, அந்த இடத்தில் இறைவனை நிறுத்தி, அழைத்து வா! உன் தவம் உக்கிரமாக ஆக, இறைவன் வந்துவிடுவான். திருமால் கனிவு மிக்கவர். உன்னைப் போன்ற குழந்தை கடுந்தவத்தில் ஈடுபடுவது கண்டு அவர் வருத்தப்பட்டு, விரைவாக உனக்குத் தரிசனம் தருவார்'' என்று சொன்னார் நாரதர்.

எட்டெழுத்து மந்திரத்தை அவனுக்கு உபதேசித்தார். அந்த மந்திரத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லி, தான் எங்கிருக்கிறோம் என்று விசாரித்து, தன் மனத்தில் போய் உள்ளே அமர்ந்து, எந்த இடத்தில் நான் என்ற எண்ணம் கிளறுகிறதோ அதை ஊன்றிக் கவனித்து, கவனித்த இடத்திலேயே தன் மனத்தைச் செலுத்தி, அந்த இருப்பை வலுப்படுத்தி, அதிலேயே மூழ்கிக் காணாமல் போனான்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:45 am


துருவனுடைய தவம் கண்டு தேவர் உலகம் வியந்தது. நாளாக நாளாக, அவனுடைய தவம் உக்கிரம் அடைவது தெரிந்து, அவனைக் கொண்டாடியது. இதற்கு மேல் விட்டால், தேவர் உலகத்துக்குக் கெடுதல் வருமே என்று பதறி, திருமாலிடம் போய் துருவனுக்கு தரிசனம் கொடுங்கள் என்று வேண்டியது.

திருமால் அவன் எதிரே தோன்றினார். மெள்ள அவன் தலையை வருடிவிட்டார். ''எழுந்திரு குழந்தாய்! என்ன வேண்டும்?'' என்று கேட்டார். குழந்தை கண் விழித்தது. திருமாலை நாரதர் போல ஸ்தோத்திரம் செய்து, பலமுறை விழுந்து வணங்கியது.

''என் தந்தையின் மடியில் நான் அமர்வ தற்கு முடியாமல் என் சிற்றன்னை தடுத்தாள். ஆனால், இப்போது நீங்கள் வந்துவிட்டீர்கள். எனக்கு என்ன தர வேண்டுமோ, அதை நீங்கள் கொடுங்கள். உங்களிடம் இது வேண்டும் என்று கேட்பதற்குக்கூட எனக்கு விருப்பமில்லை'' என்று கை கூப்பிச் சொன்னான் துருவன்.

அவன் பணிவு திருமாலை சந்தோஷப் படுத்தியது. அவன் தெளிந்த மனம் திருமாலுக்குப் பிடித்திருந்தது.
''நல்லது. உன் தந்தை விரைவில் மரணம் அடைவார். அப்போது இந்த ராஜ்ஜியத்துக்கு நீ அரசனாவாய். பல நூறு வருடங்கள் இந்த ராஜ்ஜியத்தை நீ திறம்பட அரசாட்சி செய்வாய். அதற்குப் பிறகு, தந்தையினு டைய இருப்பிடம் மட்டுமல்ல, என்னுடைய இருப்பிடமான இந்தப் பிரபஞ்சத்தில், ஒரு மூலையில் நீ நிரந்தரமாக இருப்பாய். தவம் செய்வதன் மும்முரத்தை, உற்சாகத்தை, அவசியத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் சுடராகத் திகழ்வாய். உனக்குத் துருவ நட்சத்திரம் என்று பெயர் கிட்டும். துருவ நட்சத்திரத்தைக் கண்கொண்டு பார்க் கிறவர் எல்லோருக்கும் உன் சரிதம் ஞாபகம் வரும். உன் சரிதம், தவம் செய்வது பற்றி அவர்களுக்கு மறைமுகமாக சொல்லிக் கொடுக்கும். தவம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும். தந்தையின் மடி கேட்டவனுக்குக் கடவுளின் மடியே கிடைத்திருக்கிறது என்பது புரியும். உலகத்தில் உன்னைப் போல பல நூறு துருவர்கள் வரவேண்டும் என்று நீ அங்கே உட்கார்ந்து ஆசிர்வதித்துக் கொண்டிரு!'' என்று சொன்னார்.

துருவன் மிகச் சிறந்தபடி அரசாட்சி செய்து, பிறகு நட்சத்திரமாய் மாறி, நிரந்தரமாய் பூவுலகைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

நாரதரின் வழிகாட்டல், அவருடைய அன்பு ஓர் அரசிளம் குமரனை நிரந்தரமாக, பிரபஞ்சத்தில் காட்சி அளிப்பவனாக மாற்றியது. நல்ல மனிதருடைய சேர்க்கை சாதாரணமானவரைக்கூட உச்சநிலைக்குக் கொண்டு வந்துவிடும் என்பதற்கு துருவன் கதை ஒரு சாட்சி.

அது பிரும்மலோகம்.

படைப்புகளை நிகழ்த்திக்கொண்டே, தன் இடத்துக்கு வந்த நாரதரை வார்த்தைகளால் உபசரித்து அமரச் சொல்லி, ''நாரதரே, ஏதாவது செய்தி உண்டா? புதிதாக ஏதும் நடந்ததா?'' என்று கேட்டார் பிரம்மா.

''இதுவரை புதிதாக ஏதும் நடக்கவில்லை. ஆனால், புதிதாக ஏதும் இனி நடக்குமோ? அது பற்றிப் படைப்புக் கடவுளான நீங்கள் எதுவும் சொல்ல முடியாதோ?'' என்று நாரதர் கேட்டார்.

''ஒரு சண்டை நடக்கும்!'' என்றார் பிரம்மா.

''அதுதானே பார்த்தேன்! உங்களால் சும்மா இருக்க இயலாதே! எதிரும் புதிருமானவற்றைப் படைத்துவிட்டு அவை இரண்டும் மோதிக்கொள்வதை வேடிக்கை பார்ப்பதில் உங்களைவிட சாமர்த்தியசாலி யார்?''

''அப்படியில்லை, நாரதரே! நான் படைக்கும்போது ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளவேண்டும் என்று படைப்பதில்லை. எல்லாமும், எல்லோரும் குழந்தைகளே! வளர்ச்சி என்று ஒன்று இருக்கிறது. அது விஷ்ணுவின் செயல். அந்த வளர்ச்சியின்போது, சில விஷயங்கள் நேர் எதிராகப் போய்விடுகின்றன. பிறக்கும்போது புலிக்குட்டி தாய்ப்பால்தான் தேடுகிறது. வளர்ந்த பிறகு, அதுவே மானை வேட்டை ஆடுகிறது. எனவே, என் படைப்பில் குற்றமில்லை. என் படைப்பு வளரும்போது, எல்லாம்வல்ல நாராயணர் ஏதோ குறும்பு செய்துவிடுகிறார். பூமி இயங்குவதற்கு இப்படிச் சில விஷயங்கள் செய்வது அவசியம் என்கிறார்!''

''என்ன விஷயமோ?'' - ஆவலோடு கேட்டார் நாரதர்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:45 am


''நான் படைத்த புலஸ்தியர் இப்போது மகானாக இருக்கிறார். இன்று சிவராத்திரி. புலஸ்தியர் சிவபூஜை செய்யப் போகிறார். அதற்காக ஒரு கோயிலைத் தேடிக் கொண்டிருக்கிறார்!''

''மிக நல்ல விஷயம்தானே? இதில் வம்பு எங்கு வந்தது?''

''வம்பு வேறு இடத்தில் இருக்கிறது. சிவராத்திரியின் மகிமை பற்றி முனிவர்கள் ஒன்றுகூடிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மரங்களின் உச்சியில் இருந்த சில குரங்குகள் கீழே இறங்கி, விலகி நின்று, கை கூப்பி, சிவராத்திரியின் மகிமை பற்றி முனிவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கின்றன. தங்கள் பேச்சைக் குரங்குகள் கேட்பதை அறிந்து, முனிவர்களும் இன்னும் விஸ்தாரமாகப் பேசுகிறார்கள். சகல உயிர்களும் பயன் பெறட்டுமே, சுகம் பெறட்டுமே என்கிற நல்ல நோக்கத்தில், சிவம் என்பது பற்றி விளக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.''

''அடடா, அற்புதம்! எல்லா உயிரினங்களுக்கும் சிவன் முக்கியம் என்று தெரிந்தால், அதைவிட மிகப்பெரிய பேறு இந்த உலகத்தில் என்ன உண்டு? வாழ்க இவ்வுலகம். அது சரி, இதில் எங்கு வம்பு இருக்கிறது?''

''பாருமே, நீராகவே பாருமே!''

அவர்கள் இருவரும் திரும்பி, பூலோகத்தைப் பார்த்தார்கள்.

புலஸ்தியர் ஒரு சிவன் கோயிலைத் தேர்ந்தெடுத்து, நடுநிசியில் பூஜை செய்ய கதவைச் சாத்திக்கொண்டார். கருவறையை மூடிக்கொண்டார். பூஜையைத் தொடங்கினார்.

குரங்குகளும் கோயில் தேடின. கிடைக்கவில்லை. நேரமோ கடந்து கொண்டிருக்கிறது; வேறு கோயில் தேட நேரம் இல்லை. இந்தக் கோயில் கதவுகளை உடைப்போம் என்கிற முடிவோடு, கதவுகளை ஆட்டிப் பெயர்த்து எடுத்தன. கருவறையைத் திறந்தன.

புலஸ்தியர் கோபம் அடைந்தார். ''என்ன இது... நிம்மதியாக ஒரு பூஜையைச் செய்யவிடாமல், உங்கள் வானர புத்தியைக் காட்டுகிறீர்களே! பூஜைக்கு இடைஞ்சல் செய்த நீங்கள் அனைவரும் அழிந்துபோகக் கடவது!'' என்று சாபமிட்டார்.

குரங்குகள் கோபமுற்றன.

''புலஸ்தியரே! நாங்கள் தின்ப தற்கோ, தூங்குவதற்கோ இங்கு வரவில்லை. உங்களைப் போல சிவபூஜை செய்வதற்குத்தான் இங்கு வந்தோம். நீங்கள் உள்ளே இருப்பது தெரியாமல்தான் கோயில் கதவுகளை உடைத்தோம். அறியாமல் செய்த பிழைக்கு அழிந்துபோங்கள் என்றா சாபம் தருவீர்கள்? கதவைத் திறந்து வைத்திருந்தால், உள்ளே நீங்கள் பூஜை செய்வது அறிந்து விலகி இருப்போமே! இது பிழையானதற்குக் காரணம் நீங்கள்தான்! நாங்கள் சாபம் இடுகிறோம். அடுத்த ஜன்மத்தில் உங்கள் வம்சத்தை குலத்தோடு நாங்கள் அழிப்போம். இது சத்தியம்!'' என்று சீறின.

''அடடே! என்ன இப்படியாகிவிட்டது! இனி என்ன நடக்கப் போகிறது?'' - நாரதர் பதறியபடி கேட்டார்.

''அடுத்த ஜன்மத்தில் புலஸ்தியர் மகனான விஸ்ரவஸ் என்பவருக்கு கைகசி என்பவளிடம் ராவணனும், கும்பகர்ணனும் பிறப்பார்கள். இந்தக் குரங்குகள் சுக்ரீவன், ஹனுமன், அங்கதன் உள்ளிட்ட வானர சேனையாகப் பிறக்கும். புலஸ்தியர் வம்சத்தில் பிறந்த ராவணனை அழிக்க திருமால் அவதாரம் எடுத்து வருவார். அதற்கு ராமாவதாரம் என்று பெயர்!''

''அப்படியா! இதே விதமாகவா நடைபெறப்போகிறது? இதை யாரிடமாவது சொல்ல வேண்டுமே!'' என்று தவித்தார் நாரதர்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:45 am


ஒரு மரத்தடியில் பெரிய புற்று இருந்தது. அதில் வாய் வைத்து, ''இந்தப் புற்றில் யாரேனும் தவசி இருந்தால் கேட்டுக் கொள்ளுங்கள். இப்படியிப்படி நடக்கப் போகிறது...'' என்று உரத்த குரலில் அனைத்தையும் சொல்லி, தன் மன பாரத்தைக் குறைத்துக் கொண்டார்.

பிற்பாடு வெகு காலம் கழித்து, அந்தப் புற்று உதிர்ந்து, ஒரு முனிவர் வெளியே வந்தார். அவரே, வால்மீகி! வால்மீகியால் ராம காவியம் எழுதப்பட்டது.

நாரதர் காலம் கடந்தவர். பல்வேறு அவதாரங்களைத் தரிசித்தவர். பிரபஞ்சம் தோன்றும்போது பிறந்தவர் அவர். பிரபஞ்சத்தின் மாற்றங்களைக் கடந்தவர். இன்னும் பிரபஞ்சத்தில் யாழ் ஒலி மீட்டியபடி, அவர் வலம் வந்துகொண்டிருக்கிறார். புவியில் நடக்கிற பல அற்புதங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்.

கம்சனுடனான அந்த யுத்தத்துக்குப் பிறகு ஸ்ரீகிருஷ்ண பகவான் களைத்திருந்தார். அவரது சிந்தனைகள் வெகு தொலைவில் இருந்தன. அவரது முகத்தில் மலர்ச்சி குறைவாக இருந்தது.

அவர் சபைக்கு வந்து வணங்கினார் நாரதர். நாராயண கானம் செய்தார். கிருஷ்ணரின் முகம் மலர்ந்தது.

''நாரதரே, இங்கு நடந்ததை அறிவீரோ?''

''நன்கு அறிவேன். உங்கள் பிறப்பிலிருந்தே உங்களை நான் கவனித்து வருகிறேன். எட்டாவதாகப் பிறந்த உங்களை யாதவர்கள் இருக்கும் இடத்துக்கு மாற்றிவிட்டார்கள். அங்கே பிறந்த பெண் பிள்ளையைக் கொண்டு வந்து, உங்கள் தாய்- தந்தைக்கு அருகே கிடத்தினார்கள். எல்லாப் பிள்ளைகளையும் கொன்ற கம்சன் எட்டாவது பிள்ளையையும் கொல்வதற்காக ஓடி வந்தான். பெண் குழந்தை என்றும் பாராமல் சுவரில் அடித்துக் கொல்லத் துணிந்தான்.

தேவகி கதறினாள். 'அண்ணா..! வேண்டாம். இந்தக் குழந்தையை மட்டுமாவது விட்டுவிடு!’ என்று கதறினாள்.

ஆத்திரத்தின் விளிம்பில் இருந்த கம்சன் மறுத்தான். குழந்தையைச் சுவரில் ஓங்கி அடிக்க, உயரே தூக்கினான். அது அவன் கையிலிருந்து நழுவி, சிறைக்கதவில் இருந்த இடைவெளி வழியாக வெளியே பறந்தது.

'அடேய், கம்சா! என்னை உன்னால் கொல்லமுடியாது. நான் சக்தி!’ என்று தன் சுய உருவம் காட்டியது. எட்டு புஜங்களுடன், நீண்ட நாக்குடன், கோரைப் பற்களுடன், கருமை நிறத்துடன், சிவந்த விழிகளுடன், சூலம் உயர்த்தி, கம்சனை எச்சரித்தாள் சக்தி.

''என்னை மட்டுமல்ல, உன்னைக் கொல்லப் போகும் குழந்தையையும் உன்னால் கொல்ல முடியாது. அந்தக் குழந்தை இந்தப் புவியில் எங்கோ வளர்ந்துகொண்டு இருக்கிறது. உனக்கு அழிவுக்காலம் வந்துவிட்டது. முடிந் தால், தேடிப்பிடித்து அவனோடு சண்டையிடு!’ என்று உரக்கக் கூறிச் சிரித்தாள் சக்தி.

கம்சன் நடுங்கினான். சக்தி மறைந்தாள். தேவகி நிம்மதி அடைந்தாள்.

'எங்கே அந்தக் குழந்தை... எங்கே அந்தக் குழந்தை...’ எனக் கம்சன் வெறி பிடித்தாற்போல் ஊரெல்லாம், உலகெல்லாம் தேடினான். 'யாதவ குலத்தில் ஒரு புதிய குழந்தை பிறந்திருக்கிறது; அது பல அற்புதங்களைச் செய்கிறது’ என்று கேள்விப்பட்டு, தனக்குக் கீழே வேலை செய்யும் அசுரர்களை அங்கு போகும்படி கட்டளை இட்டான். அந்தக் குழந்தையைத் தேடிப் பிடித்து உடனே கொல்லும்படி உத்தரவிட்டான். அசுரர்களும் தாதியாகவும் (பூதகி) சக்கரமாகவும் (சகடாசுரன்) என்று பல உருவங்களில் அந்தக் குழந்தையான தங்களை அழிக்க வந்தனர்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:46 am

கிருஷ்ணனான நீங்கள் சிறு குழந்தையாக இருந்தபோதே அவர்களை உதைத்து, வதைத்து, உறிஞ்சிக் கொன்றீர்கள்! நீங்கள் தான் தனக்கு எதிரி என்று கம்சன் தெரிந்து கொண்டான். உங்கள் இடத்தில் வைத்து உங்களைக் கொல்லமுடியாது எனப் புரிந்ததால், தன் இடத்துக்கு உங்களை வரவழைக்கச் சமரசம் பேசினான். நீங்களும் அதை ஏற்றுக்கொண்டீர்கள். அவன் வரவேற்புக்குச் சம்மதம் சொல்லி, அவன் இடம் நோக்கிச் சென்றீர்கள். உங்களுக்குத் துணையாக பலராமரும் வந்தார். யாதவ குலம் கவலைப்பட்டது. கம்சனின் மக்கள் சந்தோஷப்பட்டார்கள்.

நீங்கள் அரசவை வாசலில் வைத்திருந்த பெரிய வில்லை வளைத்து, உடைத்துத் தூக்கிப் போட்டீர்கள். கோட்டைக் கதவு களைத் தகர்த்தீர்கள். பெரிய கொம்பு உள்ள யானைகளை அடித்துத் துவைத்தீர்கள். நெஞ்சில் கால் வைத்து அவன் இதயத்தை ஒரே மிதியில் நசுக்கி, ரத்தம் கக்க வைத்தீர்கள். கம்சன் மாண்டு போனான். உலகம் நிம்மதி யுற்றது. உங்கள் தாய்- தகப்பன் சந்தோஷம் அடைந்தார்கள். மக்கள் விடுதலை பெற்றார் கள். அப்படியிருக்க, உள்ளே என்ன கவலை? ஏன் வாடி இருக்கிறீர்கள்? அயர்ச்சியா, அல்லது வேறு ஏதேனுமா?'' - நாரதர் கேட்டார்.

''நாரதரே, பதிலைத் தெரிந்துகொள்ள நீங்கள் வரவில்லை. தெரிந்துகொண்டே வந்திருக்கிறீர்கள். என்னதான் ஆனாலும், அவன் என் மாமன் அல்லவா? தாய்க்கு அண்ணனாக இருப்பவனை வணங்க வேண்டும். அதுதானே முறை? மாமன் என்பது மிக நல்ல உறவு! தாய்- தந்தைக்குப் பிறகு, மாமன்தானே முக்கியம்! அவனுடைய மகள்தானே முறைப்பெண் உறவு என்று வழிமுறை, ஒரு நியமம் இருக்கிறது அல்லவா! அதை நான் கெடுத்துவிட்டேனே! என் மாமனை இழுத்து மிதித்துக் கொன்று விட்டேனே! இது பாவமல்லவா? இதைப் போக்க என்ன செய்வது?'' - கவலையோடு கேட்டார் கிருஷ்ணர்.

நாரதர் வாய்விட்டுச் சிரித்தார்.

''எல்லாம்வல்ல நாராயணரின் அவதாரம் நீங்கள். துஷ்டர்களைச் சம்ஹரிக்கவே நீங்கள் அவதரித்திருக்கிறீர்கள். சாதுக்களைப் பரிணமிக்கச் செய்யவே பிறந்திருக்கிறீர்கள்! சத்தியத்தை நிலைநாட்டவே தோன்றி யிருக்கிறீர்கள்! கிருஷ்ணா, உங்களுக்குக் குறை ஏது? பாவம் ஏது? நீங்கள் சகலமும் கடந்தவர் அல்லவா? இது உங்களுக்கே தெரியும். ஆனாலும், ஊரார் கேள்வி கேட்க, அவர்கள் சமாதானம் கொள்ளுமாறு ஒரு பதில் சொல்ல வேண்டுமே என்று என்னைக் கேட்கிறீர்கள். அதனால் சொல்கிறேன்... சேது என்ற கடல் மிகப் புனிதமானது. ராமருடைய சேது இருந்த இடம், இறந்தவர்கள் கூடும் இடம். பித்ருக்களுடைய இடம். முன்னோர்களுடைய வசிப்பிடம். பூமியை அவர்கள் தீண்டுவதற்கு, அங்கு இறங்குவதற்கு வசதி இருக்கிறது. இது ராமரால் ஏற்பட்டது. ஸ்ரீகிருஷ்ணா..! ராம சேதுவுக்குப் போய், அங்கு கடலில் நீராடி, அங்குள்ள தீர்த்தங்களில் மூழ்கி, சிவபூஜை செய்யுங்கள். நிச்சயம் கம்சன் அமைதியாவான். உங்கள் மனக்குறை தீரும். உங்கள் குறை தீர்ந்ததை உங்களால் உணர முடியும். சேது அப்படிப்பட்ட இடம்!'' என்றார் நாரதர்.

நாரதரின் வாக்கு சத்தியமானது. அன்று ஸ்ரீகிருஷ்ணரால்  கம்சனுக்கு மனக்கேதம் தீர்க்கப்பட்டதுபோல, இங்கு நல்லவரோ கெட்டவரோ, பிடித்தவரோ பிடிக்காதவரோ, உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ... அவர்களின் மனக்கேதம் தீர்ப்பதற்கு ராமசேது ஒரு சரியான இடமாக இருக்கிறது. அங்கு நீத்தார் கடன் செய்தவர்கள் நலம் பெறுவார்கள். இது நாரதரின் சத்திய வாக்கு!

தெய்வங்களுக்கு மட்டுமல்ல; பூமியில் வாழும் மனிதர்களுக்கும் நாரதர் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.

நாராயண... நாராயண..!

சிறிதும் பெரிதுமாக இன்னும் சில நாரதர் கதைகள் இருக்கின்றன.முற்றி முதிர்ந்ததைக் கவர்ந்து கொண்டு வந்து விவரித்திருக்கிறேன். கதையைத் தாண்டி பேசியிருக்கிறேன்.

மேடை நாடகத்தில் காணப்படும் கோமாளி அல்ல நாரதர். சௌலப்யர். அதாவது, எளிதாக பழகக்கூடியவர். பக்தி மார்க்கத்தின் எடுத்துக்காட்டு. நாம ஜபத்தின் உதாரண புருஷர்.

சனாதன தர்மத்தில் ஏன் இத்தனைக் கடவுள்கள். ஏன் இத்தனை மகான்கள். கேள்வி மேல் கேள்வி வருகிறது. அத்தனை பேர் இருப்பினும் ஜனங்களை முற்றிலும் மாற்றமுடியவில்லையே. சொன்னவற்றைக் கேட்டுக்கொண்டு மனிதக் கூட்டம் தன் வழியேதானே போகிறது.

சனாதன தர்மம் நேற்று முளைத்த குத்துச் செடி அல்ல. அதன் தொன்மை கண்டறிய முடியாதது. அதன் தொன்மையே அதைப் பற்றிய கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கிறது. இந்து மதத்துக்கு வெகு நீண்ட சரித்திரம் இருப்பதால், கடவுளுக்கு நிகர்த்த மகான்கள் தோன்றி, மக்களை உயர்த்தியிருக்கிறார்கள். நல்ல மரம், விதைகளை விட்டுக்கொண்டேதான் இருக்கும். விழுதுகள் மரமாகும்.

'எதற்கு இத்தனை மகான்கள்.’ என்று கேட்டால், என்ன பதில் சொல்ல. ஆலமரத்துக்கு ஏன் இத்தனை விழுதுகள் என்று கேட்பவரை என்ன சொல்ல. அது இயல்பல்லவா.

நாரதர் கதைகள் ஒரு மகானின் அனுபவம். புலி புலிக்குட்டியை நக்கி நக்கித்தான் புலியாக்கும். நீங்கள் புலிக்குட்டியாக இருந்தால், புலியின் அரவணைப்பு உங்களுக்குப் புரியும். புலியின் அரவணைப்புக்கு ஏங்குங்கள். கிடைக்கும்.

இந்தப் புலி, குரு, கடவுள், ஞானி எல்லாம் ஒன்றே.


(நிறைவுற்றது)



Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக